Saturday, March 21, 2009

"தல" @ கிச்சு கிச்சு.காம் - தேர்தல் 2009 டகால்டி


சென்னை: நான் ஆட்சிப் பொறுப்பிலோ-பதவிப் பொறுப்பிலோ இருந்து புரிந்த சாதனைகளை விட - அவை என் புகழ் பாடும் கல்வெட்டுகள் என்பதை விட - நான் பதவிப் பொறுப்பிலே இருந்த நேரத்தில் - தவறு செய்வோர் எவராயினும் - என் நண்பராயினும் - கழகத்தவராயினும் - உற்றார் உறவினராயினும் - பெற்ற பிள்ளைகள் ஆயினும்; அறவழி நின்று அவர்களைக் கண்டிப்பேன், தண்டிப்பேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.உள்ளார்.

இது குறித்து கருணாநிதி எழுதியுள்ள கடிதம்:

அடித்தட்டு மக்களையும், விவசாயப்பெருங்குடி மக்களையும், நடுத்தர மக்களையும்-அவர்களுள் குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிட மக்கள் ஆகியோரும் அணி அணியாகச்சேர்ந்து திராவிடர் கழகம் திக்கெட்டும் கொள்கைபரப்பிய அந்தக் கால கட்டத்தில், 1949-ம் ஆண்டில் பிரளயம் ஒன்று வந்தது போல் இயக்கத்தில் ஒரு பிளவு வந்தது


நன்றி : தட்ஸ்தமிழ். காம்
(மக்களே, நல்லா கேட்டுக்கோங்க....... தப்பு பண்றவங்க யாரா இருந்தாலும் இனிமே "தலயோட பார்வைல இருந்தும், தண்டனைல இருந்தும் தப்பிக்க முடியாது.....
சரி அப்படியே இவங்களுக்கும் தண்டனை உண்டான்னு சொல்லிடுங்க "தல"
மதுரை தினகரன் ஆபீஸில் மூன்று பேர்கள் எரிக்கப்பட்டதற்கான காரணகர்த்தா மு.க.அழகிரி?
"திருமா" நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோது பல நூறு வாகனங்கள் எரிக்கப்பட்டதற்கான காரணகர்த்தா, "திருமா" மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை?
கோர்ட்டில் இருந்த காவல்நிலையத்தை எரித்தும், கடைகளை அடித்து உடைத்தும், ரவுடித்தனம் செய்த வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை?
ஸ்பெக்ட்ரம் ரூ.65,000 கோடி ஊழலில் சிக்கிய மத்திய மந்திரி ராசா மீது நடவடிக்கை??
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட "காடு வெட்டி குரு" விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாரா?? (பா.மா.க.கூட்டணி முடிவு செய்யப்படாத வரை, நோ சான்ஸ்).
இதற்கெல்லாம் "தல" என்ன பதில் சொல்வார்??
அப்துல் கலாம் அவர்கள் இன்றைய இளைஞர்களை கனவு காண சொன்னால், அதற்கு நானா பொறுப்பு?? என்பார்.....)

No comments: