Sunday, October 16, 2011

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-1


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... சமீபகாலமாக நிறைய பாலகுமாரன் எழுத்துகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... /அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்திருப்பதால், நீங்கள் தொடர்ச்சியாக படித்தால் ஒரு கோர்வையாக இராது, மன்னிக்கவும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

பாலகுமாரன் காசிப்பயணம் சென்று வந்ததை பற்றி விளக்கிய ஒரு கேள்வி-பதிலில் சொன்னது :

வாழ்க்கை வெறும் பொருள்களால் நிரம்பியது மட்டுமல்ல, மனதின் பரிமாறலும் அங்கு முக்கியம். மனம் மிக வலிமையானதுஅது இருப்போர்க்கும் கொடுக்கும், இறந்தோர்க்கும் கொடுக்கும்

காசு சம்பாதிப்பது தர்மத்திற்குள் அடங்காது போயின், அதை செலவழிப்பதும் தர்மத்திற்குள் அடங்காது போகும் – “காசுமாலைநாவலில் பாலகுமாரன்

அடுத்தவருக்கு தான் எப்படி என்று காண்பித்துக் கொள்ள எதுவும் செய்யாமல் தன்னுடைய திருப்திக்காக செய்யும் போது தான் செய்கைகள் சீராகின்றனசெம்மையாகின்றனஇல்லையெனில், செய்யும் அனைத்து விஷயங்களுமே கேலிக்கூத்தாகவே முடியும்

ஸ்ரீகிருஷ்ணாவதாரம் :

பூமி என்பது வெறும் மண் மட்டுமல்ல.. பூமி என்பது நதி, கடல், மலை, தாவரங்கள்அதனூடே வளரும் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் மனிதர்கள். இவையெல்லாம் சேர்ந்த்து தான் பூமி

பூமி என்பது இவைகள் மட்டுமல்ல…. பூமி என்பது வெளியையும் தன்னகத்தே கொண்டிருக்கிறதுவெளி இல்லாது பூமி இல்லைவெளி பூமியோடு நெருங்கிய தொடர்பு கொண்டது

இந்த வெளி புனிதமானது, உயிர்ப்பானது. மனிதர்கள் மற்ற உயிரினங்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள இந்த வெளிதான் உதவி செய்கிறது.

வெளி இருந்தால் தான் ஒளி.. வெளி இருந்தால் தான் பார்வை.. வெளி இருந்தால் தான் ஒலி.. வெளி இருந்தால் தான் காற்று.. ஒளிபரவ, காற்று நடக்க, காற்றிலுள்ள ஒரு ஈரப்பதம் பூமியை குளிர்விக்க, ஒலி நடக்க ஒரு இடம் வேண்டுமல்லவாபூமி என்பது அந்த வெளியும் சேர்ந்தது

பூமியிலுள்ள மக்கள் ஏதுமறியா வெகுளிக்குழந்தைகளாக இருந்த போது பூமியால் வெளியும், வெளியால் பூமியும் மிகக் குளுமையாகவும், வலிமையாகவும், சாரமுள்ளதாகவும் இருந்தனபூமியிலுள்ள மக்கள் நாகரீகத்தின் பெயரால் வளர்ந்து, வளர்ந்து ஆத்திரமும், கோபமும், துரோகமும் செய்ய ஆரம்பித்த போது அந்த வெளியில் அழுகையும், அலறலும், கேவலும், குமுறலும், தடித்த வார்த்தைகளும், தவறான பேச்சுக்களும், அதனால் கோபமான சிந்தனைகளும் பொங்க ஆரம்பித்தது

விலங்கினங்கள் பகுத்தறிவு இல்லாததுஎது நல்லது, எது கெட்டது, எது தவறு, எது சரி என்று பகுத்தறிந்து பலபேர் சொன்னதைக் கேட்டு, கேட்ட்தையே பகுத்தறிந்து வாழ்வது தான் வாழ்க்கையார் சொல்வதையும் கேட்காமல், தானும் உட்கார்ந்து எது சரி என்று ஆராயாமல், வெறும் பதட்டத்திலேயே முடிவுகள் எடுக்கிற போது அவை தன்னை சுற்றியுள்ளோரின் சீரழிவுக்குக் காரணமாகிறதுஅந்தச் சீரழிவு தான் ஒன்று திரண்டு மிகப் பெரிய மாறுதலை பூமியில் கொண்டு வந்து சேர்க்கிறது

நல்ல புருஷனோடு மனம் நிறைந்து கலவியில் ஈடுபடுவது பெண்களுக்கு பெரும் பேறுஆனந்த மயமான நிறைவுஅதுபோல நுழைந்த கரு, கருப்பையில் மிகச் சரியாக தங்கிவிட்டது என்று உள்ளுணர்வு சொல்ல, உடம்பு அறிவுறுத்த, அதை உற்று கவனித்து அனுபவிப்பதும் மிகப் பெரிய பேறுஇதை பெண்களால் மட்டுமே உணர முடியும்

மனிதன் தன்னிலிருந்து பொங்கிப் பெருகிய நாகரீகத்துக்கு காரணம் எங்கும் நிறைந்த பரம்பொருளே, பெரும் சக்தியே என்பதை புரிந்து கொள்ளாது, தானே, தன் உடம்பே என்ற மமதையில் ஆள்கிறான்தன் புத்தியே என்ற எண்ணம் கொள்கிறான்அதுவே தன்னைக் காப்பாற்றுகின்றன என்று நினைத்துக் கொள்கிறான்இது கால மாறுபாடுகளின் போது ஏற்படுகின்ற ஒரு விஷயம்..

மனித வளர்ச்சியின் உச்சியிலிருந்து கிளம்பிய நாகரீகத்தின் வேகத்தை மனிதனால் தாங்க முடியவில்லைஅவர் சரியத் துவங்குகிறான்தன்னிலிருந்து வளர்ந்த அவனுடைய நாகரீகமே அவனை அழிக்க துவங்குகிறது

எந்த உணவை எப்படி உண்பது என்பது இங்கு முக்கியமல்லஎல்லா உணவுமே தர்மத்திற்கு உகந்தவை தான்.. ஆனால், பிறர் உணவை பறிப்பது மட்டும் தான் அதர்மமானதுஅது தான் அழிவுக்கு வழிகோலாகிறதுஅழிவு என்பது அகம்பாவத்தினால் ஏற்படுகிறதுஎல்லா அகம்பாவங்களும் அழிவதற்கான ஆரம்ப கட்டங்கள்

உலகத்தில் எது தர்மம், எது அதர்மம் என்று எல்லாருக்கும் தெரியும்அப்படி உணர்ந்த பிறகும் தர்மத்தை அதர்மம் என்றும், அதர்மத்தை தர்மம் என்றும் சொல்லிக் கொள்ள மனிதர்கள் தொடர்ந்து துணிந்து முயல்வார்கள்மனிதர்களில் அதர்மத்தை தர்மம் என்று சொல்லிக் கொள்வோர் அதிகரிக்கும் பொழுது, இல்லை இதுவே தர்மம் என்று நிலை நிறுத்த இறைவன் அவதரிப்பது வழக்கம்

ஆத்மம் என்பது பிரபஞ்ச சக்திபிரபஞ்ச சக்தியே ஆத்மம்

தான் ஆத்மம் என்பதை மறந்து விட்டு, தன்னுடைய தசைகளை, நரம்புகளை, எலும்புகள, பற்களை, சுவாசத்தை, குரலை, உணவை, படைகளை, தேசத்தை தான் என்று மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான்

தன்னை உடம்பாக கருதிய அத்தனைப் பேருக்கும், பயம் தான் பிரதானம்நான் உடம்பு இல்லை என்று எவர் உதறினாரோ, அவருக்கு பயத்தையும் உதற முடியும்..

நான் யார், உண்மையில் என் நிலை எது என்று விசாரித்தவருக்கு தான் ஆத்மாவின் சாட்சாத்காரம் புரியும்ஆத்மாவின் இருப்பு அறிய முடியும்தன்னை அறிந்தவர் மரணத்தை கண்டு அஞ்சாமல் வரவேற்கிறார்

கொடுமையாளர்கள் விரைவில் அழிவதற்கு அவர்களின் கொடுமை தான் காரணம்அவர்கள் கொடுமையின் உச்சக்கட்டத்துக்கு வேகமாக போக, வெகு விரைவில் அவர்களுக்கு முடிவு வந்து விடுகிறதுகொடுமையாளர்கள் கொடுமைக்கு வேகமாக போவதற்கு அவர்களுடைய பயமே காரணம்

அவர்களுடைய பயத்திற்கு, தான் மட்டுமே இந்த உலகத்தில் நலமாக வாழ வேண்டும் என்ற சுயநலம் காரணம்வறுமையில் வாடுபவர்களையும், உழைப்பையே நம்பி இருப்பவர்களையும், தர்மத்தை கடைப்பிடிப்பவர்களையும், எவருக்கும் தீங்கு எண்ணக்கூடாது என்று வாழ்கின்ற சாதுக்களையும் இந்த கொடுமையாளர்கள் தங்கள் முக்கிய எதிரிகளாக நினைப்பார்கள்

வலுவில்லாத ஒரு இட்த்திலிருந்து தான் வலுவுள்ளவன் வந்து விடுவான் என்று பயப்படுவார்கள்

தைரியமுள்ளவனை, ஆயுதமுள்ளவனை, படையெடுத்து வருபவனை அவர்கள் சந்தோஷமாக எதிர்கொள்வார்கள்அவர்கள் பயப்படுவது, எவர் தனக்கு எதிரி இல்லை என்று ஒதுங்கி நிற்கிறார்களே அவர்களை கண்டே அதிகம் கலவரப்படுகிறார்கள்

மனித வாழ்க்கைக்கு மிஞ்சி, மனித பலத்திற்கு மிஞ்சி மிகப் பெரிய பலம் கொண்டது இயற்கைஅது தன்னுடைய இஷ்ட்த்திற்கு ஆடும், அந்த இயற்கைக்கு மேலாக இருக்கின்ற ஒரு சக்தி, அந்த இயற்கையை எல்லாம் ஆட்டி வைக்கின்ற சக்தி பூமிக்கு வந்து குழந்தையாக பிறந்தால், அது ஆடுகின்ற ஆட்டமும்மின்னலை போல, சூறாவளியை போல, பொங்கும் கடலை போல, சீறும் எரிமலையை போல, வேகமாகத் தான் இருக்கும்..

