Saturday, January 30, 2010

என்ன எழுதலாம்? -- தங்கள் மேலான ஆலோசனைக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்

முதலில் ”மத்திய கிழக்கு நாடுகள் - அயல் நாட்டு மோகம்” என்று அன்னிய தேசம் பற்றிய ஒரு தொடர் எழுதினோம். அந்த தொடரில் துபாய் பற்றியும் அதனோடு தொடர்புடைய வாழ்வின் எண்ணங்களையும், ஏக்கங்களையும் எழுதினோம்.

வாசக தோழமைகள் தந்த ஆதரவினால், அடுத்ததாய் ஏன் ”வாழ்க்கை” பற்றிய ஒரு தொடர் எழுதக்கூடாது என சிந்தனை சிறகடித்தது. அதன் தொடர்ச்சியாக பின் “வாழ்க்கை” என்ற தொடரும் 12 பாகங்களாக தோழமை அனைவரின் ஆதரவும் ஊக்கமும் பெற்று வெற்றிகரமாய் பதிவேறியது

இப்போது அடுத்தது என்ன எழுதலாம் என யோசிக்கும் வேளையில், தங்களின் மேலான ஆலோசனை கேட்கிறோம். அடுத்ததாய் என்ன எழுதலாம், எதை பற்றி எழுதலாம் என பின்னூட்டத்தில் ஆலோசனை சொல்லுங்களேன்.

தங்கள் மேலான கருத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்...

(ஆர்.கோபி / லாரன்ஸ்)

Sunday, January 24, 2010

கலைஞரின் பரபரப்பான லேட்டஸ்ட் கின்னஸ் (!!??) கிச்சு கிச்சு........



நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கலைஞர் அவர்கள் அதிரடியாக ஒரு முடிவு எடுத்து செய்த செயல், நாட்டின் பல்வேறு பட்ட பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்தது.... .

தான் இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் பல நிகழ்த்த இருப்பதாகவும், தமிழர்களுக்கு எங்கு பிரச்சனை என்றாலும், உடனே இது போன்ற நிகழ்வுகள் தன்னால் அரங்கேற்றப்படும் என்றும் உடன்பிறப்புகளுக்கு “முரசொலி”யில் கடிதம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது... அவருக்கு உலகெங்கிலும் இருக்கும் தமிழர்கள் பாராட்டுகளை அள்ளி குவித்த வண்ணம் உள்ளனர்.. (அய்யோ..........அய்யோ.....)

அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியின் செய்தி தொகுப்பு தான், கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

*************

சரத்குமார்-ஸ்ரேயா நடிப்பில், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான ஜக்குபாய் படத்தின் சிறப்புக் காட்சியை முதல்வர் கருணாநிதி பார்த்தார்.படம் சிறப்பாக வந்திருப்பதாக சரத்குமார் மற்றும் படக்குழுவினரையும் பாராட்டினார்.

ஜக்குபாய் படம் எப்போதோ எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் வாங்க ஆளில்லாததால் இதோ அதோ என்று வெளியாக போக்குக் காட்டி வந்தது. இந்த நிலையில் அந்தப் படத்தின் டெக்னீஷியன்கள் பலருக்கு சம்பள பாக்கி வைத்துவிட்டதாகப் புகார் எழுந்தது.

இந்த நிலையில், படம் தியேட்டர்களில் திரையிடுவதற்கு முன்பே இணையதளங்களிலும், திருட்டு வி.சி.டி.யாகவும் வெளியிடப்பட்டது.இதை வைத்தே பரிதாபம் தேடிக்கொள்ள முயன்ற சரத்- ராதிகா அண்ட் கோ, முடிந்த வரை இந்த விவகாரத்தை பெரிதாக்கியது.

முதல்வரைச் சந்தித்து திருட்டு விசிடி விற்போர், வைத்திருப்போர், பார்ப்போர் எல்லோர் மீதும் குண்டர் சட்டம் பாய வேண்டும் என்று வற்புறுத்த, அடுத்த நிமிடமே அதைச் சட்டமாகவும் அறிவித்துவிட்டார் முதல்வர் கருணாநிதி.

இந்நிலையில், 'ஜக்குபாய்' திரைப்படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் சரத்குமார். இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை பார்த்தார்.

இதற்காக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள போர் பிரேம்ஸ் திரையரங்கில் அவருக்கென சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஜக்குபாய் படத்தை கலைஞர் டிவிதான் வாங்கி வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

*****************

இந்த நிகழ்வின் மூலம், சரத் தன்னுடைய ச.ம.க.வை கலைத்து விட்டு, தி.மு.க.வோடு சங்கமம் ஆவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை சரத்குமார் அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கலைஞர் தெரிவித்தார்.... தமக்கு எப்போதும் சரித்திர புத்தகத்தின் நடுவில் உள்ள வெற்றிடத்தில் ஓர் குட்டி இடம் உள்ளதை சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்தார்....

இது கின்னஸ் புத்தகத்தில் இந்த வருடத்தின் சிறந்த “நகைச்சுவை நிகழ்வு” என்ற தலைப்பில் தேர்வாக சாத்தியம் இருப்பதாகவும், கிச்சு கிச்சு மூட்டாமலே சிரிக்க வைப்பதில் கலைஞர் வல்லவர் என்றும் எதிர் கட்சிகள் கூறுகின்றன...

Tuesday, January 12, 2010

பொங்கலோ பொங்கல்

நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மார்கழி முடிந்து பிறந்தது தை
மனதில் நாளும் நம்பிக்கை வை

புதிதாய் வாங்கிய பானை இங்கு
அதை சுற்றி கட்டிய மஞ்சள் கிழங்கு

சந்தையில் வாங்கிய அடிக்கரும்பு
அதனுடன் வாங்கிய பூவும் அரும்பு

மாவால் போட்ட பல வகை நெளிக்கோலம்
அது காட்டியது கன்னியர்களின் கைஜாலம்

உமி களைந்து எடுத்த சம்பா அரிசி
அது நீரோடு நீராக ஒட்டி உரசி
அதனுடன் உடைத்து சேர்த்தது வெல்லம்
அதை இதமாய் பதமாய் சமைத்தது இல்லம்

மேக கூட்டம் களைந்து, வானத்தை பிளந்து
சூரிய கதிர்கள் பளீரென பிரகாசம் காட்ட

இருண்ட சூழல் விலகி வெளிச்சம் கூட்ட
சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியை அடைய

நம் பூவுலகின் இருள் விலகியது.
அதுபோல் நம் வாழ்வின் இருள் விலக
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்

அனைவரும் ஒன்று கூடி உரக்க கூவுவோம் -
"பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்"