Friday, September 25, 2009

ப‌த்தினி....


மாலினி, நீ எனக்கு துரோகம் பண்ணுவேன்னு நான் கனவுல கூட நெனச்சு பாத்ததில்ல......என்று ஆவேசமாய் பாய்ந்து அவள் கழுத்தை பிடித்தான் வினோத்....

ஹக்..ஹ்ம்ம்..திக்கி திணறி..... நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க வினோத்.... நீங்க நெனைக்கற மாதிரி எதுவும் நடக்கல என்றாள் மாலினி.
இன்னும் என்ன நடக்கணும்.... அதான் இப்போ நானே நேர்ல பாத்துட்டேனே... இனிமேலும் நீ சொல்றத நம்பறதுக்கு நான் ஒண்ணும் முட்டாள் இல்லை.... நீயும் ஒன்னோட பாஸும் ஆபீசில தான் ஒண்ணா கூத்து அடிச்சீங்க....ஆனா, இப்போ நான் ஊருக்கு போயிருக்கேன்ற தைரியத்துல நம்ம பெட்ரூம்லையே நடக்குதே?

நான் டூர் போயிட்டு ஒரு நாள் முன்னாடியே வரலேன்னா, நீங்க பண்ற இந்த அராஜகம் எனக்கு தெரியாமலேயே போயிருக்கும்...என்றான் வினோத்....

சீ... உங்க விபரீத கற்பனையை கொஞ்சம் நிறுத்தறீங்களா?? என்னோட பாஸ் அஷோக் ஈஸ் ஜெம் ஆப் எ பர்சன். நான் உங்களோட காதல் மனைவி.... எங்க மேல இப்படி அபாண்டமா பழிபோடறதுக்கு ஒங்களுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ? என்று கண்ணீரோடு மாலினி சொன்னாள்.

சாயங்காலம் என்ன நடந்துதுன்னா, இன்னிக்கி ஆபீஸ்ல இருந்து கெளம்பும்போது என்னோட வண்டி ரிப்பேர் ஆயிடுச்சு..... நம்ம முருகன் மெக்கானிக் ஷெட்டுக்கு ஃபோன் பண்ணி, வண்டிய சர்வீஸீக்கு குடுத்துட்டு ஆட்டோல வீட்டுக்கு வர்றதா தான் ப்ளான்... அப்போதான், நான் ஆட்டோக்கு வெயிட் பண்றத பாத்துட்டு, அசோக் என்ன வீட்டுல டிராப் பண்றேன்ன்னு சொன்னார்.

சரி, இவ்ளோ தூரம் வந்தாரே, ஒரு காபி சாப்பிட்டு போங்கன்னு சொல்லி, நான்தான் அவர உள்ள கூட்டிட்டு வந்தேன்.... மொத மொதல்ல நம்ம வீட்டுக்கு வந்தவர், நம்ம கல்யாண ஆல்பம் பாக்கணும்னு சொன்னார்....

உடனே, பெட்ரூம் அலமாரில ஆல்பம் இருக்கறத காட்டறதுக்கு பெட்ரூம் வரைக்கும் வந்தேன்.....அவர் ஆல்பம் எடுத்தார்.... அத எடுத்துட்டு வெளில வரும்போது தான், நீங்க கரெக்டா வீட்டுக்குள்ள வந்தீங்க..... போதுமா, இதுதான் நடந்தது என்றாள் மாலினி.

சரிதான் நிறுத்துடி .... அழுதோ, சத்தம் போட்டோ ஒரு விஷயத்த சொன்னா நீ "பத்தினி" ஆயிடுவியா? உன்மேல எனக்கு ரொம்ப நாளாவே சந்தேகம் இருந்தது....

நெறைய பேரு என்கிட்டே கூட அரசால் புரசலா சொல்லி இருந்தாங்க. அப்போல்லாம் நான் நம்பல, இன்னிக்கு நானே நேர்ல பார்த்தப்போ, அது சரிதான்னு ஆயிடுச்சு......

இனிமே, இந்த வீட்டுல இல்ல, இந்த உலகத்துல இருக்கறதுக்கு கூட உனக்கு தகுதி இல்ல.... உன்ன போல பொண்ணுங்களுக்கு எல்லாம், இந்த தண்டனைதான் சரி, இன்னிக்கோட உன் கதைய முடிச்சுடறேன் என்றபடி பாய்ந்து அவள் கழுத்தை இறுக்கினான்.....

இவ்வளவு நேரம் அமைதியாக அங்கு நடந்தவற்றை அமைதியாக பார்த்து கொண்டிருந்த அசோக், பாய்ந்து வந்து, சார்... நான் சொல்றத கேளுங்க என்றவாறு வினோத்தின் கையை விலக்க முயற்சித்தான்.....

***********

"பத்தினி" - ஸ்பான்ஸர்ட் பை........... என்று விளம்பரதார்களின் பெயர்களை தொலைக்காட்சி கூவி கொண்டிருந்தது....

9 comments:

Anonymous said...

கண்ணால் பார்பதும் பொய் காதல் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்.....அவசர உலகத்தில் இதுக்கு எல்லாம் எங்கே கோபி நேரமிருக்க போகுது....

R.Gopi said...

//தமிழரசி said...
கண்ணால் பார்பதும் பொய் காதல் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்.....அவசர உலகத்தில் இதுக்கு எல்லாம் எங்கே கோபி நேரமிருக்க போகுது....//

வாங்க தமிழ்...

உண்மைதான்... அவசரப்படாமல் இருந்தால், எவரின் வாழ்விலும் எந்த‌ பிரச்சனையும் இருப்பதில்லை...

இதை உணருவோர் வாழ்வில் துன்பமில்லை...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

பாசகி said...

ஜி, எந்த சீரியல்ல இந்த சீன்?

R.Gopi said...

//பாசகி said...
ஜி, எந்த சீரியல்ல இந்த சீன்?//

வாங்க பாசகி...

பத்தினி சீரியல்தான்....

இன்னும் யாரும் எடுக்க ஆரம்பிக்கலியா??

Raju said...

பத்தினி சீரியல்ல மட்டுமில்லை,
தமிழ்ல இதுக்கு முன்னாடி எடுத்த, இனிமேல் எடுக்கபோற எல்லா
சீரியல்லயும் இது மாதிரி சீன்இருக்கும். பொழப்பு ஓடனுமில்ல,

R.Gopi said...

//ராஜு ♠ said...
பத்தினி சீரியல்ல மட்டுமில்லை,
தமிழ்ல இதுக்கு முன்னாடி எடுத்த, இனிமேல் எடுக்கபோற எல்லா
சீரியல்லயும் இது மாதிரி சீன்இருக்கும். பொழப்பு ஓடனுமில்ல,//

வாங்க ராஜூ..

உண்மைதான்... இதுபோல் கேவலமான காட்சிகள் தான் இன்று சீரியலை நிரப்புகிறது... அதையும், நம் தாய்க்குலங்கள் மணிக்கணக்காக உட்கார்ந்து பார்க்கிறது...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தல‌

R.Gopi said...

தமிழிஷில் வாக்களித்து இந்த பதிவை பிரபலமாக்கிய உங்கள் அனைவருக்கும் என் நன்றி...

tharun
inbadurai
arasu08
tamilz
balak
spice74
idugaiman
urvivek

சொல்லச் சொல்ல said...

சுவாரஸ்யமான கதை.

வாசிம்கான் said...

ஆண்களின் மூர்த்தனத்துக்கும் முட்டாள்தனத்துக்கும் இதை விட நல்ல எடுத்துக்காட்டு தேவையா என்ன ? :) :)

எஸ்
இதை உணருவோர் வாழ்வில் துன்பமில்லை இதைய் சரியா சொன்னிங்க sir