Thursday, July 14, 2011

மூன்றாவது கை


எப்போது ஒரு மனிதனுக்கு 3-வது கை முளைக்கிறதோ, அப்போது இந்த உலகம் அழிவை நோக்கி செல்வதாக / அழிவை நெருங்குவதாக கொள்ளலாம்.

ச்சே. இது என்ன, யாரை பயமுறுத்த இந்த கட்டுரை?. படித்து கொண்டிருந்த அறிவியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் தாங்கிய அந்த ”சயின்ஸ் டுமாரோ” புத்தகத்தை தூக்கி எறிந்தான் விக்னேஷ். பரபரப்புக்காக ஏதாவது எழுத வேண்டியது. படிப்பவர்கள் பயந்து சாகட்டும் என்று தானே. இது என்ன விபரீதம்?. இப்படி எழுதி என்ன ஆகப்போகிறது, நம்மை பயமுறுத்துவதை தவிர என்று முனகினான்...

தன்னை தானே நொந்து, மெதுவாக எழுந்து, நடந்து சென்று, அங்கு இருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து, ரத்த சிவப்பான ஒரு ஆப்பிளை எடுத்தான். இதை அழுத்தி பிழிந்தால், தோலில் இருப்பது போலவே ஒரு கிளாஸ் ரத்த சிவப்பில் ஜூஸ்வருமா??? ச்சே, என்ன விபரீத யோசனை / நினைப்பு இது. இப்போது படித்தது போன்ற அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படித்து படித்து, எனக்கும் இது போன்ற விபரீத யோசனைகள் வருகின்றன. சலிப்புடன், குளிர்சாதனப்பெட்டியின் கதவை அறைந்து சாத்தியதில், ஆப்பிள் கை நழுவி கீழே விழப்போனது.

அப்போது அவன் முதுகில் இருந்து 3-வது கை ஒன்று அந்த ஆப்பிளை எட்டிப்பிடித்தது

(எப்போதோ எழுதியது......)