Showing posts with label மொக்கை / நகைச்சுவை. Show all posts
Showing posts with label மொக்கை / நகைச்சுவை. Show all posts

Tuesday, November 23, 2010

ச‌ங்கி ம‌ங்கி அதிர‌டி அல‌ப்ப‌றை - 23.11.10




எலே எடுபட்ட பயலே சங்கி... எப்படிடா இருக்க??

வாலே மங்கி... இன்னாடா மேட்டரு? நெம்ப நாளா ஆளயே காணுமேடா? உள்ளார எங்கயாவாது போயி வந்தியா??

இன்னாடா, காலைலயே டெர்ரர் கேள்வி எல்லாம் கேக்கற?? நீயே என்னிய அனுப்பிடுவ போல கீதேடா.... நானு இங்க தாண்டா இருக்குறேன்... சொல்லுடா... இன்னான்னா மேட்டரு வச்சுருக்குற..

சொல்றேன்டா, கேட்டுக்கோ.. நமீதா மேட்டரு, நம்ம கமல்தாசன் மேட்டரு... கேப்டன் மேட்டரு... அல்லாத்தையும் சொல்றேன்...

நம்ம நமீதா சூசைட் பண்ணிடுச்சின்னு எந்த பேமானியோ சொல்லிகினான் போல... அது ஒடனே எல்லா பத்திரிக்கை காரய்ங்களயும் கூப்பிட்டு, இனிமே பொடவை கட்டுற மாதிரி ரோல்ல தான் நடிக்க போறேன்... கொஞ்ச நாள் எந்த படத்துலயும் நடிக்கலேன்னா ஒடனே செத்துட்டேன்னு சொல்றாய்ங்களேன்னு அயுதுச்சாம்...... முன்னாடி ஒக்காந்து இருந்த பத்திரிக்கை காரய்ங்க எல்லாம் அத்த பார்த்து பெருமூச்சு விட்டாய்ங்களாம்....

அப்டியா?? டேய்.... ஒயுங்கா சொல்லுடா.... அவிய்ங்க பெருமூச்சு விட்டது, நமீதா அயுவுறத பார்த்து தானேடா?...

ஆமாண்டா.....பொறவு... நம்ம கமல்தாசன் அவரோட "மன்மதன் அம்பு" படத்தோட கேசட் ரிலீஸ் சிங்கப்பூர்ல பண்ணுனாராம்.....

இன்னாட சொல்ற, படத்தோட கேசட்டா?

டேய் டேய் மட மங்கி... படத்தோட பாட்டு கேசட்டுடா... படம் கேசட் இல்ல... இன்னாடா இம்புட்டு லொள்ளு பேசுத நீயி.....

சரி.....சரி.... சூப்பர் ஸ்டாரு மலேசியாவுல பண்ணிட்டாரு இல்ல.... அதான் இவரு சிங்கப்பூர்ல ரிலீஸ் பண்ணுனாரா.... சூப்பருடா சங்கி.... சரி, கேசட் ரிலீஸ் பண்ண சொல்ல அவர பேச சொன்னாய்ங்களா??

ஆமா... அவரு பேசினாரு... ஆனா, வயக்கம் போல, யாருக்கும் பிரியல... பாடுனாரு...... யாருக்கும் ரசிக்கல.... அப்புறம் நம்ம கமல்தாசன் கவிதை படிச்சப்போ, அமுல் பேபி மாதவன் ரொம்ப அயுதாராமாம்....

இன்னாத்துக்குடா.... நம்மாளு படிச்ச கவிதையை கேட்டா அயிதாரு?

டேய்....டேய்... வில்லங்கம் புடிச்சவனே...... பார்த்து சூதானமா பேசுடா... ரெண்டாவது தடவ படிச்சா, வேற அர்த்தம் வருதுடா... அந்த மேட்டரே மாதவனே சொல்றாருபா.... நீ கேட்டுக்கோ.....

கமல் எனக்கு கடவுள் போன்றவர். அவர் மன்மதன் அம்பு படப் பாடலைப் பாடி நடனமாடியபோது என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன், என்றார் மாதவன்.
மன்மதன் அம்பு படத்தில் நீலவானம் என்று துவங்கும் பாடலை கமல் எழுதி இருக்கிறார். அற்புதமான பாடல் அது. கேசட் ரிலீஸப்போ, அதை கேட்டபோது நான் குழந்தைபோல் அழுதேன். ஆண்கள் அழக் கூடாது என்பார்கள். ஆனால் கமல் பாடல் என்னை அழ வைத்தது. விழாவில் பங்கேற்ற பலர் கண்களில் கண்ணீரை பார்த்தேன்..", என்றார்.

இதுக்கு நம்ம கமல்தாசன் ஒடனே மாதவனாண்ட, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல.... மக்களே / ஆத்தீகவாதிகளே ....உங்களின் பக்தி, கடவுள் நம்பிக்கை எல்லாத்தையும் உங்கள் வீட்டின் நான்கு சுவற்றிற்குள் வைத்துக்கொள்ளுங்கள்.... பொதுவில் அதைப்பற்றி பேசாதீர்கள் என்றார்.....

சரி.... அடுத்த மேட்டருக்கு வாடா.... கேப்டன் என்னா பண்ணுனாரு?

சென்னையில நேத்து கேப்டன், அவிய்ங்க கச்சிக்காரய்ங்க எல்லாம் ஒண்ணு கூடி...

ஆஹா... ஒண்ணு கூடிட்டாய்ங்கடா... ஒண்ணு கூடிட்டாய்ங்க... சரி...இன்னா பேசிக்கினாய்ங்க...

இன்னானா... அவரு நடிச்ச படம் “விருத்தகிரி”யோட கேசட் ரிலீஸ் பண்ணுனாரு....

இவருமாடா.... ஆமாம், இவரு இன்னமுமாடா நடிக்கறாரு.... யார நம்பி? இவருக்கு கடைசியா “ரமணா” மட்டும் தானடா ஓடுச்சு.... அப்புறம் வரிசையா டெர்ரர் படங்கள் தானே ரிலீஸ் பண்ணுனாரு.....

டேய்... நீ தெரிஞ்சுதான் கேக்கறியா... நம்ம ஆளுக்கு நெம்ப தகிரியம்டா... அதனால, இந்த வாட்டி அவரே “விருத்தகிரி” படத்த டைரக்ட் பண்ணிட்டாருடா.... நெனச்ச எடத்துல பாட்டு வச்சுக்கலாம், நெனச்ச எடத்துல சண்டை வச்சுக்கலாம்.... நெனச்ச எடத்துல அரசியல் வசனங்கள வச்சுக்கலாம்.... எப்பூடி???

அதுவும் கேசட் ரிலீஸப்போ படா சவுண்டு விட்டாராமே....

அத்த ஏண்டா கேக்கற.... படா காமெடி வசனம் சொன்னாருடா.... அவரோட விருத்தகிரி படத்த ரிலீஸ் பண்ண விடாம தடுக்கறாய்ங்களாம்.... அப்படி பண்ணுனா, அவரு என்னா பண்ணுவேன்னு சொன்னத பாருடா.....

//"எனது முந்தைய படங்களான தர்மபுரி, சுதேசி, சபரி போன்ற படங்களை வெளியிட முடியாமல் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்தேன். அதே பிரச்சினைகள் விருதகிரி படத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

இந்த படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. இந்த படத்தைத் தடுத்தால் விஜயகாந்த் யார் என்பதைக் காட்டுவேன். எனக்கு தொண்டர்கள் இருக்கிறார்கள். படத்தை எப்படி ரிலீஸ் செய்வதென்று தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்.
ஒரு விஷயத்தை தெளிவாக கூறிக்கொள்கிறேன். நான் யாரையும் நம்பி அரசியலுக்கு வரவில்லை. மக்களையும், தெய்வத்தையும் நம்பித்தான் அரசியலுக்கு வந்தேன். எனது மடியில் கனமில்லை. அதனால் எனக்கு பயமும் இல்லை.//
படா டெர்ரர் தாண்டா...... அப்போ, படத்துல நெறைய அரசியல் சரவெடி வசனங்கள் இருக்கும்னு சொல்லு.....

ஆமாண்டா.... மெய்யாலுமே அது தாண்டா படம் பூரா இருக்கும்....

ஏண்டா, வர வர நம்ம நாட்டுல இவ்ளோ விசப்பரீட்சை எல்லாம் நடக்குது... ஒருத்தரு பிரம்மாண்டமா மலேசியாவுல கேசட் ரிலீஸ் பண்ணுனா, இன்னொருத்தர் அதுக்கு போட்டியா, சிங்கப்பூர்ல கேசட் ரிலீஸ் பண்ணுராரு... இன்னொருத்தரு, கண்டிப்பா எந்த பாட்டுமே ஹிட் ஆகாதுன்னு தெரிஞ்சு, ஒரு மீஜிக் டைரடக்கர இம்சை பண்ணி, ஒரு அஞ்சு பாட்டு வாங்கி போட்டு, அத்த ஒரு கவர்ல போட்டு, கச்சி காரய்ங்கள எல்லாம் கூப்பிட்டு, ரிலீஸ் பண்ணி.... அட போப்பா......வயக்கம் போல இல்லாம, இன்னிக்கு எனிக்கு ஜாஸ்தியா தல சுத்துதுடா...

சரி... வேற ஏதாவது மேட்டர் வேணுமா??

அய்யோ.... யப்பா.....அப்பாலிக்கா மிச்ச மேட்டரு எல்லாம் சொல்றா... நான் நேர அங்கனதான் போறேன்... ஆமாம்...டாஸ்மாக்தான்..ஒரு ஆஃப் அடிச்சாதான் சுத்தறது நிக்கும்... இன்னாது... இன்னாடா இன்னா சுத்துதுன்னு கேக்கற... என் தலதாண்டா மட மங்கி பயலே...

Sunday, August 23, 2009

சங்கி-மங்கி - அதிர‌டி டெர்ர‌ர் கூட்ட‌ணி








ஏலே சங்கி...... ஊருக்குள்ள இன்னாடா மேட்டரு......

எலே எடுபட்ட பயலே மங்கி..... ஊரு இன்னாடா ஊரு.... ஒலக விஷயமே சொல்றேண்டா... கேளுடா.... மக்கா .......துபாய் மேட்டரு...கந்தசாமி, உன்னை போல் ஒருவன் மேட்டரு, சினேகா மேட்டரு, "தல" சிலை தொறந்த மேட்டரு, ஜெஸ்வந்த் சிங் பி.ஜே.பி.கல்தா மேட்டரு.... அல்லாத்தையும் கேளு....

துபாயில இம்புட்டு நாளு அவிய்ங்க ஊரு துட்டு 6,000௦௦௦ இருந்துச்சுன்னா, அல்லாரும் குடும்பத்தோட கும்மி அடிக்கலாம்னு சொன்னாய்ங்க..... நேத்து ராவிக்கு திடுதிடுப்னு சம்பளம் 10,000௦ இருந்தாதான் குடும்பத்தோட கும்மி அடிக்கலாம்னு சொல்லிட்டாய்ங்க... இவ்ளோ நாளு அங்க புள்ள, குட்டிகளோட இருந்தவிய்ங்க அல்லாரையும் அவுக வூட்டுக்காரைய்ங்கள இங்கன அனுப்பிட்டாகளாம்....

அட....இது இன்னாபா அக்குறும்பா இருக்குது......

அட...இது இன்னாபா... இத்தவிட அக்குறும்பு எல்லாம் நடக்குது நாட்டுல.... அத்தையும் சொல்றேன்..கேட்டுக்கோ...

நம்ம பீமன் இல்ல... அதாம்பா விக்ரமு... அவரு நடிக்கற "கந்தசாமி"ன்ற படம் ஒலகம் முயுக்க‌ 900 தியேட்டர்ல ரிலீஸ் பண்றாராம் "தாணு" அண்ணாத்த.... இதுனால நம்ம ஒலக நாயகன் படம் கூட ரிலீஸ் பண்ண முடியலியாம்...

டேய்...இன்னாடா இப்படி கூவுற .... இப்போ ஒலக நாயகனோட டாவு டர் ஆயிட்சா??? இவருக்கே இப்டின்னா, மிச்சவங்க‌ கதி எல்லாம் இன்னாடா ஆவும்...?

நாட்டுல பெரிய ஆளுங்க நெலமை ரெம்ப மோசம்டா... இதுல தப்பிச்சது நீயும், நானும்தான்...

அட.... இன்னாடா இப்டி சொல்ற?

பின்ன இன்னாடா... சினேகா பின்னாடி லோலோன்னு சுத்துனானே ஒரு கபோதி, அவன் பெரிய தொழிலதிபராம்.. புண்ணாக்கு விக்கறானா இன்னான்னு தெர்ல.. அவிய்ங்களுக்கு ரெம்ப செலவு பண்ணி கீறானாம்... குடுத்தப்போ எல்லாம் துட்ட வாங்கிகினு இப்போ டாணாகாரனாண்ட சொல்டாங்கோன்னு கூவறானாம்...

"ரெண்டு பெருசுங்க" சிலை தொறந்துச்சே... அந்த நூஸு ஏதும் கீதாபா?

சிலைய தொறந்தப்புறம், சிலைக்கு பக்கத்துல நாலஞ்சு பேர பாராக்கு போட்டு சிலைய கண்டுக்கங்க‌டான்னு சொன்னா, அவுனுங்க பராக்கு பாத்துகினு அங்கிட்டும், இங்கிட்டும் சுத்திகினு கீறாய்ங்களாம்... சிலை திறப்பு ஓகே.. இங்க கொஞ்சம் தண்ணியும் தொறந்து வுடறான்னா, மாட்டேன்றான்... அத்த பத்தி ஒண்ணுமே கேக்காம நம்ம "தல" ரிடன் வுட்டாரே....அத்த‌ ப‌த்தி....ஏதாவ‌து.....

டேய்... சத்தம் போட்டு பேசாதடா... இதெல்லாம் "நுண்ணரசியல்".. ஒனக்கும், எனக்கும் ஒண்ணுமே தெரியாது... மேட்டரு அவிய்ங்க காதுக்கு போயிட்சுன்னா, நம்ம பொயப்பு நாறிடும்... ந‌ம்ம டங்குவார அறுத்துடுவானுங்க..க‌ம்முனு கெடடா‌ க‌யிதே...

ஜஸ்வந்த் அண்ணாத்தக்கி பி.ஜே.பி.ல இருந்து கல்தா குடுத்துட்டாய்ங்களாமே... இன்னா மேட்டரு... அத்த‌ ப‌த்தி சொல்லுபா...

அது ஒன்ணும் இல்லடா...அவரு ஏதோ சுயசரிதை எய்தறேன்னு சொல்லி, வேலில போன ஓணான எடுத்து, பைஜாமா உள்ள வுட்டுகினாருப்பா... இப்போ, ஓணான் பைஜாமால படா டேமேஜ் பண்ணிச்சு... க‌த‌ர்றாரு... இன்னாத்த‌ சொல்ற‌து.. எல்லாம் கெர‌க‌ம்டா.....

சர்தான்பா... போதும்... போதும்... இத்தோட நிறுத்திக்க... இத்த கேட்டாவே "தல" சுத்துது... அட சுத்தறது என் தலப்பா... மிச்ச மீதி இருந்தா அப்பாலிக்கா சொல்லு... சுருக்கா போயி, அங்க கீற கபாலிய கூட்டிகினு நேர போயி ஒரு ஃபுல்"டாஸ்மாக்" வுட்டாதான் சரிப்படும்....அப்போ வர்ர்ட்டா...