Wednesday, December 30, 2009

சந்திரமுகி (ரீவைண்ட் ௨005) – சோதனைகளை தாண்டி சாதனை படைத்த காவியம்

நடிகர் விஷ்ணுவர்த்தன் மரணம் என்ற செய்தி கேட்டபோது அதிர்ச்சியும் அவரது ஆன்மா சாந்தியடையவும் மனது பிரார்த்தித்தது...

அவரது ”ஆப்த மித்ரா” மனதில் நிறைந்தது, அதன் வெற்றியும் அதன் தமிழாக்கத்தில் அவரது ஆத்ம நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினியும் அடைந்த வெற்றியும் அதன் சூழலும் மனதில் நிழலாடியது. கன்னடத்தில் "கில்லாடி கிட்டு", "கலாட்டா சம்சாரா" மற்றும் தமிழில் "விடுதலை", "ஸ்ரீ ராகவேந்திரர்" (சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் 100 வது திரைப்படம்) படங்களிலும் இணைந்த நிகழ்வும் மனதில் வருடோடியது. வருடத்தின் இறுதி பதிவில் சில சாதனைகள் பட்டியலிடும் போது, மனம் ஆக்கபூர்வமாய் ஆகும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். இனிய மனங்கனிந்த 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமைக்கும் அவர் தம் குடும்பத்துக்கும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2005 ஆம் ஆண்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் “சந்திரமுகி”. ”மணிச்சித்ரதாழ்” என்ற மலையாள படத்தின் கன்னட பதிப்பான ”ஆப்தமித்ரா” விஷ்ணுவர்தன், சௌந்தர்யா நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றி அடைந்திருந்த நிலையில், ரஜினிகாந்த், தமிழில் ரீமேக் செய்து நடித்த படம்... 2002௦ ஆம் ஆண்டில் வெளிவந்த “பாபா” படம் சரியாக வெற்றியடையாத நிலையில் 3 வருடங்கள் எந்த படமும் நடிக்காத நிலையில் இருந்த ரஜினிகாந்த் அவர்கள் 2005 ஆம் ஆண்டில் நடித்து “சந்திரமுகி” வெளிவந்தது...

”சந்திரமுகி” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி அவர்கள் சொல்லிய “நான் யானை இல்லை, குதிரை.... விழுந்தா சட்டென்று எழுந்துடுவேன்” என்ற டயலாக் ரொம்ப பிரசித்தம்…

இனி ”சந்திரமுகி” படத்தை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை ரீவைண்ட் செய்து, உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்... என்ன இருந்தாலும், பழைய நினைவுகளை அசைபோடுவது ஒரு தனி சுகம்தானே நண்பர்களே...

நாட்களாக சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் படம் எடுக்காத நிலையில், ரஜினி அவர்கள் ராம்குமார் அவர்களை தொடர்பு கொண்டு, தயாரிக்க சொன்ன படம் தான் “சந்திரமுகி”.

தமிழில் 800 நாட்களுக்கு மேல் ஓடி, அதிக நாட்கள் ஓடிய தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.

தென்னாப்பிரிக்காவில் 100 நாட்களை கடந்து ஓடிய தமிழ்ப்படம்...

ஜப்பானிலும் பெரிய வெற்றியை ஈட்டிய படம்..

முதன் முதலாக இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்கள் ரஜினி நடித்த படம் ஒன்றுக்கு இசையமைத்த படம்.

ஜோதிகா (கிளைமாக்ஸ் காட்சியில் தன் கோழி முட்டை கண்ணை உருட்டி ”ரா ரா சரசக்கு ரா ரா” என்ற போது அரங்கே அதிர்ந்தது), வடிவேல் நடிப்பு (மாப்பு, வெச்சுட்டான்யா ஆப்பு டயலாக் கேட்டபோது ரசிகர்களின் கரகோஷம் பட்டாசாய் வெடித்தது) வெகுவாக பாராட்டப்பட்ட படம்.

ஆந்திர பிரதேசத்தில் 2005 ஆம் ஆண்டில் வெளியான டப்பிங் படங்களிலேயே அதிக வசூலை குவித்த படம் சந்திரமுகி... அதன் தொடர்ச்சியாக தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றி பெற்று வசூல் செய்த மற்ற தமிழ் படங்கள் அந்நியன் மற்றும் கஜினி...

படத்தின் தொடக்கத்தில் ரஜினி அவர்கள் வித்யாசாகர் அவர்களிடம் இந்த படத்தில் 6 பாடல்கள் இடம் பெறப்போகிறது... அதில், பாதிக்கு பாதி, அதாவது குறைந்தது 3 பாடல்களையாவது சூப்பர் ஹிட் பண்ணனும் என்று சொன்னதாகவும், அதற்கு வித்யாசாகர், ஏன் சார் 3 பாடல்கள், 6 பாடல்களையும் சூப்பர் ஹிட் ஆக்கி காட்டுகிறேன் என்றதாகவும், ரஜினி அவர்கள் அதை நம்பாதது போன்ற ஒரு பார்வை பார்த்ததையும் வித்யாசாகர் ஒரு பேட்டியில் விவரித்தார்... பின்னர் படம் வெளிவந்து மகத்தான் வெற்றி பெற்ற நிலையில், ”சந்திரமுகி” வெற்றி விழாவில் ரஜினி அவர்களே இதை குறிப்பிட்டு தம்மை பாராட்டியதாகவும் தெரிவித்தார்...

ஆரம்பப்பாடலான “தேவுடா தேவுடா” ஒரு மெகா ஹிட் பாடல்... இந்த பாடல் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளர்களை உயர்வாக சித்தரித்தது...

“சாக்கடைக்குள் போயி, சுத்தம் செய்யும் பேரு
நாலு நாளு லீவு போட்டா நாறிப்போகும் ஊரு
முடி வெட்டும் தொழில் செய்யும் தோழன் தான் இல்லையேல்
நமக்கெல்லாம் ஏது அழகு
நதி நீரில் நின்று துணி தோய்ப்பவன் இல்லையேல்
வெளுக்குமா உடை அழுக்கு

எந்த தொழில் செய்தாலென்ன செய்யும் தொழில்
தெய்வமென்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே!!”

கொக்கு பற பற, கோழி பற பற என்ற பட்டம் விடும் பாடல்...

இந்த பாடலின் ஆரம்பம் வெகு விளையாட்டாக இருக்கும்... ஆயினும், இடையில் சில கருத்துக்களை வெகு அழகாக சொல்லி இருப்பார்கள்...

“மீனாட்சி அம்மனை பார்த்தாக்க
கந்து வட்டியோட கொடுமைய போக்க சொல்லு
ஸ்ரீரங்கநாதர பார்த்தாக்க
தலைகாவேரிய அடிக்கடி வரச்சொல்லு”

கந்து வட்டிக்கு மதுரை பெயர் போனது என்பதும், காவிரி நீர் பகிர்வு ஒரு தீராத பிரச்சனை என்பதையும் நாம் அறிவோம்...

அத்திந்தோம், திந்தியும் தோம்தன திந்தாதிருந்தோம்...

இது மலையாள நாட்டுப்புற பாடலை சாயல் கொண்டிருந்த படம்... இந்த பாடலிலும், சில கருத்துக்கள் வெகு அழகாக சொல்லப்பட்டிருக்கும்...

“ஆறு மனமே ஆறு, இங்கு அனைத்தும் அறிந்ததாரு
அறிவை திறந்து பாரு, அதில் இல்லாததை சேரு
அட... எல்லாம் தெரிந்த, எல்லாம் அறிந்த ஆளே இல்லையம்ம்மா...”

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப்பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா


இந்த டூயட் பாடல், வெகு ரம்மியமாக படமாக்கப்பட்டிருக்கும்.... பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாத ரஜினி, நயன்தாரா நடிப்பில் பாடல் வெகுவாக பிரபலமானது.... ஜோர்டான் நாட்டில் படமாக்கப்பட்டது என்று நினைவு... வெகு நாட்களுக்கு பிறகு ஹிந்தியின் மிக பிரபலமான பிண்ணனி பாடகி ஆஷா போஸ்லே, இசையமைப்பாளர் வித்யாசாகரின் விருப்ப பாடகர் மது பாலகிருஷ்ணனுடன் (இவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் அவர்களின் நெருங்கிய உறவினர் என்பது தெரியுமா??) இணைந்து பாடிய தமிழ் பாடல் இது... இந்த பாடலை பற்றிய இன்னொரு சுவையான தகவல்... சந்திரமுகி படத்திற்காக போடப்பட்ட பாடல் அல்ல இது... வித்யாசாகர் அவர்கள் வேறு ஒரு படத்திற்கு போட்ட இந்த ட்யூன், அந்த படத்தின் டைரக்டரால் நிராகரிக்கப்பட்டது... பின், அது வாசு/ரஜினி கூட்டணிக்கு இசைத்து காட்டப்பட்டு, ஓகேவாகி............ பின் நடந்தது எல்லாம் வரலாறு....

அண்ணனோட பாட்டு, ஆட்டம் போடுடா

இந்த வெகுஜனங்களை கவர்ந்த பாடல், பெரிய வெற்றியை பெற்றது... இந்த பாடலிலும், ரஜினி டச் இருக்கும்... பாருங்கள்...

“உள்ளம் தெளிவாக வை... எண்ணம் உயர்வாக வை
வாழும் காலம் எல்லாம் மண்ணில் மரியாதை வை

கண் இமைக்கும் நொடியில் எதுவும் நடக்கும்
அது எனக்கு தெரியும், நாளை உனக்கு புரியும்
அஞ்சுக்குள்ள நாலை வை, ஆழம் பார்த்து காலை வை”

கிளைமாக்ஸ் பாடலான :

”ரா ரா, சரசக்கு ரா ரா”

யாராலும் கற்பனை பண்ணி பார்க்க முடியாத ஒரு விஷயம் நடந்தது.... ஒரு தெலுங்கு பாடல், தமிழ்ப்பதிப்பில், முழுதாக இடம் பெற்று, பெரிய வெற்றியையும் பெற்றதை என்னவென்று சொல்வது... இதில் ரஜினியின் ட்ரேட் மார்க் வில்லத்தன நடிப்பு ”வேட்டையன்” என்ற கேரக்டரில் வெளியாகி வெகுவாக ரசிக்கப்பட்டது... அதிலும், குறிப்பாக அந்த குலை நடுங்க வைக்கும் “லக்க லக்க லக்க லக்க” டயலாக்... தியேட்டரில் பொறி பறந்ததை மறக்க முடியுமா?!!

இந்த படத்தின் இசை சேர்ப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு நாள், வித்யாசாகர் காரில் பயணித்து கொண்டிருந்த போது, சிக்னலில் அவர் காருக்கு பக்கத்தில் வந்து நின்ற ஒரு வாகனத்திலிருந்து ஒரு பெரிய போலீஸ் அதிகாரி இவரை பார்த்து, சார், நீங்க வித்யாசாகர் தானே, சந்திரமுகி படத்தில் தலைவருக்கு அட்டகாசமா ட்யூன் போடுங்க என்று சொன்னதை ஒரு பேட்டியில் வித்யாசாகர் சிலாகித்து சொன்னார்... ரஜினி அவர்களின் ரீச் எந்த அளவு இருக்கிறது என்று மிகவும் வியப்புற்றதாக குறிப்பிட்டார்...

(பின்குறிப்பு : லக்க லக்க லக்க லக்க டயலாக் உருவான கதை ) :

ரஜினி அவர்கள் ஒரு முறை நேபாள நாட்டிற்கு சென்றிருந்த போது, கூட்டமாக மக்கள் ஒரு பெண்ணை அழைத்து (இழுத்து என்பதுதான் சரி) சென்றதை பார்த்ததாகவும், அவர்கள் லக்க லக்க லக்க லக்க என்ற ஒரு விநோத சப்தம் எழுப்பியதாகவும், அவர்களிடம் என்ன செய்கிறீர்கள், யார் இந்த பெண் என்று விசாரித்தபோது, அந்த பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கிறது என்றும், சிகிச்சைக்கு மந்திரவாதியிடம் அழைத்து / இழுத்து கொண்டு செல்வதாக கூறியதாகவும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்... எங்கோ நேபாள நாட்டில் அவர் கேட்ட ஒரு விஷயம் ஒரு தமிழ் படத்தில் இடம்பெற்று, பின் அதுவே உலகளவில் அறியப்பட்டதையும் என்னவென்று சொல்வது!!??

ஆகவே.....நாம் அனைவரும் ஒன்று கூடி உரக்க சொல்லுவோம்... லக்க லக்க லக்க லக்க......

நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சியான 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...........

Monday, December 21, 2009

நான் அடிச்சா தாங்க மாட்ட!!!! நாலு நாளு தூங்க மாட்ட !!!!

முன்ன ஒரு காலத்துல, முள் ஒடிஞ்ச நேரத்தில,
டங்கிரிடிங்கான்னு ஒரு ஊருக்குள்ள ... (இப்படிதேன் கதைய தொடங்கோணும், மூன்றாம் பிறைல கமல்தாசன் மாதிரி...) கலகலப்பும் சந்தோசமுமாய் ஒரு டகால்டி ஃபேமிலி இருந்துச்சு.

அவிய்ங்கள பார்த்தாலே ... டேய் வாராங்கடா, ஓடிருங்கடா.... என ஊரே கதிகலங்கும். டோட்டலி ஒரு இர்ரெஸ்பான்ஸிபிள் டெர்ரர் குடும்பம்.

குடும்பத் தலைவன் (நேரந்தேன்!! ) தங்கடாடி.... தவமாய் தவம் இருக்காமல் ரெண்டு குழந்தைகளை பெற்றார்.

சிக்கன் பிரியர், ரசிச்சு ருசிச்சு சாப்பிட்ட சிக்கன் நினைவா, செல்லமா "தங்ககோழி"னு பேரு வைக்க, பிறந்த குழந்தையோ தத்துவம் பேசுறேன் பேர்வழின்னு தத்து பித்துன்னு ஒளறுச்சு. இதை ஊரெல்லாம் பாத்து, போனா போகுதுன்னு அவனுக்கு "தத்துவ பித்தன்"னு பேர் வச்சுருச்சு... ஆனா, அவன் தலைய பார்த்தாலோ இல்லை அவன் வந்துட்டான்னாவோ ஊரே பெரிய அலறல் அலறி, தலை தெறிக்க ஓடிச்சு.

அடுத்ததா பொறந்தவனுக்கு "மருதமலை" என இவர் பெயர் வைக்க, ஊர் அவனுக்கு "தறுதலை" என பெயர் சூட்டின‌ர். கேட்டுக்கிட்டீங்க இல்லயா... வாசகர்களே, உங்க கைய கொடுங்க, சத்தம் இல்லாம வாங்க, வீட்டின் உள்ளார‌ போயி என்னாதான் நடக்குதுன்னு பார்ப்போம்.

அந்தா மஞ்ச கலர் பேண்டும், பச்சை கலர்ல சட்டையுமா, முண்டா பனியன சட்டைக்கு மேல போட்டுருக்கானே (சூப்பர்மேன் சுப்ரமணி மாதிரியே இருக்காரே) அந்த எடுபட்ட பய தேன் "தத்துவ பித்தன்". (எலே... இவன் அசப்புல பார்த்தா, நம்ம ராமராசன் மாதிரியே இருக்கான்டோய்...). கண்ணுல கூலிங் கிளாஸ் வேற இருக்கு.. ஆங்.. அவன் ஏதோ பாட்டு கூட பாடுற மாதிரில்ல இருக்கு. வாங்க போயி கேப்போம் என்னா பாட்டுன்னு..

டாடி! ஓங்கி அடிச்சா ஊர் கூடி
நம்ம மொக்க ராயன் டெட் பாடி
புட்டுக்கிட்ட மொக்கயன எடுத்துட்டு வர‌
தேடிக்கிட்டு இருக்காங்க ஒரு மீன் பாடி


தங்க டாடி: வாடா ஊருக்குள்ள ஒருத்தனே, தத்துவ பித்தனே! தறுதலைக்கு மூத்தவனே!!. எலே...நாமா அடிச்சா அது மொட்டை. அதுவா விழுந்தா அது சொட்டைடா. அடிச்சுறு ஒட்டடை, இல்லன்னா வீடே பன்னாடை.

தத்துவ பித்தன்: அது வந்து, நம்ம ரெட்டைவால் ராயன்......

தங்க டாடி : யாருடா.... இந்த பங்கரக் கொத்து கொத்தியிருப்பானே அவனா.

தத்துவ பித்தன் : அக்காங்... அவனே தான். ஒரு மொபைல் கம்பெனில‌ போயி கையி ரெண்டும், கால் ரெண்டும் நீட்டினானாம். பாருவே.... என் உட‌ம்புல‌ எத்த‌னையோ "செல்" இருக்கு.. அதுல‌ போடறதுக்கு ஒரு சிம்கார்டு வேணும்னானாம்.

முசுடு மூக்காயி” (மங்குனி மம்மி) : அடி ஆத்தி...டேய் டகால்டி பித்தா!!! கோவில் ம‌ணிய‌ நாம‌ அடிச்சா ச‌த்த‌ம் வ‌ரும். ஆனா, கோவில் ம‌ணி ந‌ம்ம‌ள‌ அடிச்சா ர‌த்த‌ம் தாண்டா வ‌ரும்...இதுதாண்டா வாழ்க்கையோட டெர்ரர் தத்துவம்... அவன் நல்லா கேட்டான்டா டீடேய்லு.

மம்மி... நீங்க சொன்னது டண்டணக்காத்தான்!! டாடி. யானை மேல நாம உட்கார்ந்தா அது சவாரி, யானை நம்ம மேல உட்கார்ந்தா அப்புறம் ஒப்பாரி. பக்கத்து வீட்டு கௌரி.... கொண்டு வரல டௌரி... ரெண்டு நாளா தேடியும் காணல அவிய்ங்க அம்மாவோட செளரி. மொத்துன மொத்துல ராயனுக்கு ரெண்டு நாளா ஒண்ணுமே தெரியலயாம். ஒரே கேரா இருக்காம்....

தறுதலை : டேய் மக்கா...உல‌க‌ம் தெரியாம‌ வ‌ள‌ர்ற‌வ‌ன் வெகுளி, கிரிக்கெட் தெரியாம‌ விளையாட‌ற‌வ‌ன் க‌ங்குலி. எங்க போயி, எதை பேசணும்முனு இல்லையாடா. ஆமா நல்ல பயதானேடா அவன், பின்ன ஏன் இப்படி எல்லாம் கேட்டான்.

வாழ்க்கையில ருசி வேணும்னா, பார்க்கிற படத்துல‌ பஞ்ச் டயலாக் சேர்ந்து இருக்கணும்னு ”கடலைமுடி ஜோசியர்” சொன்னாராமாம்... சரின்னு இவரும் போய் ஒரு படத்த பார்த்தாராம்... அதுல வர்ற பஞ்ச் டயலாக் கேட்டு கொல‌வெறியாயிட்டாராம்...

அப்படி என்னடா அந்த டெர்ரர் பஞ்ச் டயலாக்.. சொல்லு கேப்போம்..

ஹீரோயின.... வில்லன் கடத்திட்டு போய்டறான்... நம்ம ஹீரோ போய் சண்டை போட்டு கூட்டிட்டு வரணும்... போனோமா, சண்டை போட்டோமா, ஹீரோயின கூட்டிட்டு வந்தோமான்னு இல்லாம, சொன்னாரு பாரு ஒரு பஞ்ச் டயலாக்... நான் கேட்டுட்டு ஆடி போயிட்டேன்...

"நான் சொல்லி அடிச்சா குச்சி, சொல்லாம அடிச்சு சொக்கா கிழிஞ்சு போச்சி".

பதிவு பூரா மொக்கை, மேசேஜே இல்லன்னா, நம்மள டின்னு கட்டிடுவாய்ங்க. அதனால அர்ஜெண்ட்டா ஒரு மெசேஜ் சொல்லுங்க பதிவை முடிச்சுடுவோம்....

உன் புடுங்கல், பெரிசாச்சேடா.... துவைக்கிறதுலதான் அர்ஜெண்ட் ஆர்டினரி.... ப்ளாக் பதிவிலேயுமாடா.... சரி வைச்சுக்கோ.... ஒரு கேள்வி கேட்டு பதில் சொன்னா மேசேஜ் வந்திரும்ல. பயம்ன்னா என்ன, பதில் சொல்லு.

முந்தா நேத்து கோழி திருடும் போது உடமஸ்தன் மஸ்தான் வந்தானே, அப்ப அவனோட சேர்ந்து நமக்கு வந்துதே, அதுதான் பயம்.

ஏ மக்கா, அசத்திப்புட்டடா..... இருந்தாலும், இன்னும் தெளிவா சொல்றேன் கேட்டுக்கோ.. பயம் என்பது தைரியம் இல்லாத மாதிரி நடிக்கிறதுடா...

டேடி.... நீங்க பெரிய கேடி, இதே மேட்டர வேற ஒருத்தது வேற ஒரு மாதிரி சொல்ல கேட்ட மாதிரி இருக்கே...

இன்னாடா இது புது கதை... அது இன்னாடா, வேற ஒருத்தரு சொன்னது... சொல்லுடா கேப்போம்...

அதாவது நைனா... குருதிப்புனல் படத்துல நம்ம கமல்தாசன் அண்ணாத்த சொல்வாரு .... தைரியம்னா என்ன தெரியுமா, பயம் இல்லாத மாதிரி நடிக்கறது மாதிரின்னு... இது அதோட டகால்டி வெர்ஷன்...

நீ அத்த உல்டாவா என் கையில சொல்லிகினே நைனா...

எது எப்படியோ... விடுடா ரைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்..............

Tuesday, December 8, 2009

சூரியனோ....சந்திரனோ...யாரிவனோ சட்டென சொல்லு.....

டிசம்பர் 12 2009 அன்று அகவை 60ல் அடியெடுத்து வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் எழுதிய பிறந்த நாள் வாழ்த்துப்பா இதோ, உங்கள் பார்வைக்கு :

ரஜினி எனும் மூன்றெழுத்து காந்தம்
உன் சிரிப்பில் தான் என்னே ஒரு பாந்தம்!!..

மலராத மலரும், மலருமே உன் சிரிப்பில்
இதை கண்ட அனைவருமே நிறைவோமே சிலிர்ப்பில்

வெள்ளி வானில் சில பல மின்மினி
மின்ன பாக்கும் பல சில இனி இனி
தோல்வி என்பதே இல்லை உனக்கினி
”ஆறிலிருந்து அறுபது வரை” உன் மேல் விருப்பம்
அதுவே திரைவாழ்வில் நீ கண்ட திருப்பம்

உன் நிறமோ சிறிது கருமை - ஆனால்
கருமைக்கே நீ சேர்த்தாய் பெருமை
இதை கண்டோர்க்கெல்லாம் பொறாமை
அவர்களுக்கு எங்கே தெரியும் உன் அருமை

எல்லோர்க்கும் உன் செயல் மேல் நம்பிக்கை
நீ விதைத்தாய் அவர்தம் வாழ்வில் தன்னம்பிக்கை

நீ, மன்னர்களும் மண்டியிடும் ”ராஜாதி ராஜா”
சேரனும், சோழனும் உள்ளடங்கிய - ”பாண்டியன்”
உன் படம் படையெடுக்கும் போது
பட்டையை கிளப்பும் வசூல்... நல்ல மகசூல்.
உன் படம் கண்டவர்கள் சொன்னது தூள், தூள்...
முந்தைய வசூல் சாதனைகள் ஆனதே தூள், தூள்

நீ, ரசிகர்கள் கூட்டத்தை நல்வழிப்படுத்தி
அந்த நல்வழியே அழைத்து செல்லும் ”தளபதி”
உலகில் தர்மத்தை போதித்த ”தர்மதுரை”

உழைப்பின் அருமை பெருமையை
ஓங்கி, உரக்க சொல்லிய ”உழைப்பாளி”
“வள்ளி"
என்ற நல்ல படத்தின் படைப்பாளி

தர்மத்தை போதித்து அதர்மத்தை விரட்டியவன்
அதனாலேயே உன் பெயர் “தர்மத்தின் தலைவன்”

நீ, தரணிக்கே ஒரே மகன்
இந்நாட்டின் தலைமகன் - ஆயினும்
”நான் மகான் அல்ல”, சாமான்யன் தான்
என அடக்கத்துடன் சொல்லிய ”தங்க மகன்”

நீ சொல்லி சூறாவளியாய் அடித்த படம் ”பாட்சா”
உன்னிடம் எப்போதும் பலிக்காது மற்றவர்கள் பாச்சா

உன் அவதாரத்தின் ஒரு பெயரோ ”வீரா” -
ஆனாலும் நிஜத்தில் நீயோ ஒரு சமாதான புறா

அகவை அறுபதை எட்டிய "மாவீரன்” நீ
ஆயினும்...பாசம் உள்ள மனிதன் நீ
மீசை வைத்த குழந்தை நீ

சுருங்கி கிடந்த தமிழ் சினிமாவையும்
அதன் சுருண்டு கிடந்த வியாபாரத்தையும்
”சிவாஜி” என்ற ஒரே படத்தின் மூலம்
அகண்டு விரிய செய்த அற்புத ”மனிதன்” நீ

ஆண்டுகள் பல ஆனாலும், வயது சில போனாலும்,
இன்னும் உன் ”இளமை ஊஞ்சலாடுகிறது”.

தேனையும், சர்க்கரையையும் சுவைத்தால்தான் இனிக்கும்
ஆனால், உன்னை பற்றியோ ”நினைத்தாலே இனிக்கும்”

நீ பாசத்தின் பாவலன், ”ஊர்காவலன்”
அனைவரும் விரும்பும் "ந‌ல்ல‌வ‌னுக்கு ந‌ல்ல‌வன்"

அன்பான எஜமானுக்கு ஒரு உண்மையான ”வேலைக்காரன்”
யுத்தத்தில் கூட தர்மம் கண்டது - உன் ”தர்ம யுத்தம்”

சிவாஜி என்றவுடன் நினைவுக்கு வந்தது வீர சிவாஜி - அன்று
சிவாஜி என்றவுடன் நினைவுக்கு வருவது உன் சிவாஜி தி பாஸ் - இன்று

அரிதாரமின்றி அவனியில் உலா வரும் “அதிசய பிறவி” நீ
எளியோருக்கு உதவிட இறைவன் படைத்த அற்புத கருவி நீ

தேவலோக இந்திரனும் காண தவமிருக்கும் “எந்திரனே”
உன் புகழுக்கு தடை போட இனி இல்லை ஒரு அரணே

“எந்திரன்” என்ற ஒரு மாபெரும் சித்திரம்
உலகில் படைக்க போகுதே பல பல சரித்திரம்

அனைவரும் தவமிருக்கும் ஆட்சி கட்டில்
உனக்கோ எப்போதுமே அது பேச்சு மட்டில்

ஆட்சியை தேடி அனைவரும், அனுதினமும் அலைய
வெண்தாடியோடு நீ அமைதியை தேடி இமயம் ஓடி ஒளிய

பிறந்த நாள் வாழ்த்து என நான் தொடங்க
வார்த்தைகள் தேடி வந்து, சேர்ந்து ஆனது கவிதை
அதுவும் இங்கே நிகழ்ந்தது தான் விந்தை

ஓடி மறைந்து ஒளிந்தாலும்,
வேண்டாம் என்று ஒதுங்கினாலும்
உன்னை விடுவதில்லை நாமினி
வேண்டாமென சொல்லாதே நீயினி

உனக்கே சமர்ப்பணம் இந்த ரசிகனின் பா
இந்த அகிலமே காத்திருக்கு, அரியணை ஏற வா

Monday, November 23, 2009

மெல்லினம்....வல்லினம்...”புல்”லினம்...


"சூரியன்" மேற்கில் நகர்ந்து பூமித்தாயின் மடியில் ஓய்வெடுத்து படுக்க நகர திட்டமிடும் அந்தி சாய்ந்த மதி மயங்கும் மாலை நேரம்...
மேற்கு மூலையில் ரத்த சிவப்பில் வண்ணக் கோலம். பிடிவாதமாய் தீட்டப்பட்ட சில மஞ்சள் தீற்றுகள். நாள் முழுதும் விளையாடிய களைப்பின்றி சூரிய பந்து...இறைவன், இயற்கையோடு இணைந்து வரைந்த, சிறிதும்
உடைபடாத சிவப்பு அப்பளம்...
சுடரில் மட்டும் கொஞ்சம் சுணக்கம்.
சுட்டெரிக்காமல் மெல்லிய வெப்பம்.
நாளை வருவேன் என சொல்லி ஒளிந்து கொள்ள திட்டமிட, இரு மனித தலைகள் நம் கண்ணில் நிழலாட்டம்....

நட்பு, கற்பு இரண்டும் ஒன்றென அதுவும் தம்மென கொள்கை கொண்ட இரு நண்பர்கள்... மாலை வேளையில் பூங்காவினுள் காலாற நடந்து செல்வது அவர்களின் வாடிக்கை... கூடவே அங்கும், இங்குமாய் பார்த்து செல்வது வேடிக்கை... பகுத்தறிவு பசியும், பகிர்ந்து கொள்ளும் உத்வேகமும் அவர்கள் பேச்சில் உண்டு. வினா எழுப்பி அதற்கு விடை காண்பதும், வினயமாய் விடை தேடுவதும், அவர்களின் விருப்பமான விளையாட்டு. இன்றும் அதேபோல்...

பூங்காவில் புல், பச்சை பசேலென வளர்ந்து, நடக்கும் கால்களுக்கு கீழ் மெத்தை விரித்து இருந்தது. உடல் சோர்வு பாதங்களில் குறுகுறுப்பாய் குடியிருக்க, குளிர்ந்த மெத்து மெத்தென்றிருந்த புல் பாதங்களை லேசாய் முத்தமிட்டு வருடி விட, நேர்த்தியாய் நடந்த கால்களின் வலி நீங்கி... கால்களை பதித்ததும், உள்ளிழுத்தது...

சிறு வண்டுகளின் ரீங்காரம்...ஓங்காரமாய், ஏன் ”ஓம்”காரமாய் செவியை நிறைக்க, மனம் அந்த தாள லயத்தில் கிறுகிறுப்பாய் கிறங்கியது. நகரும் வாகனங்களின் சத்தம், அவை வெளியிடும் நச்சுப்புகை, நகர நெரிசல் என உணர்வுகளை பதம் பார்க்காத அமைதி அன்பாய் ஒழுகியது.

புதிதாய் பூத்த மெல்லிய பட்டு போன்ற பூக்களின் வாசம் காற்றில் புயலாய் புகுந்திருக்க, புற்கள் ஈரக் கவிதை வாசித்திருந்தது. சிறு குருவிகள், ”குரு” யாருமின்றி கற்ற சங்கீதத்தை இனிமையாய் இசைக்க, பூக்களும், புற்களும் தாளம் தப்பாமல் நடனமாடின...

பூக்களின் வழிவந்த காற்றில் கலந்திருந்த சுகந்தம் வெளியிடும் விரும்பத்தகுந்த நறுமணம் எங்கும் பரவி அந்த பகுதியையே நிறைத்து இருந்தது.... நன்கு இழுத்து மூச்சு விடுகையில் நுரையீரலை சென்று அடையும், சுத்தமான காற்று... உடலை இறுக்கம் தளர்த்தி, இலகு தன்மை கூட்டி, உள்ளத்தில் உற்சாகம் ஊட்டியது.

தெற்கிலிருந்து வீசும் லேசான தென்றல் காற்று... சிலுசிலுவென அவர்களின் தேகத்தில் படர்ந்தது.

இருவரில் ஒருவர் கேட்கிறார்... வலி என்பது என்ன??

திகைத்து நின்ற மற்றவர், மிக உன்னதமான விசயத்தை எப்படி இவ்வளவு சாதாரணமாக கேட்கிறாய் என்றார். நிமிடங்கள் சில, மவுனத்தில் கரைந்தது. ஆழமான சிந்தனை என முகம் பறை அறைந்தது.

வலி இயலாமை. இனி மேல் முடியாது என உணர்வின் உச்ச கட்ட வெளிப்பாடு. தன்மையை இழந்து விடுவோமோ எனும் அச்சம். கூக்குரலிட்டு அதை அகற்ற வேண்டும் எனும் முயற்சியே வலி.

ஒவ்வொரு வார்த்தையும் இருமுறை படிக்க வேண்டி உள்ளதே. சுருங்க சொல்லி விளங்க வைக்க முயற்சிப்போமே. செய்வோம் நன்று...அதுவும் இன்று.. சொன்னதின் உண்மை புரிந்து லேசான புன்முறுவலில் ஆமோதிக்க, சம்பாஷனை தொடர்ந்தது.

வலி ஏற்றுக் கொள்ளும் தளத்தில் என பல வகைப்படும். உடல் வலி, மன வலி, உணர்வு வலி, இது தனி மனித வலிகள். சமூக வலி, மொழி வலி (அவிய்ங்க...இவிய்ங்க, லகர, ளகர சிதைத்த தொலைக்காட்சி தமிழும் - தமிழ் தாய்க்கும் வலி உண்டல்லவா... மன்னிப்பாளாக...) என புறமும் உண்டு.

உரத்த சிரிப்பில் நண்பர் தொடர்ந்தார். வலி நீக்கும் உபாயம் உண்டோ, கூறலாமே..?!!

நன்கு வலித்த நம் கால்களை, பச்சை பசும்புல் எவ்வளவு இதமாய் நீவி விட்டது.... அதுதான்...எப்படி வலி சாஸ்வதமோ, அதுபோல் வலி நீக்கியும் சாஸ்வதமே.

இருவரும் சிரிப்பில் இணைந்தனர். இதயம் இளகியது. காற்றில் அசைந்தாடிய புல் அவர்களோடு சிரிப்பில் இணைந்தது. பூக்கள் கூட்டமாய் இணைந்து கை தட்டியது...

தலையை லேசாக உயர்த்தி, மேலே அண்ணாந்து வானை நோக்கும்போல், ”சுட்டெரித்தவன்” மறைய தொடங்கி ”குளிர்விப்பவன்” வானில் லேசாய் எட்டிப் பார்க்க, அங்கே மெதுமெதுவாய் குளிர் படர தொடங்கியது.

(ஆர்.கோபி / லாரன்ஸ்)

Friday, November 20, 2009

வாழ்க்கை புத்தகம்.... போதிப்பதென்ன??


நம் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத எவ்வளவோ விஷயங்களை நமக்கு நல்ல பல புத்தகங்கள் போதித்தது, போதித்துக்கொண்டு இருக்கிறது... வாழ்வில் நல்ல புத்தங்களுடன் அறிமுகமானோர், அதை ஆழ்ந்து படித்து, சரியாக உள்வாங்குதல் மூலம், வாழ்க்கையை பற்றிய ஒரு தெளிவு பெறுவது உறுதி... அவ்வாறு வாழ்வை பற்றி தெளிவு பெற்றோர், பல வெற்றிகளை தனதே ஆக்கிக்கொண்டதையும் நாம் முன்னாளில் பார்த்தோம், இந்நாளில் பார்த்து கொண்டிருக்கிறோம்.

இங்கே நாம் பார்க்கப்போகும் இந்த புத்தகம் நமக்கு நம் வாழ்க்கையையே போதிக்கிறது... வாருங்கள் நண்பர்களே, வாழ்க்கையை சிறிது வாசிப்போம்... சுவாசிப்போம்...

Health:

1. Drink plenty of water
2. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a beggar
3. Eat more foods that grow on trees and plants, and eat less food that is manufactured in plants
4. Live with the 3 E's -- Energy, Enthusiasm, and Empathy
5. Make time for prayer
6. Play more games
7. Read more books than you did in 2008
8. Sit in silence for at least 10 minutes each day
9. Sleep for 7 hours
10. Take a 10-30 minutes walk every day ---- and while you walk, smile

Personality:

11. Don't compare your life to others'. You have no idea what their journey is all about.
12. Don't have negative thoughts or things you cannot control. Instead invest your energy in the positive present moment.
13. Don't over do ; keep your limits
14. Don't take yourself so seriously ; no one else does
15. Don't waste your precious energy on gossip
16. Dream more while you are awake
17. Envy is a waste of time. You already have all you need.
18. Forget issues of the past. Don't remind your partner with his/her mistakes of the past. That will ruin your present happiness..
19. Life is too short to waste time hating anyone. Don't hate others.
20. Make peace with your past so it won't spoil the present
21. No one is in charge of your happiness except you
22. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
23. Smile and laugh more
24. You don't have to win every argument. Agree to disagree.

Community:

25. Call your family often
26. Each day give something good to others
27. Forgive everyone for everything
28. Spend time with people over the age of 70 & under the age of 6
29. Try to make at least three people smile each day
30. What other people think of you is none of your business
31. Your job won't take care of you when you are sick. Your family and friends will.. Stay in touch.

Life:

32. Do the right things
33. Get rid of anything that isn't useful, beautiful or joyful
34. GOD heals everything
35. However good or bad a situation is, it will change
36.. No matter how you feel, get up, dress up and show up
37. The best is yet to come
38. When you awake alive in the morning, thank GOD for it
39. Your Inner most is always happy. So, be happy.

ஈ-மெயிலில் இந்த அற்புத விஷயத்தை பகிர்ந்த தோழமைக்கு என் மனமார்ந்த நன்றி.....

Tuesday, November 17, 2009

SELF-CONFIDENCE (ABSOLUTELY UNBELIEVABLE)

வெகு நாட்களுக்கு முன் எனக்கு ஈ‍மெயிலில் வந்த இந்த விஷயத்தை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி..


தன்னம்பிக்கை என்றால் என்ன என்று இந்த பதிவை படித்து, பார்த்தால் தெரியும்...

பதிவை படியுங்கள்... முடிக்கு முன்னர் உங்கள் தன்னம்பிக்கையின் அளவு சிறிதளவேனும் உயர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை...

இந்த அளவு தன்னம்பிக்கை வாழ்வில் இருந்தால், நாம் எதையும் சாதிக்கலாம் என்பது உண்மை....

************
See a sort of inexplicable enthusiasm, firm confidence and indomitable tenacity in his face?!! Marvelous?!! !!!!!!!!

For people who make themselves in distress because of futile, frivolous and trivial reasons? Lets s ee him and l earn myriad lessons from him?!!

Miracle man walks again
Monday, July 9, 2007.

He survived against all the odds; now Peng Shulin has astounded doctors by learning to walk again.

When his body was cut in two by a lorry in 1995, it was little short of a medical miracle that he lived.

It took a team of more than 20 doctors to save his life.

Skin was grafted from his head to seal his torso? but the legless Mr Peng was left only 78cm (2ft 6in) tall.

Bedridden for years, doctors in China had little hope that he would ever be able to live anything like a normal life again.

But recently, he began exercising his arms, building up the strength to carry out everyday chores such as washing his face and brushing his teeth.

Doctors at the China Rehabilitation Research Centre in Beijing found out about Mr Peng's plight late last year and devised a plan to get him up walking again.
They came up with an ingenious way to allow him to walk on his own, creating a sophisticated egg cup-like casing to hold his body with two bionic legs attached to it.

He has been taking his first steps around the centre with the aid of his specially adapted legs and a resized walking frame.

Mr Peng, who has to learn how to walk again, is said to be delighted with the device.

Wowwwwww..... What a Self-confidence …!!!! Great

(இந்த ஈ-‍மெயிலை எனக்கு அனுப்பிய நண்பர் விஜய் அவர்களுக்கு என் நன்றி......)

Friday, November 13, 2009

ஈ‍-மெயில் டெர்ர‌ர் (ப‌டிச்சாலே ஒத‌றுதுல்ல‌...)


This has got to be one of the most clever E -mails I've received in the recent times.
Someone out there either has too much spare time or is deadly at Scrabble. (Wait till you see the last one)!

DILIP VENGSARKAR

When you rearrange the letters:

SPARKLING DRIVE

********

PRINCESS DIANA

When you rearrange the letters:

END IS A CAR SPIN

*******

MONICA LEWINSKY

When you rearrange the letters:

NICE SILKY WOMAN

********

DORMITORY

When you rearrange the letters:

DIRTY ROOM

*******

ASTRONOMER

When you rearrange the letters:

MOON STARER

*******

DESPERATION

When you rearrange the letters:

A ROPE ENDS IT

********

THE EYES

When you rearrange the letters:

THEY SEE

*********

A DECIMAL POINT

When you rearrange the letters:

IM A DOT IN PLACE

...

...

...

...

...

...
AND FOR THE GRAND FINALE:
MOTHER-IN-LAW:
When you rearrange the letters:

..

..

..

..

..


WOMAN HITLER
(என் குறிப்பு : என‌க்கு வந்த‌ ஈ‍-மெயில் அப்ப‌டியே ப‌திவேற்றம் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து... இதில், அடிஷனலாக‌ எந்த‌ உள்குத்தும் சேர்க்க‌‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தை "ஜோக்கிரி" நிர்வாக‌ம் தெரிவித்து கொள்கிற‌து)

Friday, November 6, 2009

ஜெய் ஹோ - புத்தகத்திற்கான என் விமர்சனம்



எல்லா புகழும் இறைவனுக்கே...

சொக்கன் அவர்கள் எழுதிய " ஜெய் ஹோ" என்ற புத்தகம் தோழர் ஹரன் பிரசன்னா மூலம் இலவசமாக கூரியரில் கிடைக்க பெற்றேன்.
கண்டிப்பாக Blogger- ஆக இருக்க வேண்டும்; புத்தகத்தின் விமர்சனம் தமது blog-ல் எழுத வேண்டும், அதுவும் புத்தகம் கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் போன்ற கண்டிஷன்களுடன் 20 புத்தகங்கள் பெயர்கள் தந்திருந்தனர். அதில் நான் "ஜெய் ஹோ" என்ற புத்த‌க‌த்தை தேர்ந்தெடுத்து, சென்னை அட்ரஸில் பெற்றுக்கொண்டு, நண்பர் மூலம் துபாய்க்கு வரவழைத்து படித்தேன்..

சொக்கன் அவர்கள் இந்த புத்தகத்தில் ஒரு புதிய உத்தியை கையாண்டுள்ளார்... அதாவது, அத்தியாயங்களின் தொடக்கம் எல்லாம் மெட்டு போடு, சின்ன சின்ன ஆசை, என ரஹ்மான் பட பாடல்களின் ஆரம்ப வரிகளையே தலைப்பாக வைத்துள்ளார் !!

புத்தகம் ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிய விழாவிலிருந்து தொடங்கி, அங்கிருந்து ஃப்ளாஷ்பேக்கில் விரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தந்தை திரு.சேகர் அவர்களை பற்றி மிக விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தாத்தா ஒரு பாகவதர்.!! தந்தையும் ஒரு சிறந்த இசை அமைப்பாளரே. நிறைய மலையாள படங்களுக்கு இசையமைத்தவர்.. ஆகவே ஏ.ஆர்.ரஹ்மானும் இசை மீது ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். இசை குடும்பம் என்று சொல்லலாம்... ஏனெனில், அவருக்கு பின், அவரின் சகோதரி ஏ.ஆர்.ரஹைனா மற்றும் ஜி.வி.பிரகாஷ் போன்றோரும் இசையமைப்பாளர்களாகி விட்டார்களே...

மிக மிக சிறு வயதிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி இரு ஆஸ்கார் வாங்கினார் என பார்ப்போம்...

4 வயதிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் நன்றாக ஹார்மோனியம் வாசித்து இருக்கிறார்.

9 வயதில் சினிமாவில் ஒரு பாடலுக்கு மெட்டு போட்டிருக்கிறார் !!

11 வயதில் அவரின் தந்தை இறந்து விட, அந்த வயதில் இருந்தே, வீட்டை காப்பாற்றும் பொறுப்பு வந்து விடுகிறது.. தனியாளாக‌ இருந்து தாய் மற்றும் 3 சகோதரிகளை காப்பாற்றி இருக்கிறார் !!
25 வயது ஆகும்போதே ரோஜா படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.

பின்னாளில், மிக மிக கடுமையாக உழைத்து இப்போது இந்த ஆஸ்கர் விருது வாங்கும் வரை வந்திருக்கிறார். ரஹ்மான் ரோஜா படத்திற்கு இசை அமைத்த பின், பெரிய அளவில் புகழ் பெற்றாலும், தென்னிந்திய மற்றும் வட இந்திய படங்களிலேயே சுற்றி கொண்டிருக்காமல், மேலும் தன் சாம்ராஜ்ஜியத்தை விரிவடைய எடுத்துக்கொண்ட முயற்சிகளே அவரை ஆஸ்கர் அளவுக்கு உயர்த்தியது என்றால் அது மிகையல்ல...

அடுத்தவர்கள் இசையில் என்ன செய்கிறார்கள் என்று கூர்ந்து பார்ப்பதை விடுத்து, தன் இசையில், தான் என்னென்ன புதுமைகளை செய்யலாம் என்பதில் கவனம் செலுத்தியதே அவரின் இசைக்கு தனித்துவம் தந்தது என்ப‌து உண்மை...

முன்னாளில் இசைக்குழு போன்ற விஷயங்களில் பணத்தேவைக்காக பணிபுரிந்தாலும், பின்னாளில் ஜிங்கிள்ஸ் என்றழைக்கப்படும் விளம்பரப்படங்களுக்கு இசையமைக்கும் காலகட்டத்திலேயே தன் தனித்துவத்தை இசையில் படைத்தார் என்பதை சொக்கனின் விவரிப்பில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது...

இசைஞானி இளையராஜா அவர்களிடம் கீ போர்ட் வாசிக்கும் காலகட்டத்தில், கார் ஓட்டவும் கற்றுக்கொண்டதை குறிப்பிட்டுள்ள சொக்கன், அதற்கான காரணத்தை சொல்லியபோது, படிக்கும் நமக்கு "பகீர்".......
தமிழின் முண்ணனியில் இருந்த பல டைரக்டர்கள் ஒரே நேரத்தில் இளையராஜாவின் இசையில் இருந்து மாறி ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை இசையமைக்க செய்தனர்... உதாரணமாக, மணிரத்னம், கே.பாலசந்தர், பாரதிராஜா ... இதுவும் ஏ.ஆர்.ரஹ்மான் முண்ணனி இசையமைப்பாளராக உயர வழிவகுத்தது...

"என் முன் இருந்த இரு பாதைகளில் ஒரு பாதை அன்பு, மற்றொன்று வெறுப்பு. அதில் நான் அன்பை தேர்வு செய்தேன். அதனாலேயே இப்போது உங்கள் முன் நிற்கிறேன்". இது ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் ஆஸ்கர் மேடையில் சொன்னது...

தமிழில் நிறைய இசையமைத்திருந்தாலும், இங்கே அந்த கிரெடிட் நடிக்கும் நடிகர்களுக்கே போய் சேர்ந்து விடுகிறது... அதற்கு சரியான உதாரணம், தமிழில் நெடு நாட்களுக்கு பிறகு அவரின் மிகப்பெரிய ஹிட் ஆல்பமான "சிவாஜி"...

தற்போது தமிழின் / இந்தியாவின் மிகப்பெரிய படைப்பான "எந்திரன்" படத்திற்கு இசையமைத்து வருகிறார்... இந்த இசையும் உலகளவில் பெயர் பெறும் என்று என் உள்மனது சொல்கிறது... கூடவே அவர் இசையமைக்கும் மற்றொரு படைப்பான "சுல்தான் தி வாரியர்"... இதுவும், இந்திய சினிமாவின் முதல் அனிமேஷன் படம் என்ற முறையில் சிறப்பு பெறுகிறது... இந்த படங்களில் ஏ.ஆர்.ர‌ஹ்மானின் இசை ப‌ட்டையை கிள‌ப்ப‌போகிற‌து...

ஏ.ஆர்.ரஹ்மான் மேலும் பல சிறப்பான் இசைப்படைப்புகளை தரவேண்டும் என்பதே இசை விரும்பிகளின் அவா... குறிப்பாக தமிழில்...அதை அவர் செவ்வனே நிறைவேற்றுவார் என்று நம்புவோம்...

