Tuesday, March 10, 2009

"தல" சிறப்பு கேள்வி பதில்கள் - தேர்தல் 2009 - 11.03.09


கேள்வி : பதவி, பட்டம்?
பதில் : நான் கேட்டு நீங்கள் தருவது, நான் கேட்காமல் என்னை தேடி வருவது.

கேள்வி : தமிழ்?
பதில் : நான் நேசிப்பது, சுவாசிப்பது, கனவிலும் வாசிப்பது.

கேள்வி : கூட்டணி?
பதில் : கூட்டாக சேர்ந்த அணி. அன்பாலும், அமௌன்டாலும் சேர்ந்தது.

கேள்வி : 40/40?
பதில் : அடைய ஆசைப்படுவது. அதை அடைய அனைத்து முயற்சியும் எடுப்பது, பின் அதை அடைந்தே தீருவது.

கேள்வி : ஆட்சி கட்டில்?
பதில் : அது அனைவருக்கும் பேச்சு மட்டில்.

கேள்வி : நீதிபதி?
பதில் : நீதிக்கு அதிபதி, இங்கு எனக்கு நானே நீதிபதி.

கேள்வி : தேர்தல் நிதி?
பதில் : அன்பாக செய்யும் முயற்சி. பலன் இல்லையேல், அராஜகத்தாலும் பெறப்படுவது.

கேள்வி : நம்நாடு?
பதில் : தமிழின் தாய்வீடு. அனைவருக்கும் ஒன்று.

கேள்வி : நல்ல சினிமா?
பதில் : உளியின் ஓசை

கேள்வி : ஆஸ்கர் விருது?
பதில் : "உளியின் ஓசை"க்கு கிடைக்க வேண்டும்.

கேள்வி : பாராட்டு விழா?
பதில் : நீங்கள் எனக்கு மட்டும் எடுக்க வேண்டும் என்று நான் விரும்புவது.

கேள்வி : 40-ல் பங்கு?
பதில் : கொடுக்க நினைப்பது சொற்பம், அதிகம் கேட்டால் அவர்கள் அற்பம்.

கேள்வி : இதயம்?
பதில் : அனைவருக்கும் இடம் உண்டு. அமௌன்ட் அதிகமானால், இடமும் அதிகம் உண்டு.

கேள்வி : சேர்ந்தே இருப்பது?
பதில் : நானும் என் கூட்டணியும்

கேள்வி : சேராதிருப்பது?
பதில் : நானும் ஜெ.யும்.

கேள்வி : மு.க.அழகிரி?
பதில் : கழகத்தின் தூண்

கேள்வி : ஏழையின் சிரிப்பில்?
பதில் : இறைவனை காண்பார் சிலர், தன்னை காண்பான் இந்த ஏழை!!

வேறு பல கேள்விகள் விரைவில்ல்ல்ல்ல்ல்ல்.........

2 comments:

Nandini said...

Hilarious one :-)

R.Gopi said...

Thanks for your visit and comment.

Do visit regularly and share your views as this will encourage me to write more.