Friday, November 6, 2009

ஜெய் ஹோ - புத்தகத்திற்கான என் விமர்சனம்



எல்லா புகழும் இறைவனுக்கே...

சொக்கன் அவர்கள் எழுதிய " ஜெய் ஹோ" என்ற புத்தகம் தோழர் ஹரன் பிரசன்னா மூலம் இலவசமாக கூரியரில் கிடைக்க பெற்றேன்.
கண்டிப்பாக Blogger- ஆக இருக்க வேண்டும்; புத்தகத்தின் விமர்சனம் தமது blog-ல் எழுத வேண்டும், அதுவும் புத்தகம் கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் போன்ற கண்டிஷன்களுடன் 20 புத்தகங்கள் பெயர்கள் தந்திருந்தனர். அதில் நான் "ஜெய் ஹோ" என்ற புத்த‌க‌த்தை தேர்ந்தெடுத்து, சென்னை அட்ரஸில் பெற்றுக்கொண்டு, நண்பர் மூலம் துபாய்க்கு வரவழைத்து படித்தேன்..

சொக்கன் அவர்கள் இந்த புத்தகத்தில் ஒரு புதிய உத்தியை கையாண்டுள்ளார்... அதாவது, அத்தியாயங்களின் தொடக்கம் எல்லாம் மெட்டு போடு, சின்ன சின்ன ஆசை, என ரஹ்மான் பட பாடல்களின் ஆரம்ப வரிகளையே தலைப்பாக வைத்துள்ளார் !!

புத்தகம் ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிய விழாவிலிருந்து தொடங்கி, அங்கிருந்து ஃப்ளாஷ்பேக்கில் விரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தந்தை திரு.சேகர் அவர்களை பற்றி மிக விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தாத்தா ஒரு பாகவதர்.!! தந்தையும் ஒரு சிறந்த இசை அமைப்பாளரே. நிறைய மலையாள படங்களுக்கு இசையமைத்தவர்.. ஆகவே ஏ.ஆர்.ரஹ்மானும் இசை மீது ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். இசை குடும்பம் என்று சொல்லலாம்... ஏனெனில், அவருக்கு பின், அவரின் சகோதரி ஏ.ஆர்.ரஹைனா மற்றும் ஜி.வி.பிரகாஷ் போன்றோரும் இசையமைப்பாளர்களாகி விட்டார்களே...

மிக மிக சிறு வயதிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி இரு ஆஸ்கார் வாங்கினார் என பார்ப்போம்...

4 வயதிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் நன்றாக ஹார்மோனியம் வாசித்து இருக்கிறார்.

9 வயதில் சினிமாவில் ஒரு பாடலுக்கு மெட்டு போட்டிருக்கிறார் !!

11 வயதில் அவரின் தந்தை இறந்து விட, அந்த வயதில் இருந்தே, வீட்டை காப்பாற்றும் பொறுப்பு வந்து விடுகிறது.. தனியாளாக‌ இருந்து தாய் மற்றும் 3 சகோதரிகளை காப்பாற்றி இருக்கிறார் !!
25 வயது ஆகும்போதே ரோஜா படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.

பின்னாளில், மிக மிக கடுமையாக உழைத்து இப்போது இந்த ஆஸ்கர் விருது வாங்கும் வரை வந்திருக்கிறார். ரஹ்மான் ரோஜா படத்திற்கு இசை அமைத்த பின், பெரிய அளவில் புகழ் பெற்றாலும், தென்னிந்திய மற்றும் வட இந்திய படங்களிலேயே சுற்றி கொண்டிருக்காமல், மேலும் தன் சாம்ராஜ்ஜியத்தை விரிவடைய எடுத்துக்கொண்ட முயற்சிகளே அவரை ஆஸ்கர் அளவுக்கு உயர்த்தியது என்றால் அது மிகையல்ல...

அடுத்தவர்கள் இசையில் என்ன செய்கிறார்கள் என்று கூர்ந்து பார்ப்பதை விடுத்து, தன் இசையில், தான் என்னென்ன புதுமைகளை செய்யலாம் என்பதில் கவனம் செலுத்தியதே அவரின் இசைக்கு தனித்துவம் தந்தது என்ப‌து உண்மை...

முன்னாளில் இசைக்குழு போன்ற விஷயங்களில் பணத்தேவைக்காக பணிபுரிந்தாலும், பின்னாளில் ஜிங்கிள்ஸ் என்றழைக்கப்படும் விளம்பரப்படங்களுக்கு இசையமைக்கும் காலகட்டத்திலேயே தன் தனித்துவத்தை இசையில் படைத்தார் என்பதை சொக்கனின் விவரிப்பில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது...

