Monday, December 21, 2009

நான் அடிச்சா தாங்க மாட்ட!!!! நாலு நாளு தூங்க மாட்ட !!!!

முன்ன ஒரு காலத்துல, முள் ஒடிஞ்ச நேரத்தில,
டங்கிரிடிங்கான்னு ஒரு ஊருக்குள்ள ... (இப்படிதேன் கதைய தொடங்கோணும், மூன்றாம் பிறைல கமல்தாசன் மாதிரி...) கலகலப்பும் சந்தோசமுமாய் ஒரு டகால்டி ஃபேமிலி இருந்துச்சு.

அவிய்ங்கள பார்த்தாலே ... டேய் வாராங்கடா, ஓடிருங்கடா.... என ஊரே கதிகலங்கும். டோட்டலி ஒரு இர்ரெஸ்பான்ஸிபிள் டெர்ரர் குடும்பம்.

குடும்பத் தலைவன் (நேரந்தேன்!! ) தங்கடாடி.... தவமாய் தவம் இருக்காமல் ரெண்டு குழந்தைகளை பெற்றார்.

சிக்கன் பிரியர், ரசிச்சு ருசிச்சு சாப்பிட்ட சிக்கன் நினைவா, செல்லமா "தங்ககோழி"னு பேரு வைக்க, பிறந்த குழந்தையோ தத்துவம் பேசுறேன் பேர்வழின்னு தத்து பித்துன்னு ஒளறுச்சு. இதை ஊரெல்லாம் பாத்து, போனா போகுதுன்னு அவனுக்கு "தத்துவ பித்தன்"னு பேர் வச்சுருச்சு... ஆனா, அவன் தலைய பார்த்தாலோ இல்லை அவன் வந்துட்டான்னாவோ ஊரே பெரிய அலறல் அலறி, தலை தெறிக்க ஓடிச்சு.

அடுத்ததா பொறந்தவனுக்கு "மருதமலை" என இவர் பெயர் வைக்க, ஊர் அவனுக்கு "தறுதலை" என பெயர் சூட்டின‌ர். கேட்டுக்கிட்டீங்க இல்லயா... வாசகர்களே, உங்க கைய கொடுங்க, சத்தம் இல்லாம வாங்க, வீட்டின் உள்ளார‌ போயி என்னாதான் நடக்குதுன்னு பார்ப்போம்.

அந்தா மஞ்ச கலர் பேண்டும், பச்சை கலர்ல சட்டையுமா, முண்டா பனியன சட்டைக்கு மேல போட்டுருக்கானே (சூப்பர்மேன் சுப்ரமணி மாதிரியே இருக்காரே) அந்த எடுபட்ட பய தேன் "தத்துவ பித்தன்". (எலே... இவன் அசப்புல பார்த்தா, நம்ம ராமராசன் மாதிரியே இருக்கான்டோய்...). கண்ணுல கூலிங் கிளாஸ் வேற இருக்கு.. ஆங்.. அவன் ஏதோ பாட்டு கூட பாடுற மாதிரில்ல இருக்கு. வாங்க போயி கேப்போம் என்னா பாட்டுன்னு..

டாடி! ஓங்கி அடிச்சா ஊர் கூடி
நம்ம மொக்க ராயன் டெட் பாடி
புட்டுக்கிட்ட மொக்கயன எடுத்துட்டு வர‌
தேடிக்கிட்டு இருக்காங்க ஒரு மீன் பாடி


தங்க டாடி: வாடா ஊருக்குள்ள ஒருத்தனே, தத்துவ பித்தனே! தறுதலைக்கு மூத்தவனே!!. எலே...நாமா அடிச்சா அது மொட்டை. அதுவா விழுந்தா அது சொட்டைடா. அடிச்சுறு ஒட்டடை, இல்லன்னா வீடே பன்னாடை.

தத்துவ பித்தன்: அது வந்து, நம்ம ரெட்டைவால் ராயன்......

தங்க டாடி : யாருடா.... இந்த பங்கரக் கொத்து கொத்தியிருப்பானே அவனா.

தத்துவ பித்தன் : அக்காங்... அவனே தான். ஒரு மொபைல் கம்பெனில‌ போயி கையி ரெண்டும், கால் ரெண்டும் நீட்டினானாம். பாருவே.... என் உட‌ம்புல‌ எத்த‌னையோ "செல்" இருக்கு.. அதுல‌ போடறதுக்கு ஒரு சிம்கார்டு வேணும்னானாம்.

முசுடு மூக்காயி” (மங்குனி மம்மி) : அடி ஆத்தி...டேய் டகால்டி பித்தா!!! கோவில் ம‌ணிய‌ நாம‌ அடிச்சா ச‌த்த‌ம் வ‌ரும். ஆனா, கோவில் ம‌ணி ந‌ம்ம‌ள‌ அடிச்சா ர‌த்த‌ம் தாண்டா வ‌ரும்...இதுதாண்டா வாழ்க்கையோட டெர்ரர் தத்துவம்... அவன் நல்லா கேட்டான்டா டீடேய்லு.

மம்மி... நீங்க சொன்னது டண்டணக்காத்தான்!! டாடி. யானை மேல நாம உட்கார்ந்தா அது சவாரி, யானை நம்ம மேல உட்கார்ந்தா அப்புறம் ஒப்பாரி. பக்கத்து வீட்டு கௌரி.... கொண்டு வரல டௌரி... ரெண்டு நாளா தேடியும் காணல அவிய்ங்க அம்மாவோட செளரி. மொத்துன மொத்துல ராயனுக்கு ரெண்டு நாளா ஒண்ணுமே தெரியலயாம். ஒரே கேரா இருக்காம்....

தறுதலை : டேய் மக்கா...உல‌க‌ம் தெரியாம‌ வ‌ள‌ர்ற‌வ‌ன் வெகுளி, கிரிக்கெட் தெரியாம‌ விளையாட‌ற‌வ‌ன் க‌ங்குலி. எங்க போயி, எதை பேசணும்முனு இல்லையாடா. ஆமா நல்ல பயதானேடா அவன், பின்ன ஏன் இப்படி எல்லாம் கேட்டான்.

வாழ்க்கையில ருசி வேணும்னா, பார்க்கிற படத்துல‌ பஞ்ச் டயலாக் சேர்ந்து இருக்கணும்னு ”கடலைமுடி ஜோசியர்” சொன்னாராமாம்... சரின்னு இவரும் போய் ஒரு படத்த பார்த்தாராம்... அதுல வர்ற பஞ்ச் டயலாக் கேட்டு கொல‌வெறியாயிட்டாராம்...

அப்படி என்னடா அந்த டெர்ரர் பஞ்ச் டயலாக்.. சொல்லு கேப்போம்..

ஹீரோயின.... வில்லன் கடத்திட்டு போய்டறான்... நம்ம ஹீரோ போய் சண்டை போட்டு கூட்டிட்டு வரணும்... போனோமா, சண்டை போட்டோமா, ஹீரோயின கூட்டிட்டு வந்தோமான்னு இல்லாம, சொன்னாரு பாரு ஒரு பஞ்ச் டயலாக்... நான் கேட்டுட்டு ஆடி போயிட்டேன்...

"நான் சொல்லி அடிச்சா குச்சி, சொல்லாம அடிச்சு சொக்கா கிழிஞ்சு போச்சி".

பதிவு பூரா மொக்கை, மேசேஜே இல்லன்னா, நம்மள டின்னு கட்டிடுவாய்ங்க. அதனால அர்ஜெண்ட்டா ஒரு மெசேஜ் சொல்லுங்க பதிவை முடிச்சுடுவோம்....

உன் புடுங்கல், பெரிசாச்சேடா.... துவைக்கிறதுலதான் அர்ஜெண்ட் ஆர்டினரி.... ப்ளாக் பதிவிலேயுமாடா.... சரி வைச்சுக்கோ.... ஒரு கேள்வி கேட்டு பதில் சொன்னா மேசேஜ் வந்திரும்ல. பயம்ன்னா என்ன, பதில் சொல்லு.

முந்தா நேத்து கோழி திருடும் போது உடமஸ்தன் மஸ்தான் வந்தானே, அப்ப அவனோட சேர்ந்து நமக்கு வந்துதே, அதுதான் பயம்.

ஏ மக்கா, அசத்திப்புட்டடா..... இருந்தாலும், இன்னும் தெளிவா சொல்றேன் கேட்டுக்கோ.. பயம் என்பது தைரியம் இல்லாத மாதிரி நடிக்கிறதுடா...

டேடி.... நீங்க பெரிய கேடி, இதே மேட்டர வேற ஒருத்தது வேற ஒரு மாதிரி சொல்ல கேட்ட மாதிரி இருக்கே...

இன்னாடா இது புது கதை... அது இன்னாடா, வேற ஒருத்தரு சொன்னது... சொல்லுடா கேப்போம்...

அதாவது நைனா... குருதிப்புனல் படத்துல நம்ம கமல்தாசன் அண்ணாத்த சொல்வாரு .... தைரியம்னா என்ன தெரியுமா, பயம் இல்லாத மாதிரி நடிக்கறது மாதிரின்னு... இது அதோட டகால்டி வெர்ஷன்...

நீ அத்த உல்டாவா என் கையில சொல்லிகினே நைனா...

எது எப்படியோ... விடுடா ரைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்..............

19 comments:

மணிஜி said...

எது எப்படியோ... விடுடா ரைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்......

Raju said...

அய்யய்யோ..கோபி அண்ணே.
செம டெரரா இருக்கு.. அதுவும் அந்த
கோவில்மணி தத்துவம் சூப்பர் தல. ரூம் போட்டு யோசிப்பீங்ளோ.
:-)

R.Gopi said...

//தண்டோரா ...... said...
எது எப்படியோ... விடுடா ரைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்......//

********

வாங்க தலைவா... எவ்ளோ நாள் கழிச்சு வந்து இருக்கீங்க...

சாருவோட நீங்க கொடுத்த அந்த ஃபோட்டோ போஸ் படு சூப்பர்....

R.Gopi said...

//♠ ராஜு ♠ said...
அய்யய்யோ..கோபி அண்ணே.
செம டெரரா இருக்கு.. அதுவும் அந்த
கோவில்மணி தத்துவம் சூப்பர் தல. ரூம் போட்டு யோசிப்பீங்ளோ.
:-)//

********

குருவி, வில்லு பார்ட்-2 பார்த்துட்டு நொந்து போயிருக்கறதால இங்க வந்து கொஞ்சம் ஆறுதல் அடையுங்கன்னு வர சொன்னேன்...

கிரி said...

ஏன் இந்த கொலைவெறி? நடத்துங்க நடத்துங்க ;-)

Chitra said...

கீழே விழுந்தாலும் என் மீசையில் மண் ஒட்டலை ங்கறாங்க....... நீங்க வேற........ நல்ல காமெடி கலக்கல்.

R.Gopi said...

//கிரி said...
ஏன் இந்த கொலைவெறி? நடத்துங்க நடத்துங்க ;-)//

********

வாங்க கிரி... நெனச்சத முடிச்சுடணும் இல்லையா, அதான்...

R.Gopi said...

//Chitra said...
கீழே விழுந்தாலும் என் மீசையில் மண் ஒட்டலை ங்கறாங்க....... நீங்க வேற........ நல்ல காமெடி கலக்கல்.//

*********

வாங்க சித்ரா... நீங்க இன்னும் தலைவருக்கு எழுதின பிறந்த நாள் வாழ்த்து படிக்கலியா...??!!

sathishsangkavi.blogspot.com said...

கலக்கல் காமெடி..........

R.Gopi said...

//Sangkavi said...
கலக்கல் காமெடி..........//

*****

வலைப்பக்கத்திற்கு வருகை தந்து, பதிவை படித்து, பாராட்டியதற்கு மிக்க நன்றி தலைவா...

vasu balaji said...

:) நல்லாருக்கு.

R.Gopi said...

//வானம்பாடிகள் said...
:) நல்லாருக்கு.//

******

வருகை தந்து, பதிவை படித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி தலைவா.

RAMYA said...

ஹையோ ஹையோ கோபி ஒரே தமாஷு போங்க:)

செம் கலக்கல்... நல்லா இருக்கு கோபி:)

R.Gopi said...

//RAMYA said...
ஹையோ ஹையோ கோபி ஒரே தமாஷு போங்க:)

செம் கலக்கல்... நல்லா இருக்கு கோபி:)//

*********

மிக்க நன்றி ரம்யா....

பெசொவி said...

//நாமா அடிச்சா அது மொட்டை. அதுவா விழுந்தா அது சொட்டை

யானை மேல நாம உட்கார்ந்தா அது சவாரி, யானை நம்ம மேல உட்கார்ந்தா அப்புறம் ஒப்பாரி .

உல‌க‌ம் தெரியாம‌ வ‌ள‌ர்ற‌வ‌ன் வெகுளி, கிரிக்கெட் தெரியாம‌ விளையாட‌ற‌வ‌ன் க‌ங்குலி
//
சூப்பர். வேறென்ன சொல்ல?

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

நல்ல ஹூமர்ங்க உங்களுக்கு

R.Gopi said...

//நட்புடன் ஜமால் said...
ஹா ஹா ஹா

நல்ல ஹூமர்ங்க உங்களுக்கு//

*********

நீண்ட நாட்களுக்கு பின் வருகை தந்து, பதிவை படித்து, வாய் விட்டு சிரித்து, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி
ஜமால் பாய்...

Paleo God said...

டங்கிரிடிங்கான்னு ஒரு ஊருக்குள்ள ...//

இங்கன ஆரம்பிச்சதுதான் :))))))))))))))))))))))))))

டாடி! ஓங்கி அடிச்சா ஊர் கூடி
நம்ம மொக்க ராயன் டெட் பாடி
புட்டுக்கிட்ட மொக்கயன எடுத்துட்டு வர‌
தேடிக்கிட்டு இருக்காங்க ஒரு மீன் பாடி//

அப்படியே வலிக்க ஆரம்பிச்சுது...::))))))))

.நாமா அடிச்சா அது மொட்டை. அதுவா விழுந்தா அது சொட்டைடா.//

வயலண்டா மாறி ..:)))))))))))

அதாவது நைனா... குருதிப்புனல் படத்துல நம்ம கமல்தாசன் அண்ணாத்த சொல்வாரு .... தைரியம்னா என்ன தெரியுமா, பயம் இல்லாத மாதிரி நடிக்கறது மாதிரின்னு... இது அதோட டகால்டி வெர்ஷன்...

நீ அத்த உல்டாவா என் கையில சொல்லிகினே நைனா...

எது எப்படியோ... விடுடா ரைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.........//

முடியலைங்க .... ::))

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

R.Gopi said...

// பலா பட்டறை said...
டங்கிரிடிங்கான்னு ஒரு ஊருக்குள்ள ...//

இங்கன ஆரம்பிச்சதுதான் :))))))))))))))))))))))))))

டாடி! ஓங்கி அடிச்சா ஊர் கூடி
நம்ம மொக்க ராயன் டெட் பாடி
புட்டுக்கிட்ட மொக்கயன எடுத்துட்டு வர‌
தேடிக்கிட்டு இருக்காங்க ஒரு மீன் பாடி//

அப்படியே வலிக்க ஆரம்பிச்சுது...::))))))))

.நாமா அடிச்சா அது மொட்டை. அதுவா விழுந்தா அது சொட்டைடா.//

வயலண்டா மாறி ..:)))))))))))

அதாவது நைனா... குருதிப்புனல் படத்துல நம்ம கமல்தாசன் அண்ணாத்த சொல்வாரு .... தைரியம்னா என்ன தெரியுமா, பயம் இல்லாத மாதிரி நடிக்கறது மாதிரின்னு... இது அதோட டகால்டி வெர்ஷன்...

நீ அத்த உல்டாவா என் கையில சொல்லிகினே நைனா...

எது எப்படியோ... விடுடா ரைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.........//

முடியலைங்க .... ::))

புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

********

தொடர் வருகை தந்து, பதிவை படித்து பின்னூட்டமிட்டு ஊக்கமளிக்கும் உங்களுக்கு எங்களின் மனம் கனிந்த நன்றி...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும் இதயம் கனிந்த இனிய 2010 ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்