Monday, March 16, 2009

விஜய்யின் கோபம்... மிரண்டு போன பிரபுதேவா!


இணைய தளம் மற்றும் ப்ளாக்குகளை இப்போது கலக்கும் சமாச்சாரம் என்ன தெரியுமா... விஜய் வீடியோதான்.
சேச்சே... தப்பா நினைக்காதீங்க. இது வேற வீடியோ. பார்க்க பரம சாதுவாய் தெரியும் அதே விஜய் கோபத்தின் உச்சியில் நின்றால் எப்படியிருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் நிஜ வீடியோ.
சமீபத்தில் ரிலீசான அவரது வில்லு படத்துக்காக அவரும் இயக்குநர் பிரபு தேவாவும் பிரமொஷனல் டூர் போனார்கள் ...
அப்போது திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் விஜய். அந்தப் பேட்டியின் போது அவரிடம் அவருக்குப் பிடிக்காத சில கேள்விகளைக் கேட்டு மடக்கினார்களாம் நிருபர்கள்.
குறிப்பாக, 'உங்களுக்குப் பொருத்தமில்லாத எம்ஜிஆர், ரஜினி இமேஜை உருவாக்கப் பார்ப்பது ஏன்?' என ஒரு லோக்கல் சானல் நிருபர் கேட்டு வைக்க என்ன பதில் சொல்வதென்று யோசித்த விஜய், இடையில் தன் ரசிகர்களைத் திட்டி அந்த ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டாராம்.
'ஏய்... பேசிட்டிருக்கோம்ல... சைலன்ஸ்...!' என அவர் போட்ட சவுண்டு, படத்தில் வில்லன்களை எதிர்த்து அவர் வழக்கமாக விடும் சவுண்டை விட அதிகமாக இருந்தது. விஜய்யின் கோபத்தை பக்கத்தில் அமர்ந்திருந்த பிரபு தேவா மிரண்டு போய் பார்ப்பது வீடியோவில் தெரிகிறது. ......................................................
நன்றி : தட்ஸ்தமிழ்.காம்
(சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு ஆசைப்படுவது தப்பில்லை இளைய தளபதி அவர்களே, அவரை போல் நிதானமாக நடந்து கொள்ளவும் வேண்டும். செயலில் முதிர்ச்சி வேண்டும், பேச்சில் பணிவு வேண்டும். குறிப்பாக, மீடியாவில் கோபம் கொள்ள வேண்டாம்...
உச்சியை அடைய முயற்சிக்கும் பொழுது, மிகவும் முக்கியமாக பணிவும், அனைவரை அரவணைக்கும் பண்பும் வேண்டும் தோழா ......)
"வில்லு விஜய்" சீறிய அந்த வீடியோ லிங்க் இதோ :

No comments: