Saturday, December 24, 2011

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-6


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”பிருந்தாவனம்” - ஸ்ரீராகவேந்திரர் பற்றிய சரிதம் :

எது அறியப்பட முடியாதோ அதுவே நீ… எது அறிவினால் பகுத்தறிய முடியாதோ அதுவே நீ… எது எந்த செயலுமற்று வெறுமே உள்ளேயிருக்கிறதோ அதுவே நீ… எதற்குள் எந்த செயலுமற்று ஒரு விஷயம் இருக்கிறதோ அதுவே நீ… எல்லா உயிரினங்களிலும் இருப்பது எதுவோ அதுவே நீ…. இந்த பிரபஞ்சம் முழுவதையும் எது ஆக்ரமித்து கொண்டிருக்கிறாதோ அதுவே நீ…

நீ உடம்பல்ல… நீ மனமல்ல.. நீ புத்தியல்ல.. நீ பிரபஞ்ச சக்தி.. உன்னுள் இருப்பது எல்லாவற்றிலும் இருக்கிறது… யானையில், பூனையில், நாயில், எருமையில் எல்லாவற்றிலும் உன்னிலிருப்பதே இருக்கிறது…

தொடர்ச்சியாக நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கும்… காரணமின்றி காரியமில்லை… காரியம்தான் கண்ணுக்கு பட்டு மனதிற்கு சஞ்சலங்கள் தருகின்றனவே தவிர, துக்கமும், மகிழ்ச்சியும் மாறி மாறி தருகின்றனவே தவிர, காரணம் பார்க்க சாதாரண மனிதனால் முடிவதில்லை… ஒவ்வொரு தெய்வீகப் பிறப்பிற்கு பின்னாலும் மிகச் சரியான ஒரு காரணம் இருக்கிறது…

உலகத்து மக்களுக்கு உதவி செய்தல், நல்லார்களுக்கு வழிகாட்ட, தீயவர்களை விலக்கி வைக்க இறை என்கிற சக்தி இடையறாது உத்தமர்களை உலகிற்கு அளித்துக் கொண்டிருக்கிறது…

தனக்கு பின்னே ஒரு கூட்டம் கூடினால், தன்னை வாழ்க என்று வாழ்த்தினால் உடனே அவனுக்கு அடுத்தவர்களை அழவைக்கிற எண்ணம் வந்து விடுகிறது… நாம் எல்லாம் ஒன்று என்று சொல்வதற்காக, யார் வேறு என்று தேடும் புத்தி வந்து விடுகிறது…

தன்னுடைய கூட்டத்தை ஒன்றுபடுத்திக் கொள்வதற்காக எதிரியை கைகாட்ட வேண்டியிருக்கிறது… இவர்கள் மிக மோசமானவர்கள், இவர்களை அழித்து விடுங்கள் என்று நல்லவர்களை கை காட்ட அராஜகம் மிகுந்த அந்த அயோக்கியர்கள் வெறியோடு அவர்கள் மீது பாய, அப்போது கிடைத்த அல்பமான வெற்றிகளால் அவர்கள் இரும்பூ தெய்தினார்கள்…

இது இன்று வரைக்கும் நடக்கின்ற விஷயம்… தன்னுடைய வெற்றி, தன்னுடைய இருப்பு, தன்னுடைய வாழ்க்கை தன்னால் ஏற்பட்டதல்ல… அது விதியின் வசம்… விதி இறைவன் வசம் என்று புரியாத போது எல்லோரும் தடுமாறத் துவங்கி விடுகிறார்கள்…

திறந்து வைக்கப்படாத இதயம், என்ன என்று கேள்வி கேட்டுக் கொள்ளாத மனம் அழுகத் தொடங்கி விடும்… உள்ளிருந்து துர்நாற்றமும், துர்புத்தியும் தான் வெளியே வரும்… மூடிக்கிடந்த அறையிலிருந்து வெப்பமும், துர்நாற்றமும் வெளியே வருவது போல, மூடி விட்ட மனதிலிருந்து கோபமும், பொறாமைகளும் தான் உச்சமாக இருக்கும்…

எங்கும் எதுவோ இருந்தால் தானே இங்கே இயக்கம் என்பது சாத்தியமாகிறது… இங்கே எதுவும் இல்லாமல் இருந்தால், இயக்கம் சாத்தியமாகுமா?

மண் தான் தசை… நீர் தான் இரத்தம்… நெருப்பு தான் வயிற்று அமிலம்.. காற்று தான் மூச்சு. ஆகாயம் தான் இருதயத்திற்கு நடுவே இருக்கின்ற வெளி… அந்த ஆகாயத்தில் வெளி இருப்பதால் தான் ஹிருதயம் இயங்குகிறது… வெற்றிடம் இருப்பதால் தான் இரத்தம் உள்ளே பாய்கிறது… அது உள்ளே பாய்வதால் தான் இருதயம் விரிகிறாது… மறுபடியும் வெற்றிடம் ஏற்பட, மறுபடியும் இரத்தம் பாய்கிறது.

இறை உன்னிலும் மிகப் பெரியது… இறை உன்னிலும் மிக புத்திசாலியானது… இறை உன்னிலும் வலிமை மிக்கது… இறை உன்னிலும் எல்லாம் ஆற்றலும் கொண்ட்து… உன்னை அழிக்க வேறொரு இடத்தில் எதிரியைத் தோன்ற வைக்காமல் உன்னை அழிப்பதற்கு உன்னிலேயே ஒரு எதிரியை ஏற்படுத்தி விடுகிறது….

நாம் மரத்தின் ஒரு கிளை.. ஒரு சிறிய அங்கம்… வேர் கீழே மறைந்து கிடக்கிறது… என்னால் தான் மரம் இத்தனை அழகாக, வலுவாக இருக்கிறது என்று ஒரு கிளை சலசலத்தால், அதை யார் ஏற்றுக்கொள்வார்கள்…??

பயமுள்ளவன் எதைக்கண்டும் மிரளுவான்... எப்பொழுதும் மிரளுவான்... இடையறாக மிரட்சி தான் பயமுள்ளவர்களுக்கு இருக்கும்...

மனம் தான் வலியையும், வார்த்தையையும், வசதியையும் அனுபவிக்கிறது.. மனம் தான் நல்லதையும், கெட்டதையும் பிரித்துப் பார்த்து வேதனைப்படுகிறது... அதனால் தான் மனதை மாயை என்று சொல்கிறார்கள்... மனம் தான் தித்திப்பை சுகமென்றும், கசப்பை விஷமென்றும் பிரித்து வைத்துக் கொள்கிறது...

ஆனால், மனம் நினைத்தால் கசப்பைக் கூட சப்புக் கொட்டி சாப்பிடும்...

மனம் முழுவதும் இறை நிரம்பியிருப்பின், உடம்பினுடைய பாதகங்கள் பெரிதாகத் தெரியவே தெரியாது...

வந்து சேர்ந்த இடம் எத்தனை வளமானதாக இருந்தாலும், வாய்ப்பு வசதிகள் மிகுந்திருந்தாலும், பாதுகாப்பு பலமாக இருந்தாலும், சொந்த ஊரின் சுகம் ஒரு போதும் வரது... மனம், பிறந்து வளர்ந்த இடத்திற்குப் போக வேண்டி மிகவும் ஏங்கும்....

எலியை பூனை விரட்டினால், பூனையை நாய் விரட்டும்... அந்த நாயை எஜமானன் அடிப்பான்... இது விதி... எங்கும் இங்கு நிரந்தரமல்ல...

கடவுளை அறிவது எளிதல்ல... அதற்கு முயற்சி செய்வதே வாழ்க்கை என்று திரும்பத் திரும்ப சொல்லியாக வேண்டும்...

வாழ்க்கை என்பது ஆடலும், பாடலுமாகப் போய் விட்டது… உள்ளுக்குள்ளே ஆழ்ந்து அமிழ்ந்திருக்க, தனித்திருக்க, வெறுமே கிடக்க கடவுளை உணரும் முயற்சியில் ஈடுபடவேயில்லை.. இடையறாது குதித்துக் குதித்து கோலாட்டம் ஆடிக் கொண்டிருந்தால் என்ன வரும், கடும் பசி ஏற்படும்…. கடும் பசி ஏற்பட்டால் நிரம்ப தின்னத் தோன்றும்.. நிரம்பத் தின்றால் தூக்கம் தான் வரும்… ஆழ்ந்து தூங்கிய உடம்பு மதமதத்து ஆடும்… எல்லாச் சுகங்களும் தேடும்…

தன்னையறிதல் என்பது அங்கே செத்துப்போகும்… ஆழ்ந்த, அடர்ந்த அமைதி உள்ளுக்குள்ளே வரவே வராது... கலபரியந்தமும் குதித்துக் குதித்து, கத்திக் கத்தி, அலறி அலறி அவர்கள் வெறுமே செத்துப் போவார்களே தவிர, ஞானத்தின் வாசனை கூட மேலே படாது.

(இன்னும் வரும்............)

Sunday, November 20, 2011

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-5


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”ஸ்ரீகிருஷ்ணாவதாரம்” - தொடர்ச்சி :

இம்மாதிரியான பொருட்கள் எல்லாம் மக்களை அருகே ஈர்க்கும்... ஆனால், மிகப்பெரிய அவநம்பிக்கையை கொடுத்தவரைப் பற்றி ஏற்படுத்தும்.

இது மிகப்பெரிய கௌரவம் என்று செய்த அத்தனை பேரும் கேவலப்பட்டு இருக்கிறார்கள்...

தந்திரங்கள் செய்த அத்தனை பேரும் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள்...

ஆனால் சத்தியமானவர்களை இந்த உலகம் எப்போதும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது...

தலைமுறை, தலைமுறையாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர் புகழ் போற்றிப் பாடுகிறது..
அவர் மலரடி பின் தொடர்கிறது.

கவர்ச்சிகரமான உடைகளை விட, தங்கத்தாலான உத்திராட்சங்களை விட, எண்ணெய் பூசிய தலைமுடியை விட “சத்தியம்” மிக கவர்ச்சிகரமானது...

இம்மாதிரியான யோகீஸ்வர்கள் எல்லா காலத்திலும் கொண்டாடப்படுகிறார்கள்..

ஒருவர் யாசகம் கேட்க போகும் போதே இல்லை என்று சொன்னாலும் மவுனமாக ஏற்பதற்கு தெரிந்து கொள்ள வேண்டும்... நீங்கள் வழிப்பறிக்கு போனால் இல்லை என்று சொல்வதற்கு கோபப்படலாம்... ஆத்திரப்படலாம்... வெட்டி கொன்று விடுவேன் என்று கத்தியை காட்டலாம்... ஆனால், பிச்சை எடுப்பதற்காக போய் விட்டு கொடுக்கவில்லை என்று மறுத்து விட்டார்கள் என்று யாரும் அழுவார்களா?

மறுப்புக்கு தயாராகத் தான் யாசகம் கேட்க போயிருக்க வேண்டும்... அப்படி போவது தான் யாசகம்...

பணிவு இல்லாத இட்த்தில் பக்தி வராது, வெறும் அலட்டல் தான் வரும்... போய் நின்றால் உங்களுக்கு ராஜமரியாதை தரவேண்டும் என்ற் அகம்பாவம் தான் வரும்...

பணிவு இருப்பின், அவமானம் ஒரு முக்கியமான விஷயமாக இருக்காது.

இல்லை, இல்லை என்று ஒற்றை வார்த்தையில் மறுத்தவனை நீங்கள் மனதார வாழ்த்தி விட்டு வந்திருப்பீர்கள், இப்படி வெம்பி அழ மாட்டீர்கள்...

பெண்களுக்கு நான்கு வித புருஷர்களால் (ஆண்களால்) துக்கம் உண்டு என்று சொல்லப்பட்டு இருக்கிறது... தகப்பனாலும், சகோதரனாலும், கணவனாலும், பிள்ளையாலும் துக்கம் உண்டு... இவர்களில் எவரேனும் ஒருவரால் பாதிக்கப்படாத பெண்களே இருப்பதில்லை...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”கல்லூரி பூக்கள்” நாவலின் வரிகள் :

ஒரு ஆண், ஒரு பெண்ணை விரும்புவது இயல்பு… இயற்கை… ஆனால், ஒரே ஒரு பெண்ணை மட்டுமே விரும்ப வேண்டும்… ஒரு பெண் ஒரு ஆணுடன் மட்டுமே வாழ வேண்டும் என்பதே ஒழுக்கம்…

சினிமாவில் அடிப்படையான விஷயமே ஆளுக்குத் தகுந்த சர்க்கரையான பேச்சு தான்… சினிமா என்பது பேசும் படம்… அங்குள்ளவர்கள் பேசத் தெரிந்தவர்கள்… பேசத் தெரிந்தவர்களே அங்கு ஜெயிக்க முடியும்.

