Friday, October 21, 2011

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-2


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”ஸ்ரீகிருஷ்ணாவதாரம்” - தொடர்ச்சி :

இயற்கை சக்தி அல்லது கடவுள் என்ற மகத்தான வலிமை பற்றிய அறிவு இல்லாதவர்கள்
, தங்களுடைய வளர்ச்சி, தங்களுடைய வலிமை, உலகத்தை ஆளக்கூடிய திறமை உடையது என்று நினைத்துக் கொள்கிறார்கள்

புஜ வலிமை என்பதும், புத்தி வலிமை என்பது, மன வலிமை என்பதும் உலகில் மிகச் சிறிய விஷயங்கள். மிக உயரமாக வளர்ந்த ஒரு மரம் போல இயற்கை கொடுத்த வரப்பிரசாதங்கள். அங்கே நிச்சயம் முயற்சியும், சட்ட திட்டங்களும், இடைவிடாத பயிற்சியும் இருந்திருக்கிறது என்பது உண்மையாயினும், இது உலகை ஆளக்கூடியது அல்ல

இந்த மனோசக்திகளும், உடல் சக்திகளும் எல்லைகள் உடையவைஒரு அளவுக்கு மேல் பயன் தராதவைலட்சக்கணக்கான மனிதருக்கு நடுவே உயரமாக கிளர்ந்து எழுந்து விட்டால், தான் உலகையே ஆளக்கூடியவன் என்ற எண்ணம் ஏற்படுவது பேதமை

மனிதர்களில் பெரும்பாலோர்க்கு அவ்வப்போது இப்படி பேதமை ஏற்படும்அவனை சுற்றியுள்ள மனிதர்களை ஜெயித்த்தால், தனக்கு அருகே இருக்கின்ற திறமையானவர்களை மீறி வெற்றி பெற்றதால், அவர்களுக்கு இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லா விஷயங்களையுமே ஜெயித்து விட முடியும்வெற்றி பெற முடியும்காலடியில் கவிழ்த்து விட முடியும் என்கிற எண்ணம் தோன்றும்

தன்னைப் பற்றிய அளவு மதிப்பீடு தவறாக போய் எதிர்பக்கம் இருக்கின்றவருடைய அளவு மதிப்பீடு குறைவாகப் போய் அவர்கள் கொக்கரிக்கத் துவங்கி விடுவார்கள்

இந்த உலகம் அவ்வப்போது மனிதர்களில் இப்படிப்பட்ட கொக்கரிப்பாளர்களை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறதுசந்தித்துக் கொண்டு தான் இருக்கிறதுசகித்து கொண்டு தான் இருக்கிறது

கடவுள் என்கிற பயம் இருந்தால்தான் வாழ்க்கை சௌலப்பியமாக, சுகமாக இருக்கும்

கடவுள் என்று ஒன்று இல்லை, நானே இந்த உலகத்தின் உச்சி என்று யார் நினைத்தாலும் அழிவின் விளிம்பில் நிற்கிறான் என்று அர்த்தம்

கடவுள் என்பதை அறிய பணிவு வேண்டும்பணிவில்லாத போது தந்திரங்கள் தான் தலைதூக்கும்.

உலக மக்களுக்கு தெளிவு ஒரே நேரத்தில் வந்துவிடாது... தெளிவுள்ள குழு என்றும், தெளிவற்ற குழு என்றும் பாதி தெளிந்த குழு என்று பிரிந்து தான் இருக்கும்.

கடவுளை நோக்கி நடக்கும்போது, கடவுளை காப்பாற்றுவதற்காக நடந்தால், கடைத்தேற முடியுமா? இரண்டும் கெட்டானாகத்தான் நிற்க முடியும்... தன்னை காப்பாற்றிக் கொள்ள நடந்தால் ஒரு வேளை கடவுள் கையில் சிக்கியிருப்பார்...

கடவுள் மீது பக்தி உள்ளவர்களுக்கு இம்மாதிரியான பேதமைகள் ஏற்படுவது வழக்கம்... கடவுளை நாம் அலங்கரிக்கிறோம் என்பதாலேயே அலங்கரிப்பவர் கடவுளுக்கு மிக நெருக்கமானவராகவும், அவர் மீது மிக உரிமை உள்ளவராகவும் தன்னை நினைத்துக் கொள்கிறார்...இது பேதமையின் உச்சகட்டம்...

ஸ்வாமியை நாங்க தான் தொடலாம்... நீங்க தொடக்கூடாது என்று அறிவார்ந்த கூட்டம் ஒன்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு பேசும்... இப்படித்தான் பூஜை என்று ஏதோ ஒரு முறையை சொல்லும்...

எல்லா ஆஷாட அனுஷ்டானங்களும் அகந்தையை கொண்டு, அகந்தையாய் நடத்தப்படுகின்றன...

இறைவனை எங்கே காண்பது... அது இறைவனால் தீர்மானிக்கப்பட வேண்டும்...

தான், உடம்பு என்ற கர்வத்தில் திளைத்திருப்பவர்களுக்கு சிற்றின்பத்தில் தான் திளைத்திருக்க முடியும்... எவ்வளவு அழகான தோள்கள், எவ்வளவு உறுதியான தொடைகள், எவ்வளவு திடமான புஜம், எத்தனை அழகான கண்கள், எல்லா பெண்களும் மயங்குகிற மார்பு, அத்தனை பெண்களும் மயங்குகின்ற சிரிப்பு என்று தசை, நரம்பு, எலும்பு குவியல்களை உடம்பாக கொண்டு, தோல் போர்த்திய இந்த பொருட்களை தான் என்று நினைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார்கள்...

பெண்கள் மயங்கினார்கள் என்பது ஒரு நாடகம்... பெண்களை மயக்க முடியும் என்று நினைத்துக் கொள்வது இன்னொரு நாடகம்... ஒன்றை ஒன்று மிஞ்சிய நாடகம் தான் தொடர்ச்சியாக நடக்கிறது.

காமம் என்பது காதலின் வளர்ச்சியாக, பிள்ளை பெறுதலின் முயற்சியாக, பரஸ்பர அன்பு பரிமாறலுக்காக, குடும்பம் என்கிற அமைப்பின் அஸ்திவாரமாக, குலம் என்கிற விஷயத்தின் நடைபாதையாக, இருக்கவேண்டுமே தவிர, காமத்தை பற்றி அலட்டிக்கொள்வதற்கு வேறு எதுவும் இல்லை.

மனித இனம் அறுபட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தால் தான் அது கவர்ச்சிகரமாக மனிதனுக்குள் படைக்கப்பட்டிருக்கிறது..

கல்பகோட காலங்கள் மனிதன் தொடர்ந்து பிறந்து, வளர்ந்து, உன்னதமான ஒரு நிலையை அடைய வேண்டும் என்ற கருணையின் காரணமாகத் தான் காமம், இனிப்பான, சுவையான, அனுபவித்தே தீர வேண்டிய அற்புதமாக, காவியமாக இருக்கிறது.

அழகிய பெண்கள் தான் முக்கியம் என்ற அலம்பலுக்குள் மனம் சிக்கிக்கொண்டால், இங்கே மனித இனத்தின் வளர்ச்சி பற்றிய மேன்மை இல்லை... இந்த சிந்தனைகள் இல்லாத ஒரு காரியத்தில் ஈடுபடுகிற போது அது மிக ஆபாசமாக இருக்கும்..

பாட்டும், கூத்தும் அற்புதம் தான்... ஆனால், அதை குடும்பத்தோடு அனுபவிக்கிறது உள்ளுக்குள்ளே மிகப்பெரிய ஆசுவாசத்தை, அன்பு தளும்பலை அது ஏற்படுத்துகிறது..

அங்கே பாட்டு உன்னதமான இருக்க வேண்டும் என்று அவசியம் கூட இல்லை... மிக சுமாரான பாட்டு கூட தேவகானமாக காதில் ஒலிக்கும்... குழந்தையின் மழலை கூட யாழ் போல, வீணை குழல் போல காதில் வந்து மோதும்.

பெற்ற பிள்ளைகளை மடியில் வைத்துக்கொண்டு, அதுகள் செய்யும் குறும்புகளை கணவன் பொறுத்துக்கொண்டு, புன்னகை செய்தால், மனைவி ஐயோ பாவம் என்று பரிதாபப்பட்டால், அது கொடுக்கும் கிளர்ச்சி மிக அற்புதம்....

குடும்பம் என்பது தர்மத்தின் பாற்பட்ட வாழ்க்கை... தர்ம/மே மனிதனின் நாகரீகம்... அதர்மம் அநாகரீகம்....

(இன்னமும் வரும்..........)

Sunday, October 16, 2011

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-1


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... சமீபகாலமாக நிறைய பாலகுமாரன் எழுத்துகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... /அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்திருப்பதால், நீங்கள் தொடர்ச்சியாக படித்தால் ஒரு கோர்வையாக இராது, மன்னிக்கவும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

பாலகுமாரன் காசிப்பயணம் சென்று வந்ததை பற்றி விளக்கிய ஒரு கேள்வி-பதிலில் சொன்னது :

வாழ்க்கை வெறும் பொருள்களால் நிரம்பியது மட்டுமல்ல, மனதின் பரிமாறலும் அங்கு முக்கியம். மனம் மிக வலிமையானதுஅது இருப்போர்க்கும் கொடுக்கும், இறந்தோர்க்கும் கொடுக்கும்

காசு சம்பாதிப்பது தர்மத்திற்குள் அடங்காது போயின், அதை செலவழிப்பதும் தர்மத்திற்குள் அடங்காது போகும் – “காசுமாலைநாவலில் பாலகுமாரன்

அடுத்தவருக்கு தான் எப்படி என்று காண்பித்துக் கொள்ள எதுவும் செய்யாமல் தன்னுடைய திருப்திக்காக செய்யும் போது தான் செய்கைகள் சீராகின்றனசெம்மையாகின்றனஇல்லையெனில், செய்யும் அனைத்து விஷயங்களுமே கேலிக்கூத்தாகவே முடியும்

ஸ்ரீகிருஷ்ணாவதாரம் :

பூமி என்பது வெறும் மண் மட்டுமல்ல.. பூமி என்பது நதி, கடல், மலை, தாவரங்கள்அதனூடே வளரும் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் மனிதர்கள். இவையெல்லாம் சேர்ந்த்து தான் பூமி

பூமி என்பது இவைகள் மட்டுமல்ல…. பூமி என்பது வெளியையும் தன்னகத்தே கொண்டிருக்கிறதுவெளி இல்லாது பூமி இல்லைவெளி பூமியோடு நெருங்கிய தொடர்பு கொண்டது

இந்த வெளி புனிதமானது, உயிர்ப்பானது. மனிதர்கள் மற்ற உயிரினங்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள இந்த வெளிதான் உதவி செய்கிறது.

வெளி இருந்தால் தான் ஒளி.. வெளி இருந்தால் தான் பார்வை.. வெளி இருந்தால் தான் ஒலி.. வெளி இருந்தால் தான் காற்று.. ஒளிபரவ, காற்று நடக்க, காற்றிலுள்ள ஒரு ஈரப்பதம் பூமியை குளிர்விக்க, ஒலி நடக்க ஒரு இடம் வேண்டுமல்லவாபூமி என்பது அந்த வெளியும் சேர்ந்தது

பூமியிலுள்ள மக்கள் ஏதுமறியா வெகுளிக்குழந்தைகளாக இருந்த போது பூமியால் வெளியும், வெளியால் பூமியும் மிகக் குளுமையாகவும், வலிமையாகவும், சாரமுள்ளதாகவும் இருந்தனபூமியிலுள்ள மக்கள் நாகரீகத்தின் பெயரால் வளர்ந்து, வளர்ந்து ஆத்திரமும், கோபமும், துரோகமும் செய்ய ஆரம்பித்த போது அந்த வெளியில் அழுகையும், அலறலும், கேவலும், குமுறலும், தடித்த வார்த்தைகளும், தவறான பேச்சுக்களும், அதனால் கோபமான சிந்தனைகளும் பொங்க ஆரம்பித்தது

விலங்கினங்கள் பகுத்தறிவு இல்லாததுஎது நல்லது, எது கெட்டது, எது தவறு, எது சரி என்று பகுத்தறிந்து பலபேர் சொன்னதைக் கேட்டு, கேட்ட்தையே பகுத்தறிந்து வாழ்வது தான் வாழ்க்கையார் சொல்வதையும் கேட்காமல், தானும் உட்கார்ந்து எது சரி என்று ஆராயாமல், வெறும் பதட்டத்திலேயே முடிவுகள் எடுக்கிற போது அவை தன்னை சுற்றியுள்ளோரின் சீரழிவுக்குக் காரணமாகிறதுஅந்தச் சீரழிவு தான் ஒன்று திரண்டு மிகப் பெரிய மாறுதலை பூமியில் கொண்டு வந்து சேர்க்கிறது

நல்ல புருஷனோடு மனம் நிறைந்து கலவியில் ஈடுபடுவது பெண்களுக்கு பெரும் பேறுஆனந்த மயமான நிறைவுஅதுபோல நுழைந்த கரு, கருப்பையில் மிகச் சரியாக தங்கிவிட்டது என்று உள்ளுணர்வு சொல்ல, உடம்பு அறிவுறுத்த, அதை உற்று கவனித்து அனுபவிப்பதும் மிகப் பெரிய பேறுஇதை பெண்களால் மட்டுமே உணர முடியும்

மனிதன் தன்னிலிருந்து பொங்கிப் பெருகிய நாகரீகத்துக்கு காரணம் எங்கும் நிறைந்த பரம்பொருளே, பெரும் சக்தியே என்பதை புரிந்து கொள்ளாது, தானே, தன் உடம்பே என்ற மமதையில் ஆள்கிறான்தன் புத்தியே என்ற எண்ணம் கொள்கிறான்அதுவே தன்னைக் காப்பாற்றுகின்றன என்று நினைத்துக் கொள்கிறான்இது கால மாறுபாடுகளின் போது ஏற்படுகின்ற ஒரு விஷயம்..

மனித வளர்ச்சியின் உச்சியிலிருந்து கிளம்பிய நாகரீகத்தின் வேகத்தை மனிதனால் தாங்க முடியவில்லைஅவர் சரியத் துவங்குகிறான்தன்னிலிருந்து வளர்ந்த அவனுடைய நாகரீகமே அவனை அழிக்க துவங்குகிறது

எந்த உணவை எப்படி உண்பது என்பது இங்கு முக்கியமல்லஎல்லா உணவுமே தர்மத்திற்கு உகந்தவை தான்.. ஆனால், பிறர் உணவை பறிப்பது மட்டும் தான் அதர்மமானதுஅது தான் அழிவுக்கு வழிகோலாகிறதுஅழிவு என்பது அகம்பாவத்தினால் ஏற்படுகிறதுஎல்லா அகம்பாவங்களும் அழிவதற்கான ஆரம்ப கட்டங்கள்

உலகத்தில் எது தர்மம், எது அதர்மம் என்று எல்லாருக்கும் தெரியும்அப்படி உணர்ந்த பிறகும் தர்மத்தை அதர்மம் என்றும், அதர்மத்தை தர்மம் என்றும் சொல்லிக் கொள்ள மனிதர்கள் தொடர்ந்து துணிந்து முயல்வார்கள்மனிதர்களில் அதர்மத்தை தர்மம் என்று சொல்லிக் கொள்வோர் அதிகரிக்கும் பொழுது, இல்லை இதுவே தர்மம் என்று நிலை நிறுத்த இறைவன் அவதரிப்பது வழக்கம்

ஆத்மம் என்பது பிரபஞ்ச சக்திபிரபஞ்ச சக்தியே ஆத்மம்

தான் ஆத்மம் என்பதை மறந்து விட்டு, தன்னுடைய தசைகளை, நரம்புகளை, எலும்புகள, பற்களை, சுவாசத்தை, குரலை, உணவை, படைகளை, தேசத்தை தான் என்று மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான்

தன்னை உடம்பாக கருதிய அத்தனைப் பேருக்கும், பயம் தான் பிரதானம்நான் உடம்பு இல்லை என்று எவர் உதறினாரோ, அவருக்கு பயத்தையும் உதற முடியும்..

நான் யார், உண்மையில் என் நிலை எது என்று விசாரித்தவருக்கு தான் ஆத்மாவின் சாட்சாத்காரம் புரியும்ஆத்மாவின் இருப்பு அறிய முடியும்தன்னை அறிந்தவர் மரணத்தை கண்டு அஞ்சாமல் வரவேற்கிறார்

கொடுமையாளர்கள் விரைவில் அழிவதற்கு அவர்களின் கொடுமை தான் காரணம்அவர்கள் கொடுமையின் உச்சக்கட்டத்துக்கு வேகமாக போக, வெகு விரைவில் அவர்களுக்கு முடிவு வந்து விடுகிறதுகொடுமையாளர்கள் கொடுமைக்கு வேகமாக போவதற்கு அவர்களுடைய பயமே காரணம்

அவர்களுடைய பயத்திற்கு, தான் மட்டுமே இந்த உலகத்தில் நலமாக வாழ வேண்டும் என்ற சுயநலம் காரணம்வறுமையில் வாடுபவர்களையும், உழைப்பையே நம்பி இருப்பவர்களையும், தர்மத்தை கடைப்பிடிப்பவர்களையும், எவருக்கும் தீங்கு எண்ணக்கூடாது என்று வாழ்கின்ற சாதுக்களையும் இந்த கொடுமையாளர்கள் தங்கள் முக்கிய எதிரிகளாக நினைப்பார்கள்

வலுவில்லாத ஒரு இட்த்திலிருந்து தான் வலுவுள்ளவன் வந்து விடுவான் என்று பயப்படுவார்கள்

தைரியமுள்ளவனை, ஆயுதமுள்ளவனை, படையெடுத்து வருபவனை அவர்கள் சந்தோஷமாக எதிர்கொள்வார்கள்அவர்கள் பயப்படுவது, எவர் தனக்கு எதிரி இல்லை என்று ஒதுங்கி நிற்கிறார்களே அவர்களை கண்டே அதிகம் கலவரப்படுகிறார்கள்

மனித வாழ்க்கைக்கு மிஞ்சி, மனித பலத்திற்கு மிஞ்சி மிகப் பெரிய பலம் கொண்டது இயற்கைஅது தன்னுடைய இஷ்ட்த்திற்கு ஆடும், அந்த இயற்கைக்கு மேலாக இருக்கின்ற ஒரு சக்தி, அந்த இயற்கையை எல்லாம் ஆட்டி வைக்கின்ற சக்தி பூமிக்கு வந்து குழந்தையாக பிறந்தால், அது ஆடுகின்ற ஆட்டமும்மின்னலை போல, சூறாவளியை போல, பொங்கும் கடலை போல, சீறும் எரிமலையை போல, வேகமாகத் தான் இருக்கும்..

(தொடரும்.......)