Saturday, January 30, 2010

என்ன எழுதலாம்? -- தங்கள் மேலான ஆலோசனைக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்

முதலில் ”மத்திய கிழக்கு நாடுகள் - அயல் நாட்டு மோகம்” என்று அன்னிய தேசம் பற்றிய ஒரு தொடர் எழுதினோம். அந்த தொடரில் துபாய் பற்றியும் அதனோடு தொடர்புடைய வாழ்வின் எண்ணங்களையும், ஏக்கங்களையும் எழுதினோம்.

வாசக தோழமைகள் தந்த ஆதரவினால், அடுத்ததாய் ஏன் ”வாழ்க்கை” பற்றிய ஒரு தொடர் எழுதக்கூடாது என சிந்தனை சிறகடித்தது. அதன் தொடர்ச்சியாக பின் “வாழ்க்கை” என்ற தொடரும் 12 பாகங்களாக தோழமை அனைவரின் ஆதரவும் ஊக்கமும் பெற்று வெற்றிகரமாய் பதிவேறியது

இப்போது அடுத்தது என்ன எழுதலாம் என யோசிக்கும் வேளையில், தங்களின் மேலான ஆலோசனை கேட்கிறோம். அடுத்ததாய் என்ன எழுதலாம், எதை பற்றி எழுதலாம் என பின்னூட்டத்தில் ஆலோசனை சொல்லுங்களேன்.

தங்கள் மேலான கருத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்...

(ஆர்.கோபி / லாரன்ஸ்)

25 comments:

கவி அழகன் said...

காதலை எழுதுங்கள்

R.Gopi said...

//கவிக்கிழவன் said...
காதலை எழுதுங்கள்//

********

காதலை பற்றி எழுத சொன்ன கவிக்கிழவன் அவர்களே.... தங்களின் முதல் வருகை நல்வரவாகுக...

என் பிற பதிவுகளையும் படியுங்கள்...

சக தோழமைகளின் பின்னூட்டங்களையும் பார்த்து விட்டு முடிவெடுப்போம்....

என் மற்றொரு வலையான www.edakumadaku.blogspot.com பாருங்கள்.... பதிவுகளை படியுங்கள்.

Rekha raghavan said...

என்ன எழுதலாம் என்று
கோபி கேட்கலாமா எம்மை?
எழுத இல்லை எல்லை
அன்பு,பண்பு,நட்பு,
ஆனந்தம்,அற்புதம்,
அஞ்ஞானம், விஞ்ஞானம்...
அலசி ஆராய்ந்து தொடராகத்
தொடரலாமே!

ரேகா ராகவன்

R.Gopi said...

//KALYANARAMAN RAGHAVAN said...
என்ன எழுதலாம் என்று
கோபி கேட்கலாமா எம்மை?
எழுத இல்லை எல்லை
அன்பு,பண்பு,நட்பு,
ஆனந்தம்,அற்புதம்,
அஞ்ஞானம், விஞ்ஞானம்...
அலசி ஆராய்ந்து தொடராகத்
தொடரலாமே!

ரேகா ராகவன்//

**********

வாங்க ராகவன் சார்.. உங்களை போன்றோரின் ஊக்கமே எங்களை நிறைய எழுத தூண்டுகிறது...

நீங்கள் சொன்னது போல் கூட முயற்சிக்கலாம்... நல்ல யோசனை..

S.A. நவாஸுதீன் said...

மனித நேயம் குறித்த இடுகைகள், அனுபவங்கள் பற்றி எழுதலாமே.

Jaleela Kamal said...

வாழ்க்கை பதிவுகளை பற்றி 12 பாகம் எழுதிட்டு நீங்களா அடுத்து என்ன எழுதுவது என்று கேட்கிறீர்கள்.
தொட‌ர்ந்து ப‌ய‌னுள்ள‌ ப‌திவுக‌ள் எழுத‌ வாழ்த்துக்க‌ள்.

சதீஷ் said...

