Sunday, September 27, 2009

அண்ணா விருது.... (இது நீங்கள் நினைப்பது போல் இல்லை...வித்தியாசமான விருது)






அண்ணா விருது.... (இது நீங்கள் நினைப்பது போல் இல்லை...வித்தியாசமான விருது)

(இது இந்த நேரத்திற்கான பதிவு அல்ல... இருந்தாலும், படித்து மகிழுங்களேன்...)

அன்பு உடன்பிறப்பே... இந்த அவனியில் நீ வாங்க முடியாதது துவரம்பருப்பே... போன்ற "ஜல்லி"யெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு எழுதப்பட்ட ஒரு வித்தியாசமான பதிவு இது...

ஆகவே, தலைப்பை பார்த்து விட்டு கழக கண்மணிகள், சமீபத்தில் நம்ம "தல" வாங்கின அந்த "அண்ணா விருது" பற்றிய பதிவோ என்று உள்ளே வந்து ஏமாற வேண்டாம் என்று எங்கள் சங்கத்தின் (தலைப்பு மாற்றி போட்டு ஏமாற்றுவோர் சங்கம்) சார்பாக கேட்டுக்கொள்கிறேன்...

இது... காலேஜ் படிக்கும் போது, திரிஷா, பிரியாமணி (தகரத்தில் உப்பு காகிதம் வைத்து தேய்த்தது போன்ற குரல் உடையவர்) போன்று அழகும், பி.சுசிலா போன்ற குயிலின் குரலும் கொண்ட (இப்படி அழகு, நல்ல குரல்வளம் ரெண்டும் சேர்ந்து இருக்கற பெண்களை பார்க்கறது ரொம்ப ரேர் இல்ல...) பசுங்கிளிகள், பாசப்பறவைகள் ("தல"யின் பாசப்பறவைகள் அல்ல...), உடன் வகுப்பில் அல்லது அதே காலேஜில் படிக்கும் நம்மை பார்த்து, மயக்கும் புன்னகையை அள்ளி தெளித்து, கையசைத்து அழைத்து, பின் நமக்கு கொடுக்கும் விருது(ரக்ஷா பந்தன்)...

இந்த விருதை இதுவரை சந்தோஷத்துடன் எந்த இளைஞனும் வாங்கியதாக சரித்திரம், பூகோளம், அறிவியல் இல்லை.....

நாம் அனைவரும், ஏதாவதொரு காலகட்டத்தில் இந்த சிறந்த "அண்ணா விருதை" வாங்காமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.... வாங்கிய அனைவரும் அழுமூஞ்சி "அண்ணாக்கள்" ஆனதையும் மறப்பதற்கில்லை...

இந்த பதிவின் மூலம், "அண்ணா விருது" வாங்கிய அனைவரும், ஒன்று கூடி வந்து கும்மியில் கலந்து கொண்டு, தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.....

அண்ணா விருது வாழ்க
இதை அள்ளி தந்த அழகு, தங்க மங்கையர்கள் வாழ்க
விருதை வாங்கி நொந்து போன கட்டிளம் காளைகள் வாழ்க.......

(பின் குறிப்பு : "அண்ணா விருது" வாங்கிய தங்க தம்பிகள், அழாமல் வந்து ஒருவருக்கொருவர் ஆறுதலும், தேறுதலும் சொல்லலாம்...என்று எங்கள் மற்றொரு சங்கத்தின் (தான் அழுதாலும், அழும் மற்றவர்களை தேற்றுவோர் சங்கம்)சார்பாக கூறிக்கொள்கிறேன்...

Friday, September 25, 2009

ப‌த்தினி....


மாலினி, நீ எனக்கு துரோகம் பண்ணுவேன்னு நான் கனவுல கூட நெனச்சு பாத்ததில்ல......என்று ஆவேசமாய் பாய்ந்து அவள் கழுத்தை பிடித்தான் வினோத்....

ஹக்..ஹ்ம்ம்..திக்கி திணறி..... நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க வினோத்.... நீங்க நெனைக்கற மாதிரி எதுவும் நடக்கல என்றாள் மாலினி.
இன்னும் என்ன நடக்கணும்.... அதான் இப்போ நானே நேர்ல பாத்துட்டேனே... இனிமேலும் நீ சொல்றத நம்பறதுக்கு நான் ஒண்ணும் முட்டாள் இல்லை.... நீயும் ஒன்னோட பாஸும் ஆபீசில தான் ஒண்ணா கூத்து அடிச்சீங்க....ஆனா, இப்போ நான் ஊருக்கு போயிருக்கேன்ற தைரியத்துல நம்ம பெட்ரூம்லையே நடக்குதே?

நான் டூர் போயிட்டு ஒரு நாள் முன்னாடியே வரலேன்னா, நீங்க பண்ற இந்த அராஜகம் எனக்கு தெரியாமலேயே போயிருக்கும்...என்றான் வினோத்....

சீ... உங்க விபரீத கற்பனையை கொஞ்சம் நிறுத்தறீங்களா?? என்னோட பாஸ் அஷோக் ஈஸ் ஜெம் ஆப் எ பர்சன். நான் உங்களோட காதல் மனைவி.... எங்க மேல இப்படி அபாண்டமா பழிபோடறதுக்கு ஒங்களுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ? என்று கண்ணீரோடு மாலினி சொன்னாள்.

சாயங்காலம் என்ன நடந்துதுன்னா, இன்னிக்கி ஆபீஸ்ல இருந்து கெளம்பும்போது என்னோட வண்டி ரிப்பேர் ஆயிடுச்சு..... நம்ம முருகன் மெக்கானிக் ஷெட்டுக்கு ஃபோன் பண்ணி, வண்டிய சர்வீஸீக்கு குடுத்துட்டு ஆட்டோல வீட்டுக்கு வர்றதா தான் ப்ளான்... அப்போதான், நான் ஆட்டோக்கு வெயிட் பண்றத பாத்துட்டு, அசோக் என்ன வீட்டுல டிராப் பண்றேன்ன்னு சொன்னார்.

சரி, இவ்ளோ தூரம் வந்தாரே, ஒரு காபி சாப்பிட்டு போங்கன்னு சொல்லி, நான்தான் அவர உள்ள கூட்டிட்டு வந்தேன்.... மொத மொதல்ல நம்ம வீட்டுக்கு வந்தவர், நம்ம கல்யாண ஆல்பம் பாக்கணும்னு சொன்னார்....

உடனே, பெட்ரூம் அலமாரில ஆல்பம் இருக்கறத காட்டறதுக்கு பெட்ரூம் வரைக்கும் வந்தேன்.....அவர் ஆல்பம் எடுத்தார்.... அத எடுத்துட்டு வெளில வரும்போது தான், நீங்க கரெக்டா வீட்டுக்குள்ள வந்தீங்க..... போதுமா, இதுதான் நடந்தது என்றாள் மாலினி.

சரிதான் நிறுத்துடி .... அழுதோ, சத்தம் போட்டோ ஒரு விஷயத்த சொன்னா நீ "பத்தினி" ஆயிடுவியா? உன்மேல எனக்கு ரொம்ப நாளாவே சந்தேகம் இருந்தது....

நெறைய பேரு என்கிட்டே கூட அரசால் புரசலா சொல்லி இருந்தாங்க. அப்போல்லாம் நான் நம்பல, இன்னிக்கு நானே நேர்ல பார்த்தப்போ, அது சரிதான்னு ஆயிடுச்சு......

இனிமே, இந்த வீட்டுல இல்ல, இந்த உலகத்துல இருக்கறதுக்கு கூட உனக்கு தகுதி இல்ல.... உன்ன போல பொண்ணுங்களுக்கு எல்லாம், இந்த தண்டனைதான் சரி, இன்னிக்கோட உன் கதைய முடிச்சுடறேன் என்றபடி பாய்ந்து அவள் கழுத்தை இறுக்கினான்.....

இவ்வளவு நேரம் அமைதியாக அங்கு நடந்தவற்றை அமைதியாக பார்த்து கொண்டிருந்த அசோக், பாய்ந்து வந்து, சார்... நான் சொல்றத கேளுங்க என்றவாறு வினோத்தின் கையை விலக்க முயற்சித்தான்.....

***********

"பத்தினி" - ஸ்பான்ஸர்ட் பை........... என்று விளம்பரதார்களின் பெயர்களை தொலைக்காட்சி கூவி கொண்டிருந்தது....

Sunday, September 20, 2009

கருப்பு தங்கம் பிறந்தநாள் / ஆயில் தோன்றிய கதை...


கருப்பு தங்கம் (கேப்டன் விஜயகாந்த் அல்ல...அவர் "சொக்கத்தங்கம்") என்பது ஆயிலுக்கு கொடுக்கப்பட்டுள்ள செல்ல பெயர் என்பது உங்களுக்கு தெரியுமா??

இன்று உலகமே ஆயில் என்ற அந்த மூன்றெழுத்து மந்திர வார்த்தையால் தான் ஓடுகிறது. இங்கு ஆயில் என்பதை வாகனங்கள் ஓட பயன்படும் எண்ணை (பெட்ரோல், டீசல்...) என்பதாக பொருள் கொள்க...

கருப்பு தங்கத்தின் நூற்றைம்பது வைர ஆண்டுகள்...இதோ உங்கள் பார்வைக்கு...

27 ஆகஸ்ட் 1859

"Colonel' Edwin Drake gathers oil using a pioneering drilling technique.

1870

Stanford Oil is founded by John D Rockfeller. The firm is later dismantled by the US Government - its fragments would become the oil giants Exxon, Mobil and Chevron.

1886

The automobile is invented by Gottileb Daimler and Karl Benz.

1901

Oil is discovered in Texas.

1907

Shell and Royal Dutch merge.

1908

The Anglo-persian Oil Company is created, later known as BP

1908

Compagnie franchise des Petroles forms, later became Total

1912

The first gasoline station in the US opens in Cincinnati.

1914

Oil discovered in Venezula.

1927

Oil is discovered in Kirkuk, Iraq.

1936

Search of Oil in the UAE begins.

1938

Mexico nationalises oil assets, creating the state-run giant, Permex.

1938

Oil is discovered in Saudi Arabia and Kuwait.

1951

Iran nationalises the Anglo-Iranian Oil Company. It is restored in 1953 after a US and British-backed coup.

1958

Oil is discovered in Abu Dhabi.

1960

OPEC is created, with Iran, Iraq, Kuwait, Saudi Arabia and Venezula as founding members. BTW, what is OPEC - ORGANIZATION OF PETROLEUM EXPORTING COUNTIRES.

1973

Arab members of OPEC announce an oil embargo in response to US support for Israel during Yom Kippur war. The embargo prompts brownouts in the US, long waits for gasoline for cars and a dramatic spike in oil prices.

1979

The Islamic Revolution in Iran prompts a renewed spike in oil prices, with barrel prices rising over $20.

1989

The Exxon Valdez spills millions of gallons of oil off the coast of Alaska. The spill has a devastating environmental impact.

1990

Oil Prices reach $40 a barrel ahead of the first Gulf War.

2008

In January, oil prices briefly touch the psychological marker of $100 a barrel amid violence in Nigeria, tension between the US and Venezula and a jittery stock market.

In July continued tensions in Nigeria and Iran, along with a weakened dollar push the price of oil to $147.27 a barrel in New York trading - an all-time high.

In December, the price of oil plummets to $32 a barrel as the global economic slowdown hits.

(Source : 7 DAYS issue dated 03rd September 2009)..

இந்த ஆயிலுக்கு மாற்றாக எரிபொருள் ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சி உலகெங்கும், அசுர வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது... யார் கண்டுபிடிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.. அப்படி, ஆயிலுக்கு ஒரு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டால், அது இந்த நூற்றாண்டின் மிக பெரிய கண்டுபிடிப்பாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை...

Tuesday, September 15, 2009

க.....கா....ப.....அ......பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

க.....கா....ப.....அ......பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

இந்தத் தொடரை என்னை எழுத அழைத்தது அருணா மேடம்.....


காதல் மனிதனுக்கு அவசியமா?

காதல் ....................அவசியம்தான்... காத‌ல் இல்லாத‌ வாழ்க்கை உப்பில்லாத‌ ப‌ண்ட‌ம் போல‌... வாழ்க்கை ந‌ம் முன் இருக்கும்...ஆனால், ருசிக்காது...

அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?

உல‌கினில் எதுவும் நிரந்த‌ர‌மில்லை என்று உணர்ந்த‌வ‌ர்க‌ள், அழகும் நிர‌ந்த‌ர‌மில்லை என்பார்க‌ள்...

பணம் அவசியமா?