முதன் முதலாய் என்னை ஒரு வித்தியாசமான கட்டுரை எழுத வைத்த கிழக்கு பதிப்பகத்திற்கும், சொக்கன் மற்றும் ஹரன் பிரசன்னாவிற்கும் என் நன்றிகள்.

ஜெய் ஹோ....

Monday, October 19, 2009

உயிரின் உயிரே...உயிரின் உயிரே


ஏங்க.... ஏன் இவ்ளோ லேட்..... இன்னிக்கும் அந்த உபன்யாசம்தான் போயிட்டு வரீங்களா? உங்களுக்கு இது எப்படித்தான் அலுக்காம இருக்கோ? என்றாள் கோமதி.......தன் மூக்கு கண்ணாடியை கழற்றிக்கொண்டே....

கோமதி... இப்படி இந்த அழுகாச்சி சீரியல நாள் முழுக்க உட்கார்ந்து பாக்கறத விட, நான் இப்போ கேட்டுட்டு வந்த உபன்யாசம் எவ்வளவோ மேல்.... சின்ன வயசுல இதெல்லாம் கேட்டு இருந்தா, நான் வாழ்க்கைல இன்னும் கூட கொஞ்சம் நல்லவனா இருந்திருப்பேனோ என்னவோ என்றார் ராகவன்...
இப்போ மட்டும் என்னங்க, நீங்க எங்க மேல காட்டுற அன்பு மாதிரி எல்லாரும் அவங்க அவங்க குடும்பத்து மேல காட்ட ஆரம்பிச்சாங்கன்னா, இந்த உலகத்துல, சண்டை, சச்சரவு எதுவுமே வராதுங்க....

அதுவும், உங்க செல்ல மகளுக்கு ரெட்டை குழந்தை பொறந்து இருக்குன்னு கேள்விப்பட்டதில் இருந்து, அவங்கள பார்க்க கனடாவுக்கு எப்போ போறோம், எப்போ போறோம்னு நீங்க ஒரு நாளைக்கு பத்து, இருபது தடவையாவது கேட்டுட்டே இருக்கீங்க...
நான் கூட அப்படியே, நியூ யார்க்-ல இருக்கற நம்ம பையனையும் பாத்துட்டு வந்துடலாம்னு ஒரு ப்ளான் போட சொன்னேன். ரெண்டு ஊரையும் பார்த்துடலாம், ரெண்டு பசங்களையும் பாத்தா மாதிரி ஆச்சு... அப்படியே, பேர குழந்தைகளையும் கொஞ்ச நாள் கொஞ்சிட்டு வரலாம், என்ன சொல்றீங்க என்றாள்.
அது வந்து கோமதி, நம்ம பொண்ணு, மாப்பிள்ளை சொக்க தங்கம்.... அவங்கள பாக்கற சாக்குல அப்படியே பேர பசங்களையும் பாத்துடலாம். ஆனா, நம்ம மருமகளுக்கு அவ்வளவு ஒண்ணும், நம்ம பேர்ல ஒரு மரியாதையோ, பாசமோ இல்லையே, போன தடவ இங்க வந்தப்போ, நம்ம கூட எவ்ளோ சண்டை போட்டா?, அதனாலதான் அங்க ஏன் போகணும்னு யோசிக்கறேன் என்றார் ராகவன்...

இத பாருங்க... குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க..... நாம ஒண்ணும் அவங்கள பாக்கறதுக்காக அவ்ளோ தூரம் போகல.... கனடா வரைக்கும் போறோமே, இன்னொரு 550 கிலோமீட்டர் போனா, அப்படியே பையன், மருமகள், பேர பசங்கள பாத்துட்டு வருவோமேன்னு சொல்றேன்.... நல்லா, யோசிச்சு ஒரு முடிவு சொல்லுங்க... நீங்க எது சொன்னாலும் எனக்கு ஓகேதான் என்றாள் கோமதி...
நான் எவ்ளோ சொன்னாலும், நீ கேக்க போறது இல்ல கோமதி... அதுவும் இல்லாம எனக்கு நீ, உனக்கு நான்னு ஆனதுக்கப்புறம், உன்னோட சந்தோஷம்தான் என் சந்தோஷம்... சரி, நீ சொல்ற மாதிரியே ஒரு டூர் போடுவோம், பையன், பொண்ணு, பேர பசங்க எல்லாரையும் பாத்துட்டு வந்துடுவோம்...ஓகேவா என்றார் ராகவன்..... கோமதி முகத்தில் பொங்கிய மகிழ்ச்சியை ரசித்தவாறு.....

பிரமாதம், வெல்டன் என்ற குரலுடன், கை தட்டிக்கொண்டே கோல்டு ஃப்ரேம் போட்ட தன் மூக்கு கண்ணாடியை கழற்றியபடி, மேகா.... வயது 55, அந்த பள்ளியின் பிரின்சிபால்...
மேடையேறி வந்து, மைக் பிடித்து சொன்னார்......
இந்த வருட பள்ளி ஆண்டுவிழாவின் "சிறந்த இருவர் நடிப்பு போட்டி"யில் 8-வது வகுப்பில் படிக்கும் ராகேஷ் மற்றும் ஷீதல் ஆகிய இருவரும் ராகவன் தாத்தா, கோமதி பாட்டியாகவே வாழ்ந்து காட்டி விட்டார்கள்.... அவர்களின் நடிப்பும் படு தத்ரூபமாக இருந்தது.
அவர்களை போலவே உலகில் உள்ள எல்லா தம்பதியரும் ஒற்றுமையுடனும், அன்னியோன்யமாக வாழ்ந்து விட்டால், வாழ்க்கையில் சண்டை, சச்சரவு என்பதற்கான பேச்சே இல்லை, மற்ற பல குடும்ப பிரச்சனைகளுக்கும் வழியே இல்லை என்றார் பிரின்ஸிபால் மேகா.
ஆகவே இந்த வருடத்தின் "சிறந்த இருவர் நடிப்பு போட்டி"க்கான விருதை அவர்களுக்கே வழங்குகிறேன் என்று பிரின்ஸிபால் மேகா சொன்ன போது, கை தட்டலால் அரங்கே அதிர்ந்தது....

Monday, October 12, 2009

வெல்டன் வெங்கி

இந்த வருடத்தின் நோபல் பரிசு. வெங்கிடராமன் ராதாகிருஷ்ணன் அவர்களின் வேதியியல் ஆராய்ச்சிக்காக என ஊடகங்கள், அரசு பாராட்டும்போது தான் நமக்கு தெரிகிறது.

சொல்லவே இல்ல, சொல்லாமலே இப்படி ஒரு தேர்வு, போட்டி முடிவு எல்லாமா. !!! சத்தம் இல்லாம நடக்குதே. சரி தெரிஞ்சுகிட்டதுக்கு அப்புறமாவது என்ன ஏதுன்னு கொஞ்சம் பார்ப்போமே, என யோசித்ததில் எழுதியதுதான் இந்த பதிவு.

1900 வருடம் தொடங்கப்பட்ட சர்வதேச அளவிலான இலக்கியம், அறிவியல், சமூகம் சார்ந்த துறைகளுக்கு அளிக்கப்படும் மிக உயரிய பரிசு, அடையாளம். படத்தில் உள்ள ஆல்பிரட் நோபலுக்கு ஒரு சல்யூட், இப்படி ஒரு காரணத்திற்காக தன் சொத்தை எழுதி வைத்ததற்கு.

இந்திய சரித்திரம் சிலிர்க்கும் நாள். ஈன்ற பொழுதினும் பிரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்டாள் நம் இந்திய தாய். நம்ம வெங்கிடராமன் ராதாகிருஷ்ணன் நோபல் பரிசு வாங்கிய ஒன்பதாவது இந்தியர். ம‌ற்ற எட்டு பேர் யாரென்றும் பார்த்து விடுவோம்...

1. Rabindranath Tagore (1861 - 1941) Nobel Prize for Literature (1913)
2. Sir C.V. Raman (Chandrasekhara Venkata Raman)(1888 - 1970)Nobel Prize for Physics (1930)
3. Dr. Hargobind KhoranaNobel Prize for Medicine and Physiology (1968)
4. Dr. Subramaniam ChandrasekarNobel Prize for physics (1983)
5. Mother Teresa (1910 - 1997)Nobel Prize for peace (1979)
6. Dr. Amartya SenNobel Prize for Economics (1998)
7. Other Nobel Prize Laureates related to IndiaRudyard Kipling (1865-1936)
8. V.S. Naipaul (1932- )

ரிபோசோம் தான் உடலில் புரோட்டின் தயாரிக்குது. தாவர, விலங்கிய மனித உயிரையும் சேர்த்து தான்.எல்லோருக்கும் ரிபோசோம் தான். அதனுடைய தன்மையை பரிமாணத்தை எக்ஸ் ரே மூலமாய் கலாய்ச்சு, படம் போட்ட்து தான் இவர் சாதனை. காய்ச்சல், ஜலதோஷம் எனும் உபாதைக்காக நாம் சாப்பிடும், ஆண்டிபயாடிக் எப்படி இதனுடன் ஒட்டிக்கொள்கிறது, உறவாடுகிறது என்பதை விளக்கும் மூலக்கூறும் கண்டுபிடித்ததால் இந்த பரிசு.

இதில் ஆச்சர்யம் உலகில் மூவர் இந்த ஒரே ஆராய்ச்சியில் தனித்தனியாய் ஈடுபட்டு, ஒரே எக்ஸ் ரேயின் மூலமாய் தீர்வும் கண்டுள்ளனர். எனவே எல்லோருக்கும் பரிசு பணம் பங்கிட்டு கொடுக்கப் பட்டு உள்ளது. நம்மாளின் பங்கு ரூ.7.3 கோடி (இது நம்ம வைகைப்புயல் வடிவேலு சம்பாதிப்பதை விட குறைவுங்கோ...).

இது மனிதனை மனித உயிரை இன்னும் கொஞ்சம் நொண்டி அடிக்க வைக்கும். ஊசலாடும் உயிரை இன்னும் கொஞ்சம் ஊதி விடும்.

சிதம்பரம் பெற்றுத் தந்த சீரிய சிந்தனையாளருக்கு வாழ்த்துக்கள். இது டிரைலர் தான் இன்னும் என் ஆராய்ச்சி முடிவு பெறட்டும் மெயின் பிக்சர் இன்னும் இருக்கே என்ற அவரது தன்னம்பிக்கையும் தன்னடக்கத்தையும் வியந்து பாராட்டுகிறேன்.

இதை செய்தியாய் வெளியிடும் சர்வதேச பத்திரிக்கை இந்த பதிவை வேறு திசைக்கு கூட்டிச் செல்கிறது.

இந்தியனாய் பிறந்து இன்று அமெரிக்கர் ஆகி விட்டாரே நம்ம வெங்கி. சர்வதேச பத்திரிக்கை எல்லாம் அவரை அமெரிக்கர் என்று தானே கொண்டாடுகிறது.

சிதம்பரத்து மண்ணும் தில்லை அம்பலமும் அன்னியமாகி விட்டதே. சட்டென இடைமறித்து ஒரு சிந்தனை. இல்லை இதில் இந்தியன் எனும் அடையாளம் தேடுவது தவறோ!!

1979ல் அன்னை தெரசாவின் நோபல் பரிசை, நமது என்று கொண்டாடிய மனது, அவர் வந்தடைந்த பூமிதானே நம் இந்தியா என பார்க்க மறந்ததே.

அன்று பார்த்தது மனிதத்தை தானே. மனித நேயம் தானே.

பின்குறிப்பு : ஒண்ணுக்கும் உதவாத "அந்த விஷயங்களுக்கான மெனு கார்ட்" போன்ற ரேட் மேட்டர வரிஞ்சு கட்டிக்கொண்டு எழுதும் பல, சில ஊடகங்கள், வலைப்பதிவர்கள் "வெங்கி"யின் இந்த "நோபல்" சாதனை விஷயத்தை மறந்துவிட்டதே என்பது தான் ஆற்றாமை.