தயவு செய்து, வெளிநாடுகளில் உள்ள விசா பற்றிய நடைமுறைகள், வெளிநாட்டில் வேலை தேடுதல், அங்கே வேலைக்காக எவ்வாறு பாதுகாப்பாக வருவது (with correct documents)என்பதைப் பற்றி எழுதவும்.

R.Gopi said...

இந்த பதிவிற்கு “தமிழிஷில்” வாக்களித்து பிரபலப்படுத்திய தோழமை அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி....

Tamilalagan
anubagavan
addboxdinesh
chidambara
subam
kosu
VGopi
ldnkarthik
Rajeshh
jollyjegan
syednavas
Jaleela

R.Gopi said...

//S.A. நவாஸுதீன் said...
மனித நேயம் குறித்த இடுகைகள், அனுபவங்கள் பற்றி எழுதலாமே.//

வாங்க நவாஸ்... உங்களின் மேலான ஆலோசனைக்கு நன்றி... விரைவில் இது குறித்த ஒரு பதிவு இடப்பட்டு, தொடர் தொடங்கப்படும்...

R.Gopi said...

//Jaleela said...
வாழ்க்கை பதிவுகளை பற்றி 12 பாகம் எழுதிட்டு நீங்களா அடுத்து என்ன எழுதுவது என்று கேட்கிறீர்கள்.
தொட‌ர்ந்து ப‌ய‌னுள்ள‌ ப‌திவுக‌ள் எழுத‌ வாழ்த்துக்க‌ள்.//

வாங்க ஜலீலா மேடம்... உங்களை போன்றோரின் தொடர் வருகையும், கருத்துக்களுமே எங்களை போன்றோரை மேலும் எழுத தூண்டுகிறது என்றால், அது மிகையல்ல...

நவாஸ் அவர்களிடம் சொன்னது போல், விரைவில் இது பற்றிய அறிவிப்புடன், தொடரை ஆரம்பிப்போம்...

R.Gopi said...

//சதீஷ் said...
தயவு செய்து, வெளிநாடுகளில் உள்ள விசா பற்றிய நடைமுறைகள், வெளிநாட்டில் வேலை தேடுதல், அங்கே வேலைக்காக எவ்வாறு பாதுகாப்பாக வருவது (with correct documents)என்பதைப் பற்றி எழுதவும்.//

வாங்க சதீஷ்... முதலில் நீங்கள் “மத்திய கிழக்கு நாடுகள் - அயல் நாட்டு மோகம்” என்ற தலைப்பில் நாங்கள் முன்பு எழுதிய தொடரை படியுங்கள்... அதில் பல விஷயங்கள் உள்ளன... அந்த தொடர் இந்த வலையில் உள்ளது...
www.edakumadaku.blogspot.com

இப்போது நீங்கள் சொன்ன விஷயத்தை பற்றியும் உங்களுக்கு நாங்கள் எங்களாலான விபரங்களை தருகிறோம்...

உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்...

Unknown said...

Dubai indians life style pattri ezhthalmey,food,activities,entertainment,schooling idhellam payanullathaga irukkumey

R.Gopi said...

//RD said...
Dubai indians life style pattri ezhthalmey,food,activities,entertainment,schooling idhellam payanullathaga irukkumey//

********

தோழமை RD அவர்களே...

நண்பர் சதீஷ் அவர்களுக்கு சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன்..

முதலில் நீங்கள் “மத்திய கிழக்கு நாடுகள் - அயல் நாட்டு மோகம்” என்ற தலைப்பில் நாங்கள் முன்பு எழுதிய தொடரை படியுங்கள்... அதில் பல விஷயங்கள் உள்ளன... அந்த தொடர் இந்த வலையில் உள்ளது...
www.edakumadaku.blogspot.com

இப்போது நீங்கள் சொன்ன விஷயத்தை பற்றியும் உங்களுக்கு நாங்கள் எங்களாலான விபரங்களை தருகிறோம்...

பெசொவி said...

தன்னம்பிக்கையைத் தூண்டும் விதமாக எதுவும் எழுதலாம், தேர்வு நேரம் என்பதால் மாணவர்களுக்கு டிப்ஸ் கொடுக்கலாம்.