ப‌ண‌ம்... க‌ண்டிப்பாக‌ ஒவ்வொருவ‌ர் வாழ்விலும் அவ‌சிய‌மான‌ ஒன்று... ஆனால், அதை தேடும் முய‌ற்சியில் வாழ்வை தொலைத்து விடக்கூடாது...அருள் இல்லார்க்கு இவ்வுல‌கு இல்லை... பொருள் இல்லாதார்க்கு எவ்வுல‌கும் இல்லை என்ப‌து வ‌ள்ளுவ‌ன் வாக்கு...

கடவுள் உண்டா?

க‌ட‌வுள் உண்டு என்ப‌தே கண்டறிந்த பெரிய, பெரிய‌ ஞானிக‌ளின் கூற்று.. நாமும் எப்போது இரை தேடிக்கொண்டேதான் இருக்கிறோம்... அத‌னூடே சிறிது இறையையும் தேடுவோம்... ஒரு நாள் க‌ண்டிப்பாக‌ அவ‌ன் இருப்ப‌தை உண‌ருவோம்... இதைப்ப‌ற்றி நான் "வாழ்க்கை" என்ற‌ ஒரு தொட‌ரில் விரிவாக‌ அல‌ச‌ இருக்கிறேன்..

அழகு,காதல்,பணம், கடவுள்?

இவைகளைப் பற்றிய உங்களின் நிலையென்ன? என்பதுதான் தொடரின் நோக்கம். இந்த தொடரின் விதிப்படி என்னை தொடர்ந்து ஐவரை இந்த தொடருக்கு அழைப்பது. இதோ அந்த ஐவரை அழைத்துவிடுகிறேன்!!!!

அருண் (குற‌ட்டை அர‌ங்க‌ம்)

லார‌ன்ஸ் (ப‌டுக்காளி)

பாச‌கி

அருண் (வால்பைய‌ன்)

செல்ல‌துரை (இத‌ய‌மே)

"தலை"வர்களே... ரவுண்டு கட்டி அடிக்க தயாராகுங்கள்...

Friday, September 11, 2009

"எந்திரன்" ரஜினிகாந்த் நேர்காணல், பரபரப்பு தகவல்கள்


சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரு அதிரடி நேர்காணல்..

இன்றைய நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அகில உலக புகழ் பெற்ற அதிரடி நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வணக்கம் கூறி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்..

கண்ணா... இது ரொம்ப ஜாஸ்தியா சொல்றீங்க... நான் பாட்டுக்கு "சுல்தான்", "எந்திரன்" அப்டின்னு சின்ன சின்ன படங்கள் பண்ணிட்டு ஓரமா போயிட்டு இருக்கேன்.. நீங்க என்ன ரொம்ப உயரத்துக்கு தூக்கி போகாதீங்க...பயமா இருக்கு...

சார்... நீங்கதான் இன்னிக்கு உலகத்துலயே ரொம்பவும் மதிக்கப்படற சூப்பர் ஸ்டார், உங்க முன்னாடி மத்தவங்க எல்லாம் வெறும் போர்...

கண்ணா... என்ன பத்தி புகழ்ச்சியா சொல்லணும்னா, என் முதுகுக்கு பின்னாடி போயி சொல்லு... திட்டறதுன்னா, நேர்ல சொல்லு... அதுதான் எனக்கு புடிக்கும்... ஹா...ஹா...

சரி சார்... இன்றைய அரசியல் பத்தி ஏதாவது கருத்து சொல்றீங்களா??

இப்போதான் சொன்னேன்... பாராட்டணும்னா பின்னால போய் சொல்லுன்னு... இந்த அரசியல் பத்தி இப்போ எங்கிட்ட எதுவும் கேக்காதீங்க... ஏன்னா, நாட்டுல இப்போ, அரசியல் நெலமை சரியில்ல..."எந்திரன்"ல நடிக்கறதால, அறிவியல் பத்தி கேளுங்க, சொல்றேன்...

சரி...அறிவியல் பத்தி சொல்லுங்க....

கண்ணா... அறிவியல் பத்தி பேசறதுக்கு நாட்டுல, நெறைய அறிவியல் அறிஞர்கள் இருக்காங்க... அவங்க கிட்ட கேளுங்க...அது பத்தி ஜாஸ்தி பேசறதுக்கு என்கிட்ட விஷயம் இல்ல... நான் நேத்து கண்டக்டர்... இன்று ஒரு சாதாரண நடிகன்... அதுவும், மேல இருக்கறவன் என்ன சொல்றானோ, அத செய்யற ஒரு மனிதன்... நாளை நான் யாருன்னு எனக்கே தெரியாது... என்ன ஓகேவா??...

அய்யோ... சார், இப்படின்னா அப்படிங்கறீங்க... அப்படின்னா, இப்படிங்கறீங்க...

ஹா...ஹா...ஹா...அதுதான் கண்ணா, நான் மொதல்லயே சொன்னேன்.. அப்டி, இப்டி எதுவும் நாம யோசிச்சு செய்யறது இல்ல... அதுவும் மேல இருக்கறவன் சொல்லி கீழ இருக்கற நாம செய்யறது தான்... யச்சச்ச கச்சச்ச.. கச்சச்ச யச்சச்ச... ஏதாவது புரிஞ்சுதா... புரியல இல்ல.... இதுதான் வாழ்க்கை... அந்தரத்தில் எதுவும் மந்திரமில்லை... நம் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை... இது எப்படி இருக்கு??

ஙே என்று முழித்தபடி நிருபர், அடுத்த கேள்விக்கு தயாராகிறார்... சார்.. "எந்திரன்" பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.... எல்லாரும் ஆசைப்படறாங்க...

கேக்கறதுதான் கேக்கறீங்க, ஏன் கொஞ்சம்னு கேக்கறீங்க... நெற்யனு கேளுங்க...

சரி சார்... நெறய சொல்லுங்க....

அந்த படத்த பத்தி நெறய சொல்லணும்னு எனக்கும் ஆசைதான்... ஆனா, ஒரு வேலை பாதியில இருக்கறப்போ, அதப்பத்தி கேக்கறதே தப்பு... அதனால.. "எந்திரன்" பத்தி நான் சொல்றத விட டைரக்டர் ஷங்கர் சொல்றதுதான் சரியா இருக்கும்... ஒரே ஒரு விஷ‌ய‌ம் சொல்றேன்... தீபாவ‌ளி ரிலீஸ் ஆகுது......

என்ன‌...?? தீபாவ‌ளி ரிலீஸா?? ப‌ட‌ம் முடிஞ்சுடுச்சா??
ஆமாம்... ப‌ட‌ம் இல்ல‌... டிரெய்ல‌ர்... தீபாவ‌ளி அன்னிக்கு டிரெய்ல‌ர் ரிலீஸ்..

ய‌ப்பா... அதானே பார்த்தேன்... ஷங்கராவது ஒரு வருஷத்துல முடிக்கறதாவது என்று ம‌ய‌ங்கி விழுந்து பின் எழுகிறார் நிருப‌ர்...
சார்... கந்தசாமி படம் பாத்தீங்களே... அத பத்தி ஏதாவது சொல்லுங்க...
கந்தசாமி பார்த்தேன்... ரொம்ப ரொம்ப நல்ல படம்... நல்ல என்டெர்டெய்னர்..சாங்க்ஸ் நல்லா இருந்தது... நல்ல லொக்கேஷன்ல ஷூட் பண்ணி இருந்தாங்க...எனக்கு விக்ரம் ரொம்ப பிடிக்கும்... குட் ஆக்டர்... தாணு என்னோட நல்ல நண்பர்.. சுசி கணேசன் கூட பத்து வயசா இருக்கும் போது, என்னோட "மாவீரன்" ஷூட்டிங் பாக்க வந்து, என்கூட ஃபோட்டோ எல்லாம் எடுத்துகிட்டாரு...
சரி...வேற ஏதாவது கேள்வி இருக்கா??
ம்ம்ம்... உலக அரசியல் பத்தி கேக்கலாமா சார்...

ஓ... கேளுங்க... நான் இந்த பேட்டி முடிச்சுட்டு இமயமலை போகப்போறேன்... உலக அரசியல்ல எனக்கு ரொம்ப பிடிச்சது, சிங்கப்பூர்தான்... ஏன்னா, அதோட வளர்ச்சி...

வேற ஏதாவது கேக்கணுமா??

ஆமாம் சார்... கலைஞானி கமல் பற்றி??

கமல் உலகின் சிறந்த நடிகர் என்று நான் சொல்லல.. மத்த எல்லாரும் சொல்றாங்க.. சிங்கப்பூர்ல "நினைத்தாலே இனிக்கும்" ஷூட்டிங் நடந்தப்போ, லன்ச் ப்ரேக்ல போய், ரெண்டு கடலை உருண்டை வாங்கிட்டு வந்து எனக்கு ஒண்ணு குடுத்தாரு... அந்த நல்ல மனச, என் வாழ்நாளில் நான் மறக்க மாட்டேன்... இப்போ கூட ஹீரோவா "உன்னை போல் ஒருவன்" படத்துல நடிக்கறேன்னு போன வாரம் ஃபோன் பண்ணி சொன்னாரு...

சுரேஷ் கிருஷ்ணா??

நல்ல டைரக்டர்... ஆனா, இன்னும் அவரு "பாட்சா" படத்தோட பாதிப்புல இருக்காரு..... அது பத்தி அவர் கிட்ட பேசினேன்... உடனே "பாட்சா 2" எடுக்கலாமான்னு கேட்டாரு... அதுக்கு, 2015 வரைக்கும் சுரேஷ்னு பேரு இருக்கறவங்க கூட சேர வேண்டாம்னு இமயமலைல ஒரு சித்தர் சொன்னாரு... அதனால 2016க்கு மேல வந்து பாருங்கன்னு சொல்லி இருக்கேன்...

கே.எஸ்.ரவிக்குமார் பற்றி?

அவரு கடுமையான "உழைப்பாளி"... "படையப்பா" படத்துல நடிக்கறப்போ, எனக்கு எப்படி நடிக்கணும்னு சொன்னாரான்னு ஞாபகம் இல்ல.. ஆனா.. ஷூட்டிங் நடுவுல 4/5 சிகரெட் குடுத்தாரு... 45 நாள்ல படம் முடியணும்னு சொல்லி, 55 நாள்ல படத்த முடிச்சுடுவாரு. ஆளு அவ்ளோ சூப்பர் ஸ்பீடு... பட், குட் மேன்... தசாவதாரம் படத்துல "ஜார்ஜ் புஷ்" இந்தியா கூட்டிட்டு வந்தாரே, அதுக்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு சொல்றேன்..

ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க சார்...

ரசிகர்கள் என்னோட கண் மாதிரி...அவங்க நல்லா இருந்தா தான் நானும் நல்லா இருப்பேன்.. சரி... டைம் ஆயிட்டு இருக்கு...விஷயத்துக்கு வர்றேன்... எல்லாரும் நல்லா படிங்க... நல்லா வேல செய்யுங்க... செய்யற தொழில்தான் தெய்வம்... அப்புறம், பெரியவங்கள மதிச்சு நடக்கணும்... பெற்றோர்கள் பேச்சு கேட்டு வாழ்க்கை நடத்துங்க... பொழுதுபோக்கை கொஞ்ச நாளைக்கு கம்மி பண்ணுங்க... இன்னிக்கு நீங்க கஷ்டப்பட்டு உழைச்சா, நாளைக்கு உங்க வாழ்க்கை அடுத்தவங்களுக்கு இஷ்டப்படற மாதிரி இருக்கும்... அதனால, வாழ்க்கைய இஷ்டப்பட்டு வாழுங்க... கஷ்டப்பட்டு வாழாதீங்க... நெறைய வேதனைங்க, சோதனைங்க வரும்.. ஆனா.. வேதனைங்க, சோதனைங்கள தாண்டினா, சாதனை படைக்கலாம்...

உங்களுக்கு, தியேட்டர் பக்கம் போகணும்னு தோணுச்சுன்னா, வாரத்துக்கு ஒரு தடவை இல்லேன்னா மாசத்துக்கு ஒரு தடவை போங்க...போயி, போஸ்டர் எல்லாம் மட்டும் பாத்துட்டு திரும்பி வந்துடுங்க...நம்ம படம் "எந்திரன்" வர்றபோது சேர்த்து வச்சு, தியேட்டர்ல போயி, 4 / 5 தடவ பாருங்க...

"எந்திரன்" ரொம்ப ரொம்ப பெரிய படம்.. உலகம் முழுக்க ரிலீஸ் ஆகப்போகுது. படத்த சந்திரன்ல கூட(உதயம் காம்ப்ளெக்ஸ்ல இருக்கற சந்திரன் இல்ல... நிஜமாவே மேலே இருக்கற நிலா / சந்திரன்ல) ரிலீஸ் பண்ணலாம்னு டைரக்டர் ஷங்கர் ஐடியா சொல்றாரு... பார்ப்போம்...படத்த பாத்து என்ஜாய் பண்ணுங்க...

பேட்டி முடிக்கறதுக்கு முன்னாடி ஒரு உண்மைய சொல்றேன்... ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு... இது புரிஞ்சா நீ எல்லாருக்கும் ஃப்ரெண்டு.. ரெண்டும், மூணும் அஞ்சு.. உன் கையில விரல்கள் கூட அஞ்சு... இந்த சின்ன வாழ்க்கை தத்துவத்தை புரிஞ்சுக்கோங்க... நிறைய உழைக்க பழகுங்க...
நன்றி வணக்கம்....ஜெய்ஹிந்த்.....

சார்... இன்னும் நெறைய கேள்விகள் இருக்கு... மீண்டும் சந்திப்போம் சார்... நன்றி

(இப்போதைக்கு இது போதும் என்பதால் தற்காலிக முற்றும்.....)

Tuesday, September 8, 2009

கேப்ட‌ன் விஜ‌யகாந்த் அதிர‌டி மீட்டிங் (பாக‌ம் - 2)







நான் முன்னமே சொன்ன மாதிரி, நம்ம நாட்டுல ஆச்சி சரியில்ல... எங்கன பாத்தாலும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி இப்படி எல்லாம் நடக்குது...

நாங்க ஆச்சிக்கு வந்தா, இதை எல்லாம் தடுப்போம்... அப்புறம், நாங்களே பண்ணுவோம்... என்னது... கொலை, கொள்ளைய பண்ணுவோமான்னு கேக்கறியா?? டேய் பரதேசி... நீ எந்த கச்சிகாரன்னு சொல்லுடா...

என்னது என் கச்சியா?? என் கச்சில இருந்துட்டு தைரியமா என்னிய பத்துன உண்மைய சொன்னதுக்கு ஒரு டேங்ஸ்... ஆனா, இன்னில இருந்து ஒனக்கு சனி உச்சத்துல வந்துட்டான்... கேப்டன் கை காட்டியதும், ஒரு குண்டர் படை அந்த தொண்டரை அள்ளி சென்றது...

என்னதான் உண்மைன்னாலும், அத இப்படி பப்ளிக்கா சொல்லக்கூடாது.. நான் கூட எலக்சன் டைம்ல... எனக்கு எல்லாம் தெரியும்... ஆனாக்க, சொல்ல மாட்டேன்னு சொல்லி கருணாநிதி கிட்டவே ஆட்டம் போட்டேன்... இவன் என்னடான்னா, நம்ம தொழில் ரகசியத்த இப்படி ஒடச்சு பேசறான்... அவன கொண்டுட்டு போய், குடோன்ல வச்சு பட்டைய கெளப்புங்கடா... அந்த பரதேசி இனிமே சாப்பிடறத தவிர எதுக்கும் வாய தொறக்கக்கூடாது... என்று கர்ஜிக்கிறார்...

இவிய்ங்க ஆச்சில நடந்த இன்னொரு அநியாயத்த சொல்லவா? என்று கேட்கிறார்... தொண்டர்கள் பாவம் போல், தலையை ஆட்டுகிறார்கள்...

நான் கடைசியா "மரியாதை"ல நடிச்சேன் இல்ல... நடிச்சேனா இல்லையா, சொல்லுங்கடா?? வாயில என்னடா வச்சு இருக்கீங்க....என்கிறார்...

ஆமாம், தலீவா... ரெண்டு வேசத்துல பின்னிட்டியே தலீவா என்று உணர்ச்சிவசப்பட்டு முன்னால் வந்து கூவிய தொண்டனுக்கு பையில் இருந்து ஒரு ரூ.500 நோட்டு எடுத்து தருகிறார்... நைட்டு செலவுக்கு வச்சுக்கோ, சைட் டிஸ்ஸுக்கும் சேர்த்து, ஒகேவா என்று சொன்னவாறு தன் பேச்சை தொடர்கிறார்...

தேர்தல் சுற்றுப்பயணம் போன எடத்துல எல்லாம் என்னிய பார்த்து "கருப்பு எம்.ஜி.ஆர்."னு மக்கள் வாயார வாழ்த்துனாங்க... எனக்கு ரெம்ப சந்தோசமா இருந்துச்சி... ஆனாக்க, இனிமே "எம்.ஜி.ஆர" நீங்க எல்லாரும் "வெள்ளை விஜயகாந்த்"னு கூப்பிடணும்... அத்த என் காதால நான் கேக்கணும்... கூப்பிடுவீங்களா என்று அடித்தொண்டையில் காட்டு கத்தலாக கேட்கிறார்...

கூட்டம் மெய்மறந்து, விசிலடித்து கை தட்டுகிறது... கேப்டன் உற்சாகமாகிறார்... பின்னால் திரும்பி சைகை காட்ட, ஒரு கூஜாவில் இருந்து கேப்டனின் பக்குவத்திற்கு மிக்ஸ் செய்யப்பட்ட "டாஸ்மாக்" ஒரு கிளாஸில் ஊற்றி கொடுக்கப்படுகிறது. அந்த "டாஸ்மாக்"கில் தொண்டை நனைந்தவுடன் கேப்டன் பழைய ஃபார்முக்கு திரும்புகிறார்... உற்சாகமாக உளற தொடங்குகிறார்...

நான் கஸ்டபட்டு நடிச்ச "மரியாதை" படத்த "ஆஸ்கார்" அவார்டுன்னு ஏதோ இருக்காமே, அதுக்கு அனுப்ப மாட்டாய்ங்களாம்... நான் கேக்கறேன்... ஆச்சி உங்க கையில இருந்தா, அதுக்காக, நான் கஸ்டபட்டு நடிச்ச படத்த அனுப்ப மாட்டீய்ங்களா??

அதே மாதிரி, என் இன்னொரு படம் "எங்கள் ஆசான்" இங்க சென்னையில ரிலீஸ் பண்ண விட மாட்டேங்கறாய்ங்க... இது அராஜகம் இல்லையா?? பதில் சொல்லுங்க..

மத்தியில இருக்கற காங்கிரஸும், மாநில அரசு தி.மு.க.வும் இது போல என்னிய தொடர்ந்து வெறுப்பேத்தினா, நான் ஏற்கனவே, முடிவு பண்ணின "டாஸ்மாக்" நுழைவு போராட்டம் தீவிரம் அடையும்...

ஒரு மாசத்துக்கு, எங்கள தவிர யாரும் "டாஸ்மாக்" கடை உள்ளக்கவே நொழைய முடியாது... "டாஸ்மாக்"தான் நாங்க... நாங்கதான் "டாஸ்மாக்"... இது ஓகேவா, பாத்துடுவோமா, நீங்களா, நாங்களான்னு, ஒரு மாசம், உங்க ஆளுங்க, மத்தவிய்ங்க சரக்கு அடிக்காம இருக்க முடியுமா??

போராடறதுன்னு வந்துட்டா, நானே நேர்ல எறங்கிடுவேன்... எல்லா கடைக்கும், நானே நேர்ல போயி, சரக்கு மொத்தமும் வாங்கி, எங்க ஆளுங்கள கூப்பிட்டு கொடுத்துடுவேன். அப்புறம், நீங்க குடிமக்களுக்கு பதில் சொல்லி ஆகணும்... சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்...அப்புறம் ஒங்க இஷ்டம்... என்கிறார்...

நான் பேச ஆரம்பிச்சா, நிறுத்த மாட்டேன்... ஆனாக்க, எனக்கு நெறைய வேலை இருக்கு... அதனால, நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்...வர்ட்டா.. ஆங்... என்றவாறு தோள் துண்டை சரி செய்தவாறு, கூலிங் கிளாஸ் அணிந்து, வண்டியில் ஏறுகிறார்...

அதே சமயம், ரோட்டில் ஓரமாய் நின்றிருந்த பேருந்தில், ஜன்னலோரமாய் அமர்ந்திருந்தவர்கள் கேப்டனை பார்த்து கையசைக்கிறார்கள்..ஆனால், ஒரு பெண்ணின் கையிலிருந்த ஒரு சிறு குழந்தை, கேப்டனை நேருக்கு நேராக பார்த்த மாத்திரத்தில் "பூச்சாண்டி", "பூச்சாண்டி" என்று பயத்தில் கதறி, அலறி, வீறிட்டு அழ தொடங்குகிறது...

(இதற்கு மேல எழுதுவதற்கு,என்னாலேயே முடியாததால், தற்போதைக்கு தற்காலிக முற்றும்....)

Sunday, September 6, 2009

கேப்டன் விஜயகாந்த் அதிரடி மீட்டிங் - (பாகம்-1)







நடந்து முடிந்த இடைத்தேர்தலில், இரண்டே இரண்டு பெரிய கட்சிகள் மட்டும் போட்டியிட்டு, அதில் இரண்டாவது இடத்தை பிடித்த பெருமகிழ்ச்சியில் தே.மு.தி.க.தலைவர் "கேப்டன் விஜயகாந்த்" ஒரு "உற்சாக" விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்... அதில் கலந்து கொண்ட நமது சிறப்பு நிருபர் "டாஸ்மாக்கார்" அளித்த சுறுசுறு ரிப்போர்ட், இதோ..

முதலில் தே.மு.தி.க தலைவர் "கேப்டன் விஜயகாந்த்" கட்சி தொண்டர்களின் மத்தியில் உரையாற்றுகிறார்...

இங்க வந்து இருக்கற எல்லாருக்கும் வணக்கம்... நான் ரெம்ப நல்லவன்னு "அம்மா" சொன்னாய்ங்க... அம்மான்னா அவிய்ங்க ஒருத்தருதானா... இவிய்ங்க வேற‌டா பரதேசி... என் வீட்டம்மா... பிரேமா....
பந்தலுக்கு உள்ளார நெறைய பேரு வந்தத பாத்தேன்... ஆனா, இங்க பாதி கூட்டம்தான் இருக்கு... மிச்சம் இருக்கறவங்க எங்க இருக்காங்கன்னு எனக்கு தெரியும், ஆனா, சொல்ல மாட்டேன்... அவிய்ங்களாவே இங்க வந்து பந்தல்ல ஒக்காரணும்... இன்னும், கொஞ்ச நேரத்துல இந்த மீட்டிங் முடிஞ்சதும், நானே என் கையால ஒங்க எல்லாருக்கும், சப்ளை பண்றேன்... அட.. பிரியாணிய சொல்றேன்...

இந்த இடை தேர்தல்ல இரண்டாவது எடத்துக்கு வந்து இருக்கோம்... அடுத்த தேர்தல்ல, மொத எடத்துக்கு வரணும்... அதுக்கு ஏதாவது ஐடியா கொடுங்க.. அவிய்ங்களுக்கு, நான் தனியா கவனிக்கறேன்...

தலீவா... இந்த தடவ அ.தி.மு.க. போட்டி போடல... அடுத்த தடவ, "தல" கிட்ட சொல்லி, அவிய்ங்களயும் போட்டி போட வேணாம்னு சொன்னா, நம்ம அடுத்த எலக்சன்ல மொத எடத்துக்கு வந்துடுவோம்...

டேய்... பரதேசி... நீ எந்த கச்சி ஆளுடா... மவனே.. நான் அங்க வந்தா, ஒன்னிய பெண்டு எடுத்துடுவேன்.. ஐடியா குடுக்கற மூஞ்சிய பாரு... ஓங்கி குத்தவா? (முஷ்டியை மடக்கி காற்றில் ஓங்கி குத்துகிறார்....)... இதை பார்த்த, முதல் நான்கு வரிசை தொண்டர்கள் படை டர்ராகிறது...

உருப்படியா ஏதாவது சொல்றதுன்னா சொல்லுங்க... இல்ல, வந்த வேலைய பார்க்க போங்க... உள்ளுக்கு ரூம்புல தான் சரக்கு இருக்கு... அடிதடி பண்ணாம, முடிங்க... அந்த பக்கம், பிரியாணி பார்சல் இருக்கு... ஆளுக்கு ஒரு பார்சல் மட்டும் எடுத்துட்டு போங்க... போன தடவ ஆயிரம் பார்சல் வந்தது...அத்த, வந்து இருந்த ஐநூறு ஆளுய்ங்களே ஆட்டைய போட்ட மாதிரி இல்லாம.... என்று ஓவர் சவுண்ட் விடுகிறார்...
கேப்டனின் கண்கள் சிவந்து, பெரிதாகி, எந்நேரமும் தெறித்து விழுவதை போல் இருப்பதை கண்டு, சுதீஷ் அலறுகிறார்... இவன் வேற... ஏண்டா... இவ்ளோ பக்கத்துல வந்து நிக்கற... என்று சுதீஷை சீறுகிறார்...