வாழ்க்கையில் பாதிக்கு கடவுளை நம்பணும்… மீதிக்கு மனிதர்களை நம்பணும்… வயதுக்கு மீறிய புத்திசாலித்தனம் என்பது எல்லோருக்கும் இருப்பதில்லை… இருக்க வேண்டிய அவசியமும் இல்லை… ஆனால், சிலருக்கு இருக்கிறது… இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது…

நட்பை யார் வேண்டுமானாலும், யாருக்கும் கொடுக்கலாம்… நட்பு என்பது விரிவுபடுத்தப்பட்ட அன்பு… இந்த உலகம் தழுவிய காதல்… நட்பில் உறவுச் சங்கிலி இல்லை… அன்பு சுமை இல்லை… முடிந்த போது, முடிந்த வரையில், முடிந்தவர்க்கு உதவி செய்வதே நட்பு..

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பல முகங்கள்… ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு விதம்… ஒவ்வொரு நேரம், ஒவ்வொரு முகம் வெளியே வரும்..

வாழ்க்கையில் அதிகம் நடிப்பவர்க்கு தன் உண்மையான முகம் எதுவென்றே தெரியாமல் போகும்… தன் உண்மையான முகத்தை தெரிந்து கொள்கின்ற ஆவல் இல்லாமெலே போகும்….

காசு என்பது பொருட்கள், பொருட்கள் என்றால் சந்தோஷம்….

காசு என்பது அதிகாரம்…. அதிகாரம் என்றால் சந்தோஷம்..........

காசு என்பது பாதுகாப்பு… பாதுகாப்பு என்றால் சந்தோஷம்........


(இன்னமும் வரும்.....)

Saturday, November 12, 2011

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-4


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”ஸ்ரீகிருஷ்ணாவதாரம்” - தொடர்ச்சி :

திறம்பட தவம் செய்ய வேண்டுமென்றால் நல்ல குருவின் ஆசிர்வாதம் வேண்டும்... குருவினுடைய அனுக்கிரகம் இல்லாமல் தவம் செய்தல் எளிதல்ல.,.. குருவின் அன்பு இருந்து விட்டால், செய்யும் தவம் முழுமையடையும்... பலிதமாகும்...

குழந்தை என்றால் குறும்பு செய்யத்தான் செய்யும்... குறும்பு செய்கிற குழந்தையை நம் வசம் வைத்துக் கொள்ள வேண்டும்... நம் கண் பார்வையில் வைத்துக் கொள்ள வேண்டும்... என்னிடம் குறும்பு செய், என்னிடம் குறும்பு செய் என்று உற்சாகப்படுத்த வேண்டும்... குழந்தை கொலு பொம்மையை போல வைத்த இடத்திலேயே இருந்தால் நன்றாக இருக்குமா? இது வியாதி அல்லவா? குழந்தை என்பது ஓடி ஆடி குறும்புகள் செய்தால் தான் குழந்தை... அந்தக் குழந்தை தான் பலமுள்ள, வளமுள்ள, வாலிபனாக வளர முடியும்... குறும்பு செய்யக்கூடாது என்று ஒரு குழந்தையை கட்டிப்போடுவதோ, அடிக்க கை ஓங்குவதோ, திட்டுவதோ மிகப் பெரிய முட்டாள்தனம்... பொறுப்பில்லாத தாயார் என்று அர்த்தம்... உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால், உனது குழந்தையை பற்றிய அக்கறை இல்லை என்று அர்த்தம்...

ஒரே இடத்தில் நின்றபடி நீண்டு நிமிர்ந்து மரமாக வளர்வது தவம் எனில், இப்படி ஆடுவதும் ஒருவகை தவம்கடவுள் அருகினில் இருக்கையில் எது செய்தாலும், அது தவமாகிறதுகடவுளுக்காக என்று எது செய்தாலும் அது தவமாகிறது

கடவுள் என்பவரின் அருகாமை, ஒரு குடும்பத்தை சந்தோஷமாக்கும்... மென்மேலும் பலமாக வளர்க்கும்....

பாம்பை கயிறென்று நினைத்தால் கயிறு... கயிறை பாம்பென்று நினைத்தால் பாம்பு... பார்க்கின்ற பார்வையில் தான் பார்க்கப்படும் பொருளின் குணம் இருக்கிறது...

இது வெறும் கயிறுதான் என்று பாம்பை தொட்டுவிட்டு, பாம்பு சீறிய பிறகு தான், அது கயிறு இல்லை, பாம்பு என்று அலறி தூக்கி வீசி விடத் தோன்றும்... எனவே, திடமாக பார்ப்பதற்கு பார்வை இல்லாதவர்கள், தெளிவாக பார்ப்பதற்கு பார்வை இல்லாதவர்கள், விருப்பு, வெறுப்பு இல்லாமல் பார்ப்பதற்கு திறன் இல்லாதவர்கள் அனுபவித்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்...

கர்வம் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரும்... எப்போது வேண்டுமானாலும் வரும்... வீரமானவர்கள் எல்லாம் கர்வத்தினால் நிலைகுலைந்து போயிருக்கிற கதைகள் புராணங்களில் அதிகம் உண்டு...

உண்மையான மனது வருவதற்கு கடவுள் அனுக்கிரகம் தேவை... கல்வி உண்மையான மனதை கொடுக்க வேண்டும்... அதுதான் நல்ல கல்வி...

கல்வி கர்வத்தை கொடுக்குமெனில், தான் என்ற அகம்பாவத்தை கொடுக்கும் எனில், அது தவறான கல்வி...

நான் யார் தெரியுமா என்று எவரும் ஆடையை அவிழ்த்து காட்டுவதில்லை... அப்படி காட்டுவது அநாகரீகம், அசிங்கம்...

அப்படி தான் சொல்லி தரப்பட்டிருக்கிறது....

