Sunday, March 1, 2009

வருத்தப்படாத டகால்டிகள் சங்கம்

தமிழே - தமிழின்
குமிழே - குமிழின்
சிமிழே

புவியின் பூகோளமே
அழிவின் ஆரவாரமே
அராஜகத்தின் அச்சாரமே

முரண்பாட்டின் மூட்டையே
நீ நாட்டை போட்டது ஆட்டையே

நீ உண்ணாமல் இருந்தால்
சட்டியில் சாப்பாடு குறையாது


நீ உண்டு கொழுத்தால்
எங்களுக்கு போட்டு மாளாது

நீ திறந்து விட்டது டாஸ்மாக்
பசங்க வாங்காம விட்டது பாஸ்மார்க்

கள்வர்கள் கவிதை எழுதுவார்கள்
டகால்டிகள் டாஸ்மாக் அடிப்பார்கள்

தேன்தமிழ் நாட்டின் தீந்தமிழே - நீ
தமிழ்நாட்டுக்கு ஊதுவது சங்கே

அகில உலக டகால்டியே - நீ
அடிப்பது அந்தர் பல்டியே

தொல்காப்பிய பூங்காவில் கல்லா கட்டியவரே
மக்கள் அனைவருக்கும் குல்லா போட்டவரே

மஞ்சள் துண்டணிந்த மாபெரும் விரசகவியே
உன் ஆட்டத்திற்கு தாங்காதப்பா இந்த புவியே


எங்கள் சங்கத்தின் முதல்முகமே
நீங்கள் அனைவருக்கும் அறிமுகமே

முதுமையின் இளமையே
இன்று புதன்கிழமையே

முத்தமிழ் வித்தகரே - எங்கள்
தமிழ்நாட்டை வித்தவரே

பொறாமையின் பிறப்பிடமே
வஞ்சகத்தின் இருப்பிடமே

தலைவா கொஞ்சம் அடக்கி வாசி
பேசுவதற்கு முன் சிறிது யோசி

ராஜ்ஜியத்தின் மெத்தகையே
பூஜ்ஜியத்தின் குத்தகையே

நீ டகால்டிகெல்லாம் டகால்டி - உன்னை
வணங்கி வரவேற்போம் துதிபாடி

1 comment:

greatlover said...

முட்டாள் தலைவனே! முட்டாள்களின் தலைவனே !
மூட நம்பிக்கை ஐ ஒழிக்க பாடு பட்ட பெரியாரின் பேரை பயன் படுத்தியே
இன்று ஒரு அடிவருடிகளின் கூட்டத்தை உருவாக்கி, ஸ்பெக்ட்ரம் பணத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க மனப்பால் குடிக்காதே! .உண்மை தமிழ் உணர்வு உன்னை கண்டிப்பாக ஒழித்து விடும்!!