(தொடரும்.......)

14 comments:

Rekha raghavan said...

நானும் பாலகுமாரன் ரசிகன். அவரின் அருமையான எழுத்துக்களை பகிரும் உங்களின் அணுகுமுறை புதுமை மற்றும் அருமை. பாராட்டுகள்.

பெசொவி said...

பாலகுமாரன் எனக்கும் பிடித்த எழுத்தாளர். தொடரட்டும் உங்கள் பணி!

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தரமான தொகுப்பு.
அடுத்த பாகம் எப்ப?

R.Gopi said...

பதிவிற்கு வருகை தந்து, பதிவை படித்து, கமெண்டிய :

ரேகா ராகவன்
பெ.சொ.வி.
இராஜராஜேஸ்வரி
நிஜாமுதீன்

உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி... இந்த தொடர் இறையருளால் பெரிய அளவில் வருமென்று தெரிகிறது...

aotspr said...

மிகவும் அருமையான பகிர்வு.......


நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

படுக்காளி said...

சூப்பர்....

உங்களிடமிருந்து இரவல் வாங்கி பாலகுமாரனை வாசிக்கும் பாக்கியம் எனக்கு உண்டு.

பாலகுமாரன் புத்தகம் வாசிக்கும் போது, தங்களுக்கு பிடித்த பகுதிகளை பேனாவில் கோடு போட்டு, பின் ஒரு சமயத்தில் வாசிக்க ஏதுவாக நீங்கள் செய்யும் பழக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

நீங்கள் ரசித்ததை நானும் ரசித்து மகிழ்ந்து இருக்கிறேன். அதையே டைப் செய்து பதிவாக்குவதால் மிகவும் நேர்த்தியாக உள்ளது.

தொடரட்டும்... பர்ஸ்ட் கிளாஸ்....

R.Gopi said...

நன்றி கண்ணன்... தொடராக வரவிருக்கிறது... தொடர்ந்து படித்து கமெண்டுங்கள்...

லாரன்ஸ் ஜி...

தொடர்ந்து படியுங்கள் ஜி... இது பெரிய அளவிலான தொடராக வரும் என்று நினைக்கிறேன்...

Vairavan said...

திரு. பாலகுமாரன் அவர்களின் எழுத்துக்கள் சத்தியமானவை. மிகுந்த உற்சாகம் கொடுப்பவை. அவரின் கதைகளை விட கட்டுரைகள் எனக்கு மிக பிடிக்கும்.


உங்களை இந்த பதிவு தொடர வேண்டும் . வாழ்த்துக்கள்.

R.Gopi said...

திரு.வைரவன்..

அவரின் எழுத்துகளை வாசிக்க ஆரம்பித்த பின் தான் எனக்கும் தோழமை லாரன்ஸ் அவர்களுக்கும் வாழ்வின் பல விஷயங்களுக்கு அர்த்தம் புரிய ஆரம்பித்தது... தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்...

தொடர்ந்து இணைப்பில் இருங்கள், ஆதரவு தாருங்கள்...

ஷைலஜா said...

அருமையான பதிவு கோபி
பாலகுமாரன் சுஜாதாவைப்போல எழுத்துலகில் பலரைத்திரும்பிப்பார்க்கவைத்தவர்.

R.Gopi said...

//ஷைலஜா said...
அருமையான பதிவு கோபி
பாலகுமாரன் சுஜாதாவைப்போல எழுத்துலகில் பலரைத் திரும்பிப் பார்க்கவைத்தவர்.//

ஷைலஜா மேடம்... வாங்கோ.. வாங்கோ... எவ்ளோ நாளாச்சு...

இது தான் ஆரம்பம் மேடம்... தொடர்ந்து படித்து வாருங்கள், கருத்து பகிருங்கள்....

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துகள்.,

உங்களைப்போலவே நோட்டில் எழுதி வைத்திருந்தேன். அவசியம் படிக்கவேண்டியவை சுஜாதா, பாலகுமாரன் இருவரின் எழுத்துகளும்:)
பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

பாலகுமாரன் எனக்கும் பிடித்த எழுத்தாளர்அவரின் 50 க்கும் மேற்பட்ட நாவல்களை வாசித்து இருக்கிறேன்.ஆனால் தற்போது ஒன்றும் இங்கே கிடைப்பதில்லை.உங்கள் மூலமாக அவரின் எழுத்துக்களை படிப்பதில் ஒரு மகிழ்ச்சி.தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துக்கள்.