நான் என்கிற போது, அந்த நான் ஆடைகளோடும், அணிகலன்களோடும், படிய வாரிய கேசத்தோடும், புத்திசாலித் தனத்தோடும், செல்வத்தோடும், இன்னும் பிற விஷயங்களோடும் ஒட்டிக் கொண்ட்து தான் அந்த நான்..

ஆனால் படிப்பும் நீ அல்ல... பணமும் நீ அல்ல... இந்த உடம்பும் நீ அல்ல...

நான் என்று சொல்கிற அந்த விஷயம்.... இந்த உடம்பாக இல்லை... உடம்பாகவே அது இல்லை என்றால், உடம்பின் மீது உடுத்திக் கொண்ட ஆடையாக அது எப்படி இருக்கும்...

ஆடையையே உதற முடியவில்லை என்றால், உடம்பு என்னுடையது இல்லை என்று எப்படி உதற முடியும்?

ஆன்மா என்பதை பற்றி இருக்கிற உடம்பு ஒரு வேஷம் என்றால், உடம்புக்கு மேல் போட்டுக் கொண்டிருக்கிற உடை வேஷம் தானே... உன் பணம் வேஷம் தானே.... உன் படிப்பு வேஷம் தானே... உன் அதிகாரம் வேஷம் தானே... உன் வாள்பலம் வேஷம் தானே....

சிகையும், தலைப்பாகையும், மணியும், மாலையும், சடங்குகளும், ஆச்சாரமும், அனுஷ்டானமும் வேஷம் தானே...

மதச் சின்னங்கள் வேஷம் தானே....இத்தனை வேஷங்களை வைத்துக் கொண்டு நிர்குணமான கடவுளை எப்படி அறிந்து கொள்ள முடியும்? கடவுள் தேடுதலும் இங்கு வேஷமாக போய்விடும்... பொய்மை தான் முதலில் நிற்கும்...

பொய்மையுடைய ஒருவன் உண்மையை அறிந்து கொள்வது எப்படி? தன்னை அறிந்து கொள்வது எங்கனம்? உடை உடுத்துதலில், வாசனை திரவியத்தில், கவனமாக பேசுதலில், விதம் விதமாக ஆபரணங்கள் அணிவதில், உயர்ந்த கட்டிடங்களில் வாழ்வதில், என்று இவைகளை மதிக்க துவங்கிவிட்டால், உள்ளுக்குள்ளே இருப்பது என்ன என்று தெரியாது போய்விடும்...

இறக்கும் போது, உள்ளூக்குள்ளே இருப்பதை பற்றி அறிய முற்படும் போது வெறும் இருள் தான் சூழும்...

இருக்கும் போது சிறிய வெளிச்சத்தை கூட தேடாதவர், இறந்த பின்னர் ஞானியாகி விடுவாரா? காரிருளில் தான் மூழ்கி போவார்.....

தனக்குள்ளே மிளிருகின்ற அந்த நீர் ஓட்ட்த்தை, உயிர் சக்தியை, ஆன்ம பிரதிபலிப்பை, ஜீவனை அறியமுடியாதார், அறிய முயற்சி செய்யாதார் வாழ்ந்து எந்த பயனும் இல்லை...

மதுவை அருந்தியபடி, வேதம் சொல்ல முடியுமா... அப்படி வேதம் சொன்னால் யாரேனும் கேட்க முடியுமா?

இத்தனை உடைமைகளின் மீது ஆசை வைத்துக் கொண்டு எவர் ஒருவர் கடவுளைப் பற்றி விவாதிக்க முடியும், பேச முடியும்? அறைகூட முடியும் அல்லது மற்றவர்க்கு அறிவுறுத்த முடியும்?

உலக வாழ்க்கையின் போக்கியங்கள் எல்லாம் மயக்கமானவை…. மாயையானவை...

அந்த போகத்தில் ஒன்று ஆடை, மற்றவை அணிகலன்... இன்னொன்று, அதிகாரம்... இன்னொன்று உடல் வலிமை.. அவர், இவர் என்று பிரித்துக் கொள்கின்ற அகம்பாவத் தன்மை... எஜமான், அடிமை என்கிற இறுமாப்பு.

ஆடையையே களைய முடியாதவர், இவற்றை எல்லாம் ஒரு போதும் களைய முடியாது... இவைகளை களையாதவர் எவருக்கும் இறை தரிசனம் வெகு நிச்சயம் கிடைக்காது...

இந்த பரத கண்டத்தில் பல ஞானிகள் உடையைப் பற்றி கவலைப்படாமல், தலைமுடியை பற்றி கவலைப்படாமல், வீடு வாசல் பற்றி கவலைப்படாமல், கோமணதாரிகளாக, அழுக்குடையவர்களாக, நிர்வாணிகளாக, எந்த அலங்காரகும் அற்றவர்களாக தன்னை மறந்து திரிந்திருக்கிறார்கள்...

தன்னை அலங்கரிப்பதில் ஆசை கொண்ட எவரும் கடவுளை தொட முடியாது..

தன்னை அலங்கரித்து, தன் சிகை, தன் சிரிப்பு, தன் உடை, தன் பட்டு, தன் தங்கம் என்று மினிக்கிய அத்தனை பேரும் சோகப்பட்டு இருக்கிறார்கள்... அவமானப்பட்டு இருக்கிறார்கள்...

(இன்னமும் வரும்........)

Wednesday, November 2, 2011

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-3


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”ஸ்ரீகிருஷ்ணாவதாரம்” - தொடர்ச்சி :

நிலம் என்ற ஒன்று செழிப்பாக இருக்க வேண்டுமென்றால், நீர் என்று ஒன்று பொங்கி வர வேண்டும்... நீர் என்று ஒன்று பொங்கி வர வேண்டுமென்றால், மலை என்ற ஒரு உயர்ந்த விஷயம் ஒன்று இருக்க வேண்டும்....

உயர்ந்த மலை ஒன்று இருந்தால் தான் வேகமாக காற்று வீசும்... அந்த காற்று தான் பனியாக மாறும்... குளுமையாக நிற்கும்... அந்த குளுமை சூரியக் கதிரின் வெப்பம் பட்டு உருகி சொட்டு சொட்டாய் வழிந்து ஒன்று கூடி சிறு நதியாகி, அந்த சிறிய நதிகள் ஓரிடத்தில் ஒன்றாகி பெரு நதியாகி புரண்டு அடித்துக் கொண்டு சமவெளி நோக்கி ஓடும்...

நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற இந்த நான்கும் இயங்க வேண்டுமென்றால் வெளி என்ற ஒரு விஷயம் இருந்தே ஆக வேண்டும்...

இடைவெளி இருந்தால் தான் ஒன்றோடு ஒன்று கலக்க முடியும்... இந்த பூமியில் இந்த நதி இப்படி சமவெளி நோக்கி பரவுகிற போது, அங்குள்ள மனிதர்கள் மேன்மையடைகிறார்கள்...

உழுது, பயிரிட்டு, மாடுகள் வளர்த்து, வீடுகள் கட்டி, துணிகள் நெய்து, பாடங்கள் படித்து மென்மேலும் வளர்கிறார்கள்...

மனித குலத்தின் வளர்ச்சியை முன்னிட்டே கங்கை நதி இப்படி பிரவாகமாக சமவெளி நோக்கி போகிறாள்...

பரதகண்டத்தின் நாகரீகத்தை மனதில் நிறுத்தியே இப்படிப்பட்ட நதியினுடைய வருகை இருக்கிறது... இது கடவுளின் கிருபை... நாராயணன் செயல்...

எங்கோ அமர்ந்திருக்கின்ற அந்த பிரபஞ்ச சக்தி இந்த உலகத்தின் அசைவுகளை மிக துல்லியமாக கணித்திருக்கிறது...

இந்த கணிப்பை புரிந்து கொண்டவர்கள் ஞானவான்கள்... இந்த கணிப்பை தெரிந்து விட்டால் என்னுடையது, உன்னுடையது என்ற எகிறல் வராது..

நான் ஆண், நீ பெண் என்கிற பிரிவினை எழாது... நான் உயர்வு, நீ தாழ்வு என்கிற அகம்பாவம் கிளறாது...

வம்ச விருத்திக்காக பெண்ணின் துணையும், அவள் அன்பும், அவளோடு கூடலும் ஏற்படுத்திக் கொள்ளும்...

வம்ச விருத்திக்காக மட்டும் தான் ஆசை என்பது எத்தனை அற்புதமான விஷயம்... நான்கு குழந்தைகள் பிறந்து விட்டால், மனம் திசை மாறி அந்த குழந்தைகளின் வளர்ப்பிலேயே லயித்து விடும்... அவர்கள் மேன்மையில் கிறங்கி விடும்... அப்போது காமம் வெறும் நினைவு சின்னமாகவே இருக்கும்...

குழந்தைகள் வளர்ந்து திருமணம் செய்கிற போது, வம்ச விருத்தி முக்கியம்... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்தும்...

இந்த பூமியிலுள்ள இயற்கை மிகத் துல்லியமாக தன்னுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறது.. ஆனால், இந்த மனிதர்கள் தான் அந்த துல்லியத்தை மறந்து விட்டார்கள்...

முன்னுக்கு பின் முரணாக நடக்கிறார்கள்... இயற்கைக்கு எதிராக ஆடுகிறார்கள்... இயற்கை என்னை என்ன செய்யும் என்று இறுமாப்பு கொள்கிறார்கள்.... இது சிரிப்பான விஷயம்...

(இன்னும் வரும்..........)

Friday, October 21, 2011

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-2


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”ஸ்ரீகிருஷ்ணாவதாரம்” - தொடர்ச்சி :

இயற்கை சக்தி அல்லது கடவுள் என்ற மகத்தான வலிமை பற்றிய அறிவு இல்லாதவர்கள்
, தங்களுடைய வளர்ச்சி, தங்களுடைய வலிமை, உலகத்தை ஆளக்கூடிய திறமை உடையது என்று நினைத்துக் கொள்கிறார்கள்

புஜ வலிமை என்பதும், புத்தி வலிமை என்பது, மன வலிமை என்பதும் உலகில் மிகச் சிறிய விஷயங்கள். மிக உயரமாக வளர்ந்த ஒரு மரம் போல இயற்கை கொடுத்த வரப்பிரசாதங்கள். அங்கே நிச்சயம் முயற்சியும், சட்ட திட்டங்களும், இடைவிடாத பயிற்சியும் இருந்திருக்கிறது என்பது உண்மையாயினும், இது உலகை ஆளக்கூடியது அல்ல

இந்த மனோசக்திகளும், உடல் சக்திகளும் எல்லைகள் உடையவைஒரு அளவுக்கு மேல் பயன் தராதவைலட்சக்கணக்கான மனிதருக்கு நடுவே உயரமாக கிளர்ந்து எழுந்து விட்டால், தான் உலகையே ஆளக்கூடியவன் என்ற எண்ணம் ஏற்படுவது பேதமை

மனிதர்களில் பெரும்பாலோர்க்கு அவ்வப்போது இப்படி பேதமை ஏற்படும்அவனை சுற்றியுள்ள மனிதர்களை ஜெயித்த்தால், தனக்கு அருகே இருக்கின்ற திறமையானவர்களை மீறி வெற்றி பெற்றதால், அவர்களுக்கு இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லா விஷயங்களையுமே ஜெயித்து விட முடியும்வெற்றி பெற முடியும்காலடியில் கவிழ்த்து விட முடியும் என்கிற எண்ணம் தோன்றும்

தன்னைப் பற்றிய அளவு மதிப்பீடு தவறாக போய் எதிர்பக்கம் இருக்கின்றவருடைய அளவு மதிப்பீடு குறைவாகப் போய் அவர்கள் கொக்கரிக்கத் துவங்கி விடுவார்கள்

இந்த உலகம் அவ்வப்போது மனிதர்களில் இப்படிப்பட்ட கொக்கரிப்பாளர்களை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறதுசந்தித்துக் கொண்டு தான் இருக்கிறதுசகித்து கொண்டு தான் இருக்கிறது

கடவுள் என்கிற பயம் இருந்தால்தான் வாழ்க்கை சௌலப்பியமாக, சுகமாக இருக்கும்

கடவுள் என்று ஒன்று இல்லை, நானே இந்த உலகத்தின் உச்சி என்று யார் நினைத்தாலும் அழிவின் விளிம்பில் நிற்கிறான் என்று அர்த்தம்

கடவுள் என்பதை அறிய பணிவு வேண்டும்பணிவில்லாத போது தந்திரங்கள் தான் தலைதூக்கும்.

உலக மக்களுக்கு தெளிவு ஒரே நேரத்தில் வந்துவிடாது... தெளிவுள்ள குழு என்றும், தெளிவற்ற குழு என்றும் பாதி தெளிந்த குழு என்று பிரிந்து தான் இருக்கும்.

கடவுளை நோக்கி நடக்கும்போது, கடவுளை காப்பாற்றுவதற்காக நடந்தால், கடைத்தேற முடியுமா? இரண்டும் கெட்டானாகத்தான் நிற்க முடியும்... தன்னை காப்பாற்றிக் கொள்ள நடந்தால் ஒரு வேளை கடவுள் கையில் சிக்கியிருப்பார்...

கடவுள் மீது பக்தி உள்ளவர்களுக்கு இம்மாதிரியான பேதமைகள் ஏற்படுவது வழக்கம்... கடவுளை நாம் அலங்கரிக்கிறோம் என்பதாலேயே அலங்கரிப்பவர் கடவுளுக்கு மிக நெருக்கமானவராகவும், அவர் மீது மிக உரிமை உள்ளவராகவும் தன்னை நினைத்துக் கொள்கிறார்...இது பேதமையின் உச்சகட்டம்...

ஸ்வாமியை நாங்க தான் தொடலாம்... நீங்க தொடக்கூடாது என்று அறிவார்ந்த கூட்டம் ஒன்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு பேசும்... இப்படித்தான் பூஜை என்று ஏதோ ஒரு முறையை சொல்லும்...

எல்லா ஆஷாட அனுஷ்டானங்களும் அகந்தையை கொண்டு, அகந்தையாய் நடத்தப்படுகின்றன...

இறைவனை எங்கே காண்பது... அது இறைவனால் தீர்மானிக்கப்பட வேண்டும்...

தான், உடம்பு என்ற கர்வத்தில் திளைத்திருப்பவர்களுக்கு சிற்றின்பத்தில் தான் திளைத்திருக்க முடியும்... எவ்வளவு அழகான தோள்கள், எவ்வளவு உறுதியான தொடைகள், எவ்வளவு திடமான புஜம், எத்தனை அழகான கண்கள், எல்லா பெண்களும் மயங்குகிற மார்பு, அத்தனை பெண்களும் மயங்குகின்ற சிரிப்பு என்று தசை, நரம்பு, எலும்பு குவியல்களை உடம்பாக கொண்டு, தோல் போர்த்திய இந்த பொருட்களை தான் என்று நினைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார்கள்...

பெண்கள் மயங்கினார்கள் என்பது ஒரு நாடகம்... பெண்களை மயக்க முடியும் என்று நினைத்துக் கொள்வது இன்னொரு நாடகம்... ஒன்றை ஒன்று மிஞ்சிய நாடகம் தான் தொடர்ச்சியாக நடக்கிறது.

காமம் என்பது காதலின் வளர்ச்சியாக, பிள்ளை பெறுதலின் முயற்சியாக, பரஸ்பர அன்பு பரிமாறலுக்காக, குடும்பம் என்கிற அமைப்பின் அஸ்திவாரமாக, குலம் என்கிற விஷயத்தின் நடைபாதையாக, இருக்கவேண்டுமே தவிர, காமத்தை பற்றி அலட்டிக்கொள்வதற்கு வேறு எதுவும் இல்லை.

மனித இனம் அறுபட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தால் தான் அது கவர்ச்சிகரமாக மனிதனுக்குள் படைக்கப்பட்டிருக்கிறது..

கல்பகோட காலங்கள் மனிதன் தொடர்ந்து பிறந்து, வளர்ந்து, உன்னதமான ஒரு நிலையை அடைய வேண்டும் என்ற கருணையின் காரணமாகத் தான் காமம், இனிப்பான, சுவையான, அனுபவித்தே தீர வேண்டிய அற்புதமாக, காவியமாக இருக்கிறது.

அழகிய பெண்கள் தான் முக்கியம் என்ற அலம்பலுக்குள் மனம் சிக்கிக்கொண்டால், இங்கே மனித இனத்தின் வளர்ச்சி பற்றிய மேன்மை இல்லை... இந்த சிந்தனைகள் இல்லாத ஒரு காரியத்தில் ஈடுபடுகிற போது அது மிக ஆபாசமாக இருக்கும்..

பாட்டும், கூத்தும் அற்புதம் தான்... ஆனால், அதை குடும்பத்தோடு அனுபவிக்கிறது உள்ளுக்குள்ளே மிகப்பெரிய ஆசுவாசத்தை, அன்பு தளும்பலை அது ஏற்படுத்துகிறது..

அங்கே பாட்டு உன்னதமான இருக்க வேண்டும் என்று அவசியம் கூட இல்லை... மிக சுமாரான பாட்டு கூட தேவகானமாக காதில் ஒலிக்கும்... குழந்தையின் மழலை கூட யாழ் போல, வீணை குழல் போல காதில் வந்து மோதும்.

பெற்ற பிள்ளைகளை மடியில் வைத்துக்கொண்டு, அதுகள் செய்யும் குறும்புகளை கணவன் பொறுத்துக்கொண்டு, புன்னகை செய்தால், மனைவி ஐயோ பாவம் என்று பரிதாபப்பட்டால், அது கொடுக்கும் கிளர்ச்சி மிக அற்புதம்....

குடும்பம் என்பது தர்மத்தின் பாற்பட்ட வாழ்க்கை... தர்ம/மே மனிதனின் நாகரீகம்... அதர்மம் அநாகரீகம்....

(இன்னமும் வரும்..........)

Sunday, October 16, 2011

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-1


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... சமீபகாலமாக நிறைய பாலகுமாரன் எழுத்துகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... /அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்திருப்பதால், நீங்கள் தொடர்ச்சியாக படித்தால் ஒரு கோர்வையாக இராது, மன்னிக்கவும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

பாலகுமாரன் காசிப்பயணம் சென்று வந்ததை பற்றி விளக்கிய ஒரு கேள்வி-பதிலில் சொன்னது :

வாழ்க்கை வெறும் பொருள்களால் நிரம்பியது மட்டுமல்ல, மனதின் பரிமாறலும் அங்கு முக்கியம். மனம் மிக வலிமையானதுஅது இருப்போர்க்கும் கொடுக்கும், இறந்தோர்க்கும் கொடுக்கும்

காசு சம்பாதிப்பது தர்மத்திற்குள் அடங்காது போயின், அதை செலவழிப்பதும் தர்மத்திற்குள் அடங்காது போகும் – “காசுமாலைநாவலில் பாலகுமாரன்

அடுத்தவருக்கு தான் எப்படி என்று காண்பித்துக் கொள்ள எதுவும் செய்யாமல் தன்னுடைய திருப்திக்காக செய்யும் போது தான் செய்கைகள் சீராகின்றனசெம்மையாகின்றனஇல்லையெனில், செய்யும் அனைத்து விஷயங்களுமே கேலிக்கூத்தாகவே முடியும்

ஸ்ரீகிருஷ்ணாவதாரம் :

பூமி என்பது வெறும் மண் மட்டுமல்ல.. பூமி என்பது நதி, கடல், மலை, தாவரங்கள்அதனூடே வளரும் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் மனிதர்கள். இவையெல்லாம் சேர்ந்த்து தான் பூமி

பூமி என்பது இவைகள் மட்டுமல்ல…. பூமி என்பது வெளியையும் தன்னகத்தே கொண்டிருக்கிறதுவெளி இல்லாது பூமி இல்லைவெளி பூமியோடு நெருங்கிய தொடர்பு கொண்டது

இந்த வெளி புனிதமானது, உயிர்ப்பானது. மனிதர்கள் மற்ற உயிரினங்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள இந்த வெளிதான் உதவி செய்கிறது.

வெளி இருந்தால் தான் ஒளி.. வெளி இருந்தால் தான் பார்வை.. வெளி இருந்தால் தான் ஒலி.. வெளி இருந்தால் தான் காற்று.. ஒளிபரவ, காற்று நடக்க, காற்றிலுள்ள ஒரு ஈரப்பதம் பூமியை குளிர்விக்க, ஒலி நடக்க ஒரு இடம் வேண்டுமல்லவாபூமி என்பது அந்த வெளியும் சேர்ந்தது

பூமியிலுள்ள மக்கள் ஏதுமறியா வெகுளிக்குழந்தைகளாக இருந்த போது பூமியால் வெளியும், வெளியால் பூமியும் மிகக் குளுமையாகவும், வலிமையாகவும், சாரமுள்ளதாகவும் இருந்தனபூமியிலுள்ள மக்கள் நாகரீகத்தின் பெயரால் வளர்ந்து, வளர்ந்து ஆத்திரமும், கோபமும், துரோகமும் செய்ய ஆரம்பித்த போது அந்த வெளியில் அழுகையும், அலறலும், கேவலும், குமுறலும், தடித்த வார்த்தைகளும், தவறான பேச்சுக்களும், அதனால் கோபமான சிந்தனைகளும் பொங்க ஆரம்பித்தது

விலங்கினங்கள் பகுத்தறிவு இல்லாததுஎது நல்லது, எது கெட்டது, எது தவறு, எது சரி என்று பகுத்தறிந்து பலபேர் சொன்னதைக் கேட்டு, கேட்ட்தையே பகுத்தறிந்து வாழ்வது தான் வாழ்க்கையார் சொல்வதையும் கேட்காமல், தானும் உட்கார்ந்து எது சரி என்று ஆராயாமல், வெறும் பதட்டத்திலேயே முடிவுகள் எடுக்கிற போது அவை தன்னை சுற்றியுள்ளோரின் சீரழிவுக்குக் காரணமாகிறதுஅந்தச் சீரழிவு தான் ஒன்று திரண்டு மிகப் பெரிய மாறுதலை பூமியில் கொண்டு வந்து சேர்க்கிறது

நல்ல புருஷனோடு மனம் நிறைந்து கலவியில் ஈடுபடுவது பெண்களுக்கு பெரும் பேறுஆனந்த மயமான நிறைவுஅதுபோல நுழைந்த கரு, கருப்பையில் மிகச் சரியாக தங்கிவிட்டது என்று உள்ளுணர்வு சொல்ல, உடம்பு அறிவுறுத்த, அதை உற்று கவனித்து அனுபவிப்பதும் மிகப் பெரிய பேறுஇதை பெண்களால் மட்டுமே உணர முடியும்

மனிதன் தன்னிலிருந்து பொங்கிப் பெருகிய நாகரீகத்துக்கு காரணம் எங்கும் நிறைந்த பரம்பொருளே, பெரும் சக்தியே என்பதை புரிந்து கொள்ளாது, தானே, தன் உடம்பே என்ற மமதையில் ஆள்கிறான்தன் புத்தியே என்ற எண்ணம் கொள்கிறான்அதுவே தன்னைக் காப்பாற்றுகின்றன என்று நினைத்துக் கொள்கிறான்இது கால மாறுபாடுகளின் போது ஏற்படுகின்ற ஒரு விஷயம்..

மனித வளர்ச்சியின் உச்சியிலிருந்து கிளம்பிய நாகரீகத்தின் வேகத்தை மனிதனால் தாங்க முடியவில்லைஅவர் சரியத் துவங்குகிறான்தன்னிலிருந்து வளர்ந்த அவனுடைய நாகரீகமே அவனை அழிக்க துவங்குகிறது

எந்த உணவை எப்படி உண்பது என்பது இங்கு முக்கியமல்லஎல்லா உணவுமே தர்மத்திற்கு உகந்தவை தான்.. ஆனால், பிறர் உணவை பறிப்பது மட்டும் தான் அதர்மமானதுஅது தான் அழிவுக்கு வழிகோலாகிறதுஅழிவு என்பது அகம்பாவத்தினால் ஏற்படுகிறதுஎல்லா அகம்பாவங்களும் அழிவதற்கான ஆரம்ப கட்டங்கள்

உலகத்தில் எது தர்மம், எது அதர்மம் என்று எல்லாருக்கும் தெரியும்அப்படி உணர்ந்த பிறகும் தர்மத்தை அதர்மம் என்றும், அதர்மத்தை தர்மம் என்றும் சொல்லிக் கொள்ள மனிதர்கள் தொடர்ந்து துணிந்து முயல்வார்கள்மனிதர்களில் அதர்மத்தை தர்மம் என்று சொல்லிக் கொள்வோர் அதிகரிக்கும் பொழுது, இல்லை இதுவே தர்மம் என்று நிலை நிறுத்த இறைவன் அவதரிப்பது வழக்கம்

ஆத்மம் என்பது பிரபஞ்ச சக்திபிரபஞ்ச சக்தியே ஆத்மம்

தான் ஆத்மம் என்பதை மறந்து விட்டு, தன்னுடைய தசைகளை, நரம்புகளை, எலும்புகள, பற்களை, சுவாசத்தை, குரலை, உணவை, படைகளை, தேசத்தை தான் என்று மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான்

தன்னை உடம்பாக கருதிய அத்தனைப் பேருக்கும், பயம் தான் பிரதானம்நான் உடம்பு இல்லை என்று எவர் உதறினாரோ, அவருக்கு பயத்தையும் உதற முடியும்..

நான் யார், உண்மையில் என் நிலை எது என்று விசாரித்தவருக்கு தான் ஆத்மாவின் சாட்சாத்காரம் புரியும்ஆத்மாவின் இருப்பு அறிய முடியும்தன்னை அறிந்தவர் மரணத்தை கண்டு அஞ்சாமல் வரவேற்கிறார்

கொடுமையாளர்கள் விரைவில் அழிவதற்கு அவர்களின் கொடுமை தான் காரணம்அவர்கள் கொடுமையின் உச்சக்கட்டத்துக்கு வேகமாக போக, வெகு விரைவில் அவர்களுக்கு முடிவு வந்து விடுகிறதுகொடுமையாளர்கள் கொடுமைக்கு வேகமாக போவதற்கு அவர்களுடைய பயமே காரணம்

அவர்களுடைய பயத்திற்கு, தான் மட்டுமே இந்த உலகத்தில் நலமாக வாழ வேண்டும் என்ற சுயநலம் காரணம்வறுமையில் வாடுபவர்களையும், உழைப்பையே நம்பி இருப்பவர்களையும், தர்மத்தை கடைப்பிடிப்பவர்களையும், எவருக்கும் தீங்கு எண்ணக்கூடாது என்று வாழ்கின்ற சாதுக்களையும் இந்த கொடுமையாளர்கள் தங்கள் முக்கிய எதிரிகளாக நினைப்பார்கள்

வலுவில்லாத ஒரு இட்த்திலிருந்து தான் வலுவுள்ளவன் வந்து விடுவான் என்று பயப்படுவார்கள்

தைரியமுள்ளவனை, ஆயுதமுள்ளவனை, படையெடுத்து வருபவனை அவர்கள் சந்தோஷமாக எதிர்கொள்வார்கள்அவர்கள் பயப்படுவது, எவர் தனக்கு எதிரி இல்லை என்று ஒதுங்கி நிற்கிறார்களே அவர்களை கண்டே அதிகம் கலவரப்படுகிறார்கள்

மனித வாழ்க்கைக்கு மிஞ்சி, மனித பலத்திற்கு மிஞ்சி மிகப் பெரிய பலம் கொண்டது இயற்கைஅது தன்னுடைய இஷ்ட்த்திற்கு ஆடும், அந்த இயற்கைக்கு மேலாக இருக்கின்ற ஒரு சக்தி, அந்த இயற்கையை எல்லாம் ஆட்டி வைக்கின்ற சக்தி பூமிக்கு வந்து குழந்தையாக பிறந்தால், அது ஆடுகின்ற ஆட்டமும்மின்னலை போல, சூறாவளியை போல, பொங்கும் கடலை போல, சீறும் எரிமலையை போல, வேகமாகத் தான் இருக்கும்..

(தொடரும்.......)

Friday, August 12, 2011

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்....


தாயின் மணிக்கொடி பாரீர்

இதை போற்றி புகழ்ந்திட வாரீர்.


வெள்ளையன் பிடியில் இருந்து நாட்டை மீட்க

அன்று சிந்திய பலரின் குருதி

கொடியின் மேலே ஆனது காவி

உல‌கின் இக்க‌ண தேவை சமாதான‌ம்

அதை உண‌ர்த்தும் விதமாய்

கொடியின் ந‌டுவில் இருக்கும் வெண்மை

பஞ்சம், பட்டினி கொடுமையை போக்கி

பசுமையாய் ஆக்குவோம் நாட்டை

இதை உண‌ர்த்த‌வே கொடியின் கடைசியில் பச்சை


இடையில் உள்ள சக்கரம் போல்

ஓயாமல் சுற்றி (உழைத்து) கொண்டிருந்தால்

உன் வாழ்வும் உயர்வு பெறும்

நம் நாடும் வளம் பெறும்


இன்றைய இந்தியா இதை உண‌ருமா?

கிறங்கிய விழிகள், உலகை மறந்த நிலை

இன்று புலர்ந்த‌ பொழுதும் வீண்

நிகழ்கால நிகழ்வுகள், எதிர்கால கனவுகள்

அனைத்தும் கருகிய நிலை


விதவிதமான போதையின் பிடியில் இந்தியா

தூக்கி நிமிர்த்த வேண்டிய இளைஞர்கள்

போதையின் பிடியில் சுருண்டு....

அஹிம்ஸையின் வழியே சுதந்திரம் பெற்ற

அண்ணல் காந்தி கூட இன்றைய நிலை கண்டால்

கையில் எடுப்பார் ஏதாவதொரு ஆயுதம்....


நம் இன்றைய தேவை என்ன?

ஒற்றுமை வாழ்வும், கடின உழைப்பும்

கடுகு அளவுள்ள எறும்பே அதன்

உழைப்பை நம்பி வாழும்போது

மலையளவுள்ள மனிதா - நீயும்

உன் உழைப்பை ந‌ம்பி வாழ்ந்து பார்

சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல்

நீயும் சோம்பலில் இருந்து எழுந்து உழை


குடியை கெடுக்கும் குடியை தவிர்

மனதை கெடுக்கும் மதுவை மற

சீரிய சிந்தனையை உள்ளத்தில் நிறுத்து

வாடிய அனைவரையும் அள்ளி அணைத்து

கனிவான மனதுடன் அன்பு செலுத்து

பொழுதுபோக்கை குறைத்தால்

நம் வாழ்வு சிறக்கும்....


ஜெய் ஹிந்த்.....


உலகில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..