Monday, June 22, 2009

மெகா மொக்கைஸ்.... 23.06.09

(வலையில் படித்தது, படித்ததும் பிடித்தது...)

கஸ்டமர் : என்னங்க எல்லா பிஸ்கட்டும் ஒடைஞ்சு இருக்கு?
மிஸ்டர் எக்ஸ் : அது 50-50, அப்படிதான் இருக்கும்...

*********

நண்பர் : சார், உங்களுக்கு சொந்த ஊர் எது?
மிஸ்டர் எக்ஸ் : எனக்கு சொந்தமா ஊர் எல்லாம் இல்லை. சொந்த வீடுதான்....
**********
நண்பர் : ஒங்க மாமா டெல்லியில என்னவா இருக்காரு?
மிஸ்டர் எக்ஸ் : அங்கயும் என் மாமாவாதான் இருக்காரு..
********
நண்பர் : சார், உங்க நாய் கட்டி போட்டுருக்கா?
மிஸ்டர் எக்ஸ் : கட்டி போடல.... குட்டி போட்டு இருக்கு.....
******
நண்பர் : என்ன சார், ஒங்க பொண்ணுக்கு பாத்து இருக்கற மாப்பிள்ளை ரொம்ப "பசை"யுள்ள கையாமே? என்ன பண்ணறாரு?
மிஸ்டர் எக்ஸ் : போஸ்டர் ஒட்டராரு...........
*********
நண்பர் 1 : இவர் ஆனாலும் ரொம்ப முன் ஜாக்கிரதை பேர்வழிதான்.....ட்ரைவர் கிட்ட மெதுவா போ... மெதுவா போன்னு சொல்றாரு.....
நண்பர் 2 : நல்லதுதானே.....இதுல என்ன தப்பு?
நண்பர் 1 : சார், அந்த ட்ரைவர் நடந்து போயிட்டு இருக்கார் .....

********

நண்பர் : சோம்பேறிகளுக்கான போட்டியில உங்களுக்கு முதல் பரிசு கெடச்சுதாமே? எப்படி?
மிஸ்டர் எக்ஸ் : நான் அந்த போட்டிக்கு பேர் கொடுத்தேன்... ஆனா கலந்துக்கவே இல்ல.... அதான் முதல் பரிசு.....

*********

நண்பர் : ஒங்க பொண்ணுக்கு என்ன வாசனை பிடிக்கும்?
மிஸ்டர் எக்ஸ் : நிறைய தடவை கேட்டவுடன், நேத்துதான் எங்கிட்ட சொன்னா.... பக்கத்து வீட்டு சீனிவாசனை தான் பிடிக்கும்னு....

**********

நண்பர் : ஏன் சார், ஸ்பூனை பாதியா உடைக்கறீங்க??
மிஸ்டர் எக்ஸ் : டாக்டர்தான் பாதி ஸ்பூன் மருந்து சாப்பிட சொல்லி இருக்காரு....

10 comments:

கயல்விழி நடனம் said...

கடவுளே எங்கள காப்பாத்த யாருமே இல்லையா???

R.Gopi said...

//கயல்விழி நடனம் said...
கடவுளே எங்கள காப்பாத்த யாருமே இல்லையா?//

********

கடவுளும் இத படிச்சுட்டு, இதே கேள்வியை கேட்டுட்டு அலையறாராம்....... யாராவது அவரையும் சேர்த்து காப்பாத்துங்க.....

Rajeswari said...

ஹா ஹா ..நல்லா இருக்கு எல்லா ஜோக்குகளும்..

R.Gopi said...

//Rajeswari said...
ஹா ஹா ..நல்லா இருக்கு எல்லா ஜோக்குகளும்..//

******

வருகைக்கும், வாய் விட்டு சிரித்தமைக்கும் நன்றி ராஜேஸ்வரி மேடம்......

தொடர்ந்து வாருங்கள்.......

கலையரசன் said...

சும்மா அதிருதுல்ல...
நல்லாயிருக்குங்க.. கவலை மறந்து சிரிக்க!!

R.Gopi said...

//கலையரசன் said...
சும்மா அதிருதுல்ல...
நல்லாயிருக்குங்க.. கவலை மறந்து சிரிக்க!!//

*******

Welcome Kalaiyarasan. Thanks for your visit and comments.

Yes, laugher is the best medicine.

அன்புடன் அருணா said...

ம்ம்ம் சரி சரி....சிரிச்சுட்டேன்!

R.Gopi said...

//அன்புடன் அருணா said...
ம்ம்ம் சரி சரி....சிரிச்சுட்டேன்!//

********

மேடம்

வருகைக்கும், வந்து சிரித்ததற்கும் நன்றி........(வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்)

தொடர்ந்து வாருங்கள்.......... கருத்துக்களை பகிருங்கள்.......

hotv said...

good jokes, THANKS

R.Gopi said...

//hotv said...
good jokes, THANKS//

*******

Welcome hotv.....

Thank you for your maiden visit and comments.

Do visit regularly and enjoy reading all articles.