Monday, July 19, 2010

அசத்தல் “மேதை” அண்ணன் கி”ராமராஜன்”


கலைமகள் கலைக் கூடம் சார்பில் எம்.குமார், டி.பழனிச்செட்டியார், பாலகிருஷ்லெடி, 'சீர்காழி' கே.சிவசங்கர், எஸ்.செல்வபிரகாஷ் ஆகியோர் தயாரிக்கும் படமான 'மேதை' என்ற படத்தின் மூலம் தனது மறுபிரவேசத்தை நிகழ்த்தப் போகிறார் ராமராஜன்.

(இதுவரை பட்டாப்பட்டி டவுசரில் அனைத்து கிராமங்களையும் கலக்கி வந்த "மாமேதை கி”ராமராஜன்" இந்த "மேதை" படத்தில் ஜேம்ஸ்பாண்ட் எல்லாம் அசரும் வகையில் கோட் சூட் அணிந்து கலக்குகிறார். ஆனாலும் ரசிகர்களை (!!???) ஏமாற்றாமல் ஒரு பாடல் காட்சியிலாவது பட்டாப்பட்டி டவுசர் அணிந்து கையில் பால்சொம்புடன் வருவார் என்றும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன).

இது அவருக்கு 44-வது படம். (முந்தைய 43 படங்களிலும் டவுசர் மற்றும் பட்டாப்பட்டி அணிந்து நடித்த உலகின் ஒரே நடிகர் என்ற பெருமை அண்ணனுக்கு உண்டு).

இந்தப் படத்தில் கிராமத்து பள்ளி ஆசிரியராக வருகிறார் ராமராஜன். வழக்கம்போல கிராமிய பின்னணியைக் கொண்ட இப்படத்தில் காதல், நகைச்சுவை, சண்டை என்று அவரது ரசிகர்கள் (!!???) எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் கொண்டதாக அசத்தலாக தயாராகிறதாம்.

படத்தின் முக்கிய பலமாக வடிவேலு நடிக்கிறார். இதுவரை கவுண்டமணியுடன் மட்டுமே கலக்கி வந்த ராமராஜன் இந்தப் படத்தின் மூலம் மதுரை மண்ணின் மைந்தருடன் இணைந்து காமெடி பண்ண தயாராகிறார். (வடிவேலு இந்த படத்துல அண்ணன் ”மேதை”யோட மேட்டர முடிச்சுடுவாருன்னு நெனக்கறேன்).

புதுமுக நாயகி ஒருவர் ராமராஜனுடன் ஜோடி சேருகிறார். சார்லி, அஜய், ஹாசினி, ஸ்ரீரஞ்சினி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்துக்கு இசையமைக்கிறார், தீனா. பாடல்கள் ரிலீஸாகி பட்டைய கெளப்புதாமாம்...

“மேதை” அறிமுக காட்சியில் வரும் :

என்னோட பட்டாப்பட்டிக்கு பதில் சொல்ல
இந்த பதினெட்டு பட்டிலயும் ஆளில்ல

என்ற பாடல் சூப்பர் ஹிட்டாம்... மெய்யாலுமா தல??

மதுரை அருகே மேலூரில் படப்பிடிப்பு தொடங்கி சென்னை கடலூர், புதுச்சேரி, நெய்வேலி மற்றும் பல இடங்களில் நடக்க இருக்கிறது.கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், என்.டி.ஜி.சரவணன்.

தன் புதிய படமான “மேதை” பற்றி சொல்லும் போது, முன்பு சிவாஜி நடித்து வெளிவந்த படிக்காத மேதை அளவு இருக்கும் என்று கூறினார்...

(இந்த படத்தில் ரீ-எண்ட்ரி ஆவதன் மூலம் ”மேதை கி"ராமராஜன்" திரையுலகில் முன்னணியில் இருக்கும் டெர்ரர் ஸ்டார்ஸ் டி.ராஜேந்தர், ஜெ.கே.ரித்தீஷ் மற்றும் யுனிவர்சல் ஹீரோ சாம் ஆண்டர்சன் ஆகியோருக்கு பெரிய சவாலாக இருப்பார் என்று அகில உலக கி"ராமராஜன்" ரசிகர் மன்றம்? தெரிவித்துள்ளது).

Wednesday, July 14, 2010

BITS, Pilani - Dubai - Vacancies

தோழமைகள் அனைவருக்கும் வணக்கம். இந்தியாவின் மிக பிரபலமான BITS, Pilani கல்வி நிறுவனத்தின் துபாய் கிளையில் கீழ்க்கண்ட பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்று அங்கே பணிபுரியும் என் தோழர் செல்லதுரை என்பவர் மூலமாக அறிந்தேன்..

1. Technical Assistants - Electrical & Electronics Engg. / Electronics & Instrumentation Engg (Male)
2. Senior Lecturer / Lecturer - IT (Male)
3. Executives / Assistants - Finance & Accounts (Male)
4. Executives / Assistants - HR (Male)
5. Senior Secretaries / Secretaries (Male)

மேலும் விரிவான தகவலுக்கு /மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்..

http://www.bitsdubai.com/vacancies.html

Thursday, June 17, 2010

"பன்ச் டயலாக்ஸ் 2010"

வெண் திரையில் அதிர அடிக்கும் இசை...

கையில் இருக்கும் பத்து விரலும் பல வித இசைக்கு ஏற்ப தாளமிட்டு சுழலும் ஒரு நிலை... அது தான் பன்ச் டயலாக்...

தமிழ்நாட்டில் பிறந்த யாரும் பன்ச் டயலாக் என்பதை அறியாமலோ,தெரியாமலோ அல்லது பேசாமலோ இருந்திருக்க வாய்ப்பேயில்லை... ஏனென்றால், பன்ச் டயலாக்கும் தமிழ்நாடும் பிரிக்க முடியாத ஒன்று..

அதை மனதில் வைத்து "பன்ச் டயலாக்ஸ் 2010" என்கிற புதிய நிகழ்ச்சியில் இன்று நாம் பலதரப்பட்ட வி.ஐ.பி.களை சந்தித்து அவர்களின் லேட்டஸ்ட் "பன்ச் டயலாக்ஸ்" என்னவாக இருக்கும் என்று கேட்டோம்... அவர்கள் சொன்னது இங்கே.... கவிஞர்கள் கொஞ்சம் பெருசா கவிதை மாதிரி பன்ச் டயலாக்ஸ் சொன்னது ரசிக்க வைத்தது.....(சிறிது முன்னே, பின்னே இருந்தாலும்) அப்படியே இதோ உங்கள் பார்வைக்கு)..........

கருணாநிதி : "கொடநாடு உல்லாசி"யே..
ஊரெல்லாம் உன்னை ஏசியே...
வருதே பேசியே..

ஜெயலலிதா : வயது எண்பதை கடந்த ஏழை
என்று தன் வயதையும், வளமையையும்
மறைத்து பேசி வரும் ஒரு கோழை,
அது தமிழ்நாட்டை பிடித்த பீடை...

ஜெக‌த்ர‌ட்ச‌க‌ன் : என் ர‌த்த‌த்தில் குறையாத‌ க்ளூகோஸே...

உன்னை எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் இங்கே அட்டு பீஸே...
வாழும் வள்ளுவனே... அகில உலக நல்லவனே..
அவனியில் வல்லவன் என்றும் நீ ஒருவனே ....


ரஜினிகாந்த் : சுத்துனா உலகம்...
சும்மா எதாவது சொன்னா கலகம்...
தேவலோக தலைவன் இந்திரன்...
அகில உலகுக்கும் தலைவன் என் “எந்திரன்”...
இது எப்படி இருக்கு!!?? ஹா...ஹா...ஹா...ஹா...

விஜயகாந்த் : ஊத்தற அளவு கம்மி...
விலையோ ரெம்ப அதிகம்...
ரேசன்ல இல்லடா.. பரதேசி...
டாஸ்மாக்ல...ஆங்....
என் விழியே என்றும் சிவப்பு...
அதில் தெரியுதா பாரு நெருப்பு...

கமல்ஹாசன் : நான் விடும் “மன்மத அம்பு”
இது இளைஞர்களுக்கான காதல் விருந்து
இதை வெண்திரையில் வந்து அருந்து
இல்லையேல் பின்னால் நீ வருந்து

விஜய் : நான் சொல்லி அடிச்சா குச்சி..
சொல்லாம அடிச்சு சொக்கா கிழிஞ்சு போச்சு..
வானத்துல பறக்கறதுக்கு நான் புறா இல்ல...
அந்த கடலையே கலக்கற “சுறா”....

(யப்பா... போதும்டா சாமி... இதுக்கே நாடு தாங்கலடா.....)

அஜித் : நான் நெறைய பேஸ் மாட்டேன்...

கொஞ்சமா பேஸ்வேன்...
கொஞ்சமா பேஸ்னா அப்றம் நெற்ய பேஸ்வேன்...
புரியுதா... அது!!!

சிம்பு : போட்டியில யாரு மொதல்ல வராங்கன்றது முக்கியம் இல்ல...
யாரு லாஸ்ட்ல ஃபர்ஸ்டா நான் வரேன்ங்கறது தான் முக்கியம்...
ஏதாவது புரிஞ்சா சரி?

தமிழ் கரடி : அஞ்சும், அஞ்சும் பத்து...
நீ எப்போவும் ஊர சுத்து...
தயிர் கடையும் மத்து...
மாட்டுனா, மனவே என்ன நாலு மாத்து மாத்து...

அழகிரி : அண்ணன் அடிச்சா கலங்கும் மதுரை...
பாய்ந்து ஓடியதே பந்தயத்தில் குதிரை..

பேரரசு : கடையில வாங்குனேன் அவல்பொரி...
அண்ணன் கலக்கி அடிச்சா தீப்பொறி..
சுத்தி அடிச்சா சூறாவளி...
சுத்தாம ஆடினா கதகளி...

தங்கர் பச்சான் : என் பேரு தங்கர் பச்சான்..
நான் தங்க தமிழ் நாட்டின் அமிதாப் பச்சன்...
இதை எல்லாருக்கும் சொல்லி வச்சேன்...
இத கேட்ட எல்லாரையும் மிரள வச்சேன்

பரத் : பழத்த பெசஞ்சா பஞ்சாமிர்தம்...
பார்த்து பயந்தா காண்டாமிருகம்...
அதிர வைப்பான் ஆறுமுகம்...
இனிமே எனக்கு ஏறுமுகம்...

விஷால் : ஒண்ணு, ரெண்டு நம்பர்...
இதுல நானும் ஒரு மெம்பர்...
பிராந்தில கலந்தேன் பெப்பர்...
அத வாந்தி எடுக்காம அடிச்சா சூப்பர்...

விவேக் : என் பேச்சால எல்லாருக்கும் வச்சேன் ஆப்பு
இப்போ அதே ஆப்பை, எனக்கே வச்சுக்கிட்டேனே மாப்பு

வடிவேல் : நானு என்னிக்குமே வாய் சொல்லுல வீரர்....
ஆனாலும், என்னிய பார்த்தா பயலுவ எல்லாருக்கும் டெர்ரர்
என்னிய அதட்டி பாக்குறான் சிங்கமுத்து....
அவனுக்கு போடறேன் நான்
நெத்தியில பத்து...

சந்தானம் : நொங்கு எடுத்து, கிழிஞ்சது டங்குவாரு
தேங்காய்ல இருந்து தொங்குது தேங்கா நாரு
சூப்பர் ஸ்டார் கூட நடிச்சேன் அது ஜோரு
ஓட விட்டு எல்லாரையும் சுளுக்கு எடுக்குறேன் பாரு...

கவுண்டமணி : ஒலகத்துல ஒரே அறிவாளி ஜி.டிநாயுடு
என் பக்கத்துல வராதே... அப்டியே நீ ஓடிடு...

செந்தில் : எனக்கு பேச வராது பஞ்ச் டயலாக்கு
கவுண்டரால நான் ஆனேன்
என்னிக்குமே பேக்கு

வைரமுத்து : பிடறி சிலிர்க்க ராஜநடை போட்ட தமிழ் சிங்கம்....
அது தமிழ்நாடு நமக்கு தந்த வாழ்வியல் அங்கம்
கோபாலபுரத்தின் ஒரு அடையாளம்...
தமிழுக்கும், தமிழர்க்கும் அதுவே கடிவாளம்...

அன்று நிலவில் பாட்டி சுட்டாள் ஒரு வடை
அதை அடைய தமிழனுக்கு இல்லை தடை...

வாலி : துள்ளி நடந்து வரும் தமிழே
தத்தி தாவி வரும் குமிழே
வீர நடை போடும் சிங்கமே
மாசு குறையாத தமிழ் தங்கமே

எழுத நினைத்தேன் உன் வரலாறு
அதுக்கு தமிழே எனக்கு தகராறு

கவிஞர் விஜய் :

இருளிலும் ஒளிரும் குமிழே
பகலிலும் மிளிரும் தமிழே
எங்கெங்கு தேடினும் இனியே
பாரிலும் உமக்கில்லை இணையே

Saturday, April 24, 2010

எந்திரன் பாடல்கள் - ஏ.ஆர்.ரஹ்மான், வாலி, வைரமுத்து


பங்கேற்போர் : இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கவிஞர் வாலி, கவிப்பேரரசு
வைரமுத்து.

ஏ.ஆர்.ரஹ்மான் : என்னை தேடி வந்திருக்கற உங்கள் இருவருக்கும் என்
காலை வணக்கம்..

பரஸ்பர வணக்கங்கள் முடிகிறது.

வைரமுத்து : தம்பி ரஹ்மான் அவர்கள் சூப்பர் ஸ்டார் நடிக்கும், அகிலத்தை அதிர செய்யப்போகும், பிரம்மாண்டமான "எந்திரன்" திரைப்படத்தில் 5 பாடல்கள் இருப்பதாக என்னிடம் மெட்டமைத்து காட்டினார். ஆஹா, அந்த மெட்டு, அத்தனையும் தேன் சொட்டு, அவை அனைத்தும் சூப்பர் ஹிட்டு.....எனக்கு ஆசை அதிகம் இல்லை. ஆகவே, அந்த 5 பாடல்களை தவிர படத்தின் மற்ற அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலியே எழுதட்டும்.......


வாலி : தம்பி வைரமுத்து அவர்களே எனக்கு தமிழும் தெரியும், ஞான் கணக்கும் அறியும்........

வைரமுத்து : ஒன்றே சொன்னீர்கள், நன்றே சொன்னீர்கள், அதையும் இன்றே சொன்னீர்கள். பல்லில் அடிபட்டால் பல்வலி, ஒரு பாடலின் முதல் வரி பல்லவி. இதோ, சூப்பர் ஸ்டார் அறிமுகமாகும் "எந்திரன்" பட பாடலின் பல்லவி :

எந்திரன் எந்திரன் எந்திரன்
எதிர்காலம் அறிந்த எந்திரன்
இவன் தந்திரன், தந்திரன், தந்திரன்
புவியை ஆள வந்த இந்திரன்

வாலி : ஐயோ, ஐயோ, இது என்ன தமிழுக்கு வந்த சோதனை....... முதல் வரியில் ஏன் படத்தின் பெயர் வரவேண்டும்..... ரஹ்மான் அவர்களே. ..... இதோ என் பாடலை கேளுங்கள்..........

வா வா வா வா வா வசீகரா
அந்த வானமே வசப்படுமே வசீகரா
தா தா தா தா தா வசீகரா
உன் சம்மதம் தாடா வசீகரா ........

வைரமுத்து : கவியே இது என்ன தமிழா? நீங்கள் இதுவரை இந்த வடுகப்பட்டி காரனின், தமிழை முழுமையாக கேட்டதில்லை என நினைக்கிறேன்... இதோ, ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதமாக, என் தமிழ் உங்கள் செவிகளுக்கு :

குப்பியில் இருந்து கரு மை எடுத்து,
அதில் என் தமிழை கலந்து,
நான் எழுதும் பாடல் கேட்டு,
தமிழ் சேவல் கொக்கரிக்கும்,
தமிழ் சோடா கொப்பளிக்கும்.

இது எப்படி இருக்கிறது முதுமை கவி வாலி அவர்களே?

ஏ.ஆர்.ரஹ்மான் : ஆஹா, ஆஹா.... வைரமுத்து அவர்களே... நான் சமீப காலத்தில் கேட்ட மிக நல்ல தமிழ் வரிகள் இவைதான்...... வாழ்த்துக்கள்......

வாலி : பொறாமையின் பிறப்பிடமே, வஞ்சகத்தின் இருப்பிடமே, கொஞ்சம் அடக்கி வாசி... என் பாடலை நீ நன்கு வாசி, பின் நீ எழுதுவது தமிழ் தானா என்று யோசி!!

வைரமுத்து : எதுகை மோனைகளை சொல்லி, நீ எழுதும் தமிழ் உயிர்கொல்லி. தமிழ் மக்கள் தமிழை மறக்க நீங்கள் எடுக்கும் முயற்சி விரைவில் வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஏ.ஆர்.ரஹ்மான் : கவிஞர்களே, பாடல் ஏதாவது இருக்கா இல்லையா, தேறுமா?? எனக்கு வேறு படங்களின் வேலைகளும் இருக்கின்றன..... பல ஹிந்தி படங்கள் ஏற்கனவே பெண்டிங்கில் இருக்கிறது.....

வாலி : ரோபோக்களை கட்டி மேய்க்கும் நம் நாயகனுடன் படத்தின் நாயகி கிடைக்கும் ஒய்வு நேரத்தில், ஆடிப்பாடும் அடுத்த டூயட் பாடல் இதோ ........

என் தலைவா நீ ஒன்று
நான் சேர்ந்தால் நாம் இரண்டு
நம் மழலை வந்தால் நாம் மூன்று
நான் மறை வேதமோ நான்கு.........

வைரமுத்து : இது என்ன டூயட் பாடலா இல்லையென்றால் LKG பாடலா??. ரஹ்மான் அவர்களே, இதை கேளுங்கள்........

என் தலைவா நீ ஓடி வா வா
ஓடி வந்து அணைக்க வா வா
தர வேண்டும் கோடி முத்தம்
அதுவும் இனிக்கும் நித்தம் நித்தம்

வாலி : அடடா, இவன் கொஞ்சம் நல்லாவே தமிழ் எழுதுவான் போல இருக்கே... ரஹ்மான நம்ம பக்கம் வளைக்க ட்ரை பண்ணுவோம்..... ரஹ்மான், இந்த பாட்டு கேளுங்க.....

தலைவா நீ சிலிகான் சிங்கம்
உனக்காகத்தானே என் அங்கம்
காத்திருக்கு சீக்கிரம் வாடா
போத்திக்கத்தான் போர்வையாய் வாடா

ஏ.ஆர்.ரஹ்மான் : வாலி அண்ணா, இந்த பாட்டு சூப்பர். இத ஒகே பண்ணிடலாம். நெக்ஸ்ட்.

வைரமுத்து : ஆஹா, வாய்ப்பு நழுவி விட்டதே?? என்ன செய்யலாம்?? வாலி அவர்களே, முன்பு கூட, நீங்கள் ஒரு பாடல் எழுதினீர்கள்... ”அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே” என்று...... நீர் எழுதிய அந்த பாடலில் குறை இருந்தது புளுகு கவிஞரே !!!

வாலி : வேண்டாம் அன்பரே....அந்த பாடலை குறைகூறினால் பொறுத்து கொள்ள மாட்டேன்..... அம்மா என்றழைக்காத ஒரு உயிர் உண்டோ, இந்த பூமியில்??

வைரமுத்து : எந்த சர்ப்பமாவது அம்மா என்று சீறியதை கேள்விப்பட்டு இருக்கிறீரா? இல்லை, எந்த கரடியாவது அம்மா என்று கதறியதை காட்ட முடியுமா?? நான் கண்ட கருங்குயில் கூட கூ கூ என்று தானே கூவுகிறது? இதில் இருந்தே தெரிய வில்லை, நீர் ஒரு புளுகு மூட்டை கவிஞர் என்று?

ஏ.ஆர்.ரஹ்மான் : ஐயோ, இவனுங்க ரெண்டு பேரோட இம்சை தாங்க முடியலையே... பாட்டு எழுத கூப்பிட்டா, இவனுங்களோட சண்டையில இந்த தமிழை கேட்டு கேட்டு, என் தலையே வீங்கி போச்சே....... மொதல்ல இவனுங்கள தொரத்த ட்ரை பண்ணுவோம்......

சரி சரி கவிஞர்களே, உங்க ரெண்டு பேருக்குமே ஆளுக்கு 3 பாட்டு குடுத்துடலாம்னு நெனச்சு, "எந்திரன்" படத்துல பாட்டுங்கள 5-ல இருந்து, 6-ஆ மாத்தினேன். ஆனா, இப்போ உங்களோட இந்த சூப்பர் மூட பார்த்த உடனே, அத கெடுக்காம, அந்த 6 பாட்டுக்களையும் அப்படியே நா.முத்துகுமார், பா.விஜய் இந்த ரெண்டு பேரை வச்சு எழுத சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டேன்.....
அப்போதான், ”பல்லேலக்கா பல்லேலக்கா” மாதிரி ஹிட் பாடலும், ”ஒரு கூடை சன்லைட், ஒரு கூடை மூன்லைட்” மாதிரி புரியாத சூப்பர் ஹிட் ஆகர பாட்டுங்க எல்லாம் கிடைக்கும்......... அப்புறம் வேற படத்துக்கு உங்க ரெண்டு பேரையும் கூப்பிடறேன்....... வணக்கம் ......

பாடல் எழுத சான்ஸ் கிடைக்காது என்று தெரிந்த உடன், இரண்டு கவிஞர்களும் ஒருவர் ஜிப்பாவை ஒருவர் கிழிக்க ஆரம்பிக்க, கவிஞர்களின் கையில் இருந்த பாடல் புத்தகங்கள் காற்றில் பறக்க ஆரம்பிக்க....இந்த சாக்கில் வாலி, வைரமுத்து மேல் தன வாய் தாம்பூலத்தை பீய்ச்சி அடிக்க, அங்கே, ரத, கஜ படைகள் ஏதுமின்றி ஒரு போர் உருவாவதை கண்டு, ஏ.ஆர்.ரஹ்மான் தன் ரெகார்டிங் ஸ்டூடியோவின் பின்வாசல் வழியாக தலை தெறிக்க ஓடுகிறார்.......

ஆர்.கோபி

(நெடு நாட்களுக்கு முன் எழுதியது......)

Sunday, April 11, 2010

தப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - நடிகர் “குஜய்”

நடிகர் "குஜய்" கட்சி ஆரம்பிக்க போவதாக ஏற்கனவே செய்தி வெளிவந்தது.... அது நமுத்து போன பட்டாசு ஆன பின், இப்போது தன் புது படமான “சுறா”வை ஒட்டி, மீண்டும், தன் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் டகால்டி படலத்தை நடிகர் “குஜய்” துவங்குகிறார்....

பேட்டி கொடுக்கிறார்... கை சொடுக்குகிறார்... எஸ்.ஏ.சி... முகத்தில் லேசாக புன்னகை பிறக்கிறது... இந்த வாட்டி நெஜமாவே வந்துடுவானோ, அப்படின்னா... வேளாங்கன்னிக்கு பாத யாத்திரை போகலாமா என்றெல்லாம் யோசனையில் ஆழ்கிறார்.. பரபரப்பான இந்த செய்தியை கேட்டவுடன்... தமிழ்நாட்டில் மீண்டும் புது அரசியல் கட்சி ஆரம்பிக்கும் ஜூரம் வருகிறது...

கீபாலபுரம், மைலாபுரம், கீயஸ் கார்டன், கிஜயகாந்த் அலுவலகம், பீரரசு அலுவலகம், நடிகர் பிஜித் அலுவலகம் எல்லாம் தீப்பற்றி கொள்கிறது...

"முத்தமிழ் காவலர், வக்கீல் வலைஞர்" (நல்லா நோட் பண்ணுங்க... இவர் டாக்டர் இல்லை....) தன் இரு கரங்களான போர்காட்டாரையும், பொறைகிருகனையும் அலைபேசியில் மிக மிக அவசரம் என்று அழைக்கிறார்...... அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் இருவரும் கீபாலபுரத்தில் ஆஜர்......

வலைஞர் : என்னாய்யா, நாம இப்போதான் ஒருவழியா "சூப்பர் ஸ்டார் குஜினி"ய அரசியல் பேசக்கூடாதுன்னு வாய அடச்சு வச்சு இருக்கோம்.... அதுக்குள்ள, இது என்னய்யா சின்னதா ஒரு ”சுறா”ன்ற பேருல புது தலைவலி..... போட்டுருவோமா!!??

போர்காட்டார் : அய்யோ வேணாம் தலைவரே...... அவன் கெடக்கான் பிஸ்கோத்து பய, பச்ச மண்ணு..... அவன இங்கன கூட்டியாந்து, நம்ம மணிபர்ஸ் வாயர் சிரிக்கறத ஒரு தபா பார்க்க சொல்லுவோம்..... அப்புறம் ஆயிசுக்கும் புது கட்சி, பழைய கட்சின்னு எல்லாம் பேச மாட்டான்.......

பொறைகிருகன் : ஆமாம் தலைவரே..... போர்காட்டார் சரியாதான் சொல்றாரு என்று சொல்லி தன் மணிபர்ஸ் வாயை திறந்து சிரிக்க.... அதை எதேச்சையாக பார்த்த போர்காட்டாரே ஒரு நிமிடம் ஆடி போய்விடுகிறார்.....

போர்காட்டார் : யோவ்... நீயி சும்மா இருக்க மாட்டியா..... நீ சிரிக்கறத பாத்தா எனக்கே கதிகலங்குது.....அந்த குட்டி பையன் "குஜய்" என்ன பாடுபட போறானோ? தலைவா, நான் அந்த சின்ன பையன அலைபேசில நீங்க கூப்பிடறதா சொல்லி கூப்பிடறேன்..... இங்கன வச்சு, அர்ச்சனை, ஆராதனை, அபிஷேகம் எல்லாம் பண்ணி, சின்னதா ஒரு காணிக்கை குடுத்து அனுப்பி வைப்போம்........

அங்கே....கீயஸ் கார்டனில் ”பயலலிதா” முன் பம்மிய நிலையில், வாய் மூடி, முட்டி போட்ட நிலையில் "தண்ணீர்செல்வம்", "பயகுமார்" மற்றும் சில ரத்தத்தின் ரத்தங்கள்...

பயலலிதா : நீங்க எல்லாம், என்னய்யா பண்ணி கிழிக்கறீங்க.... காலைல இருந்து, சாயங்காலம் வரைக்கும், கட்சி ஆஃபீஸ்ல வெட்டி அரட்டை... மத்தியானம் டாஸ்மாக் சரக்கு, பிரியாணி... சரி...நம்ம கையில இப்போ ஆட்சிதான் இல்ல... அட்லீஸ்ட், இந்த மாதிரி சின்ன சின்ன “சுறா”ங்கள கூட நம்ம கண்ட்ரோல்-ல வைக்க முடியலியா? இதெல்லாம் பண்றதுக்கு கூட ஆட்சி கையில வேணும்னு சொல்லாதீங்க.. கேக்கவே வெக்கமா இருக்கு எனக்கு...

பயலலிதாவின் உக்கிரமான அர்ச்சனையை நெடுநாட்களுக்கு பிறகு வாங்கிய "தண்ணீர்செல்வம்", "பயகுமார்" மற்றும் க்ரூப் எல்லாம் கிலியடித்து பம்முகிறார்கள்......

போயி என்ன ஏதுன்னு பாத்து, அந்த பையன இங்க கூட்டிட்டு வாங்க, கொஞ்சம் வேப்பிலை அடிச்சு, தாயத்து கட்டி குங்குமம் குடுப்போம்...... அப்புறம் பாருங்க.. அவன் கதியை என்கிறார்...

பூமதாஸ் : என்ன கிழிக்கறீங்கய்யா.... ஒவ்வொரு நடிகன், அரசியலுக்கு வரும் போதும், நாம கஷ்டப்பட்டு, அவங்க நடிச்ச படப்பொட்டிய தூக்கி போய், கொளுத்தறதும்..... அவனுங்களோட ரசிகனுங்கள அடிக்கறதும் .... பெரிய லெவல் ரோதனையா போச்சேப்பா..இத இப்போவே, முடிச்சாகணும்.....

நீங்க என்ன பண்றீங்க.... அவன் நடிச்ச படம் ஏதாவது தியேட்டர்ல ஓடுச்சுன்னா (கண்டிப்பா ஏதாவது ஒரு படமாவது ஓடும்யா... இன்னும் அவன் நெலமை அவ்ளோ மோசமாகல...), அங்க போய் ரகளை பண்ணுங்க.... தியேட்டர் உள்ளார போற பத்து, இருவது பேரையும் நல்லா நடுரோட்டுல வச்சு சாத்துங்க.. முடிஞ்சா, அந்த படப்பொட்டிய எடுத்து, ரோட்டுல போட்டு தீ வச்சு கொளுத்துங்க...

கிஜயகாந்த் : ஏயி.... நீ என்ன பெரிய இவனா..... பெரிய ஆளு ஆயிட்டியா.. என்னிய பத்தி தெரியும் இல்ல.. ஒரு ஃபுல் உள்ளார வுட்டு, வாந்தி எடுத்தா, மொத்த தமிழ்நாடும் நாறிடும்.. நான் மொதல்ல ஒரு படத்துல ஒனக்கு நடிச்சு குடுக்கலேன்னா, நீ இப்போ, இவ்ளோ பெரிய ஆளா ஆயிருப்பியா??

மவனே.... வந்த வழியே ஓடிடு..... இல்ல.... நடக்கறதே வேற ... என்று "குஜய்" வந்தால் பேச வேண்டிய டயலாக்கை ஒத்திகை பார்த்து கொண்டிருக்கிறார்...

கண்கள் கோவைப்பழமாக சிவக்க ஆரம்பிக்கிறது.... கை நேராக, டீப்பாயில் இருக்கும் "டாஸ்மாக்" சமாசாரத்தை எடுக்க, நொடியில் பாதி பாட்டில் காலியாகிறது........ மச்சான் "கிதீஷ்" கிலியடித்து பார்த்து கொண்டிருக்கிறார்.. இன்னிக்குன்னு பார்த்து அக்கா கூட ஏதோ கல்யாணம்னு சொந்த ஊருக்கு போயிடுச்சி... உள்ள வுட்ட சரக்குக்கு இன்னிக்கி ஐயனாரு மலையேற போறாரு, என்னான்னா நடக்கப்போவுதோ என்று கூவிக்கொண்டே பக்கத்து ரூமுக்கு தாவி பதுங்குகிறார்......

பீரரசு : வர்ரேன், வர்ரேனு சொல்றவன் எல்லாம் அரசியலுக்கு வரது இல்ல... ஆனா, நீங்க அரசியலுக்கு வரவே மாட்டீங்கன்னு நெனச்சேன். ஆனா, வந்துட்டீங்க என்று ஒரு பெரிய பிட் போடுகிறார்........... இந்த டயலாக் நம்ம "குஜய்" வர்றப்போ பேசினா எடுபடுமா? அடுத்து ஏதாவது படம் டைரக்ட் பண்ண சான்ஸ் கிடைக்குமா என்று தன் எடுபிடிகளிடம் கேட்கிறார்..... அண்ணே, இது சூப்பர் டயலாக்னே, அடுத்த படம் கன்ஃபார்ம்டா நமக்கு தாண்ணே என்று கோரசாக கும்மியடிக்கிறார்கள் எடுபிடிகள்..... நைட் கிடைக்கப்போகும் சரக்கை மனதில் வைத்து......

குஜய் : ண்ணாவ்...... வணக்கம்ணாவ்....சார்.....குட்மார்னிங் சார்.... இல்ல இல்ல.... வணக்கம் அய்யா, இதுதான் சரி என்று சொல்லிக்கொண்டே கைகூப்பிய படி கீபாலபுரம் வீட்டில் நுழைகிறார்......
இளைய தமிழே வருக.....இந்தியாவை காக்க வருக, இளைய தளபதியே வருக, எங்கள் தி.மு.கழகத்தை காக்க வருக என்று எழுதிய போர்ட் தாங்கி பிடித்தபடி, போர்காட்டார் வீட்டு வாசலில் நிற்கிறார்....... போர்ட் லேசாக தள்ளாடுகிறது...

வலைஞர் : வாங்க தம்பி.... நீங்களும் உங்கள் சுற்றமும் நலமா..... என்று உப்பு காகிதத்தை தகரத்தில் தேய்த்த குரல் கேட்டு, அந்த திசையை நோக்கி ஒரு பெரிய கூழை வணக்கம் போடுகிறார்....

உள்ள வாங்க தம்பி... எனக்கு வாகை சந்திரசேகரும், எஸ்.ஏ.சந்திரசேகரும் இரு கண்கள், சங்கிலி கொடுத்த பாபாவையும் பிடிக்கும், நல்ல சங்கீதத்தை கொடுத்த உங்க அம்மா ஷோபாவையும் பிடிக்கும் என்றெல்லாம் வழக்கமான பாணியில் போடும் பிட்டை போடுகிறார்....

தம்பி.... நம்ம பசங்க இப்போதான் உங்க அரசியல் முடிவு பத்தி, என் கிட்ட சொன்னாங்க....... நீங்க நிஜமாவே நாட்டுக்கு ஏதாவது நல்லது பண்ணனும், மக்களுக்கு உதவி பண்ணனும்னு நெனச்சா, படம் நடிக்கறத நிறுத்திடுங்க. அதவிட ஒரு பெரிய உதவி வாழ்க்கையில நீங்க பண்ண முடியாது...

இல்ல... அது முடியாது, கட்சிதான்னா.... நீங்க வாங்க.... ஒங்கள மாதிரி இளைஞர்கள் தான் இன்றைய அரசியலுக்கு தேவை ...... ஏன், கஷ்டப்பட்டு புது கட்சி தொடங்கணும்... நம்ம தி.மு.கழகம் தான் இருக்கே, ஒங்கள மாதிரி, அரசியல் ஆசை உள்ள இளைஞர்களுக்கு அடைக்கலம் தர்றதுக்கு... வந்து சேர்ந்துடுங்களேன்...

இல்லேன்னா. நீங்க நிறைய தியாகம் பண்ண வேண்டி இருக்கும்.. வீட்டுக்கு வந்து இன்கம் டேக்ஸ் ரெய்டுனுவாங்க...ஒங்க கல்யாண மண்டபத்த இடிச்சு... பாலம் கட்டணும்னு சொல்லுவாங்க... இல்ல... இதெல்லாம் வேணாம்... என்னோட டீல் ஓகேன்னா, நான் உடனே வந்து உங்க “சுறா” பட ப்ரீமியர் பார்த்து படம் அருமை, இது போன்றதொரு படம் நான் கடைசி பத்தாண்டுகளில் பார்த்ததில்லை என்று அறிக்கை விடுகிறேன்...... அது நாளையே நம்ம “குரசொலி”ல வர்ற மாதிரி பண்ணி விடுகிறேன் என்கிறார்.

குஜய் : வணக்கம் அய்யா..... ஒங்களுக்கு தெரியாத மேட்டர் இங்க ஒண்ணும் நடக்கறது இல்ல.... வரிசையா.... கூட்ஸ் வண்டி கணக்கா, என்னோட நாலு படமும் படுத்துடுச்சு....... அதான், ஒரு அரசியல் பில்ட்-அப் குடுத்து நம்ம சினிமா மார்கெட் சரி பண்ணினா... “சுறா” கரை ஏறும்..... இல்லேன்னா, நாலு படத்தோட சேர்ந்து இது அஞ்சு ஆயிடும்... நானும் அப்பீட்டு ஆயிடுவேன்.. அப்புறம் நீங்க சொன்ன ரெய்டு, மண்டபம் இடிப்பு மேட்டர் பத்தி எல்லாம் என்னோட நைனா கிட்ட சொல்றேன், அவர் கிட்டவே பேசிக்கோங்க என்று சொல்லி லேசாக விசும்புகிறார்...
வலைஞர் : என் அருமை தம்பி ... அன்பு உடன்பிறப்பே.. இதற்காக நீ இவ்வளவு கலங்க வேண்டாமே..... உன் அடுத்த படத்த, நானே "விதியநிதி" யிடம் சொல்லி தயாரிக்க சொல்கிறேன்.... நானே கதை, வசனம் எழுதுகிறேன்..... பெரிய பட்ஜெட்டில் தயாரித்து விடுவோம்...... "புலியின் மீசை" படம் பேரு... எப்படி........ அப்படியே "விரச ஒலி"ல ஒரு கவிதை எழுதி இந்த படத்த மக்களுக்கு அறிமுகம் செய்து விடலாம்..

குஜய் : பெரிய பட்ஜெட் ஓகே...... விதியநிதி கூட ஓகே.... இப்போதான் "வேட்டைக்காரன்" படுத்துச்சு.... அடுத்த படமும் பப்படமா .... இதுல, தாத்தா கதை வசனமா?, சொந்த செலவுல சூன்யமா நான் எஸ்கேப் என்று கதறியபடி, காம்பவுண்ட் சுவர் தாவி குதித்து, ரோட்டில் உருண்டு, பின் எழுந்து ஓடுகிறார்....... கழக உடன்பிறப்புக்கள் பெரும் படையாக கிளம்பி அவரை மடக்க பல வண்டிகளில் பறக்கிறார்கள்...

வழியில், ஒரு வாகனம் ”குஜயை” மடக்கி "கீயஸ் கார்டன்" தூக்கி போகிறது.....கீயஸ் கார்டனில் நுழைந்த வண்டி, நடிகர் "குஜயை" கீழே இறக்கி விடுகிறது. "தண்ணீர்செல்வம்" "குஜயை" எழுப்பி பயலலிதா முன்பு நிறுத்துகிறார்.

திருதிருவென முழித்த "குஜய்" பயலலிதாவை பார்த்து, அய்யோ.. யானை, பெரிய சைஸ்ல வெள்ளை யானை, பயமாருக்கு, காப்பாத்துங்கோ என்று அலறுகிறார்......

“பயலலிதா” முகம், பரங்கி பழம் போல சிவக்கிறது... இந்த மரியாதை தெரியாத சின்ன பையனை உடனே இந்த தோட்டத்துல இருந்து வெளில தூக்கி போடுங்க, இவன தமிழ்நாட்டுல இனிமே எங்கேயும் நான் பார்க்கக்கூடாது, என்ன மூட் அவுட் பண்ணிட்டான்... நான் ஒரு ரெண்டு வருஷம் போய் “வடநாடு” எஸ்டேட்ல தங்கிட்டு வர்றேன்... ஏதாவது தலை போற அவசரம்னா, எனக்கு மெதுவா தகவல் கொடுங்க...நௌவ் யு ஆல் கேன் கோ அவுட் ஃப்ரம் ஹியர் என்ற பிளிறல் குரல் கேட்டதும், அந்த அக்கினி அனலில் பொசுங்கிய "தண்ணீர்செல்வம்", "பயகுமார்" எல்லாம் தலை தெறிக்க ஓடுகிறார்கள்......

கேப்டன் கிஜயகாந்த் மடித்து கட்டிய வேட்டியுடன், வெட்டி பீரரசுவை துணைக்கு அழைத்துக்கொண்டு ஒரு வண்டியில் ஏறி, "குஜய்" எங்கே இருக்கிறார் என்று தேடுகிறார்.. அந்த டகால்டி பய “குஜய்’ கெடச்சா, நாம ரெண்டு பெரும் சேர்ந்து அவன ஒரு வழி பண்ணனும்பா...... என்று சொல்லிவிட்டு.....
திடீரென்று ......டேய் பரதேசி... டாஸ்மாக் கடைய பாத்துட்டும் வண்டிய நிறுத்தாம போனா என்னடா அர்த்தம், என்னிய பார்த்தாக்க ஒனக்கு அவ்ளோ நக்கலா போச்சா என்று தனது வலது உருட்டுக்கட்டையை (வலது கையைத்தான்) "பீரரசு" நோக்கி வீசுகிறார்... உருட்டுக்கட்டை அடி வாங்கிய பீரரசு ஓடும் வண்டியிலிருந்து நடுரோட்டில் விழுந்து எழுந்து ஓடுகிறார்..... ”கிஜயகாந்த்” சென்ற வண்டி டாஸ்மாக் கடையை பார்த்தவுடன், பிரேக் போடாமலேயே திடீரென்று நிற்கிறது......

”பிஜித்” தன் அடிபொடிகளிடம், அந்த டகால்டி ”குஜய்” அடுத்து என்ன செய்யப்போறாருன்னு தெரிந்து தன்னிடம் சொல்ல வேண்டும் என்று கர்ஜிக்கிறார்...

அவரு அந்த மேட்டர் ஓகே பன்ணாக்க, நானும் அதே மேட்டர ஓகே பண்ணனும் என்றவுடன், எந்த ”குஜிலி”ய தல என்றவரிடம்... மேட்டர்னா எப்போவும் அது இல்லடா..... இப்போ மேட்டர்னு நான் சொன்னது ”குஜய்” அரசியல் மூவ் பத்தி என்று கன்னத்தில் பளீரென்று அறைந்து சொல்கிறார்...

எல்லோரும் "குஜய்" எங்கிருக்கிறார் என்று வலை போட்டு தேடி கொண்டிருக்க.. அவரோ...... அவரின் புது பட நாயகியுடன் ஹைதராபாத் ராமோஜிராவ் கார்டனில் ........ கொண்டிருந்தார் (அந்த டேஷ் பத்தி தப்பா எதுவும் நினைக்காதீங்க, டூயட் பாடி கொண்டிருந்தார்)............

மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி
நான் இப்போ தொடங்க போறேன் கட்சி....

இச்சு இச்சு இச்சு...இச்சு...இச்சு
ஒன் கன்னத்துல நானும் தர்றேன் இச்சு
வச்சு வச்சு வச்சு...வச்சு
ஒன் மனசுக்குள்ள என்ன நீயும் வச்சு...

(இது டூயட்டா, இல்ல கட்சியின் கொள்கை பாடலா என்iறு யாருக்கும் தெரியாது, இந்த டெர்ரர் பாடலை எழுதிய கவிஞர், டைரக்டர் பீரரசு உட்பட...) ...
(முன்பு எழுதிய இந்த பதிவு இப்போது சில மாற்றங்களுடன் மீள்பதிவாக)

Wednesday, March 31, 2010

”எந்திரன்” - ஒரு எலெக்ட்ரிக் சந்திப்பு

அலுவலக மீட்டிங்கில் தலை தகித்து கொண்டிருந்த வேளையில், ஒரு நெருங்கிய நண்பரிடம் இருந்து ஃபோன்.... அவசர மீட்டிங்கில் இருந்ததால் எடுக்க முடியவில்லை... மறுபடி மறுபடி நண்பர் முயற்சிக்கவே... மேட்டர் அர்ஜெண்ட் என புரிந்தது.

கிடைத்த இடைவேளையில் நாங்கள் நண்பரை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் சொன்ன செய்தி, கோடான கோடி மக்களின் ஆதர்சன நாயகன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “பேரை கேட்டதுமே சும்மா அதிருதில்ல” .... அந்த மாபெரும் நாயகனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு பற்றிய தொலைபேசி அழைப்பு அது... உடனே சுறுசுறுப்பானோம்...

தென் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சந்திக்க சூப்பர் ஸ்டார் இசைந்திருப்பதாகவும், நாம் விரும்பினால் இணையலாம் என்றது அந்த செய்தி... மகிழ்ச்சிதான் என்றாலும் எல்லோருடன் இணைந்து சூப்பர் ஸ்டாரை சந்தித்தால், பெரிய அளவில் பேசும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்பதால், ஒரு தனி சந்திப்புக்கு ஏங்குவதாய் சொன்னோம்... பிறகு கூப்பிடுவதாக சொல்லி இணைப்பை துண்டித்தார்...

ஒரு வார இடைவெளியில் மீண்டும் நண்பர் அழைத்தார்... சூப்பர் ஸ்டாரின் உதவியாளரிடம் பேசி விட்டதாகவும், எங்களுக்காக 30 நிமிடம் ஒதுக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்... அந்த இனிய நாளை எதிர்பார்த்து காத்திருந்தோம்... அந்த நல்ல நாளும் வந்தது...

கார் இருந்தாலும், அதில் போய் இறங்கி பந்தா காட்ட விரும்பாததாலும், பார்க்கிங் பற்றிய பயம் வந்ததாலும், ஒரே ஒரு ஆட்டோ பிடித்து, குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணி முன்னதாகவே ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை அடைந்தோம்... என்ன பேசுவது, எப்படி பேசுவது என விவாதம் விருட்சமாய் விரிந்தது. எந்தெந்த படங்கள் பிடிக்கும்... இப்படி எண்ணற்ற ரசிகர்களை வசீகரித்தது எப்படி?. திரையில் அவரை பார்க்கும் போதே உணர்ச்சி வசப்படுவோமே, எழுந்து நின்று, விசில் அடித்தும், கை தட்டியும் மகிழ்வோமே, இன்று இந்த முதல் நேரடி சந்திப்பை எப்படி எதிர்கொள்வோம் என பல எண்ணங்கள்.

உதவியாளர்... கல்யாண மண்டபத்தின் வாசலுக்கே வந்து எங்களை கைப்பிடித்து வரவேற்று அழைத்து சென்றார் ஒரு அறையில் அமர செய்து விட்டு, காஃபி தருவதற்கு ஏற்பாடு செய்தார்... அறையெங்கும் ஊதுவத்தி நறுமணம் ஸ்பீக்கர்களில் மெலிதாய் வழிந்த “ஓம்” என மிக ரம்மியமான் சூழல்......