மக்களே...நேத்து ஒரு பொஸ்தகம் படிச்சேன்... அது ரொம்ப நல்ல பொஸ்தகம்...

தலீவா... அது இன்னா பொஸ்தகம்?? எதுனா பலான பலானதா??

டேய் அடங்குடா பரதேசி... நான் எல்லா பொஸ்தகமும் தான் படிக்கறேன்... இப்போ கூட என் வண்டியில ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், குங்குமம், கல்கண்டு எல்லாம் இருக்கு... திருப்பி போறப்ப படிக்கறதுக்கு... இது வேற பொஸ்தகம்டா.. 1330 குறள், பெரிய தாடி வெச்ச ஒருத்தரு எழுதுனது... (பெரியார் இல்லடா.... கபோதி... இவரு வேற...).. அங்... அவரு பேரு நெனவுல வரலியே... இனிமே டாஸ்மாக் கொஞ்சம் கொறைக்கணும்... எப்போ, எங்க பார்த்தாலும், மங்கலாவே தெரியுது... புத்தி கூட‌ எப்போவும் போல‌வே மந்தமா, தடுமாறிகிட்டே இருக்குது...

இப்போது மெதுவாக திரும்பி பக்கத்தில் இருக்கும் பண்ரூட்டியை பார்க்க, அவர் திருவள்ளுவர், திருக்குறள் என்று எடுத்து கொடுக்க...

ஆங்... அந்த பொஸ்தகம் பேரு "திருவள்ளுவர்"...எழுதுனது "திருக்குறள்"...

அய்யோ..அய்யோ என்று தலையில் பண்ரூட்டி அடித்து கொள்வதை கவனித்த விஜயகாந்த் தன் சிவந்த விழிகளை பெரிதாக்கி, உருட்டி பார்க்க.... பண்ரூட்டி அலறிக்கொண்டே பின்னால் சாய்கிறார்...

அவர் சாய்வதை பார்த்த சிலர், சோடா கேட்க, ஒரு தொண்டர், ஒரு ஃபுல் பாட்டிலும், சோடாவும், கிளாஸூம்... கூடவே சிப்ஸூம் எடுத்து வருவதை பார்த்து கேப்டன் கர்ஜனை செய்கிறார்...

சோமாறி... மயங்கி விழுந்தவனுக்கு, மொதல்ல வெறும் சோடா குடுடா... எழுப்பி, வேணுமான்னு கேட்டு சரக்கு கலக்கி குடு... எல்லாத்தையும், நானே சொல்லி தரணுமாடா. எவ்ளோ வருசம் என்கூட இருக்க... இது கூட தெரியலியா என்று ஜெர்க்குகிறார்...

சரி. சரி.. மொதல்ல அவர எழுப்பி உள்ளார இருக்கற‌ ரூம்புல படுக்க வைங்க... என்னோட ஏ.சி.ரூம்புக்கு யாரும் போயிடாதீங்க... அங்க எனக்கு தனியா காய்ச்சின பெஸல் சரக்கு இருக்கு...தப்பித்தவறி அத எடுத்து யாராவது அடிச்சு காலி பண்ணுணீங்க, மவனே, ஒரு பய இந்த எடத்த விட்டு உருப்படியா போக முடியாது...என்று ச‌வுண்ட் விடுகிறார்...

பெருமூச்சு வாங்கி விட்டு, சிறிதே போதை தெளிந்த நிலையில், அந்த பொஸ்தகம் பேரு "திருக்குறள்", அத்த எழுதுனவரு அந்த பெரிய தாடி வெச்ச "திருவள்ளுவர்" என்று சரியாக சொல்லிவிட்டு, ஹீ...ஹீ... என்று இளிக்கிறார்... அப்போது பார்த்து உணர்ச்சிவசப்பட்டு ஒரு தொண்டர் ஃபோட்டோ எடுக்க... அந்த ஃபோட்டோவ வெளியே பெரிசா போஸ்டர் அடித்து ஒட்ட சொல்கிறார்...

பொஸ்தகம் முழுசா படிச்சேன்... அதுல ஒரு கொறளு நெனவுக்கு வந்துச்சு... சொல்லவா என்று கூட்டத்தை பார்த்து கேட்க.. பசியில் எல்லா தலையும் ஒரு புறமாய் சாய, கேப்டன் சரி என்கிறார்கள் என்று எண்ணி, உற்சாசமாகி சொல்ல ஆரம்பிக்கிறார்...

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து...

அப்படின்னா என்னன்னு யாருக்காவது தெரியுமா? சொல்றேன் கேளுங்க...

மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு என்று கூறப்படுவது..

ஆனா, இப்போ கருணாநிதி ஆச்சில மக்களுக்கு நோய் வருது... விளைச்சலே இல்ல.. பொருளாதார வளம் அவரு வீட்டுல மட்டும் தான் இருக்கு... இன்ப நிலை.. கலைஞர் டி.வி.ல காட்டுற "மானாட மயிலாட" தான் இன்ப நிலையா?? உரிய பாதுகாப்பு... நாட்டுல எங்க இருக்கு பாதுகாப்பு...

காலைல கூட நான் வரப்போ ஒருத்தன் என் மேல தூக்கி போடறதுக்கு ஒரு பெரிய பாறாங்கல்லோட வந்தான்... அப்புறம் அவன கூப்பிட்டு சரக்கடிக்க ரூ.200 குடுத்தேன்... கம்முனு போயிட்டான்... என்ன மாதிரி ஒரு பெரிய கச்சி தலைவருக்கே இந்த நாட்டுல பாதுகாப்பு இல்ல...

(யப்பா... ஒரெ ஒரு கொறளு சொல்றதுக்குள்ளவே, வேர்த்து, விறுவிறுத்து, நாக்குல நொரை தள்ளிப்போச்சு.. இனிமேல அந்த கொறளு பொஸ்தகத்த கண்ணால கூட பாக்க கூடாதுடா அய்யனாரே...).

இன்னும் நெறைய விசயம் இருக்கு... அடுத்த வாரம் மீட்டிங்ல சொல்றேன்... போயி எல்லாரும், வந்த வேலைய தொடங்குங்க... சரக்கு, பிரியாணி எல்லாம் உள்ளாக்க இருக்கற ரூம்புல இருக்கு...நான் வர்ட்டா..ஆங்ங். என்று சொல்லிவிட்டு பின்வாசல் வழியாக மாடியில் இருக்கும் தன் ரூம்புக்கு எஸ்கேப் ஆகிறார்...
(கேப்டனின் அதிரடி தொடரும்....)

(பின்குறிப்பு : ஒரு காமெடி பதிவு எழுத சொன்ன மிஸஸ்.மேனகா சத்யாவிற்காக இந்த பதிவு...)

Friday, September 4, 2009

ஜில்... ஜிலீர்.... ஒரு ஐஸ்கிரீரீரீம்ம்ம்ம் ரிப்போர்ட்

ஐஸ்கிரீம் என்பது ஒரு மந்திர வார்த்தை... இந்த மந்திர வார்த்தையை கேட்ட மாத்திரத்தில், பெரியவர்கள் அனைவரும் குழந்தைகள் ஆவர்... குழந்தைகளோ, துள்ளி குதிப்பர்... அதுவும், சில குழந்தைகள் ஐஸ்கிரீம் சாப்பிடும் அழகை இன்று முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்...
சரி... இப்போது நாம் ஐஸ்கிரீம் பற்றிய சில விபரங்களை பார்ப்போம்... கட்டுரையின் சுவை கெடாமல் இருக்க, ஆங்காங்கே ஆங்கிலமும் கலந்து வரும்....
முதன் முதலில் ஐஸ்....
ஆரம்பித்தது நம்ம பக்கத்து நாட்டு அண்ணாச்(சினா) தான். சீனாவில் மலை உச்சிக்கு போன அதிபர், ஐஸ்யை பார்த்து நைஸ் என்றார். வரலாறு சொல்லும் கதை இது. பணியாளை கூப்பிட்டு, பனிக்கட்டி கூட பழத்தையும், சரக்கையும், தேனையும் கலக்கி ஒய்வெடுக்கும் போது நைஸா கொண்டு தா என்றாராம். முதலில் ஐஸ் சாப்பிட்டது இப்படித்தான்.
இதற்கு பின், கி.பி. 62ல் அப்போதைய தாதா நாடு ரோமாபுரி மன்னர், நீரோ ‍ அவர் தான்யா ஊரே எரிஞ்சப்போ ஓரமா உக்கார்ந்து பிடில் வாசிச்சாரே அவரேதான். அடிமைகளை மலை ஏறச் சொல்லி பனிக் கட்டி எடுத்து வர இவர் மலையேறினார். .
1295 வரை பால் குடி மறந்த பிள்ளையாய் இருந்த நம் ஐஸ், சீனா இத்தாலி எல்லாம் சுற்றி வந்த நமது மார்கோ போலோ புண்ணியத்தில் பால் கலக்க ஆரம்பித்தது. அதன் பின் இன்று வரை பால் இல்லாமல் ஐஸ் இல்லை. இதை சொல்வது சர்வதேச ஐஸ் அசோசியேசன்.


இப்படியாக, ஐஸ் கிரீமின் அறிமுகத்தை தெரிந்து கொண்ட நாம், எந்தெந்த நாடுகள் மற்றும் நாட்டு மக்கள், நிறைய ஐஸ் கிரீம் சாப்பிடுகின்றனர் என்பதை இப்போது பார்ப்போம்...
அதாவது, டாப் 10 ஐஸ் கிரீம் சாப்பிடும் உலக நாடுகள் எவை என்பதை....
1. United States
2. New Zealand
3. Denmark
4. Australia
5. Belgium / Luxembourg
6. Sweden
7. Canada
8. Norway
9. Ireland
10.Switzerland

இதே போன்று, பல நூறுவகைப்பட்ட ஐஸ்கிரீம் இருந்தாலும், ஐஸ்கிரீம்களின் "ரஜினி" (சூப்பர் ஸ்டார்) என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா??!! அதை பற்றியும் பார்ப்போம்...

அதேபோல், எந்தெந்த ஐஸ்கிரீம்கள், மக்களின் ஃபேவரிட் ஆக உள்ளது, தொடர்ச்சியாக வரும் மற்ற ஐஸ்கிரீம்களின் சதவீதம் எவ்வளவு என்பதையும் பார்ப்போம்....
உலகின் டாப் 15, அதாவது, மிகவும் விரும்பத்தக்க ஐஸ்கிரீம்களின் பட்டியல் மற்றும் அதன் சதவீதத்துடன், இதோ...

1. Vanilla 29%
2. Chocolate 8.9%
3. Butter Pecan 5.3%
4. Strawberry 5.3%
5. Neapolitan 4.2%
6. Chocolate Chip 3.9%
7. French Vanilla 3.8%
8. Cookies and Cream 3.6%
9. Vanilla Fudge Ripple 2.6%
10.Praline Pecan 1.7%
11.Cherry 1.6%
12.Chocolate Almond 1.6%
13.Coffee 1.6%
14.Rocky Road 1.5%
15.Chocolate Marshmallow 1.3%
All others, 23.7%

ஐஸ்கிரீம் பற்றிய மேலும் சில சுவையான தகவல்கள் :

Each American consumes a yearly average of 21.9 litres of Ice Cream, Ice Milk, Sherbet, Ices and other commercially produced frozen dairy products.

In Europe, more ice cream is sold on Sunday than any other day of the week.

Children from 2 to 12 and adults aged 45+ eat the most ice cream per person.

The average number of licks to polish off a single scoop ice cream cone is approximately 50.

The favourite international topping is chocolate syrup.

The biggest ice cream made was 365.7 centimetres high and made with 17,666 litres of ice cream in Anaheim, California in 1985.

படிச்சு முடிச்ச உடனே எனக்கு ஒரு கிலோ ஐஸ்கிரீம் சாப்பிட்ட மாதிரி ஜில்லுனு இருக்கு... உங்களுக்கு??!!....

(Source : All Ice Creams from the Internaltional Ice Cream Association)

பின்குறிப்பு : எங்கோ, எப்போதோ படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்... அவ்வளவுதான்... இந்த பதிவு பிடிக்கிறதோ இல்லையோ, அதில் உள்ள ஐஸ்கிரீம் வகையறாக்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்... நிறை, குறைகளை தெரிவிக்க விரும்புவர்கள், தங்கள் கடிதத்துடன், கண்டிப்பாக எனக்கு பிடித்த பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் குறைந்தபட்சம் ஒரு கிலோ இணைத்து அனுப்பவும்... உடன் பதில் கிடைக்கும்...