Monday, March 9, 2009

"தல" சிறப்பு கேள்வி பதில்கள் - தேர்தல் 2009




கேள்வி : ஜெ.உண்ணாவிரதம் ?
பதில் : உண்டு கொழுத்தவர்கள், உடல் இளைக்க இது ஒரு வழி. தேர்தலின் புதுமொழி.



கேள்வி : ஒல்லியான பெண்கள் ?
பதில் : உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு


கேள்வி : வை.கோ?
பதில் : அவர் பொய்க்கோ ஆகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. அவரை நம் மக்கள் போய்க்கோ என்று சொல்லும் நாள் வெகுதூரம் இல்லை.



கேள்வி : பகுத்தறிவு??
பதில் : அறிவுரைகளின் முதன்மை வார்த்தை. நாம் அடுத்தவரை பின்பற்ற சொல்வது. சொல்பவர்கள் பின்பற்றாதது.

கேள்வி : சமீபத்தில் கிடைத்ததில் பிடித்தது?

பதில் : "பகுத்தறிவு பகலவன்" என்ற பட்டம்.

கேள்வி : பிடித்த நிறம்

பதில் : மஞ்சள் மட்டும் அல்ல



கேள்வி : அடிக்கடி நினைவில் வந்து இம்சிக்கும் ஒரு வார்த்தை?
பதில் : ஐயோ, கொல்ராங்கோ, அய்யய்யோ கொல பண்றாங்கோ.........



கேள்வி : பிடிக்காத ஒரே நபர்
பதில் : ஜெ.ஜெயலலிதா.....



கேள்வி : எரிச்சலூட்டும் வார்த்தை
பதில் : மைனாரிட்டி அரசு.



கேள்வி : ஆற்காடு வீராசாமி?
பதில் : தொட்டால் ஷாக் அடிக்கமாட்டார். இடது புறம் சென்று பேசினால், பதிலளிக்க மாட்டார். மொத்தத்தில் நல்லவர். கழகத்தில் ஒரு மூத்தவர்.



கேள்வி : டி.ஆர்.பாலு?
பதில் : வழிப்போக்கர்களுக்கு வழிகாட்டி, பாலங்களின் நாயகன். பல கப்பல்களுக்கு சொந்தக்காரர் (எனக்கு கப்பம் கட்டியவர்களில் முதலிடம் இவருக்கு).



கேள்வி : அன்பழகன்?
பதில் : எங்கு இடம் இல்லை என்றாலும், என் இதயத்தில் அவருக்கு நிச்சயம் இடம் உண்டு (இல்லை என்றால், என் இடத்தையே கேட்டு விடுவார்).


கேள்வி : டி.ராஜேந்தர்??
பதில் : ஓயாமல் அடுக்குமொழி பேசி அடுத்தவரை இம்சிப்பவர். பெரிய உடம்புக்காரர். இன்னமும் நாயகனாக நடித்து எல்லோரையும் பயமுறுத்துபவர்.

கேள்வி : விஜயகாந்த்??
பதில் : அரசியலில் அரிச்சுவடி படிக்க வந்துள்ள குழந்தை. இருக்கு அதனிடம் நிறைய அகந்தை.



கேள்வி : பிடித்த நடிகர்
பதில் : ஜெ.கே.ரித்தீஷ் (அல்ல)



கேள்வி : பிடித்த நடிகை??
பதில் : பரவை முனியம்மா (அல்ல)



கேள்வி : நினைவில் நின்றது / நின்றவர்??
பதில் : கவர்ச்சி கட்டழகி நமீதா.



கேள்வி : கையூட்டு பெற்றதுண்டா??
பதில் : கையூட்டு என்றால் என்ன?? என் தாய் என் கையில் வைத்து ஊட்டிய சோறுதானே??



கேள்வி : தமிழ்??
பதில் : தாய்மொழியாம் தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சு, தமிழ் என் வாட்சு.......



கேள்வி ; ஆங்கிலம்??
பதில் : வாணிபம் செய்ய புகுந்த அன்னியரின் பகட்டு மொழி.



கேள்வி : கருப்பு கண்ணாடி??
பதில் : அழகிற்கு அழகு சேர்ப்பதற்கு மட்டும் அல்ல.



கேள்வி : பிடித்த சுவை?
பதில் : கருப்பட்டியும் தேனும்........



கேள்வி : பிடித்த உணவு?
பதில் : கேப்ப களி மற்றும் குறு மிளகாய். நிறைய தின்றாகி விட்டது. இப்போது தின்று சிறிது நாளாகி விட்டது. விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.



கேள்வி : சன் டி.வி??
பதில் : உலக தொலைக்காட்சி வரிசையில் முதலிடம், மக்கள் மனதிலும் நின்றிடும். உலக தமிழர்களின் தேவை, அதற்கு நாங்கள் செய்யும் சேவை.



கேள்வி : கலைஞர் டி.வி??
பதில் : ஆஹா, இந்த சேனலை பார்க்கத்தான் உலகில் பலர் உயிருடன் உள்ளனர். இன்று உலகின் பல கோடி பேர்களை இலவசமாக மகிழ்விக்கும் ஒரு அற்புத சேனல் தான் கலைஞர் டி.வி. சேனல் யாருடையதாக இருந்தாலும், நல்லவற்றை போற்றுவதும், வாழ்த்துவதும் தானே பச்சை தமிழனின் குணம்??


கேள்வி : ஜெயா டி.வி??
பதில் : அப்படி என்றால் என்ன?? புதியதாக வந்துள்ள ஒரு டி.வி.மாடலா??



கேள்வி : கடவுள் பக்தி என்பது??
பதில் : நான் இதுவரை கேள்விப்படாதது. என் மனைவி எனக்காக எப்போதும் வேண்டுவது.



கேள்வி : பிரச்சனை??
பதில் : கோயில்களில் என் வீட்டார் எனக்காக, என் பெயரில் செய்த அர்ச்சனை (வெளியில் தெரிந்தால் பிரச்சனை).



கேள்வி : பிடித்த பாடல்??
பதில் : சர்க்கர இனிக்கிற சக்கர, இதில் எறும்புக்கு என்ன அக்கறை??



கேள்வி : பிடித்த வேலை?
பதில் : டபுள் ட்ராக் டகால்டி.......



கேள்வி : ஆசைப்படுவது?
பதில் : ஆல் டைம் டகால்டி.



கேள்வி : பிடித்த பட்டப்பெயர்?
பதில் : ஆல் இன் ஆல் அழகுராஜா.



கேள்வி : இன்பம் என்பது?
பதில் : நமீதாவை அருகில் வைத்து சொல்ல வேண்டிய பதில்.



கேள்வி : உங்கள் குரு??
பதில் : என்னை போல பல மாணவர்களையும், சிஷ்யர்களையும் கொண்ட பரமார்த்த குருதான் என் குரு.



கேள்வி : பிடித்த ஐந்து சிஷ்யர்கள், மாணவர்கள்?
பதில் : நான், மூடன், மட்டி, பேதை, மிலேச்சன்.



கேள்வி : தேர்தல் கூட்டணி.
பதில் : இதயத்தில் இடமளித்தவர்களுக்கு தொகுதிகளிலும் இடமளிக்கும் ஒரு விளையாட்டு.


கேள்வி : இலவச கலர் டி.வி??
பதில் : சேனல் பார்க்க சேர்த்து பணம் வாங்கி விடுவோம்.



கேள்வி : ஒரு ரூபாய் அரிசி??
பதில் : ஒரு வேளை சாப்பிட்டவர்கள், இனி மூணு வேளையும் வயிறு முட்ட சாப்பிட நான் செய்த யோசனை.... (இல்லை என்றால் நான் உண்ணாவிரதம் இருப்பேன்).



கேள்வி : ஜல்லிக்கட்டு??
பதில் : வீர இளைஞர்கள் கட்டழகு கன்னியரை தன் வீரதீர செயல்கள் மூலம் கவர ஒரு வாய்ப்பு....



கேள்வி : தொகுதி பங்கீடு??
பதில் : அதிகம் ஆசைப்படுபவர்களிடம், அதிக ஆசை ஆபத்து என்பதை வலியுறுத்தி, சொற்பமாக கொடுக்கப்படும்.



கேள்வி : உங்கள் உண்ணாவிரதம் ஒரு ஸ்டண்ட் என்று சொல்லும் எதிர்கட்சியினருக்கு நீங்கள் சொல்லிக்கொள்வது??
பதில் : நான் உண்ணாவிரதம் இருந்தால் நாடு தாங்காது, நான் உண்ண ஆரம்பித்தால், உங்களுக்கு உணவு தந்து மாளாது......



கேள்வி : உங்கள் தேர்தல் வாக்குறுதிகள்??
பதில் : தேன் தடவிய கசப்பு மருந்து. மருந்து வேலை செய்வதற்குள் நாங்கள் ஆட்சி கட்டிலில் அமர்ந்து விடுவோம்.



கேள்வி : தமிழக மக்கள்??
பதில் : குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.



கேள்வி : இதை எதற்கு சொன்னீர்கள்??
பதில் : ஏதாவது சொல்லவேண்டுமே என்று சொன்னேன். மற்றபடி, அவர்கள் போடட்டும் எனக்கு ஒட்டு. இல்லை என்றால், அவர்களுக்கு நான் வைப்பேன் வேட்டு.


கேள்வி : மக்களிடம் பிடித்தது?
பதில் : அவர்களின் ஞாபக மறதி.

கேள்வி : பிடித்த வார்த்தை??
பதில் : நாளை நமதே, நாற்பதும் நமதே.........

"தல" அதிரடி தேர்தல் பிரச்சார உரை.


என் இனிய கழக கண்மணிகளே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே. ஆங்கிலம் பேசும் அயல் நாட்டவர்களே, எதிர்கட்சியின் பகட்டானவர்களே, உங்கள் அனைவருக்கும் வள்ளுவனின் அடுத்த வாரிசாம், கம்பனின் இளைய பேரனாம் இந்த கலைஞரின் தமிழ் வணக்கங்கள்.

அயல் நாட்டினர் கூட தமிழ் படிக்க ஆவல் கொள்ளும் இந்த காலத்தில், இங்கு புல் பூண்டோடு பிறந்து, கப்பி, களையோடு வளர்ந்த என் தமிழ் கூட்டம், அந்நிய மொழியாம் ஆங்கிலத்தின் மேல் மோகம் கொண்டு அலைவதை பார்த்தால், அய்யகோ, என் நெஞ்சு விண்டு விடும் போல் உள்ளதே. இதை கண்டால், என் மனம் பதைபதைக்கும், உங்கள் பணம் என் பையை நிரப்பும்.
என் பிறந்த நாளின் போது, என்மேல் பாசம் கொண்டு, என் தமிழ்மேல் நேசம் கொண்டு, என் தொண்டர்கள் (குண்டர்கள்) என்னை பண மழையில் நனைத்தனர். நான் பதிலுக்கு அவர்களை என் தமிழ் மழையில் நனைத்தேன். இவ்வளவு நனைந்தும் வசூல் மழை ஒன்றும் பிரமாதம் இல்லை. குறைந்த வசூல் கண்டு கலக்கமடைந்தேன். நிறைய வசூல் வந்தால், நெகிழ்ச்சி அடைவேன்.

இந்நாட்டில் இப்போது பல பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ள நிலையில், நான் ஒரு புதிய தொல்காப்பியப்பூங்கா திறந்துள்ளேன். அந்த தொல்காப்பிய பூங்காவில் என் தமிழ் பௌண்டன், செந்தமிழை பீய்ச்சி அடிக்கும். உள்ளே நுழைய சிறுகட்டணமாக, ஒரு ரூ.5,000௦௦௦/- மட்டும் செலுத்தி, நீங்கள் அனைவரும் தொல்காப்பிய பூங்காவில் நுழைந்தால், என் தமிழ்மழை உங்களை குளிப்பாட்டி மகிழ்விக்கும். வாருங்கள், வந்து நனையுங்கள்.
பலப்பல வேஷங்கள் போடும் பலதரப்பட்ட மனிதர்களை நான் பல காலமாக கண்டு வளர்ந்தவன். ஆனால், என் பிறந்த நாள் விழாவின் போது, என்னிடமே பகல்வேஷம் போட்டு ஒருவன் வந்தான். பிறந்த நாள் வாழ்த்து கூறியவன், தட்சிணை எதுவும் போடாமல் ஓட எத்தனிக்க, சுற்றி குழுமி இருந்த என் தொண்டர்களால் (குண்டர்களால்) நன்றாக கவனிக்கப்பட்டான்.
இன்று, போர்ப்ஸ் என்றொரு அயல்நாட்டு பத்திரிகை என்னையும், என் குடும்பத்தாரையும், உலகின் 445-வது பணக்காரர்களாக அறிவித்து, விஷம பிரச்சாரம் செய்துள்ளது. இதில் எனக்கொன்றும் ஆச்சரியம் இல்லை. அயல்நாட்டின் அந்நியர் கூட இங்கு இருப்பவர்களின் கைப்பாவையாக மாறிவிட்டார்களோ என்று ஐயப்பட வைக்கிறது. மறத்தமிழன் ஒருவன், இந்த பட்டியலில், 444 இடங்கள் பின்தங்கி உள்ளானே என்று யாரும் கோபப்படவில்லை, வெட்கப்படவில்லை, வருத்தப்படவில்லை.

என்னை இந்த இடத்தில் வைத்து அழகு பார்த்த தமிழகமே, தமிழக மக்களே, எதிர்கட்சிகார்கள் கேட்கிறார்களே, இந்த இடம் எப்படி வந்ததென்று?? அவருக்கு சொல்லுங்கள், அது நீங்கள் எனக்கு, அன்பால் அளித்த இடம் என்று. வரும் வருடங்களில், இந்த இடம் நிரந்தரம் இல்லை, மேலும் உயரவைப்போம் என்று. அப்போதாவது அவர்களுக்கு புரியட்டும், நான் யாரென்று??

இந்த 445 இடத்தில் நான் உள்ளதை பற்றி கேள்வி எதுவும் கேட்க நினைப்போர், அந்த பட்டியலில், எனக்கு முன் உள்ள 444 பேரையும் கேட்டு விட்டு என்னிடம் வாருங்கள், பிறகு உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன். என்னை மட்டும் கேள்வி கேட்பது, என்ன கயமைத்தனம்??

டாஸ்மாக் சகோதரர் ஒருவர், அவரின் திருமண மண்டபத்தை நான் இடித்து விட்டதாக, எல்லா பத்திரிக்கைகளையும் அழைத்து சொல்லி வருகிறார். அவருக்கு ஒன்று சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன். நான் உன் மண்டபத்தை இடிக்கவில்லை. அரசாங்க அதிகாரிகள் ஏதோ திட்டத்திற்காக அந்த இடத்தை எடுத்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். இந்த நல்ல விஷயத்தை, நீ டாஸ்மாக் போதை தெளிந்ததும், தெளிவு படுத்தி கொள்வாயாக.

நீ இது போன்று பலபல கோடிகள் செலவு செய்யும் முன், என்னையும் அழைத்து சில பல கோடிகள் கொடுத்திருந்தால், எனக்கு உன்மேல் வராது காழ்ப்பு, ஏனெனில் நான் சோற்றில் இடுவது உப்பு, நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால், உனக்கு நாங்கள் வைப்போம் ஆப்பு.

தேர்தல் சுற்றுபயணம் தொடங்க வேண்டும். வசூல் பலகோடிகள் தேற்ற வேண்டும். என் உண்டிகள் வசூலில் நிரம்பும்போது, என் மனமும் நிறைந்து காணப்படுகின்றது. ஒரு சில இடங்களில் மட்டும், வசூல் மிகவும் குறைவாக உள்ளது. அதை காணும் போது, மனம் வாட்டம் அடைகிறது.
நம் நாடு மற்றும் அதன் வளர்ச்சி, உலகின் அனைத்து பல நாடுகளுக்கும் சவால் விடும் நிலையில் இருந்தாலும், சில இடங்களின் வசூல் மட்டும் யாருக்கும் எந்த சவால் விடும் நிலையிலும் இல்லையே என்று எண்ணும்போது, என் உள்ளம் குமுறுகிறது, கண்கள் பனிக்கிறது, இதயம் கனக்கிறது.

மக்கள் வாழ்வில் மற்றற்ற மகிழ்ச்சியும், முன்னேற்றமும் வந்துள்ள நிலையில், இந்த முறை, வசூலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட நீங்கள் தயவு செய்ய வேண்டும். என்னை வசூல் மன்னனாக ஆக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. பொறுப்பில் பின்வாங்குவது தமிழனுக்கு அழகல்ல. முடிவெடு தமிழா ............... சோதனைகளை தாண்டியவன், சாதனைகள் படைக்க வாழ்த்துங்கள்.

நான் உங்கள் கட்டுமரம், கள்ளத்தோணி, நீங்கள் அதில் ஏறி, எங்கும் பயணம் செல்லலாம், இலவசமாக. நான் உங்களுக்கு சேவை செய்வதையே வாழ்வின் முக்கிய குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வருகிறேன். என் சேவை நீங்கள் அறியாததா?? உதாரணத்துக்கு ஒன்று, மானாட மயிலாட, நானாட, நமீதா ஆட.....

காடுவெட்டி குரு, செடி வெட்டி சிஷ்யன் எல்லாரையும் அரவணைத்து செல்வது என் பண்பல்லவா?? எல்லோருக்கும் கையில் இருக்கும் 40அப்பத்தை சிறு சிறு பங்குகளாக கொடுத்து விட்டு, நான் என் பங்காக வைத்து கொள்ள இருப்பது வெறும் 35 தான்.
(வாழ்க அண்ணா நாமம், நானும் உங்களுக்கு போடுவேன் பெரிய நாமம்)

Sunday, March 8, 2009

சரத் @ மெகா காமெடி டாட் காம்




கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வரும் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுப்போம் என்று அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.



அவர் மேலும் கூறியதாவது :



தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தங்களிடையே இருக்கிற வேறுபாடுகளை களைந்து ஒருங்கிணைந்து தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஈழத் தமிழரிடையே இருந்து வருகிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அ.தி.மு.க. அறிவித்திருக்கும் போராட்டத்தின் மூலம் அதற்கான காலம் கனிந்திருக்கிறது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

**********************************************

தன் சமீபத்திய படமான 1977 மெகா ஹிட் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து எல்லோருக்கும் கிச்சு கிச்சு மூட்டினார்.


(சரத்குமாரின் அதிமுக ஆதரவு பேச்சுக்கு , ஜெ.விடம் இருந்து எந்தவித சாதகமான பதிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது).

Saturday, March 7, 2009

கேள்வியும் நானே பதிலும் நானே - "தல" ஸ்பெஷல்



தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் "தல" தன் கேள்வி பதிலுடன் தயாராகி விட்டார். மிகுந்த பணிகளுக்கிடையில் அவர் அளித்த இன்றைய ஓரிரு வார்த்தை, "கேள்வியும் நானே பதிலும் நானே".

கேள்வி : அரசியல் என்பது?
பதில் : அனுபவசாலிகள் விளையாடும் மைதானம்

கேள்வி : தி.மு.க?
பதில் : திறமைசாலிகள் முழுதும் கலந்தது.

கேள்வி : திருமா??
பதில் : கருஞ்சிறுத்தை.

கேள்வி : வை.கோ?
பதில் : புலியல்ல, பூனைக்குட்டி.

கேள்வி : ராமதாஸ்?
பதில் : மருத்துவராக தகுதி பெற்ற மருத்துவர்.

கேள்வி : காடு வெட்டி குரு?
பதில் : என் அன்புத்தம்பி

கேள்வி : ஜெ.ஜெ.?
பதில் : பகட்டு சீமாட்டி.

கேள்வி : மு.க.முத்து?
பதில் : நடிப்பு சுரங்கம், பல்கலை வித்தகன்.

கேள்வி : மு.க.அழகிரி?
பதில் : அரசியல் அனுபவசாலி.

கேள்வி : மு.க.ஸ்டாலின்?
பதில் : தமிழ்நாட்டின் தளபதி.

கேள்வி : தங்கபாலு??
பதில் : என் ஆருயிர் நண்பர்.

கேள்வி : இளங்கோவன்??
பதில் : எல்லோருக்கும் இனியவர்.

கேள்வி : கேப்டன் விஜயகாந்த்?
பதில் : அவர் எந்த டீமுக்கு கேப்டன்? அவரை பழுப்பு எம்.ஜி.ஆர் என்றே அழையுங்கள்.

கேள்வி : ரஜினிகாந்த்??
பதில் : கருப்பு வைரம், இந்தியாவின் சூப்பர் ஸ்டார், விரைவில் அகில உலகும் கொண்டாடப்படும் நிலைக்கு வருவார்.

கேள்வி : கமலஹாசன்?
பதில் : சகலகலா வல்லவன்.......கலைத்தாயின் முதல் மகன்.

கேள்வி : டி.ராஜேந்தர்??
பதில் : ஓட்டை பாத்திரத்தில் ஓராயிரம் லிட்டர் தண்ணீர் சேமிக்க நினைப்பவர்.

கேள்வி : நடிகர் விவேக்?
பதில் : நகைச்சுவை வித்தகன்.

கேள்வி : வடிவேலு?
பதில் : வைகை மண்ணில் வந்த கரும்சிரிப்பு.

கேள்வி : வாலி?
பதில் : வார்த்தை ஜால கவி.

கேள்வி : வைரமுத்து?
பதில் : வைர வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்.

கேள்வி : இளையராஜா?
பதில் : இசைத்தாயின் மூத்த மகன்.

கேள்வி : ஏ.ஆர்.ரஹ்மான்?
பதில் : இசையை சுவாசிக்கும் இளம்புயல்.
கேள்வி : பாராளுமன்ற தேர்தல்??
பதில் : நாளை நமதே, நாளை நாற்பதும் நமதே!!!!

Tuesday, March 3, 2009

கேப்டன் விஜயகாந்த் - எங்கள் ஆசான் (படத்த வாங்க ஆளு யாரும் இல்லீங்கோ ஒ)






விஜயகாந்த் நடித்த எங்கள் ஆசான் படம் முடிந்த பின்பும் ரிலீஸ் செய்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. படத்தை எந்த விநியோகஸ்தரும் வாங்கவில்லை என்பதால்தான் இந்த நிலை. முதலில் படத்தை வாங்கிக்கொள்வதாக உறுதியளித்த பிரமிட் சாய்மீரா கடைசி நேரத்தில் கையை விரிக்க, அதிர்ந்து போய் விட்டார் தயாரிப்பாளர் தங்கராஜ்.

இதற்கிடையில் மரியாதை பட பிரஸ் மீட்டில், "எங்கள் ஆசான் ரிலீஸ் ஆவது தாமதமாகிக்கொண்டிருக்கிறதே" என்று ஒரு நிருபர் கேட்க, "என் வேலை நடிச்சுக் கொடுப்பதுதான். படத்தை ரிலீஸ் பண்ணுவதும், தள்ளிப் போடுவதும் தயாரிப்பாளரின் இஷ்டம். அதிலே நான் எப்படித் தலையிட முடியும்?" என்றார் கேப்டன். முன்பெல்லாம் தனது படங்களில் ஏதாவது சிக்கல் என்றால் முன்னின்று முடித்து தருபவர், இப்போதெல்லாம் இப்படிப் பேசுவது எதனால் என்று புரியாமல் தவித்தார்கள் நிருபர்கள்.

இவர்களைவிடப் பெரும் தவிப்போடு இருப்பவர் எங்கள் ஆசான் தயாரிப்பாளர்தான்.

(நன்றி : சென்னைஆன்லைன்.காம்)
(இவரு பின்ன வடிவேலு கூட எல்லாம் சண்டை போட்டுக்கிட்டு இருந்தா காமெடி லெவல்-ல தான் இருக்கமுடியும். கடந்த பத்து வருடங்களில் விஜயகாந்த் நடித்த ரமணா தவிர எந்த படமும் ஓடியதாக தெரியவில்லை. ஆகவே தான் விஜயகாந்தின் படங்களை வாங்க யாரும் முன்வரவில்லை. சமீபத்தில் டாப்-20 தமிழ் நடிகர்களின் பட்டியலை ஒரு முன்னணி வெப்சைட் வெளியிட்டது. அந்த லிஸ்டில் விஜயகாந்த் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

Monday, March 2, 2009

டண்டனக்க டமாலு, உத்துப்பாரு நம்மாளு, கரடிக்கு சவாலு








தமிழ்நாட்டின், டெர்ரர் ஹீரோ (ஹீரோயினை தொடமாட்டார், ஆனால் சொம்பு சொம்பாக பால் எடுத்து ஊத்துவார், பால்தொட்டியில் ஹீரோயினை போட்டு குளிப்பாட்டுவார்), கேமராமேன், பாடலாசிரியர் (தட்டி பாத்தேன் கொட்டாங்கச்சி, தாளம் வந்தது பாட்ட வச்சி, தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி, தூக்கி எறிஞ்சா கண்ணு கொளமாச்சு உட்பட பல அதிரடி பாடல்கள் எழுதி உள்ளார்), இசையமைப்பாளர், பாடகர் (பொன்னான மனசே பூவான மனசே பாடல் புகழ்), டான்ஸ் மாஸ்டர் (சமீபத்திய அட்டகாச டான்ஸ் படம் வீராசாமி), ஸ்டண்ட் மாஸ்டர், காதாசிரியர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், டைரக்டர், தயாரிப்பாளர், மேக்கப் கலைஞன் உள்ளிட்ட பல விஷயங்களையும் தன் படத்தில் செய்வார். செய்து நம் அனைவரையும் கொல்வார். அவர்தான் நாம் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த பல்கலை வேந்தன் கரடி டி.ராஜேந்தர்.

வாய் ஓயாமல் அடுக்குமொழி பேசி, அடுத்தவரை எப்போதும் குறை கூறி கொல்லும் இந்த கரடி, கொஞ்ச நாளாக வாய்மூடி இருக்கிறது. அவரை நம் மக்களுக்கு ஞாபகப்படுத்தும் நோக்கில் அவர் எழுதிய ஒரு சூப்பர் கவிதை, உங்கள் பார்வைக்கு.
********************************************
டேய் குகையில் இருந்தா புலி
வலையில் இருந்தால் எலி
கொழம்புல போட்டா புளி
ஜலிப்பு கட்டினா சளி
அடிபட்டா வரும் வலி
குழியில ஆடுனா கோலி
கழியில ஆடுனா கில்லி
கழுத்துல கட்டுனா தாலி
கொழந்த தூங்குனா தூளி
வேல செஞ்சா ஜோலி
ஊர் சுத்துனா ஜாலி
வீட்ட சுத்தி போட்டா வேலி
ஆனா, மவனே லாரி ஒன்மேல ஏறினா நீ காலி
தலைல வெச்சா கரகம்
நான் என்னிக்குமே கெரகம்
மலைன்னா சிகரம்
நான் வந்தா ஊரே நகரும்
துருப்பிடிச்சா தகரம்
இதே ரேஞ்சுல போனா எனக்கு நரகம்
என் பையன் பேரு சிம்பு
அவன்கிட்ட வேணாம் வம்பு
அவன் நல்லவன்டா நம்பு
நீ நம்பினா எனக்கு தெம்பு
எதுவுமே சாப்பிடலேன்னா நோம்பு
ரொம்ப பிகு பண்ணினா வீம்பு
பொந்துல இருந்து சீறினா பாம்பு
அடுப்புல வெடிச்சது கடுகு
தண்ணியில போனது படகு
மலைன்னாலே அது குடகு

நீ என்ன பாத்தா கண்ணு
நான் அப்போ துன்னது பன்னு
குத்தினா பின்னு
பிஸ்கட் வெச்சா டின்னு
நீ ஓரமா போய் நின்னு
நான் சொன்னத திங்க் பண்ணு
தாண்டினா ஜம்பு
தண்ணி வந்தா பம்பு
எனக்கு எல்லாரும் வச்சது ஆப்பு
கண்ணுல வந்தா கண்ணீரு
மண்ணுல வந்தா தண்ணீரு
வாசனையா இருந்தா பன்னீரு

ஏய் டண்டனக்கா, ஏய் டணக்குடக்கா

Sunday, March 1, 2009

வருத்தப்படாத டகால்டிகள் சங்கம்

தமிழே - தமிழின்
குமிழே - குமிழின்
சிமிழே

புவியின் பூகோளமே
அழிவின் ஆரவாரமே
அராஜகத்தின் அச்சாரமே

முரண்பாட்டின் மூட்டையே
நீ நாட்டை போட்டது ஆட்டையே

நீ உண்ணாமல் இருந்தால்
சட்டியில் சாப்பாடு குறையாது


நீ உண்டு கொழுத்தால்
எங்களுக்கு போட்டு மாளாது

நீ திறந்து விட்டது டாஸ்மாக்
பசங்க வாங்காம விட்டது பாஸ்மார்க்

கள்வர்கள் கவிதை எழுதுவார்கள்
டகால்டிகள் டாஸ்மாக் அடிப்பார்கள்

தேன்தமிழ் நாட்டின் தீந்தமிழே - நீ
தமிழ்நாட்டுக்கு ஊதுவது சங்கே

அகில உலக டகால்டியே - நீ
அடிப்பது அந்தர் பல்டியே

தொல்காப்பிய பூங்காவில் கல்லா கட்டியவரே
மக்கள் அனைவருக்கும் குல்லா போட்டவரே

மஞ்சள் துண்டணிந்த மாபெரும் விரசகவியே
உன் ஆட்டத்திற்கு தாங்காதப்பா இந்த புவியே


எங்கள் சங்கத்தின் முதல்முகமே
நீங்கள் அனைவருக்கும் அறிமுகமே

முதுமையின் இளமையே
இன்று புதன்கிழமையே

முத்தமிழ் வித்தகரே - எங்கள்
தமிழ்நாட்டை வித்தவரே

பொறாமையின் பிறப்பிடமே
வஞ்சகத்தின் இருப்பிடமே

தலைவா கொஞ்சம் அடக்கி வாசி
பேசுவதற்கு முன் சிறிது யோசி

ராஜ்ஜியத்தின் மெத்தகையே
பூஜ்ஜியத்தின் குத்தகையே

நீ டகால்டிகெல்லாம் டகால்டி - உன்னை
வணங்கி வரவேற்போம் துதிபாடி