சட்டென்று அந்த சூழல் பரபரப்பாக மாறியது... எங்களுக்குள் பல வண்ண பட்டாம்பூச்சிகள் பறந்து வந்து “தலைவர்” வந்து கொண்டிருக்கிறார் என்று சேதி சொல்லி விட்டு சென்றது... அதோ... மண்டபத்தின் உள் அறையிலிருந்து “கருப்பு சூரியன்” வெளிவந்தது... அந்த இடமே ஜோதி கிளம்பி ஒளி பிரவாகமாயிற்று. அந்த தருணத்தை விவரிக்க வார்த்தையே இல்லை... எளிமையான ஒரு கதர் சட்டை, கதர் வேட்டி (கோடானுகோடி பேர் எதிர்பார்க்கும் அதே கெட்டப்தான்!!!) சீவிய சீப்புக்கு டிமிக்கி கொடுத்த சற்றே கலைந்த நிலையில் பரட்டை தலை, கூரிய பார்வை, முகமெங்கும் ஒரு அட்டகாச சிரிப்பு, நெருங்கி வந்து வாஞ்சையாய் கை பிடித்து, வணக்கம் சொன்னார்... சூப்பர் ஸ்டார்...

அவரது வேகம் தந்த பிரமிப்பில் இருந்து முழுவதுமாக மீளவில்லை... எத்தனை கோடி பேர்களை அகிலமெங்கும் தன் வசிய நடிப்பால் கட்டிப்போட்ட இந்த மனிதர் எப்படி இவ்வளவு சிம்பிளாக இருக்கிறார் என்று!!! அந்த நிமிடத்தில் பேச்சே வரவில்லை...

எங்களின் உள்ளத்தை அப்படியே படித்த அவர், என்னங்க... பார்க்கணும், பேசணும்னு வந்துட்டு... அப்படியே சைலண்டா இருக்கீங்க, பேசறதுக்கு ஒண்ணுமே இல்லையா ஹா..ஹா..ஹா.. என்று அவரின் அக்மார்க் சிரிப்பை உதிர்த்தார்..

அப்படி எல்லாம் இல்ல தலைவா... நீங்க, ஷேவ் பண்ணாம, தாடி எல்லாம் வச்சு இருப்பீங்க.. அத பார்த்துட்டு, “என்ன தலைவா...லீவுல வந்த ரிஷி மாதிரி இருக்கீங்க”ன்னு சொல்லணும்னு நெனச்சுட்டே வந்தோம்... .. ஆனால், இப்போ நீங்க பளபளன்னு இருக்கீங்களா, அதான் என்ன சொல்றதுன்னே தெரியல என்றோம்.. .. மீண்டும் அவர் பாணி வெடி சிரிப்பு.....

என்னோட பஞ்ச் டயலாக் எடுத்து என் கிட்டயே விட பாத்தீங்களா என்று சொல்லி விட்டு உதவியாளரை அழைத்து குடிப்பதற்கு ஜில்லென்று மோர் தருமாறு கூறினார்...

சொல்லுங்க... உங்க பேர் என்ன... என்ன வேலை செய்யறீங்க... குடும்பம் பற்றி சொல்லுங்க என்று கனிவுடன் கேட்க நல்ல நட்புக்குறிய பாவனையில் தகவல் பறிமாறப்பட்ட்து.... கஷ்டப்படுறவுங்களுக்கு ஹெல்ப் பண்ணனும், அது பொருள் உதவி மட்டுமல்ல... ரத்த தானமாக இருக்கலாம், தெரிந்த நண்பர்களின் கம்பெனிகளில் ஒரு வேலையாக இருக்கலாம்...நாம் செய்யும் எந்த ஒரு செயலும், உதவியும், இந்த சமுதாயத்திற்கும், ஏழை எளியவர்களின் குடும்பங்களுக்கும் செய்யும் நல்ல விஷயமாக இருக்க வேண்டும் என சமூக பொறுப்புணர்ச்சியுடன் பேசினார்.

அவர் கூறிய அந்த விஷயங்களை ஏற்கனவே நடைமுறையில் வைத்துள்ளோம் என்று விளக்கி சொன்ன போது, பரவசமாகி வெரி குட்... இத தான் நான் எல்லா ரசிகர்களிடம் எதிர்பார்க்கிறேன்...

ஏன்னா..., எப்போதும் அடுத்தவர் வந்து உதவி செய்வார், வாய்ப்பு வீடு தேடி வரட்டும் என்று காத்திருக்காமல், சுற்று புறங்களில் இருந்தும், நண்பர்கள் மூலமும் வரும் வாய்ப்பை சட்டென்று பிடித்து கொண்டு முன்னேறுவது தான் புத்திசாலிதனம் என தனது சமூக அக்கறையை வெளிப்படுத்தினார்...

பின்..., நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து கொண்டு, சரி என்று நினைத்து அவரிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்று அனுமதி வேண்டினோம்...
அதற்கு ஓ...ஷ்யூர்... உங்க கேள்விங்க என்ன... சொல்லுங்க... என்றார்...

திரையுலகில் தாங்கள் அடைந்த பெரிய வெற்றிக்கு எங்கள் வாழ்த்துக்கள், இந்த சாதனை தொடர்பாய் எங்கள் முதல் கேள்வி, எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல், உங்களை மாதிரி ஒருவர் இந்த காலத்தில் முன்னேற என்னென்ன செய்ய வேண்டும்... கண் மூடி கேள்வியை உள்வாங்கி சட்டென்று சொன்னார்...

இந்த காலம்னு இல்ல... இந்த சினிமா இண்டஸ்ட்ரி தான்னு இல்ல... எந்த வேலைன்னாலும், எடுத்துட்ட வேலைல உங்களோட சின்சியர் அண்ட் டெடிகேட்டட் அப்ரோச் இருந்தா, அப்படி இருக்கற எல்லாருமே பெரிய அளவில சாதிக்க முடியும். அதிரடியாய் பதில் வருகிறது.

இந்த சாதனைகளின் அடுத்த படி என்ன, எதிர்கால திட்டம் என்ன, இதப்பத்தி கேட்டா ஏன் எப்போவும் வானத்த கை காட்டறீங்கன்னு கேட்டோம்... அதற்கு அவர்.... ஹா... ஹா...ஹா... என்று சிரித்த படி, எல்லாரும் கேக்கறது போதாதுன்னு இப்போ நீங்களுமா என்றவாறே...

இன்னிக்கு அரசியல் சூழல் நல்லால்ல... நாட்டுல பிரச்சனைங்க ஜாஸ்தி... தீவிரவாதம் மக்களை பயமுறுத்துது... மக்கள் சேவைங்கற ஒரு விஷயத்த சுத்தமா மறந்துட்டு எல்லாரும் அரசியல் பண்றாங்க... இந்த நிலையில நான் எதுவும் முடிவு எடுக்க முடியல... எனது திரைப் பிரவேசம் கூட இறை அருள்தான், அதான், எதிர்காலம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு இறைவனை கை காட்டறேன்... என்றார்...

எப்படி ஒவ்வொரு படத்திற்கு இந்தளவு எதிர்பார்ப்பு ஏற்றி விடுகிறீர்கள் என்றதற்கு, தாம் எதுவும் திட்டமிட்டு செய்வதில்லை, எல்லாம் அந்த ஆண்டவன் செயல் என்று வானத்தை காட்டினார்...

பின், டிஃபன் சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது... பொங்கல், வடை, இட்லி, பல்வேறு விதமான சட்னி மற்றும் சாம்பார் என்று அசத்தல் டிஃபன் எங்களுக்கு பரிமாறப்பட்ட போது... சூப்பர் ஸ்டார் கையால் ஒரு கூடுதல் வடை பெறும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது... அவர் வெறும் வேக வைத்த காய்கறிகள் ஒரு கப் மட்டுமே சாப்பிட்டார்.. கூடவே ஒரு கிளாஸ் மோர்....

பேச்சு அவரின் மாபெரும் படமான “எந்திரன்” பற்றி திரும்பியது... ”எந்திரன்” படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராய் பற்றி குறிப்பிடும் போது... ஷீ ஈஸ் ய வெரி வெரி டேலண்டட் ஆக்ட்ரஸ்.... எல்லாரும் அவங்களோட அழகு மட்டும் பாக்கறாங்க... நாங்க இந்த படத்துல அவங்களோட நடிப்பை பார்த்தோம், க்ரேட் பெர்ஃபாமன்ஸ் என்றார்...

முந்தைய “சிவாஜி த பாஸ்” படத்தை பற்றிய சில விஷயங்களை சிலாகித்து சொன்னார்... அந்த பட ஷூட்டிங்கின் போது, தனக்கும் டைரக்டர் ஷங்கருக்கும் இடையே இருந்த நட்பு மிக நெருக்கமானதை நினைவு கூர்ந்தார்... எழுத்தாளர், வசனகர்த்தா சுஜாதா அவர்களின் எளிமை, மொழி ஆளுமை, திறமை பற்றியெல்லாம் பாராட்டி பேசினார்...

“எந்திரன்” படத்தின் வெற்றி வாய்ப்பு, அது செய்யப்போகும சாதனைகள் பற்றி கேட்டதற்கு ....” நான் நடிக்கற படத்தின் வெற்றியை பற்றி நீங்க தான் பேசணும், நான் எதுவும் பெருமையாக பேசக்கூடாது” என்று சொல்லி சிரித்தார்... ஆனால், எந்திரன் படத்தில் ஷங்கர் மற்றும் பல நூறு பேரின் கடுமையான உழைப்பு தெரியும் என்று கூறினார்...

நாம் அந்த படத்தை பற்றி கேட்கும் முன்னமே, நாம் யாரும் இதுவரை கேள்விப்படாத, ஏன் அது பற்றி யூகிக்க கூட முடியாத ஒரு விஷயம் நடந்தது.....

பக்கத்திலிருந்த பீரோவில் இருந்து எடுத்து ஒரு ஆல்பம் தந்தார்... அது “எந்திரன்” ஆல்பம்... பார்த்தோம்... புகைப்படங்கள் எல்லாம் அசத்தல் ரகம்... தலைவரும், ஐசும் தூள் கிளப்புகிறார்கள்... அதிலிருந்த ஒரு புகைப்படத்தை பார்த்த நாம் திகைப்பின் உச்சிக்கே போனோம்... சட்டென்று இருக்கை விட்டு எழுந்தோம்...

அதை பார்த்து சிரித்தவாறே... படம் பார்க்கும் மக்களும் இந்த விஷயம் பார்க்கும் போது, இப்படி தான் பரபரப்பா தியேட்டர்ல எழுந்திருப்பாங்கன்னு சொன்னார்... ப்ளீஸ்... இந்த விஷயம்.... கொஞ்சம் பேருக்கு தான் தெரியும்... யார்கிட்டயும் சொல்லிடாதீங்க... அப்புறம் படத்த பத்தின சஸ்பென்ஸ் போயிடும் என்றார்... இசைந்தோம்... இதுவரை யாரிடமும் சொல்லவில்லை... ஏன் இந்த பதிவை படிக்கும், உங்களிடம் கூட....

இதுவரை ட்யூன் செய்யப்பட்ட 5 பாடல்களை இசைத்து காட்டினார்... அத்தனையும் சார்ட் பஸ்டர்ஸ் என்று அப்போதே கன்ஃபர்ம் ஆனது... அந்த 5 பாடல்களையும் இப்போது கூட முணுமுணுத்து கொண்டே தான் இந்த பதிவை எழுதுகிறோம்... அவரின் அடுத்த படம் பற்றிய பேச்சு எழுந்த போது, தன் கவனம் முழுதும் இப்போது “எந்திரன்” தான்... அடுத்து “சுல்தான் தி வாரியர்”... இந்த இரண்டு படங்களின் வெளியீட்டுக்கு பிறகு தான் எதுவும் பேச முடியும் என்று சொன்னார்...

எங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிவடையும் தறுவாயில், கிளம்ப மனமின்றி சூப்பர் ஸ்டாரிடம் விடைபெற்ற போது, எங்கள் இருவர் கைகளிலும் ஒரு புத்தகம் திணிக்கப்பட்டது... (சூப்பர் ஸ்டாரின் குருநாதர் சச்சிதானந்த சுவாமிகள் எழுதிய ‘பொன்னான நிகழ்காலம்’ என்ற புத்தகம் என்று நினைக்கிறோம்)....அந்த புத்தக கவர் இன்னும் பிரிக்கப்படவே இல்லை என்பதை தயவு செய்து நீங்கள் வெளியில் சொல்லி விடாதீர்கள்...

எங்கள் சந்திப்பு முடிந்து மண்டபத்தில் இருந்து வெளியே வரும்போது, டைரக்டர் ஷங்கர், ரஜினி அவர்களை சந்திக்க அவசரமாக உள்ளே சென்றார்... அவரிடம் ஒரு ஃபோட்டோகிராஃப் ப்ளீஸ் என்ற போது மறுத்த அவர், அட்லீஸ்ட் ஒரு ஆட்டோகிராஃப் ப்ளீஸ்ஸ்ஸ்...... என்றவுடன், குபீரென்று சிரித்து ஓகே என்றார்... அது இதோ..














............
............
............
............
............
............
............
............
............
............
............
.............

இவ்வளவு நேரம் இந்த பதிவை பொறுமையா படிச்ச நீங்க, இது “ஏப்ரல் 1” தேதிக்கான ஸ்பெஷல் பதிவுங்கறத மறந்துட்டா படிச்சு இருப்பீங்க!!??


(அதானே... இவிய்ங்க போறாங்களாம்... சூப்பர் ஸ்டார இண்டர்வியூ எடுக்கறாய்ங்களாம்... போயி பார்த்து ஒரு ஃபோட்டோ எடுத்தோம்னு சொன்னாவே நம்ப மாட்டோம்... இதுல இண்டர்வியூன்னு சொன்னா!!?? யப்பா எம்புட்டு புளுகறாய்ங்கப்பான்னு நீங்க எல்லாரும் கோரஸாக திட்டுவது எங்க காதுல விழவே இல்லை!!!??)

இந்த ஒலகம் இன்னுமா எங்கள நம்பிட்டு இருக்கு.... அய்யோ....அய்யோ....

(ஆர்.கோபி / லாரன்ஸ்)

Monday, March 1, 2010

படமும் .... பதிலும்.... பின்னே பரிசும்

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி....

நற்றமிழ் கற்ற வலைக்குடி மக்களுக்கும், குடிமக்களுக்கும் ஒரு அரிய வாய்ப்பு....

வலையுலக வேந்தன், மெகா மொக்கை பாண்டியனுக்கு ஒரு விடயத்தில் பெருத்த சந்தேகம்... இவர் டெரர்ரா... இல்லை டெரிபிக் டெரர்ர் வேற இருக்கா...

மெகா மொக்கை பாண்டியனின் சந்தேகத்தை தீர்த்து வைப்பவர்க்கு பரிசு....

தண்டோரா.... பரிசுத் தொகை எவ்வளவு....

அமரர் சுஜாதாவின் அசத்தலான படைப்பு ஈ-ஃபார்மட்டில் (கண்டுபிடிப்பவரின் மெயிலுக்கு) அனுப்பி வைக்கப்படும்.....

அவ்வளவும் எனக்கே எனக்கு சொக்கா என்று விடையை தருமி மாதிரி மண்டபத்தில் எழுதி வாங்கிக்கொண்டு வந்தாலும் சரி... நீங்களே கண்டுபிடித்தாலும் சரி...

இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார்... என்ன ஊர், என்ன பெயர்... என்ன செய்கிறார்... என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

ஆகவே... குடிமக்களே படத்தை பார்த்து டெர்ரர் ஆகாமல் விடை (கூடவே உங்கள் மெயில் ஐடியும்) சொல்லி பரிசை வெல்லுங்கள்.

டிஸ்கி : நெத்தி கண்ண தொறந்தாலும் குத்தம் குத்தமேன்னு சீற நக்கீரர்களும் அரசவை புலவர்களும் இங்க நிச்சயமா இல்ல, அதனால தைரியமா பதிலை சொல்லி பரிசை பெறுங்கள்.