Sunday, February 8, 2009

எனது கிவ்வாய் கிரக அனுபவம்:


நான் ஒரு ஆத்மாவை கண்டேன். அது பரமாத்மாவும் இல்லை, ஜீவாத்மாவும் இல்லை. அது நல்லதா, கெட்டதா என்று கதை முடிவில் விளக்கமுண்டு.
அதற்கு (ஆத்மா) தலை என்று ஒன்று தனியாக இருந்ததா என்று சொல்லத்தெரியாத அளவில் இருந்தது என்று சொல்லும்படி இருந்தது. நான்கு வலுவான கைகள் (???).

அது என்னிடம் கடவுளை பார்க்க ஆசையா என்று கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. ஆம் என்றேன்.

மேலே பார் என்றது, பார்த்தேன்.வானம் என்றேன்

கீழே பார் என்றது பார்த்தேன். பூமி / நிலம் என்றேன்.

உன்னை பார்க்கிறாயா என்றது. அதற்கும் ஆம் என்றேன். தன் பாக்கெட்டில் கை விட்டு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியை நீட்டியது. (யாரிடம் இருந்து அடித்ததோ??).

என் மெல்லிய நகைப்பை கண்டு சிறிது கோபம் கொண்டது போல் முகத்தை வைத்துக்கொண்டது.ஏற்கனவே அழகான அந்த முகம், மேலும் அழகாரமாகியது (அழகிய விகாரம் - இதன் கலவை)

பசிக்கிறது, சாப்பிட ஏதாவது கிடைக்குமா?? தன் கெஞ்சும் கரகர குரலில் கேட்டது.

நான் கேட்டேன் டீ, பிஸ்கட் சாப்பிடலாமா என்று!!

சொல்லி முடிக்கக்கூட இல்லை. அது பளீரென்று என்னை ஒரு அறை விட்டதில், அதன் கூர் நகம் முகத்தில் கிழித்து, ரத்தம் வழிந்தது. உடனே, தன் நீண்ட நாக்கை வைத்து, என் கன்னத்தில் வழியும் ரத்தத்தை நக்கியது. கர்ண கொடூர குரலில் சொல்லியது, எங்கள் கிவ்வாய் கிரகத்தில் நாங்கள் விரும்பி சாப்பிடுவது, மனிதர்களின் ரத்தத்தைத்தான், அதுவும் மூணு வேளை கிடைத்தால், தன்யனாவேன் என்றது (இவ்வளவு தூய தமிழ் யாரிடம் பயின்றிருக்கும்??).

வீல் என்று அலறி கண்விழித்தேன். மணி காலை ஆறு.

No comments: