Thursday, February 5, 2009

ஜல்லிக்கட்டு - உலக நாயகன் ஜெ.கே.ரித்தீஷின் புது ஜல்லி


ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து சுப்ரீம் ஸ்டார், உலக நாயகன் ஜெ.கே.ரித்தீஷ் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார். இவர் தமிழக வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவராக உள்ளார்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு 1200 கிராமங்களில் நடைபெறுகிறது. 67 ஆயிரம் பேருக்கு மேல் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த வருடம் 200-கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த வீர விளையாட்டுக்கு தடை விதிப்பதை அனுமதிக்க முடியாது.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டுக்கு ஒரு சான்று. இதை நடத்தியே தீருவோம். இதை நம்பி பல குடும்பங்கள் உள்ளது என்றும், இந்த சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தடையை எதிர்த்து அப்பீல் செய்துள்ளதாகவும் ஜெ.கே.ரித்தீஷ் கூறினார்.

பின் ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை ஜெ.கே.ரித்தீஷ் பண உதவி அளித்தார்.

இருந்தா அள்ளிக்கொடு, இல்லேன்னா சொல்லிக்கொடு

No comments: