Wednesday, February 23, 2011

"பஸ் டே” - அராஜக கொண்டாட்டங்கள்



”பஸ் டே” கொண்டாட்டங்கள்

இன்றைய இந்தியா அயோக்கிய அரசியல்வாதிகளிடம் மட்டும் சிக்கி தவிக்கவில்லை... சில பல அராஜக, அயோக்கிய மாணவர்கள் கையிலும் சிக்கித்தான் தவிக்கிறது.. இளைஞர்களே கனவு காணுங்கள், நம் நாடும் நாளை வல்லரசாக மாறும் என்று... இளைஞர்களே... இன்று நீங்கள் வாழ்வில் செய்யும் எந்த விஷயங்களும், எடுக்கும் எந்த நல்ல முடிவுமே வருங்காலத்தில் நம் நாட்டின் எதிர்காலமாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் தான் என்று இன்று இருக்கும் பல நல்லவர்கள் உங்களை பற்றி
உயர்வாக நினைத்து கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் செய்வது என்ன?

ஒவ்வொரு வருடமும் ”பஸ் டே” கொண்டாட்டங்கள்....

ஆஹா... பஸ் டே கொண்டாட்டமா, தாராளமாக கொண்டாடுங்களேன்... பொங்கல், தீபாவளி, கிருஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போது அனைத்து குடும்பங்களும் எப்படி மகிழ்ச்சியாக தன் சுற்றம் சூழ மகிழ்வாக கொண்டாடுகிறோமோ அப்படித்தானே இந்த பஸ் டே கொண்டாட்டமும்..

இந்த கொண்டாட்டத்திற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
* மாணவர்கள் அந்தந்த பகுதிகளில் இருக்கும் பஸ் டிப்போக்களுக்கு சென்று, அழுக்கடைந்து காணப்படும் பேருந்துகளை வெளிப்புறம் நன்றாக தண்ணீர் விட்டு அலம்பி, உட்புறம் நன்றாக சுத்தம் செய்து, பொதுமக்கள் முகம் சுளிக்காமல் பயணம் செய்யும் வகையில் செய்யலாம்...

* வருடம் முழுதும் பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், பள்ளி குழந்தைகள் என்று எல்லோரையும் பத்திரமாக செல்லும் இடம் சேர்க்கும் வாகன ஓட்டுநர்கள், பேருந்தில் டிக்கெட் கொடுக்கும் நடத்துநர்கள் ஆகியோருக்கு ஏதேனும் பதில் மரியாதை செய்யலாம்...

* பேருந்தில் பயணிக்கும் சக பயணியர்களுக்கு உபத்திரவம் கொடுக்காமல் இருக்கலாம்...

* தான் கல்லூரிக்கு செல்வது படிப்பதற்கே, மற்றபடி தான் எந்த வேலையையும் (மாணவர்களை கவனித்து கொள்ளும் தந்தை, அண்ணன்கள் போல்) செய்யாமல், வெறுமே புத்தகங்களை கையிலேந்தி வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு மரியாதை அளித்து, அவர் சொல்லிக்கொடுக்கும் நல்ல விஷயங்களை கிரகித்து அதை தன் வாழ்நாளுக்கு உபயோகப்படுத்துதலாம்...

ஆனால் ”பஸ் டே” என்ற பெயரில் அந்த தினத்தில் சென்னையெங்கும் நடக்கும் கூத்துகள் என்ன?

பேருந்துகளில் உடன் பயணிக்கும் பயணிக்கும் சக பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் பெரிதாக ஓசையெழுப்புவது...

பேருந்துகளில் உடன் பயணிக்கும் சக பெண் பயணிகளை கிண்டல் செய்வது

பேருந்துகளில் உடன் பயணிக்கும் சக பயணிகள் யாரேனும் இந்த நடவடிக்கைகளை தட்டிக்கேட்க முன்வந்தால் அவர்களை கும்பலாக சேர்ந்து நையப்புடைத்து காயப்படுத்துவது

பேருந்துகளின் மேற்கூரையில் ஏறி நின்று கொண்டு ஆட்டம் என்ற பெயரில் அனைத்து கன்றாவிகளையும் செய்வது

பேருந்துகள் செல்லும் வழியெங்கும் சாலைகளில் இருக்கும் கடைகளை அடைக்க சொல்வது, கடைகளை சூறையாடுவது, பேருந்து நிறுத்தங்களில் இருக்கும் பயணியர்களை ஏசுவது, பெரும்பாலும் அனைத்து மாணவர்களும் பெண்களை கண்டால் கண்டிப்பாக ஏதாவது ஒரு அசிங்கமான வார்த்தையை உபயோகிக்காமல் இருப்பதில்லை (உபயம் : இன்றைய கேவலமான திரைப்படங்கள்).... எதிர்ப்படும் வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்துவது....

நாட்டின் பாதுகாப்பில் பெரும் பங்கு வகிக்கும் காவலர்கள் இந்த அராஜக மாணவர்களின் அட்டகாசங்கள், கூத்துக்கள் அத்துமீறாமல் இருக்க, பெரும்படையாக இவர்களுடன் பலதரப்பட்ட வாகனங்களில் கூடவே ஊர்வலம் வர செய்வது...

இதெல்லாம் இந்த படிக்கும் வயதில், இளைஞர்கள் / மாணவர்கள் செய்ய காரணம் என்ன? இன்றைய அக்கிரம அரசியல்வியாதிகள் தான்...

போன வருடம் சட்டக்கல்லூரியில் நடந்த கலவரம், கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா? இதோ, இந்த வருடமும் இந்த “பஸ் டே” கொண்டாட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு இருக்கின்றனர்... ஏராளமான காவல்துறை அதிகாரிகள் காயமடைந்து உள்ளனர்... பெண் காவல்துறை அதிகாரியை கொச்சையான, ஆபாசமான வார்த்தைகள் சொல்லி அவமானப்படுத்தி உள்ளனர்... ஏன், இவர்கள் வீடுகளில் பெண்கள் இல்லையா, அவர்களை இப்படி தான் நடத்துகிறார்களா? இது தான் இவர்கள் தன் வாழ்நாளில் கற்றுக்கொள்ளும் பாடமா?

இந்த மாணவர்களின் கடமை தான் என்ன?

இன்றைய சூழலின் மிகுந்த சிரமங்களுக்கிடையில் இவர்களை பெற்றோர்கள் கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள்... நன்றாக உணர்ந்து படிப்பது ஒன்று மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்...... எப்படி உணவருந்த வீட்டில் உட்காரும் போது, உணவை ருசித்து சாப்பிடுகிறார்களோ, திரையரங்குகளுக்கு சென்றால் திரைப்படத்தை ரசித்து பார்க்கிறார்களோ, அதே போல் கல்லூரியில் படிக்கும் அந்த 3-4 வருடங்கள் அவர்களின் முழு கவனமும் படிப்பின் மீது மட்டுமே இருக்க வேண்டும்...

அனைத்து விதமான தீய பழக்கங்களில் இருந்தும் கவனமாக ஒதுங்கி இருக்க கற்றுக்கொள்ளலாம்... முடிந்த வரை அடுத்தவர்களுக்கு ஏதேனும் ஒரு வழியிலாவது உதவியாக இருக்கலாம்... தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு எந்த அநாவசிய செலவையும் வைக்காமல் இருக்க குறைந்தபட்சம் முயற்சிக்கவாவது செய்யலாம்... ஓய்வு நேரங்களை தன் வாழ்வை வளமாக்கும் வழியில் நூலகங்களில் சென்று செலவிடலாம்... அயோக்கிய அரசியல்வாதிகள் பின்னால் சென்று, கூட்டங்களுக்கு ஆள் பிடிப்பது, கோஷம் போடுவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற நிகழ்வுகளுக்கு செலவிடும் நேரத்தில், தன் பகுதியில் உள்ள வசதியற்ற குழந்தைகளுக்கு இலவசமாக ட்யூஷன் எடுக்கலாம்...

இனி வரும் காலங்களிலாவது படிக்கும் வேளையில் இந்த மாணவர்கள் அயோக்கிய அரசியல்வாதிகளின் கையில் சிக்கி, சின்னாபின்னமாகி, சீரழிந்து வாழ்வை தொலைக்காமல், படிப்பு மட்டுமே குறிக்கோளாக வைத்து நன்கு படித்து, தன் குடும்பத்திற்கும், எழுத்தறிவித்த ஆசான்களுக்கும் நல்ல பெயர் எடுத்து கொடுத்தால், அதே நல்ல பெயர் மற்றவர்களால் இவர்களையும் வந்தடையும்...

செய்வார்களா இன்றைய மாணவர்கள்?? இல்லையென்றால், இதுவும் செவிடன் காதில் ஊதிய சங்கு தானா?

நம் நாட்டின் இன்றைய நிகழ்வுகளை ஜீரணிக்க முடியாத ஒரு சராசரி குடிமகன்..

(ஆர்.கோபி)

Monday, February 14, 2011

ஆட்டைய போட்ட ஆண்டிமுத்து ராசா

எனது நண்பர் காவிரிமைந்தன் அவர்கள் இன்றைய ஊழல் பெருச்சாளிகளான அரசியல்வாதிகளின் அடுத்தவர் பணத்தை ஆட்டையை போட்டு சொகுசு வாழ்க்கை நடத்தும் நிலைமையை எண்ணி மனம் நொந்து எழுதிய சில வரிகள் இதோ :

ராஜாதி ராஜாக்கள் கூட வாழாத வாழ்க்கையை
வாழத்தான் தெரிந்திருக்கிறார்கள் இன்றைய அரசியல்வாதிகள்!

அன்றாட வாழ்க்கைக்கே அல்லலுறும் அவலங்கள் அரங்கேறும் இந்தியாவில் - இதுதான் சுதந்திரமா?

இதைத்தான் நாம் போராடிப் பெற்றோமா?

விழிப்புணர்வு ஒரு துளியும் நம்மிடத்தில் இல்லாத வரை..

இவையெல்லாம் தொடர்கதையே!


************


ஆண்டிமுத்து ராசா, நாட்டை ஆட்டையை போட்டது நம் அனைவருக்கும் தெரியும்... அப்படி கிடைத்த அந்த சொற்ப பணத்தில் (வெறும் 1,70,000 கோடிகள் தான்), அந்த பரம ஏழை கட்டிய அவரின் “சிறிய வீட்டை” பாருங்கள்...

Tuesday, February 8, 2011

யப்பா.... நம்ம இந்தியா எம்மாம் பெருசு!!


வலை தோழமைகள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.... மீண்டும் ஒரு புதிய பதிவுடன் உங்களை சந்திப்பதில் மெத்த மகிழ்ச்சி....

எங்கள் “சித்தம்” குறும்படத்திற்கு தோழமைகள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி...

சமீபத்தில் நான் கண்ட ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... அந்த விஷயம் பார்த்த நான் ஆடி போய் விட்டேன்...

உதாரணமாக, நம் உத்தர பிரதேசத்தின் மக்கள் தொகை அளவு நம் அண்டை நாடான பாகிஸ்தானை விட அதிகம்...

நம் தமிழ்நாட்டின் மக்கள் தொகை இங்கிலாந்து நாட்டை விட அதிகம்....

கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள தகவல்கள் உங்களையும் ஆச்சரியப்படுத்தும் என்று நினைக்கிறேன்...



நாம் மீண்டும் மீண்டும் இந்த மக்கள்தொகை பெருக்கத்தில் நிகழ்த்தும் சாதனைகளை சற்றே திசைதிருப்பி வேறு பல வழிகளிலும் முயற்சித்தால், உலகளவில் அனைத்து துறைகளிலும் சாதனை முத்திரை பதிக்க இயலும்...

முடிந்தால் முடியாதது எதுவுமில்லை... அனைத்து துறைகளிலும் சாதனை செய்ய முயற்சிப்போம்... சாதனை செய்வோம்...


(ஆர்.கோபி)

Monday, January 17, 2011

கருப்பு எம்.ஜி.ஆர், வெள்ளை விஜயகாந்த்



தமிழ்நாட்டில் சட்ட மன்ற தேர்தல் விரைவில் வரவிருக்கிறது... அதற்கு முன்னோடியாக தமிழகமெங்கும் அரசியல் கட்சிகளின் அட்டகாசங்கள் ஆரம்பமாகி விட்டன..

மறைந்தாலும், இப்போதும் ஒரு குறிப்பிட்ட சதவிகித வாக்கு வங்கியை வைத்திருக்கும் மந்திர பெயரான எம்.ஜி.ஆர். பெயரை எல்லா கட்சி தலைவர்களும் உச்சரிக்க ஆரம்பித்து விட்டனர்... வேறு எதற்கு, அவர் பெயரை சொன்னால், தங்கள் கட்சிக்கும் அவரின் வாக்கு வங்கியிலிருந்து கொஞ்சம் வாக்கு கிடைக்காத என்ற நப்பாசை தான்....

எம்.ஜி.ஆர்.அவர்களின் பிறந்த நாள் விழாவில் அவர் சிலைக்கு யார் முதலில் மாலை போடுவது என்று சண்டை வந்து, கடைசியில் 133 கட்சி தலைவர்களின் பேரையும் எழுதி சீட்டு குலுக்கி போட்டு, நம்பர் வரிசையில் மாலையிட அனுமதி
வழங்கப்பட்டதாக செய்தி வருகிறது....

தலைவர்கள் தங்கள் பெயருடன் ஏதாவது ஒரு நிறம் வருமாறு பார்த்துக்கொள்கிறார்கள்... “தல” எப்போவும் போல் ”மஞ்சள்”, வை.கோ. அவர் ஸ்டைலில் இருந்து மாறாமல் அதே “கருப்பு”, ஜெயலலிதா எப்போதும் போல் “பச்சை”... இந்த வரிசையில் புது தலைவர் விஜயகாந்த் இப்போது பச்சை, மஞ்சள், நீலம் என்று சொல்லி கடைசியாக “கருப்பு” என்ற கலரில் ஆணியடித்து (லேசாக தள்ளாடியபடியே) நிற்கிறார்...

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவிற்கு அவர் பாணியிலேயே கருப்பு நிற கண்ணாடி அணிந்து வந்த விஜயகாந்த், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலையணிவித்து விட்டு, செய்தியாளர்களிடம் பேசும் போது இந்த திடுக்கிடும் செய்தியை கூறினார் :

எல்லாரும் என்னிய கருப்பு எம்.ஜி.ஆர்.னு ஆசையா கூப்பிடறாங்க... அவங்க எல்லாருக்கும் நான் ஒண்ணு சொல்லிக்க ஆசைப்படறேன்... என்ன கருப்பு எம்.ஜி.ஆர்.னு கூப்பிடுங்க... ஆனா, அதே நேரத்துல மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களை இனிமேல் “வெள்ளை விஜயகாந்த்”னு சொல்லுங்க... அது தான் எனக்கும் சந்தோசமா இருக்கும்... என்ன சந்தோசப்படுத்தணும்னு நீங்க நெனச்சா, இனிமே என்னிய இப்படி தான் கூப்பிடணும் என்று அன்பாக எச்சரிக்கை விடுத்தார்...

மக்களுக்கு விஜயகாந்த் இந்த எச்சரிக்கை விடுத்த போது ஏற்கனவே எப்போதும் கலங்கி காணப்படும் அவரின் சிவந்த விழிகள், மேலும் சிவப்பாகி, பார்ப்போரை திகிலடைய வைத்தது... அந்த விழாவில் விஜயகாந்த் பேசிய போது தன்னை எம்.ஜி.ஆர். தோற்றத்தில் வடிவமைத்து காட்டி இருந்த ஒரு புகைப்படம், இதோ, உங்கள் பார்வைக்கு (பார்த்து பயப்பட வேண்டாம் என்று எப்போதும் போல் ஜோக்கிரி நிர்வாகம் உங்களை கேட்டுக்கொள்கிறது) :



இது சாம்பிள் தான் தோழமைகளே... இன்னும் வரிசையாக வரவிருக்கும் / நடக்கவிருக்கும் அனைத்து காமெடிகளும் இங்கே அரங்கேற வாய்ப்புண்டு...

(பின்குறிப்பு : இந்த பதிவை படிச்சு ரெம்ப ஃபீல் பண்ண வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்....)

Monday, January 10, 2011

வெட்டி வேரு வாசம்.. வெடலை புள்ள நேசம்

கவிதை ….. கவிதை! காற்று வாங்க போன போது??? … (அப்படியெல்லாம் காற்று வாங்க கவிதை போகுமா என்ன…. வார்த்தை கிடைக்காம கவிஞர்தான் காத்து வாங்குவாருகவிதையின் ஒரு பகுதியில் வார்த்தை அடைத்துக்கொள்ளாமல் காகிதம் கூட வெற்று இடங்களாய் காற்று வாங்கும்)

காற்று வாங்க சென்ற நம் கவிதை, நம்ம சென்னை மாநகர ”டெர்ரர் கரண்ட் கபாலி” கையில் சிக்கிக் கொண்டது. போனால் என்ன, சிக்கிக் கொண்டால் என்ன, எங்கு சென்றாலும் மனதை நெகிழ்த்தி மகிழ்ச்சி தருவது தானே நம் கவிதையின் வேலை, கலக்குவதே என் பணி என்று சொல்லி கவிதை தன் வேலையை தொடங்கி விட்டது.

லவ்வுல நான் ஜிவ்வாயிட்டேன்

லவ்வ ஜிவ்வாக்கி கவுஜ எழுதி

எடுத்துகினு வாய்யா

அப்பாலிக்கா பார்க்கலாம்…. நம்ம லவ்வு

எஸ்ஸா…. நோ - வான்னு

நோவாம என் கையில

சொல்லிருச்சு நம்ம டாவு


மெரிசலாயிட்டேன் நானு

மெர்ஸியே இல்லாத நீனு

ஒன் பேருல மட்டும் கீது மெர்ஸி

அங்க மேயுற பசு பேர் ஜெர்ஸி

இந்தாம்மேஎன் இண்டிமேட்டு

நான் ப்போ ஒன் கிட்ட அப்பீட்டு


லவ்வுல இப்போ லீக்காயிட்டேன்

ஜிவ்வுன்னு ஃபிக்ஸ் ஆயிட்டேன்

என் லைஃப்ல ஃபர்ஸ்ட்டு

நீதாம்மே லாஸ்ட்டு

நீ இருந்தாதேன் பெஸ்ட்டு

இதான் என் இண்ட்ரெஸ்ட்டு

நீ இல்லாங்காட்டி

லைப்ஃபே வேஸ்ட்டு

குட்சேன் சூப்பரா ஒரு பூஸ்டு....


நீ சரவண பவன் ஃபுல் மீல்ஸ் கணக்கா

வயிறையும் மனசையும் ரொப்புவ

அந்த பில்லு கையில வர்றப்போ

அத்த இந்த மாமன் பையில சொருகுவ


பப்பரப்பேன்னு சொல்லி சொல்லி

இருட்டுல பயமும் காட்டுவ

கொக்கரக்கோன்னு கூவுற சேவலை

கோணி எடுத்து தொரத்துவ.


உங்க நைனா

அவரு

நமக்கு சைனா

ரிலிஜன் சொல்லி நம்மள

பேஜாராக்குறாரு ஃபைனா...


ரீஜெண்டா சொல்றேன்

கடவுளு படைச்சது


ரெண்டே ரெண்டு குரூப்பு தேன்...

ஒண்ணு மேல்

இன்னொன்னு ஃபீமேல்

அதுக்கு மேல

எதுவுமே லேது!


எனக்கோசரம் நீ

உனக்கோசரம் நான்

எனக்கு நீ அல்வா

உனக்கும் நான் அல்லவா

மொள்ளமா வாம்மா கண்ணு

வந்தா நாயர் கடையில துன்னலாம் பன்னு


புள்ள குட்டி பெத்துகிட்டா

ஒறவு எல்லாம் ஒண்ணாயிரும்

ஒண்ணு ரெண்டு வருசத்துல

எல்லாமே நல்லாயிரும்

கரீட்டா அன்னிக்கே சொன்னானே

கண்ணம்மா பேட்டை கண்ணாயிரம்....


….. மாமு!

இது கூட கவிஜை மாதிரி தேன் கீது

இதுக்கு மேல சொல்ல எதுவுமே லேது

இத்த குடுத்து நம்மாள கவுத்திர்றேன்

படிச்சுட்டு மொறச்சா, எஸ்கேப் ஆயிடறேன்...


ஆல் த பெஸ்ட் சொல்லு நைனா

என் லவ்வு சக்சஸ் ஆகட்டும் ஃபைனா


(லாரன்ஸ் / ஆர்.கோபி)

Tuesday, December 28, 2010

HAPPY NEW YEAR 2011


புத்தாண்டாம் ஆங்கில புத்தாண்டு

கொண்டாட்டமாய் பிறந்த புத்தாண்டு
அதை மகிழ்வுடன் வரவேற்போம் - நாமின்று

கடந்தகால சோதனைகளை துடைத்து விட்டு

சூழ்ந்துள்ள வேதனைகளை தொலைத்து விட்டு
புத்தாண்டில் பதிப்போம் சாதனை கல்வெட்டு

சாதியின் பெயரால் சண்டையிட வேண்டாம்

மதத்தின் பெயரால் மண்டை உடை பட வேண்டாம்


அனைவரும் சமம் என்று உரக்க சொல்வோம்

அனுதினமும் மனதில் நிலைநிறுத்துவோம்


கடினமாய் உழைத்தே பிழைத்திடுவோம்

சோம்பல் எண்ணங்களை அழித்திடுவோம்


தீவிரவாத எண்ணங்களை கைவிடுவோம்

அமைதியை கை கொண்டு ஆனந்தம் கொள்வோம்

அனைவரின் வாழ்விலும் அமைதி நிலைத்திருக்க
என்றென்றும் அந்த ஆண்டவனை நினைத்திடுவோம்

(தோழமைகள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய 2011 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....)

Tuesday, December 21, 2010

அக்கட பூமியில் அதகளம் பண்ணிய “ரோபோ”


அக்கட பூமியில் (ஆந்திர பிரதேசம்) இந்த வருடம் (2010) வெளிவந்த அனைத்து படங்களையும் வசூலில் பின்னுக்கு தள்ளி விட்டது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்த “எந்திரன்” படத்தின் தெலுங்கு பதிப்பான “ரோபோ”...

சுமார் 40 கோடிக்கு மேல் வசூல் செய்து இதுவரை ஆந்திராவில் வெளிவந்த அனைத்து படங்களின் வசூல் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது “ரோபோ” படம்...(இந்த பட்டியலில் முதலிடம் பெற்றது 2009-ம் ஆண்டு வெளிவந்த சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நடித்த “மகதீரா - வசூல் சுமார் 60 கோடிகள்)...

ஆந்திர பிரதேசத்தில் இந்த வருடத்தின் டாப்-10 படங்களின் லிஸ்ட் இதோ (வசூல் விபரத்துடன்...)....

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

http://www.sify.com/movies/Top-Ten-Telugu-Films-of-the-year-imagegallery-tollywood-kmvrrBcdbgb.html

Top-10 Telugu Films of the year 2010

No.1 – ROBOT (ENTHIRAN)


Here is our choice of the top ten Telugu movies, which were released this year, based on the box office collections.

Robot

Director: Shankar

Producer: Sun Pictures

Cast: Rajinikanth, Aishwarya Rai Bachchan, Danny, Santhanam, Karunas

Music: AR Rahman

This Rajnikanth, Shankar movie set a new record for a dubbed movie in Andhra Pradesh by collecting nearly Rs 38 - 40 Crores. And it is the No.1 film at Andhra Pradesh Box-office for the year 2010.

No.2 - Simha

Director: Boyapati Srinu

Producer: Paruchuri Prasad

Cast: Balakrishna, Nayanatara, Namita, Sneha Ullal, Brahmanandam

Music: Chakri

Balakrishna's Simha collected more than Rs 36 Crores and became one of the highest grocers among Telugu films this year. Balakrishna who gave almost 11 flops in a row before Simha bounced back with this massive hit.

No.3 - Brindavanam

Director: Vamsi Paidipalle

Producer: Dil Raju

Cast: NTR, Samantha, Kajal, Prakash Raj, Srihari, Brahmanandam, Venu Madhav

Music: Taman

NTR's Brindavanam took a flying start in the first week but could not sustain the collections. Yet the movie brought profits to the producer and the distributors. It collected nearly Rs 35 Crores.

No.4 - Maryada Ramanna

Director: SS Rajamouli

Producer: Shobu Yarlagadda

Cast: Sunil, Saloni, Ramineedu, Brahmaji

Music: MM Keeravani

Top director Rajamouli's Maryada Ramanna starring Sunil and Saloni collected about Rs 30 Crores. The comedian Sunil became a hero over-night.

No.5 - Adhurs

Director: VV Vinayak

Producer: Nani

Cast: NTR, Nayanthara, Sheela, MS Narayana, Brahmanandam

Music: Devi Sri Prasad

NTR's Sankranthi release, Adhurs, did roaring business in coastal Andhra. But the movie had problems in the Nizam area due to Telangana movement. Overall it is a hit and collected nearly 28 Crores.

No.6 - Darling

Director: Karunakaran

Producer: B V N S Prasad

Cast: Prabhas, Kajal Agarwal, Prabhu

Music: G.V. Prakash

Prabhas and director Karunkaran's first movie, Darling, hit the gold at the box-office. The film won the mandate from youth audiences and collected about Rs 18 crores.

No.7 - Ye Maaya Chesave

Director: Gautham Vasudev Menon

Producers: Manjula Ghattamaneni, Sanjay Swarup

Cast: Naga Chaithanya, Samantha, Krishnudu, Devan, Surekha Vani, Lakshmi

Music: A.R.Rahman

Gautham Vasudev Menon's surprise hit, Ye Maaya Chesave, raked in Rs 12 - 14 Crores. The movie`s Tamil version Vinnaithaandi Varuvaayaa was also a super hit.

No.8 - Rakta Charitra 1

Director: Ram Gopal Varma

Producers: Madhu Mantena, Sheetal Vinod Talwar, Chinna Vasudeva Reddy, Rajkumar

Cast: Vivek Oberoi, Radhika Apte, Priyamani, Suriya, Satrughan Singha, Sudeep, Abhimanyu Singh

Music: Dharam, Sandeep

Thanks to the publicity and the controversies, Ram Gopal Varma's Rakta Charitra I brought smiles on the producer's lips. But the second part was a disaster.

No.9 - Betting Bangarraju

Director: E Sathibabu

Producer: Ramoji Rao

Cast: Allari Naresh, Nidhi

Music: Sekhar Chandra

This Allari Naresh starrer comedy movie surprised everyone by raking in nearly Rs 10 Crores.

No.10 - Jhummandi Naadam

Director: K. Raghavendra Rao

Producer: Lakshmi Manchu

Cast: Manchu Manoj, Mohan Babu, Tapsee, Brahmanandam

Music: M.M.Keeravani

Leader

Director: Sekhar Kammula

Producer: AVM studios

Cast: Rana Daggubati, Priya Anand, Richa Gangopadhyay, Hari Priya

Music: Mickey J Mayor

Sekhar Kammula's Leader and the Manchu Manoj starrer Jhummandi Naadam both vie for 10th position as they brought marginal profits to the producers.


(நன்றி : சிஃபி.காம்...)