
அவரது ”ஆப்த மித்ரா” மனதில் நிறைந்தது, அதன் வெற்றியும் அதன் தமிழாக்கத்தில் அவரது ஆத்ம நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினியும் அடைந்த வெற்றியும் அதன் சூழலும் மனதில் நிழலாடியது. கன்னடத்தில் "கில்லாடி கிட்டு", "கலாட்டா சம்சாரா" மற்றும் தமிழில் "விடுதலை", "ஸ்ரீ ராகவேந்திரர்" (சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் 100 வது திரைப்படம்) படங்களிலும் இணைந்த நிகழ்வும் மனதில் வருடோடியது. வருடத்தின் இறுதி பதிவில் சில சாதனைகள் பட்டியலிடும் போது, மனம் ஆக்கபூர்வமாய் ஆகும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். இனிய மனங்கனிந்த 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமைக்கும் அவர் தம் குடும்பத்துக்கும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2005 ஆம் ஆண்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் “சந்திரமுகி”. ”மணிச்சித்ரதாழ்” என்ற மலையாள படத்தின் கன்னட பதிப்பான ”ஆப்தமித்ரா” விஷ்ணுவர்தன், சௌந்தர்யா நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றி அடைந்திருந்த நிலையில், ரஜினிகாந்த், தமிழில் ரீமேக் செய்து நடித்த படம்... 2002௦ ஆம் ஆண்டில் வெளிவந்த “பாபா” படம் சரியாக வெற்றியடையாத நிலையில் 3 வருடங்கள் எந்த படமும் நடிக்காத நிலையில் இருந்த ரஜினிகாந்த் அவர்கள் 2005 ஆம் ஆண்டில் நடித்து “சந்திரமுகி” வெளிவந்தது...
”சந்திரமுகி” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி அவர்கள் சொல்லிய “நான் யானை இல்லை, குதிரை.... விழுந்தா சட்டென்று எழுந்துடுவேன்” என்ற டயலாக் ரொம்ப பிரசித்தம்…
இனி ”சந்திரமுகி” படத்தை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை ரீவைண்ட் செய்து, உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்... என்ன இருந்தாலும், பழைய நினைவுகளை அசைபோடுவது ஒரு தனி சுகம்தானே நண்பர்களே...
நாட்களாக சிவாஜி புரொடக்ஷன்ஸ் படம் எடுக்காத நிலையில், ரஜினி அவர்கள் ராம்குமார் அவர்களை தொடர்பு கொண்டு, தயாரிக்க சொன்ன படம் தான் “சந்திரமுகி”.
தமிழில் 800 நாட்களுக்கு மேல் ஓடி, அதிக நாட்கள் ஓடிய தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.
தென்னாப்பிரிக்காவில் 100 நாட்களை கடந்து ஓடிய தமிழ்ப்படம்...
ஜப்பானிலும் பெரிய வெற்றியை ஈட்டிய படம்..
முதன் முதலாக இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்கள் ரஜினி நடித்த படம் ஒன்றுக்கு இசையமைத்த படம்.
ஜோதிகா (கிளைமாக்ஸ் காட்சியில் தன் கோழி முட்டை கண்ணை உருட்டி ”ரா ரா சரசக்கு ரா ரா” என்ற போது அரங்கே அதிர்ந்தது), வடிவேல் நடிப்பு (மாப்பு, வெச்சுட்டான்யா ஆப்பு டயலாக் கேட்டபோது ரசிகர்களின் கரகோஷம் பட்டாசாய் வெடித்தது) வெகுவாக பாராட்டப்பட்ட படம்.
ஆந்திர பிரதேசத்தில் 2005 ஆம் ஆண்டில் வெளியான டப்பிங் படங்களிலேயே அதிக வசூலை குவித்த படம் சந்திரமுகி... அதன் தொடர்ச்சியாக தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றி பெற்று வசூல் செய்த மற்ற தமிழ் படங்கள் அந்நியன் மற்றும் கஜினி...
படத்தின் தொடக்கத்தில் ரஜினி அவர்கள் வித்யாசாகர் அவர்களிடம் இந்த படத்தில் 6 பாடல்கள் இடம் பெறப்போகிறது... அதில், பாதிக்கு பாதி, அதாவது
ஆரம்பப்பாடலான “தேவுடா தேவுடா” ஒரு மெகா ஹிட் பாடல்... இந்த பாடல் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளர்களை உயர்வாக சித்தரித்தது...
“சாக்கடைக்குள் போயி, சுத்தம் செய்யும் பேரு
நாலு நாளு லீவு போட்டா நாறிப்போகும் ஊரு
முடி வெட்டும் தொழில் செய்யும் தோழன் தான் இல்லையேல்
நமக்கெல்லாம் ஏது அழகு
நதி நீரில் நின்று துணி தோய்ப்பவன் இல்லையேல்
வெளுக்குமா உடை அழுக்கு
எந்த தொழில் செய்தாலென்ன செய்யும் தொழில்
தெய்வமென்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே!!”
கொக்கு பற பற, கோழி பற பற என்ற பட்டம் விடும் பாடல்...
இந்த பாடலின் ஆரம்பம் வெகு விளையாட்டாக இருக்கும்... ஆயினும், இடையில் சில கருத்துக்களை வெகு அழகாக சொல்லி இருப்பார்கள்...
“மீனாட்சி அம்மனை பார்த்தாக்க
கந்து வட்டியோட கொடுமைய போக்க சொல்லு
ஸ்ரீரங்கநாதர பார்த்தாக்க
தலைகாவேரிய அடிக்கடி வரச்சொல்லு”
கந்து வட்டிக்கு மதுரை பெயர் போனது என்பதும், காவிரி நீர் பகிர்வு ஒரு தீராத பிரச்சனை என்பதையும் நாம் அறிவோம்...
அத்திந்தோம், திந்தியும் தோம்தன திந்தாதிருந்தோம்...
இது மலையாள நாட்டுப்புற பாடலை சாயல் கொண்டிருந்த படம்... இந்த பாடலிலும், சில கருத்துக்கள் வெகு அழகாக சொல்லப்பட்டிருக்கும்...
“ஆறு மனமே ஆறு, இங்கு அனைத்தும் அறிந்ததாரு
அறிவை திறந்து பாரு, அதில் இல்லாததை சேரு
அட... எல்லாம் தெரிந்த, எல்லாம் அறிந்த ஆளே இல்லையம்ம்மா...”
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப்பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா
இந்த டூயட் பாடல், வெகு ரம்மியமாக படமாக்கப்பட்டிருக்கும்.... பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாத ரஜினி, நயன்தாரா நடிப்பில் பாடல் வெகுவாக பிரபலமானது.... ஜோர்டான் நாட்டில் படமாக்கப்பட்டது என்று நினைவு... வெகு நாட்களுக்கு பிறகு ஹிந்தியின் மிக பிரபலமான பிண்ணனி பாடகி ஆஷா போஸ்லே, இசையமைப்பாளர் வித்யாசாகரின் விருப்ப பாடகர் மது பாலகிருஷ்ணனுடன் (இவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் அவர்களின் நெருங்கிய உறவினர் என்பது தெரியுமா??) இணைந்து பாடிய தமிழ் பாடல் இது... இந்த பாடலை பற்றிய இன்னொரு சுவையான தகவல்... சந்திரமுகி படத்திற்காக போடப்பட்ட பாடல் அல்ல இது... வித்யாசாகர் அவர்கள் வேறு ஒரு படத்திற்கு போட்ட இந்த ட்யூன், அந்த படத்தின் டைரக்டரால் நிராகரிக்கப்பட்டது... பின், அது வாசு/ரஜினி கூட்டணிக்கு இசைத்து காட்டப்பட்டு, ஓகேவாகி............ பின் நடந்தது எல்லாம் வரலாறு....
அண்ணனோட பாட்டு, ஆட்டம் போடுடா
இந்த வெகுஜனங்களை கவர்ந்த பாடல், பெரிய வெற்றியை பெற்றது... இந்த பாடலிலும், ரஜினி டச் இருக்கும்... பாருங்கள்...
“உள்ளம் தெளிவாக வை... எண்ணம் உயர்வாக வை
வாழும் காலம் எல்லாம் மண்ணில் மரியாதை வை
கண் இமைக்கும் நொடியில் எதுவும் நடக்கும்
அது எனக்கு தெரியும், நாளை உனக்கு புரியும்
அஞ்சுக்குள்ள நாலை வை, ஆழம் பார்த்து காலை வை”
கிளைமாக்ஸ் பாடலான :
”ரா ரா, சரசக்கு ரா ரா”
யாராலும் கற்பனை பண்ணி பார்க்க முடியாத ஒரு விஷயம் நடந்தது.... ஒரு தெலுங்கு பாடல், தமிழ்ப்பதிப்பில், முழுதாக இடம் பெற்று, பெரிய
இந்த படத்தின் இசை சேர்ப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு நாள், வித்யாசாகர் காரில் பயணித்து கொண்டிருந்த போது, சிக்னலில் அவர் காருக்கு பக்கத்தில் வந்து நின்ற ஒரு வாகனத்திலிருந்து ஒரு பெரிய போலீஸ் அதிகாரி இவரை பார்த்து, சார், நீங்க வித்யாசாகர் தானே, சந்திரமுகி படத்தில் தலைவருக்கு அட்டகாசமா ட்யூன் போடுங்க என்று சொன்னதை ஒரு பேட்டியில் வித்யாசாகர் சிலாகித்து சொன்னார்... ரஜினி அவர்களின் ரீச் எந்த அளவு இருக்கிறது என்று மிகவும் வியப்புற்றதாக குறிப்பிட்டார்...
(பின்குறிப்பு : லக்க லக்க லக்க லக்க டயலாக் உருவான கதை ) :
ரஜினி அவர்கள் ஒரு முறை நேபாள நாட்டிற்கு சென்றிருந்த போது, கூட்டமாக மக்கள் ஒரு பெண்ணை அழைத்து (இழுத்து என்பதுதான் சரி) சென்றதை பார்த்ததாகவும், அவர்கள் லக்க லக்க லக்க லக்க என்ற ஒரு விநோத சப்தம் எழுப்பியதாகவும், அவர்களிடம் என்ன செய்கிறீர்கள், யார் இந்த பெண் என்று விசாரித்தபோது, அந்த பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கிறது என்றும், சிகிச்சைக்கு மந்திரவாதியிடம் அழைத்து / இழுத்து கொண்டு செல்வதாக கூறியதாகவும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்... எங்கோ நேபாள நாட்டில் அவர் கேட்ட ஒரு விஷயம் ஒரு தமிழ் படத்தில் இடம்பெற்று, பின் அதுவே உலகளவில் அறியப்பட்டதையும் என்னவென்று சொல்வது!!??
ஆகவே.....நாம் அனைவரும் ஒன்று கூடி உரக்க சொல்லுவோம்... லக்க லக்க லக்க லக்க......
நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சியான 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...........