Friday, October 9, 2009

மொக்கையிலும் மொக்கை...இது மெகா மொக்கைடா யப்பா...தாங்க முடியலேடா சாமி...








உலக மகா மொக்கைஸ்...பெரிய லிஸ்ட்டட்ட்ட்ட்ட்ட்ட்......
எனக்கு ஒரு சந்தேகம்...

நடனக் கலைன்னா டான்ஸ் ஆடறது.

ஓவியக் கலைன்னா படம் வரையறது.

அப்ப தவக்களைன்னா?

- நடு ரோட்டில் புரளாமல் படுத்துக் கொண்டு யோசிப்போர் சங்கம்

வடி கட்டின கஞ்சத்தனம்

சர்தாரின் வீடு தீப்பிடித்து விட்டது.

உடனே சர்தார் தீயணைப்பு நிலையத்துக்கு மிஸ்டு கால் கொடுத்தார்.

இன்றைய தத்துவம் 2

என்னதான் காலேஜ் பஸ் டெய்லி காலேஜ் போனாலும்,
அதால,
டிகிரி வாங்க முடியாது!!!

யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்

யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்டா வர வழிகள்

நாலு மணிக்கு எந்திரிச்சு, பிரஷ் பண்ணிட்டு, குளுரா இருந்தாலும் குளிக்கணும். அஞ்சு மணியாய்டும். அம்மா, அப்பா, அக்கா யாரையாவது எழுப்புனா காபியோ டீயோ போட்டுத் தருவாங்க. டிவி போடுங்க. இளையராஜாவோட சாமி பாட்டு வரும். மனச ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. ஆறு மணிக்கு கிளம்புங்க. ஆறரைக்கு யூனிவர்ஸிட்டி போயிரலாம். நீங்கதான் யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்!!!

குங்குமம்

குங்குமம் - இந்த வாரம்
சந்தனம் - அடுத்த வாரம்!!!

மொழி'பெயர்ப்பு'

ICICI என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தெரியலையா?!?!

நான் பார்க்க நான் பார்க்க நான்

உங்கள் பொது(மொழி) அறிவை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க!!!

நாட்ட்ட்ட்டாமை....

பசுபதி : ஐயா...
நாட்டாமை : என்றா பசுபதி?
பசுபதி : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13....
நாட்டாமை : அட என்றா??
பசுபதி : அதான் என்றோம்ல!!
நாட்டாமை : ?!?!

டப்பிங் படங்கள்

உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.

திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).
செவ்வாய் : எட்டுக்கால் ஏழுமலை (Spider Men)
புதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)
வியாழன் : கருவாப் பசங்க (Men in Black)
வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)
சர்தார்

ஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?
சர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன்.
ஒருவன் : தப்பு! வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா, இரண்டாவது இட்லி சாப்பிடும்பொழுது, அது வெறும் வயிறா இருக்காது!
சர்தார் : அட, சூப்பரா இருக்கே! நான் போய் என் ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப் போறேன்.

சர்தார் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?
நண்பர் : என்னால பத்து இட்லி சாப்பிட முடியும்.
சர்தார் : சே, போடா! ஆறுன்னு சொல்லியிருந்தா சூப்பரா ஒரு மேட்டர் சொல்லியிருப்பேன்.

சர்வே

தமிழ் நாட்டு பெண்களிடம் சமீபத்தில் 'நீங்கள் யோசிப்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?' என்று ஒரு சர்வே நடத்தப்பட்டது. அந்த சர்வேயின் முடிவுகள் கீழே.

7.53% - ஆம்.
0% - இல்லை.
92.47% - நாங்கள் அந்தளவுக்கு கொடுத்து வைத்தவர்களல்ல
மீண்டும் சர்தார்

கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.

சர்தார் : ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.

மீண்டும் மீண்டும் சர்தார்

ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?
சர்தார் : எனக்கு தெரியாது சார்.
ஆசிரியர் : மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார்.
சரி, அடுத்த கேள்வி!
1873ல் என்ன நடந்தது?
சர்தார் : காந்திஜிக்கு நாலு வயசு சார்!

மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் சர்தார்ஜி

பாபு : அந்த துணி கடையில நம்ம சர்தார்ஜிய போட்டு அடிக்கிறாங்க?

கோபு : ஏண்டா அவ‌னை போட்டு அடிக்க‌றாங்க‌... அவ‌ன் ந‌ல்ல‌வ‌ன் ஆச்சே..

பாபு : 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும், ஒரு வாட்ச் ஃப்ரீன்னு போர்ட்ல பார்த்துட்டு, அந்த கடையில போய் 1000 ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு வாட்ச் கேட்டாராம்!!!

குறுக்கே

ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
நண்பன் : கார் ஓட்டி பாரேன்.

இம்சை அரசன் 24ம் புலிகேசி

அமைச்சர் : மன்னா! போருக்கு தயாராக சொல்லி பக்கத்து நாட்டு அரசன் ஓலை அனுப்பியுள்ளான்.

இ.அ.24.பு : ஐயகோ! இப்பொழுது என்ன செய்வது? ஆங்! 'ஓலை sending failed' என்று திருப்பியனுப்பிவிடு.

இது யார் சொத்து?

போலீஸ் : ஏண்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேறியா சென்னை வரைக்கும் வந்தே?
சர்தார் : சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. நான் அது கவர்மெண்ட் ரயில்ன்னு நினைச்சுதான் ஏறினேன்
(எங்கோ, எப்போதோ, யாரோ எனக்கு மெயிலில் அனுப்பியது....)

Saturday, October 3, 2009

பொன்மொழிகள்...(எங்கோ, எப்போதோ ப‌டித்த‌து....)









வாழ்வில் நாம் நிறைய "பொன்மொழி"களை கேட்டு இருக்கிறோம்... படித்திருக்கிறோம்...

அவை பெற்றோரிடமோ...ஆன்மீக பெரியவர்கள், கற்றறிந்தோர், சான்றோர், பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள்...இப்படி யாரிடம் இருந்தும் வந்ததாக இருக்கலாம்...அல்ல‌து ஏதாவ‌து புத்த‌க‌த்தில் வந்திருக்க‌லாம்...

அப்படிப்பட்ட சில பொன்மொழிகளை நாம் இந்த பதிவில் பார்ப்போம்...

இவற்றை நாம் படிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாது, அவற்றை வாழ்வில், பின்பற்றவும் செய்தோமானால், வாழ்வின் பல நலங்களையும், வளங்களையும் நாம் அடைவது உறுதி...

Don't compare yourself with any one in this world. If you compare, you are insulting yourself.

Don't compare your wife / husband with any one in this world. If you compare, you are not fit to be their life partner.

Don't complain about others; change yourself if you want peace.

It is easier to protect your feet with slippers than to cover the earth with carpet.

No one can go back and change a bad beginning, but anyone can start now and create a successful ending.

Easy is to judge the mistakes of others. Difficult is to recognize our own mistakes.

If a problem can be solved, no need to worry about it. If a problem cannot be solved what is the use of worrying?

Nothing can be changed by "Changing the Face". But everything can be changed by "Facing the Change".

Be bold when you loose and be calm when you win.

No one will manufacture a lock without a key. Similarly god won't give problems without solutions.

Every successful person has a painful story. Every painful story has a successful ending. Accept the pain and get ready for success.

Heated gold becomes ornament. Beaten copper becomes wires. Depleted stone becomes statue. So the more pain your get in life you become more valuable.

Mistakes are painful when they happen. But years later collection of mistakes is called experience, which leads to success.

Life laughs at you when you are unhappy...
Life smiles at you when you are happy...
Life salutes you when you make others happy...

If you miss an opportunity don't fill the eyes with tears. It will hide another better opportunity in front of you.

Thursday, October 1, 2009

இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் (02.10.09)






அகிம்சையை போதித்த அண்ணலே
அவனியில் நாங்கள் படுவது இன்னலே

வெள்ளையரை விரட்டி வாங்கிய சுதந்திரம் அன்றுகொள்ளையரிடம் சிக்கி தவிக்கிறோம் இன்று

அன்று நீ சுற்றினாய் அந்நிய‌ரை எதிர்த்து ராட்டை
இன்றோ அயோக்கிய‌ர்க‌ள் பணம் கொடுத்து ஓட்டு வேட்டை

உனக்கு மரியாதை செய்யும் விதமாய் டாஸ்மாக் விடுமுறை இன்றுதெரிந்தே வாங்கி வைத்தார்கள் டாஸ்மாக் ஒரு நாள் முன்பு

அஹிம்சையை போதித்த உனக்கு
மாலை யார் முதலில் போடுவது என்றெழுந்த சண்டை, கைகலப்பாகி உடைந்தது பல மண்டை

மண்டை உடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில்...

அப்போது வெடித்த வன்முறை
மூடப்பட்ட கடைகள்
பற்றி எரியும் பேருந்துகள்,
காலவரையற்ற மூடலில் பள்ளிகள்

உனக்காக ஒரு நாள் கூட அஹிம்சையை கடைப்பிடிக்கமுடியாத அயோக்கிய அரசியல்வாதிகள்
நீ இன்று இங்கு இருந்து இவையெல்லாம் கண்டால் உன் கைத்தடி கொண்டு, அவர்களின் மண்டையை உடைப்பாய் என்பது திண்ணம்...

ஆயுதங்களை புறக்கணித்து,
நம்மை அஹிம்சைக்கு அர்ப்பணிக்கும் நாளே அனைவருக்கும் உண்மையான காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்

இப்போதிருக்கும் நிலையில் அது எதுவும்
நடக்க வாய்ப்பே இல்லாமல்
ஊரெங்கும் திண்டாட்டம்...
இந்நிலை என்று மாறுமோ?
நம் ஊர் என்று திருந்துமோ?

வருடத்தின் ஒரு நாளில் அவரின் சிலைக்கு மாலை போடுவதை காட்டிலும், அன்னாரின் அஹிம்சை கொள்கையை வாழ்நாளில் கடைப்பிடிப்பதே அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை...

ஆகவே... அண்ணலை மதிப்போம்

அஹிம்சையை போற்றுவோம்...

ஜெய்ஹிந்த்...

நண்பர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்...

Sunday, September 27, 2009

அண்ணா விருது.... (இது நீங்கள் நினைப்பது போல் இல்லை...வித்தியாசமான விருது)






அண்ணா விருது.... (இது நீங்கள் நினைப்பது போல் இல்லை...வித்தியாசமான விருது)

(இது இந்த நேரத்திற்கான பதிவு அல்ல... இருந்தாலும், படித்து மகிழுங்களேன்...)

அன்பு உடன்பிறப்பே... இந்த அவனியில் நீ வாங்க முடியாதது துவரம்பருப்பே... போன்ற "ஜல்லி"யெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு எழுதப்பட்ட ஒரு வித்தியாசமான பதிவு இது...

ஆகவே, தலைப்பை பார்த்து விட்டு கழக கண்மணிகள், சமீபத்தில் நம்ம "தல" வாங்கின அந்த "அண்ணா விருது" பற்றிய பதிவோ என்று உள்ளே வந்து ஏமாற வேண்டாம் என்று எங்கள் சங்கத்தின் (தலைப்பு மாற்றி போட்டு ஏமாற்றுவோர் சங்கம்) சார்பாக கேட்டுக்கொள்கிறேன்...

இது... காலேஜ் படிக்கும் போது, திரிஷா, பிரியாமணி (தகரத்தில் உப்பு காகிதம் வைத்து தேய்த்தது போன்ற குரல் உடையவர்) போன்று அழகும், பி.சுசிலா போன்ற குயிலின் குரலும் கொண்ட (இப்படி அழகு, நல்ல குரல்வளம் ரெண்டும் சேர்ந்து இருக்கற பெண்களை பார்க்கறது ரொம்ப ரேர் இல்ல...) பசுங்கிளிகள், பாசப்பறவைகள் ("தல"யின் பாசப்பறவைகள் அல்ல...), உடன் வகுப்பில் அல்லது அதே காலேஜில் படிக்கும் நம்மை பார்த்து, மயக்கும் புன்னகையை அள்ளி தெளித்து, கையசைத்து அழைத்து, பின் நமக்கு கொடுக்கும் விருது(ரக்ஷா பந்தன்)...

இந்த விருதை இதுவரை சந்தோஷத்துடன் எந்த இளைஞனும் வாங்கியதாக சரித்திரம், பூகோளம், அறிவியல் இல்லை.....

நாம் அனைவரும், ஏதாவதொரு காலகட்டத்தில் இந்த சிறந்த "அண்ணா விருதை" வாங்காமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.... வாங்கிய அனைவரும் அழுமூஞ்சி "அண்ணாக்கள்" ஆனதையும் மறப்பதற்கில்லை...

இந்த பதிவின் மூலம், "அண்ணா விருது" வாங்கிய அனைவரும், ஒன்று கூடி வந்து கும்மியில் கலந்து கொண்டு, தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.....

அண்ணா விருது வாழ்க
இதை அள்ளி தந்த அழகு, தங்க மங்கையர்கள் வாழ்க
விருதை வாங்கி நொந்து போன கட்டிளம் காளைகள் வாழ்க.......

(பின் குறிப்பு : "அண்ணா விருது" வாங்கிய தங்க தம்பிகள், அழாமல் வந்து ஒருவருக்கொருவர் ஆறுதலும், தேறுதலும் சொல்லலாம்...என்று எங்கள் மற்றொரு சங்கத்தின் (தான் அழுதாலும், அழும் மற்றவர்களை தேற்றுவோர் சங்கம்)சார்பாக கூறிக்கொள்கிறேன்...

Friday, September 25, 2009

ப‌த்தினி....


மாலினி, நீ எனக்கு துரோகம் பண்ணுவேன்னு நான் கனவுல கூட நெனச்சு பாத்ததில்ல......என்று ஆவேசமாய் பாய்ந்து அவள் கழுத்தை பிடித்தான் வினோத்....

ஹக்..ஹ்ம்ம்..திக்கி திணறி..... நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க வினோத்.... நீங்க நெனைக்கற மாதிரி எதுவும் நடக்கல என்றாள் மாலினி.
இன்னும் என்ன நடக்கணும்.... அதான் இப்போ நானே நேர்ல பாத்துட்டேனே... இனிமேலும் நீ சொல்றத நம்பறதுக்கு நான் ஒண்ணும் முட்டாள் இல்லை.... நீயும் ஒன்னோட பாஸும் ஆபீசில தான் ஒண்ணா கூத்து அடிச்சீங்க....ஆனா, இப்போ நான் ஊருக்கு போயிருக்கேன்ற தைரியத்துல நம்ம பெட்ரூம்லையே நடக்குதே?

நான் டூர் போயிட்டு ஒரு நாள் முன்னாடியே வரலேன்னா, நீங்க பண்ற இந்த அராஜகம் எனக்கு தெரியாமலேயே போயிருக்கும்...என்றான் வினோத்....

சீ... உங்க விபரீத கற்பனையை கொஞ்சம் நிறுத்தறீங்களா?? என்னோட பாஸ் அஷோக் ஈஸ் ஜெம் ஆப் எ பர்சன். நான் உங்களோட காதல் மனைவி.... எங்க மேல இப்படி அபாண்டமா பழிபோடறதுக்கு ஒங்களுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ? என்று கண்ணீரோடு மாலினி சொன்னாள்.

சாயங்காலம் என்ன நடந்துதுன்னா, இன்னிக்கி ஆபீஸ்ல இருந்து கெளம்பும்போது என்னோட வண்டி ரிப்பேர் ஆயிடுச்சு..... நம்ம முருகன் மெக்கானிக் ஷெட்டுக்கு ஃபோன் பண்ணி, வண்டிய சர்வீஸீக்கு குடுத்துட்டு ஆட்டோல வீட்டுக்கு வர்றதா தான் ப்ளான்... அப்போதான், நான் ஆட்டோக்கு வெயிட் பண்றத பாத்துட்டு, அசோக் என்ன வீட்டுல டிராப் பண்றேன்ன்னு சொன்னார்.

சரி, இவ்ளோ தூரம் வந்தாரே, ஒரு காபி சாப்பிட்டு போங்கன்னு சொல்லி, நான்தான் அவர உள்ள கூட்டிட்டு வந்தேன்.... மொத மொதல்ல நம்ம வீட்டுக்கு வந்தவர், நம்ம கல்யாண ஆல்பம் பாக்கணும்னு சொன்னார்....

உடனே, பெட்ரூம் அலமாரில ஆல்பம் இருக்கறத காட்டறதுக்கு பெட்ரூம் வரைக்கும் வந்தேன்.....அவர் ஆல்பம் எடுத்தார்.... அத எடுத்துட்டு வெளில வரும்போது தான், நீங்க கரெக்டா வீட்டுக்குள்ள வந்தீங்க..... போதுமா, இதுதான் நடந்தது என்றாள் மாலினி.

சரிதான் நிறுத்துடி .... அழுதோ, சத்தம் போட்டோ ஒரு விஷயத்த சொன்னா நீ "பத்தினி" ஆயிடுவியா? உன்மேல எனக்கு ரொம்ப நாளாவே சந்தேகம் இருந்தது....

நெறைய பேரு என்கிட்டே கூட அரசால் புரசலா சொல்லி இருந்தாங்க. அப்போல்லாம் நான் நம்பல, இன்னிக்கு நானே நேர்ல பார்த்தப்போ, அது சரிதான்னு ஆயிடுச்சு......

இனிமே, இந்த வீட்டுல இல்ல, இந்த உலகத்துல இருக்கறதுக்கு கூட உனக்கு தகுதி இல்ல.... உன்ன போல பொண்ணுங்களுக்கு எல்லாம், இந்த தண்டனைதான் சரி, இன்னிக்கோட உன் கதைய முடிச்சுடறேன் என்றபடி பாய்ந்து அவள் கழுத்தை இறுக்கினான்.....

இவ்வளவு நேரம் அமைதியாக அங்கு நடந்தவற்றை அமைதியாக பார்த்து கொண்டிருந்த அசோக், பாய்ந்து வந்து, சார்... நான் சொல்றத கேளுங்க என்றவாறு வினோத்தின் கையை விலக்க முயற்சித்தான்.....

***********

"பத்தினி" - ஸ்பான்ஸர்ட் பை........... என்று விளம்பரதார்களின் பெயர்களை தொலைக்காட்சி கூவி கொண்டிருந்தது....

Sunday, September 20, 2009

கருப்பு தங்கம் பிறந்தநாள் / ஆயில் தோன்றிய கதை...


கருப்பு தங்கம் (கேப்டன் விஜயகாந்த் அல்ல...அவர் "சொக்கத்தங்கம்") என்பது ஆயிலுக்கு கொடுக்கப்பட்டுள்ள செல்ல பெயர் என்பது உங்களுக்கு தெரியுமா??

இன்று உலகமே ஆயில் என்ற அந்த மூன்றெழுத்து மந்திர வார்த்தையால் தான் ஓடுகிறது. இங்கு ஆயில் என்பதை வாகனங்கள் ஓட பயன்படும் எண்ணை (பெட்ரோல், டீசல்...) என்பதாக பொருள் கொள்க...

கருப்பு தங்கத்தின் நூற்றைம்பது வைர ஆண்டுகள்...இதோ உங்கள் பார்வைக்கு...

27 ஆகஸ்ட் 1859

"Colonel' Edwin Drake gathers oil using a pioneering drilling technique.

1870

Stanford Oil is founded by John D Rockfeller. The firm is later dismantled by the US Government - its fragments would become the oil giants Exxon, Mobil and Chevron.

1886

The automobile is invented by Gottileb Daimler and Karl Benz.

1901

Oil is discovered in Texas.

1907

Shell and Royal Dutch merge.

1908

The Anglo-persian Oil Company is created, later known as BP

1908

Compagnie franchise des Petroles forms, later became Total

1912

The first gasoline station in the US opens in Cincinnati.

1914

Oil discovered in Venezula.

1927

Oil is discovered in Kirkuk, Iraq.

1936

Search of Oil in the UAE begins.

1938

Mexico nationalises oil assets, creating the state-run giant, Permex.

1938

Oil is discovered in Saudi Arabia and Kuwait.

1951

Iran nationalises the Anglo-Iranian Oil Company. It is restored in 1953 after a US and British-backed coup.

1958

Oil is discovered in Abu Dhabi.

1960

OPEC is created, with Iran, Iraq, Kuwait, Saudi Arabia and Venezula as founding members. BTW, what is OPEC - ORGANIZATION OF PETROLEUM EXPORTING COUNTIRES.

1973

Arab members of OPEC announce an oil embargo in response to US support for Israel during Yom Kippur war. The embargo prompts brownouts in the US, long waits for gasoline for cars and a dramatic spike in oil prices.

1979

The Islamic Revolution in Iran prompts a renewed spike in oil prices, with barrel prices rising over $20.

1989

The Exxon Valdez spills millions of gallons of oil off the coast of Alaska. The spill has a devastating environmental impact.

1990

Oil Prices reach $40 a barrel ahead of the first Gulf War.

2008

In January, oil prices briefly touch the psychological marker of $100 a barrel amid violence in Nigeria, tension between the US and Venezula and a jittery stock market.

In July continued tensions in Nigeria and Iran, along with a weakened dollar push the price of oil to $147.27 a barrel in New York trading - an all-time high.

In December, the price of oil plummets to $32 a barrel as the global economic slowdown hits.

(Source : 7 DAYS issue dated 03rd September 2009)..

இந்த ஆயிலுக்கு மாற்றாக எரிபொருள் ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சி உலகெங்கும், அசுர வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது... யார் கண்டுபிடிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.. அப்படி, ஆயிலுக்கு ஒரு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டால், அது இந்த நூற்றாண்டின் மிக பெரிய கண்டுபிடிப்பாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை...

Tuesday, September 15, 2009

க.....கா....ப.....அ......பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

க.....கா....ப.....அ......பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

இந்தத் தொடரை என்னை எழுத அழைத்தது அருணா மேடம்.....


காதல் மனிதனுக்கு அவசியமா?

காதல் ....................அவசியம்தான்... காத‌ல் இல்லாத‌ வாழ்க்கை உப்பில்லாத‌ ப‌ண்ட‌ம் போல‌... வாழ்க்கை ந‌ம் முன் இருக்கும்...ஆனால், ருசிக்காது...

அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?

உல‌கினில் எதுவும் நிரந்த‌ர‌மில்லை என்று உணர்ந்த‌வ‌ர்க‌ள், அழகும் நிர‌ந்த‌ர‌மில்லை என்பார்க‌ள்...

பணம் அவசியமா?

ப‌ண‌ம்... க‌ண்டிப்பாக‌ ஒவ்வொருவ‌ர் வாழ்விலும் அவ‌சிய‌மான‌ ஒன்று... ஆனால், அதை தேடும் முய‌ற்சியில் வாழ்வை தொலைத்து விடக்கூடாது...அருள் இல்லார்க்கு இவ்வுல‌கு இல்லை... பொருள் இல்லாதார்க்கு எவ்வுல‌கும் இல்லை என்ப‌து வ‌ள்ளுவ‌ன் வாக்கு...

கடவுள் உண்டா?

க‌ட‌வுள் உண்டு என்ப‌தே கண்டறிந்த பெரிய, பெரிய‌ ஞானிக‌ளின் கூற்று.. நாமும் எப்போது இரை தேடிக்கொண்டேதான் இருக்கிறோம்... அத‌னூடே சிறிது இறையையும் தேடுவோம்... ஒரு நாள் க‌ண்டிப்பாக‌ அவ‌ன் இருப்ப‌தை உண‌ருவோம்... இதைப்ப‌ற்றி நான் "வாழ்க்கை" என்ற‌ ஒரு தொட‌ரில் விரிவாக‌ அல‌ச‌ இருக்கிறேன்..

அழகு,காதல்,பணம், கடவுள்?

இவைகளைப் பற்றிய உங்களின் நிலையென்ன? என்பதுதான் தொடரின் நோக்கம். இந்த தொடரின் விதிப்படி என்னை தொடர்ந்து ஐவரை இந்த தொடருக்கு அழைப்பது. இதோ அந்த ஐவரை அழைத்துவிடுகிறேன்!!!!

அருண் (குற‌ட்டை அர‌ங்க‌ம்)

லார‌ன்ஸ் (ப‌டுக்காளி)

பாச‌கி

அருண் (வால்பைய‌ன்)

செல்ல‌துரை (இத‌ய‌மே)

"தலை"வர்களே... ரவுண்டு கட்டி அடிக்க தயாராகுங்கள்...

Friday, September 11, 2009

"எந்திரன்" ரஜினிகாந்த் நேர்காணல், பரபரப்பு தகவல்கள்


சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரு அதிரடி நேர்காணல்..

இன்றைய நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அகில உலக புகழ் பெற்ற அதிரடி நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வணக்கம் கூறி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்..

கண்ணா... இது ரொம்ப ஜாஸ்தியா சொல்றீங்க... நான் பாட்டுக்கு "சுல்தான்", "எந்திரன்" அப்டின்னு சின்ன சின்ன படங்கள் பண்ணிட்டு ஓரமா போயிட்டு இருக்கேன்.. நீங்க என்ன ரொம்ப உயரத்துக்கு தூக்கி போகாதீங்க...பயமா இருக்கு...

சார்... நீங்கதான் இன்னிக்கு உலகத்துலயே ரொம்பவும் மதிக்கப்படற சூப்பர் ஸ்டார், உங்க முன்னாடி மத்தவங்க எல்லாம் வெறும் போர்...

கண்ணா... என்ன பத்தி புகழ்ச்சியா சொல்லணும்னா, என் முதுகுக்கு பின்னாடி போயி சொல்லு... திட்டறதுன்னா, நேர்ல சொல்லு... அதுதான் எனக்கு புடிக்கும்... ஹா...ஹா...

சரி சார்... இன்றைய அரசியல் பத்தி ஏதாவது கருத்து சொல்றீங்களா??

இப்போதான் சொன்னேன்... பாராட்டணும்னா பின்னால போய் சொல்லுன்னு... இந்த அரசியல் பத்தி இப்போ எங்கிட்ட எதுவும் கேக்காதீங்க... ஏன்னா, நாட்டுல இப்போ, அரசியல் நெலமை சரியில்ல..."எந்திரன்"ல நடிக்கறதால, அறிவியல் பத்தி கேளுங்க, சொல்றேன்...

சரி...அறிவியல் பத்தி சொல்லுங்க....

கண்ணா... அறிவியல் பத்தி பேசறதுக்கு நாட்டுல, நெறைய அறிவியல் அறிஞர்கள் இருக்காங்க... அவங்க கிட்ட கேளுங்க...அது பத்தி ஜாஸ்தி பேசறதுக்கு என்கிட்ட விஷயம் இல்ல... நான் நேத்து கண்டக்டர்... இன்று ஒரு சாதாரண நடிகன்... அதுவும், மேல இருக்கறவன் என்ன சொல்றானோ, அத செய்யற ஒரு மனிதன்... நாளை நான் யாருன்னு எனக்கே தெரியாது... என்ன ஓகேவா??...

அய்யோ... சார், இப்படின்னா அப்படிங்கறீங்க... அப்படின்னா, இப்படிங்கறீங்க...

ஹா...ஹா...ஹா...அதுதான் கண்ணா, நான் மொதல்லயே சொன்னேன்.. அப்டி, இப்டி எதுவும் நாம யோசிச்சு செய்யறது இல்ல... அதுவும் மேல இருக்கறவன் சொல்லி கீழ இருக்கற நாம செய்யறது தான்... யச்சச்ச கச்சச்ச.. கச்சச்ச யச்சச்ச... ஏதாவது புரிஞ்சுதா... புரியல இல்ல.... இதுதான் வாழ்க்கை... அந்தரத்தில் எதுவும் மந்திரமில்லை... நம் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை... இது எப்படி இருக்கு??

ஙே என்று முழித்தபடி நிருபர், அடுத்த கேள்விக்கு தயாராகிறார்... சார்.. "எந்திரன்" பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.... எல்லாரும் ஆசைப்படறாங்க...

கேக்கறதுதான் கேக்கறீங்க, ஏன் கொஞ்சம்னு கேக்கறீங்க... நெற்யனு கேளுங்க...

சரி சார்... நெறய சொல்லுங்க....

அந்த படத்த பத்தி நெறய சொல்லணும்னு எனக்கும் ஆசைதான்... ஆனா, ஒரு வேலை பாதியில இருக்கறப்போ, அதப்பத்தி கேக்கறதே தப்பு... அதனால.. "எந்திரன்" பத்தி நான் சொல்றத விட டைரக்டர் ஷங்கர் சொல்றதுதான் சரியா இருக்கும்... ஒரே ஒரு விஷ‌ய‌ம் சொல்றேன்... தீபாவ‌ளி ரிலீஸ் ஆகுது......

என்ன‌...?? தீபாவ‌ளி ரிலீஸா?? ப‌ட‌ம் முடிஞ்சுடுச்சா??
ஆமாம்... ப‌ட‌ம் இல்ல‌... டிரெய்ல‌ர்... தீபாவ‌ளி அன்னிக்கு டிரெய்ல‌ர் ரிலீஸ்..

ய‌ப்பா... அதானே பார்த்தேன்... ஷங்கராவது ஒரு வருஷத்துல முடிக்கறதாவது என்று ம‌ய‌ங்கி விழுந்து பின் எழுகிறார் நிருப‌ர்...
சார்... கந்தசாமி படம் பாத்தீங்களே... அத பத்தி ஏதாவது சொல்லுங்க...
கந்தசாமி பார்த்தேன்... ரொம்ப ரொம்ப நல்ல படம்... நல்ல என்டெர்டெய்னர்..சாங்க்ஸ் நல்லா இருந்தது... நல்ல லொக்கேஷன்ல ஷூட் பண்ணி இருந்தாங்க...எனக்கு விக்ரம் ரொம்ப பிடிக்கும்... குட் ஆக்டர்... தாணு என்னோட நல்ல நண்பர்.. சுசி கணேசன் கூட பத்து வயசா இருக்கும் போது, என்னோட "மாவீரன்" ஷூட்டிங் பாக்க வந்து, என்கூட ஃபோட்டோ எல்லாம் எடுத்துகிட்டாரு...
சரி...வேற ஏதாவது கேள்வி இருக்கா??
ம்ம்ம்... உலக அரசியல் பத்தி கேக்கலாமா சார்...

ஓ... கேளுங்க... நான் இந்த பேட்டி முடிச்சுட்டு இமயமலை போகப்போறேன்... உலக அரசியல்ல எனக்கு ரொம்ப பிடிச்சது, சிங்கப்பூர்தான்... ஏன்னா, அதோட வளர்ச்சி...

வேற ஏதாவது கேக்கணுமா??

ஆமாம் சார்... கலைஞானி கமல் பற்றி??

கமல் உலகின் சிறந்த நடிகர் என்று நான் சொல்லல.. மத்த எல்லாரும் சொல்றாங்க.. சிங்கப்பூர்ல "நினைத்தாலே இனிக்கும்" ஷூட்டிங் நடந்தப்போ, லன்ச் ப்ரேக்ல போய், ரெண்டு கடலை உருண்டை வாங்கிட்டு வந்து எனக்கு ஒண்ணு குடுத்தாரு... அந்த நல்ல மனச, என் வாழ்நாளில் நான் மறக்க மாட்டேன்... இப்போ கூட ஹீரோவா "உன்னை போல் ஒருவன்" படத்துல நடிக்கறேன்னு போன வாரம் ஃபோன் பண்ணி சொன்னாரு...

சுரேஷ் கிருஷ்ணா??

நல்ல டைரக்டர்... ஆனா, இன்னும் அவரு "பாட்சா" படத்தோட பாதிப்புல இருக்காரு..... அது பத்தி அவர் கிட்ட பேசினேன்... உடனே "பாட்சா 2" எடுக்கலாமான்னு கேட்டாரு... அதுக்கு, 2015 வரைக்கும் சுரேஷ்னு பேரு இருக்கறவங்க கூட சேர வேண்டாம்னு இமயமலைல ஒரு சித்தர் சொன்னாரு... அதனால 2016க்கு மேல வந்து பாருங்கன்னு சொல்லி இருக்கேன்...

கே.எஸ்.ரவிக்குமார் பற்றி?

அவரு கடுமையான "உழைப்பாளி"... "படையப்பா" படத்துல நடிக்கறப்போ, எனக்கு எப்படி நடிக்கணும்னு சொன்னாரான்னு ஞாபகம் இல்ல.. ஆனா.. ஷூட்டிங் நடுவுல 4/5 சிகரெட் குடுத்தாரு... 45 நாள்ல படம் முடியணும்னு சொல்லி, 55 நாள்ல படத்த முடிச்சுடுவாரு. ஆளு அவ்ளோ சூப்பர் ஸ்பீடு... பட், குட் மேன்... தசாவதாரம் படத்துல "ஜார்ஜ் புஷ்" இந்தியா கூட்டிட்டு வந்தாரே, அதுக்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு சொல்றேன்..

ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க சார்...

ரசிகர்கள் என்னோட கண் மாதிரி...அவங்க நல்லா இருந்தா தான் நானும் நல்லா இருப்பேன்.. சரி... டைம் ஆயிட்டு இருக்கு...விஷயத்துக்கு வர்றேன்... எல்லாரும் நல்லா படிங்க... நல்லா வேல செய்யுங்க... செய்யற தொழில்தான் தெய்வம்... அப்புறம், பெரியவங்கள மதிச்சு நடக்கணும்... பெற்றோர்கள் பேச்சு கேட்டு வாழ்க்கை நடத்துங்க... பொழுதுபோக்கை கொஞ்ச நாளைக்கு கம்மி பண்ணுங்க... இன்னிக்கு நீங்க கஷ்டப்பட்டு உழைச்சா, நாளைக்கு உங்க வாழ்க்கை அடுத்தவங்களுக்கு இஷ்டப்படற மாதிரி இருக்கும்... அதனால, வாழ்க்கைய இஷ்டப்பட்டு வாழுங்க... கஷ்டப்பட்டு வாழாதீங்க... நெறைய வேதனைங்க, சோதனைங்க வரும்.. ஆனா.. வேதனைங்க, சோதனைங்கள தாண்டினா, சாதனை படைக்கலாம்...

உங்களுக்கு, தியேட்டர் பக்கம் போகணும்னு தோணுச்சுன்னா, வாரத்துக்கு ஒரு தடவை இல்லேன்னா மாசத்துக்கு ஒரு தடவை போங்க...போயி, போஸ்டர் எல்லாம் மட்டும் பாத்துட்டு திரும்பி வந்துடுங்க...நம்ம படம் "எந்திரன்" வர்றபோது சேர்த்து வச்சு, தியேட்டர்ல போயி, 4 / 5 தடவ பாருங்க...

"எந்திரன்" ரொம்ப ரொம்ப பெரிய படம்.. உலகம் முழுக்க ரிலீஸ் ஆகப்போகுது. படத்த சந்திரன்ல கூட(உதயம் காம்ப்ளெக்ஸ்ல இருக்கற சந்திரன் இல்ல... நிஜமாவே மேலே இருக்கற நிலா / சந்திரன்ல) ரிலீஸ் பண்ணலாம்னு டைரக்டர் ஷங்கர் ஐடியா சொல்றாரு... பார்ப்போம்...படத்த பாத்து என்ஜாய் பண்ணுங்க...

பேட்டி முடிக்கறதுக்கு முன்னாடி ஒரு உண்மைய சொல்றேன்... ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு... இது புரிஞ்சா நீ எல்லாருக்கும் ஃப்ரெண்டு.. ரெண்டும், மூணும் அஞ்சு.. உன் கையில விரல்கள் கூட அஞ்சு... இந்த சின்ன வாழ்க்கை தத்துவத்தை புரிஞ்சுக்கோங்க... நிறைய உழைக்க பழகுங்க...
நன்றி வணக்கம்....ஜெய்ஹிந்த்.....

சார்... இன்னும் நெறைய கேள்விகள் இருக்கு... மீண்டும் சந்திப்போம் சார்... நன்றி

(இப்போதைக்கு இது போதும் என்பதால் தற்காலிக முற்றும்.....)