இசைஞானி இளையராஜா அவர்களிடம் கீ போர்ட் வாசிக்கும் காலகட்டத்தில், கார் ஓட்டவும் கற்றுக்கொண்டதை குறிப்பிட்டுள்ள சொக்கன், அதற்கான காரணத்தை சொல்லியபோது, படிக்கும் நமக்கு "பகீர்".......
தமிழின் முண்ணனியில் இருந்த பல டைரக்டர்கள் ஒரே நேரத்தில் இளையராஜாவின் இசையில் இருந்து மாறி ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை இசையமைக்க செய்தனர்... உதாரணமாக, மணிரத்னம், கே.பாலசந்தர், பாரதிராஜா ... இதுவும் ஏ.ஆர்.ரஹ்மான் முண்ணனி இசையமைப்பாளராக உயர வழிவகுத்தது...

"என் முன் இருந்த இரு பாதைகளில் ஒரு பாதை அன்பு, மற்றொன்று வெறுப்பு. அதில் நான் அன்பை தேர்வு செய்தேன். அதனாலேயே இப்போது உங்கள் முன் நிற்கிறேன்". இது ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் ஆஸ்கர் மேடையில் சொன்னது...

தமிழில் நிறைய இசையமைத்திருந்தாலும், இங்கே அந்த கிரெடிட் நடிக்கும் நடிகர்களுக்கே போய் சேர்ந்து விடுகிறது... அதற்கு சரியான உதாரணம், தமிழில் நெடு நாட்களுக்கு பிறகு அவரின் மிகப்பெரிய ஹிட் ஆல்பமான "சிவாஜி"...

தற்போது தமிழின் / இந்தியாவின் மிகப்பெரிய படைப்பான "எந்திரன்" படத்திற்கு இசையமைத்து வருகிறார்... இந்த இசையும் உலகளவில் பெயர் பெறும் என்று என் உள்மனது சொல்கிறது... கூடவே அவர் இசையமைக்கும் மற்றொரு படைப்பான "சுல்தான் தி வாரியர்"... இதுவும், இந்திய சினிமாவின் முதல் அனிமேஷன் படம் என்ற முறையில் சிறப்பு பெறுகிறது... இந்த படங்களில் ஏ.ஆர்.ர‌ஹ்மானின் இசை ப‌ட்டையை கிள‌ப்ப‌போகிற‌து...

ஏ.ஆர்.ரஹ்மான் மேலும் பல சிறப்பான் இசைப்படைப்புகளை தரவேண்டும் என்பதே இசை விரும்பிகளின் அவா... குறிப்பாக தமிழில்...அதை அவர் செவ்வனே நிறைவேற்றுவார் என்று நம்புவோம்...

முதன் முதலாய் என்னை ஒரு வித்தியாசமான கட்டுரை எழுத வைத்த கிழக்கு பதிப்பகத்திற்கும், சொக்கன் மற்றும் ஹரன் பிரசன்னாவிற்கும் என் நன்றிகள்.

ஜெய் ஹோ....

28 comments:

blogpaandi said...

நல்ல விமர்சனம்.

R.Gopi said...

//blogpaandi said...
நல்ல விமர்சனம்.//

**********

முத‌ல் வ‌ருகை தந்து, வாழ்த்திய‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றி ப்ளாக்பாண்டி...

உங்கள் தோழி கிருத்திகா said...

நல்ல கருத்துக்கள் கோபி...எந்திரன் மெகா ஹிட் ஆகும்ங்கர்துல சந்தேகமே இல்ல

கலகலப்ரியா said...

அட நிறைய மேட்டர் இருக்கே... தெரியாததெல்லாம் தெரிஞ்சுக்க முடிஞ்சது... நன்றி கோபி..

மர தமிழன் said...

கடுமையான உழைப்பிற்கும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்ட விதத்திலும் ரஹ்மான் ஒரு சிறந்த முன்னுதாரனமகவே திகழ்கிறார். மேலும் சரியான நபர்களுக்கு சரியான இசையை கொடுத்ததும் அவர் இசை புதிய பரிமாணங்களை தோட்டதிற்கு ஒரு காரணம் என்றும் தோன்றுகிறது. மதுரை ரயில் நிலையத்தில் தொன்னூறுகளில் மத்தியில் அவரை தனியாக ஒரு சதாரண பயணியாய் பார்த்ததுண்டு. அந்த எளிமை அவரை இன்னும் பல உயரங்களுக்கு கொண்டு செல்லும். அமெரிக்காவின் ஆஸ்கரில் அவர் சொன்ன " என் முன் இருந்த இரு பாதைகளில் ஒரு பாதை அன்பு, மற்றொன்று வெறுப்பு. அதில் நான் அன்பை தேர்வு செய்தேன். அதனாலேயே இப்போது உங்கள் முன் நிற்கிறேன்" அட்ஷர லக்ஷம் பெரும். அந்த அன்பு வழி பாதையில் அவர் இசைத்துகொண்டே போகட்டும் எங்கும் அன்பே பெருகட்டும். ஜெய் ஹோ!!

Raju said...

அண்ணே, கலக்கீட்டீங்க.
விகடனும் ரஹ்மான் புக் போட்ருக்காங்க. கிருஷ்ணா டாவின்ஸி.

R.Gopi said...

//உங்கள் தோழி கிருத்திகா said...
நல்ல கருத்துக்கள் கோபி...எந்திரன் மெகா ஹிட் ஆகும்ங்கர்துல சந்தேகமே இல்ல//

*******

நன்றி கிருத்திகா... நாம ஆஃப் டாபிக் போயிடலியே...

R.Gopi said...

//கலகலப்ரியா said...
அட நிறைய மேட்டர் இருக்கே... தெரியாததெல்லாம் தெரிஞ்சுக்க முடிஞ்சது... நன்றி கோபி..//

*******

வாங்க ப்ரியா... ரொம்ப நாள் கழிச்சு வரீங்க போல இருக்கு... வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

R.Gopi said...

// மர தமிழன் said...
கடுமையான உழைப்பிற்கும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்ட விதத்திலும் ரஹ்மான் ஒரு சிறந்த முன்னுதாரனமகவே திகழ்கிறார். மேலும் சரியான நபர்களுக்கு சரியான இசையை கொடுத்ததும் அவர் இசை புதிய பரிமாணங்களை தோட்டதிற்கு ஒரு காரணம் என்றும் தோன்றுகிறது. மதுரை ரயில் நிலையத்தில் தொன்னூறுகளில் மத்தியில் அவரை தனியாக ஒரு சதாரண பயணியாய் பார்த்ததுண்டு. அந்த எளிமை அவரை இன்னும் பல உயரங்களுக்கு கொண்டு செல்லும். அமெரிக்காவின் ஆஸ்கரில் அவர் சொன்ன " என் முன் இருந்த இரு பாதைகளில் ஒரு பாதை அன்பு, மற்றொன்று வெறுப்பு. அதில் நான் அன்பை தேர்வு செய்தேன். அதனாலேயே இப்போது உங்கள் முன் நிற்கிறேன்" அட்ஷர லக்ஷம் பெரும். அந்த அன்பு வழி பாதையில் அவர் இசைத்துகொண்டே போகட்டும் எங்கும் அன்பே பெருகட்டும். ஜெய் ஹோ!!//

******

சரியாக சொன்னீர்கள் மர தமிழன்... அந்த 90களில் மேட்டர் எங்களுக்கு புதுசு கண்ணா புதுசு...

எளிமை, செய்யும் தொழிலில் நேர்மை, இறைபக்தி, ஒழுக்கமான வாழ்க்கை போன்ற பல விஷயங்கள் தான் ஏ.ஆர்.ரஹ்மானை இந்த அளவு உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது..

இதே போன்று நான் பார்க்கும் மற்றொரு சினிமா சார்ந்த நபர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்...

R.Gopi said...

//♠ ராஜு ♠ said...
அண்ணே, கலக்கீட்டீங்க.
விகடனும் ரஹ்மான் புக் போட்ருக்காங்க. கிருஷ்ணா டாவின்ஸி.//

*********

வாங்க ”தல”....

தெரியும்... நான் கூட சில பகுதிகளை விகடனின் தொடரில் பார்த்தேன்...

லேட்டா வந்தாலும் இந்த போஸ்டிங்குக்கு லேட்டஸ்டா வந்து இருக்கீங்க தலீவா... நன்றி...

Vidhoosh said...

புத்தகத்திற்கு லிங்க் கொடுங்க கோபி.

நல்ல விமர்சனம்.

--வித்யா

R.Gopi said...

//Vidhoosh said...
புத்தகத்திற்கு லிங்க் கொடுங்க கோபி.

நல்ல விமர்சனம்.

--வித்யா//

********

வாங்க வித்யா... இதோ புத்தகத்திற்கான லிங்க்...

NHM புத்தகங்கள் விமர்சனத்துக்கு இலவசமாக!
http://nizhalkal.blogspot.com/2009/10/nhm.html

Anonymous said...

விமர்சனத்துக்கு நன்றி நண்பரே.

- என். சொக்கன்,
பெங்களூரு

R.Gopi said...

//nchokkan said...
விமர்சனத்துக்கு நன்றி நண்பரே.

- என். சொக்கன்,
பெங்களூரு//

*********

ந‌ன்றாக‌ எழுதி இருக்கிறீர்க‌ள் சொக்க‌ன் அவ‌ர்க‌ளே... வாழ்த்துக்க‌ள்......

Menaga Sathia said...

இந்த லிங்கினை பார்க்கவும் http://sashiga.blogspot.com/2009/11/10.html

நல்ல விமர்சனம் கோபி!!

R.Gopi said...

// Mrs.Menagasathia said...
இந்த லிங்கினை பார்க்கவும் http://sashiga.blogspot.com/2009/11/10.html

நல்ல விமர்சனம் கோபி!!//

*******

வாங்க‌ மேன‌காச‌த்யா...

விம‌ர்ச‌ன‌த்தை பாராட்டிய‌த‌ற்கு ந‌ன்றி...

இதோ, வந்து பார்க்கிறேன்...

RAMYA said...

ரஹ்மானை இதைவிட உயர்த்திச் சொல்ல வார்த்தைகளே இல்லை கோபி
சிறுவயதில் அவரின் கஷ்டங்கள்தான் அவரை இந்த அளவு உயர்த்தி இருக்கிறது.

எந்திரன் மெகா ஹிட் ஆகும்....

R.Gopi said...

//RAMYA said...
ரஹ்மானை இதைவிட உயர்த்திச் சொல்ல வார்த்தைகளே இல்லை கோபி
சிறுவயதில் அவரின் கஷ்டங்கள்தான் அவரை இந்த அளவு உயர்த்தி இருக்கிறது.

எந்திரன் மெகா ஹிட் ஆகும்....//

*********

வாங்க ரம்யா...

ரஹ்மான் அவர்கள் தன் கடும் உழைப்பாலும், இறை பக்தியாலும் இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார், அதை நாம் அனைவரும் கண்கூடாக பார்த்திருக்கிறோம்...

முயற்சி திருவினையாக்கும் ..... முயன்றால் முடியாதது எதுவுமில்லை .... போன்ற வாசகங்கள் இது போன்ற சாதனையாளர்களின் முயற்சி வெற்றி பெறும்போது சரிதான் என்று தோன்றும்...

ஒவ்வொரு சாதனையாளரும், பல சோதனைகளை கடந்த பின்னரே சாதனை படைத்தனர்... இது வரலாற்று உண்மை...

சூப்பர் ஸ்டார் அவர்களின் "எந்திரன்" படம் பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி ரம்யா...

பெசொவி said...

//முதன் முதலாய் என்னை ஒரு வித்தியாசமான கட்டுரை எழுத வைத்த கிழக்கு பதிப்பகத்திற்கும், சொக்கன் மற்றும் ஹரன் பிரசன்னாவிற்கும் என் நன்றிகள்.
//

Yes, it is a different (but good) one.

vaazhthugal!

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//முதன் முதலாய் என்னை ஒரு வித்தியாசமான கட்டுரை எழுத வைத்த கிழக்கு பதிப்பகத்திற்கும், சொக்கன் மற்றும் ஹரன் பிரசன்னாவிற்கும் என் நன்றிகள்.
//

Yes, it is a different (but good) one.

vaazhthugal!//

***********.

வருகை தந்து, கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி "பெயர் சொல்ல விருப்பமில்லை" அவர்களே...

R.Gopi said...

இந்த பதிவிற்கு வாக்களித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி நண்பர்களே ....

blogpaandi
Kalakalapriya
ssrividhyaiyer
suthir1974
tharun
VGopi
paarvai
ambuli
jntube
menagasathia
csKrishna
Ramya

Anonymous said...

where can i buy this as book. ?
any book shop names pls.

R.Gopi said...

//Anonymous said...
where can i buy this as book. ?
any book shop names pls.//

வாங்க அனானி...

இந்த புத்தகம் “கிழக்கு பதிப்பகம்” வெளியீடு...

Anonymous said...

where can i find a 'kizhakku pathippagam'store in chennai?
address pls?

R.Gopi said...

//Anonymous said...
where can i find a 'kizhakku pathippagam'store in chennai?
address pls?//

அட்ரஸ் இதோ :

கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை-600 018.

தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.

Anonymous said...

thanks for the address.

Anonymous said...

Rahman is really a hero!

Do any one know any other books about Rahman in TAMIL?

Anonymous said...

at least any other useful resources to study about rahman? pls urgent?