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
தன்னம்பிக்கையைத் தூண்டும் விதமாக எதுவும் எழுதலாம், தேர்வு நேரம் என்பதால் மாணவர்களுக்கு டிப்ஸ் கொடுக்கலாம்.//

வாருங்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை... நீங்கள் சொல்வது சரியே... பரிசீலனையில் உள்ளது..

கோமதி அரசு said...

கோபி, கல்யாணராமன் ராகவன் ,சொன்னதை

வழி மொழிகிறேன்.

தன்னம்பிக்கையைப் பற்றிய தொடர் எழுதுங்கள்.

R.Gopi said...

// கோமதி அரசு said...
கோபி, கல்யாணராமன் ராகவன் ,சொன்னதை

வழி மொழிகிறேன்.

தன்னம்பிக்கையைப் பற்றிய தொடர் எழுதுங்கள்.//

*********

வாங்க கோமதி மேடம்...

இப்போதைக்கு நீங்கள் அனைவரும் சொன்ன கருத்துக்களை உள்வாங்கி உள்ளோம்...

விரைவில் முடிவு செய்து, முறையாக அறிவித்து விட்டு தொடர் எழுத ஆரம்பிக்க உள்ளோம்...

ஸ்வர்ணரேக்கா said...

நம் நாட்டில் நாம் அதிகம் கவனத்தில் கொள்ளாத, ஆனால் மிக முக்கியமான விஷயங்கள், like கண்பார்வையற்றோர், முதியோருக்கு வெளிநாடுகளில் கிடைக்கும் வசதிகள், வாய்ப்புகள் பற்றி சொல்லலாம்

வெளிநாட்டு மக்களின் பார்வையில் இந்தியர்கள் எப்படி..? நமது நிறைகள் என்ன? குறைகள் என்ன? அரசாங்கத்தையோ வேறு யாரையுமோ சாராமல் இந்தியாவில் சீர்செய்யக்கூடியவை பற்றி சொல்லலாம்..

இந்த தலைப்புகள் கொஞ்சம் கடியே.. ஆனால் அதை ரசித்து சொல்லும் திறமையும், அனுபவமும் ஜோக்கிரிக்கு உண்டு...

சொல்லச் சொல்ல said...

dubaiyil achchamuruthtum alavukku ulla porulaadhaara nilaiyum adhan edhirkaalam kuriththum ezhudhalaam. Sila property invest seidhirukkum thamizhargalaik kuriththu ezhidhalaam

Anonymous said...

மாணவப்பருவம் பற்றி எழுதுங்கள்

R.Gopi said...

வருகைக்கும், மேலான கருத்துக்கும் மிக்க நன்றி

ஸ்வர்ணரேக்கா
சொல்ல சொல்ல
சின்ன அம்மிணி

அனைவரின் கருத்துக்களும் ஆராயப்பட்டு, கண்டிப்பாக பயனுள்ள தகவல்களுடன் ஒரு தொடர் விரைவில் ஆரம்பிப்போம்...

அது பற்றிய விபரங்கள் விரைவில் இங்கு அறிவிக்கப்படும்...

Unknown said...

”நெஞ்சுக்கு நீதி” எழுதுங்கள்.

R.Gopi said...

//jaisankar jaganathan said...
”நெஞ்சுக்கு நீதி” எழுதுங்கள்.//

********

அதான் “தல” ஏற்கனவே எழுதிட்டாரே. வாங்கி படிச்சு பாருங்களேன் ஜெய்சங்கர்....

Unknown said...

”தல” மட்டும் தான் ”நஞ்சுக்கு நீதி” எழுதலாமா. நீங்களும் எழுதுங்க

R.Gopi said...

//jaisankar jaganathan said...
”தல” மட்டும் தான் ”நஞ்சுக்கு நீதி” எழுதலாமா. நீங்களும் எழுதுங்க//

*******

அய்யோ... இது பெரிய டெர்ரர் ஐடியாவா இருக்கே...

நன்றி தலைவா...