Friday, August 12, 2011

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்....


தாயின் மணிக்கொடி பாரீர்

இதை போற்றி புகழ்ந்திட வாரீர்.


வெள்ளையன் பிடியில் இருந்து நாட்டை மீட்க

அன்று சிந்திய பலரின் குருதி

கொடியின் மேலே ஆனது காவி

உல‌கின் இக்க‌ண தேவை சமாதான‌ம்

அதை உண‌ர்த்தும் விதமாய்

கொடியின் ந‌டுவில் இருக்கும் வெண்மை

பஞ்சம், பட்டினி கொடுமையை போக்கி

பசுமையாய் ஆக்குவோம் நாட்டை

இதை உண‌ர்த்த‌வே கொடியின் கடைசியில் பச்சை


இடையில் உள்ள சக்கரம் போல்

ஓயாமல் சுற்றி (உழைத்து) கொண்டிருந்தால்

உன் வாழ்வும் உயர்வு பெறும்

நம் நாடும் வளம் பெறும்


இன்றைய இந்தியா இதை உண‌ருமா?

கிறங்கிய விழிகள், உலகை மறந்த நிலை

இன்று புலர்ந்த‌ பொழுதும் வீண்

நிகழ்கால நிகழ்வுகள், எதிர்கால கனவுகள்

அனைத்தும் கருகிய நிலை


விதவிதமான போதையின் பிடியில் இந்தியா

தூக்கி நிமிர்த்த வேண்டிய இளைஞர்கள்

போதையின் பிடியில் சுருண்டு....

அஹிம்ஸையின் வழியே சுதந்திரம் பெற்ற

அண்ணல் காந்தி கூட இன்றைய நிலை கண்டால்

கையில் எடுப்பார் ஏதாவதொரு ஆயுதம்....


நம் இன்றைய தேவை என்ன?

ஒற்றுமை வாழ்வும், கடின உழைப்பும்

கடுகு அளவுள்ள எறும்பே அதன்

உழைப்பை நம்பி வாழும்போது

மலையளவுள்ள மனிதா - நீயும்

உன் உழைப்பை ந‌ம்பி வாழ்ந்து பார்

சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல்

நீயும் சோம்பலில் இருந்து எழுந்து உழை


குடியை கெடுக்கும் குடியை தவிர்

மனதை கெடுக்கும் மதுவை மற

சீரிய சிந்தனையை உள்ளத்தில் நிறுத்து

வாடிய அனைவரையும் அள்ளி அணைத்து

கனிவான மனதுடன் அன்பு செலுத்து

பொழுதுபோக்கை குறைத்தால்

நம் வாழ்வு சிறக்கும்....


ஜெய் ஹிந்த்.....


உலகில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..