Friday, June 12, 2009

முதல்வர் கருணாநிதி மாமல்லபுரம் சென்றார்-ஓய்வு



முதல்வர் கருணாநிதி ஓய்வுக்காக மாமல்லபுரம் சென்றுள்ளார். சில நாட்கள் அவர் அங்கு தங்கியிருப்பார் எனத் தெரிகிறது.

உடல் நலக்குறைவு, மருத்துவமனை வாசம், தேர்தல் பணிகள், பின்னர் ஆட்சியமைப்புப் பணிகள் என தொடர்ந்து கடும் பிசியாக இருந்து வந்தார் முதல்வர் கருணாநிதி.

தற்போது துணை முதல்வர் பதவியை உருவாக்கி முதல்வர் பணியின் பாதிப் பளுவை மு.க.ஸ்டாலின் வசம் கொடுத்து விட்டார்.

இந்த நிலையில் ஓய்வுக்காக மூத்த அமைச்சர்கள் சிலருடன் முதல்வர் கருணாநிதி மாமல்லபுரம் சென்றுள்ளார். அங்கு சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்து விட்டு பின்னர் அவர் சென்னை திரும்புவார்.

(இதற்கிடையில் தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பத்திரிக்கையாளைகளிடம் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது).
நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

2 comments:

சித்து said...

எப்படி?? மானாட மயிலாட பாத்து ஓய்வு எடுப்பாரோ??

R.Gopi said...

// சித்து said...
எப்படி?? மானாட மயிலாட பாத்து ஓய்வு எடுப்பாரோ??//

*********

Vaanga Sithu..... romba naal aachu paaththu......

Kandippaa neenga sonna vishyamaathaan irukkum.......