Tuesday, April 14, 2009

தேர்தல் பரபரப்பு - விஜயகாந்த், வடிவேலு கடும் மோதல்


தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சூறாவளி சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார்.
விஜயகாந்த் எங்கெங்கு எல்லாம் போய் பிரச்சாரம் செய்கிறாரோ, அங்கெல்லாம் பின்தொடர்ந்து, அவர் கூறியது அனைத்தும் பொய் பிரச்சாரம், சிறுவயதில் இருந்தே உண்மை எதையும் அவர் பேசியதில்லை, அதை நம்பி அவர் கட்சியினருக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று சக ஊர்காரரும், காமெடி நடிகருமான வடிவேலு கூறி வருவதாக நம்பத்தகாத வட்டார செய்திகள் கூறுகின்றன.

இதை அறிந்த விஜயகாந்த், வடிவேலுவை மடக்க ஒரு வியூகம் வகுத்தார் என்றும், அந்த வியூகத்தில் வடிவேலு சற்றும் எதிர்பாராமல் சிக்கிக்கொண்டார் என்றும், அங்கு நடந்த பயங்கர மோதலில், கேப்டன் விஜயகாந்த் பல வேறு வடிவங்களை கொண்ட விதவிதமான ஆயுதங்களை உபயோகப்படுத்தி, வடிவேலுவை தாக்கவில்லை என்றும் பரபரப்பற்ற டகால்டி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
மேல் விபரங்கள் அறிய மேலே உள்ள புகைப்படங்களை பார்க்கவும்.

(மேற்கூறிய திடுக்கிடும், அதிர்ச்சி கலந்த செய்தி சிறிதும் உண்மை கலக்காத 100% அக்மார்க் டகால்டி செய்தி என்பதை எங்கள் சங்கம் சார்பில் உறுதி படுத்துகிறோம்)

6 comments:

. said...

நம்பத்தகாத வட்டார செய்தி என்றும் !!!!!!
டகால்டி நியூஸ் என்றும் !!!!!!
சங்கம் உறுதி செய்தாலும் .....

தலை

படத்தை பார்த்தா அப்படி தெரியலியே.

கேப்டன் கண்ணிலே கொலை வெறி.
வடிவேலு முஞ்சியிலே சொட்டுது ரத்தம்.

அதை விட சூப்பர் மருத்துவ உதவி பெற்றதும் கொடுத்த போஸ்.

தலை - உங்களய்தான்

பாவம் நம்ம வடிவேலு ஓங்கி சாத்த அவருக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க.
எத்தனை நாளைக்கு தான் அடியும் உதையும் வாங்குவார்.

R.Gopi said...

//பாவம் நம்ம வடிவேலு ஓங்கி சாத்த அவருக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க.
எத்தனை நாளைக்கு தான் அடியும் உதையும் வாங்குவார்.//

***********

வாங்க படுக்காளி

வருகைக்கும், சிரிப்பு பொங்கும் கருத்துக்கும் நன்றி.

"இவன் எவ்ளோ அடிச்சாலும், தாங்கறான், ரொம்ப நல்லவன் ..........."

இது வடிவேலுக்காகவே எழுதப்பட்டது என்பது எவ்வளவு உண்மையாகி போனது.

கிரி said...

Gaப்டனை பஞ்சர் பண்ணாம விடமாட்டீங்க போல :-))

Anonymous said...

dont post false news

சித்து said...

தல ஏன் இந்த கொலை வெறி? இந்த தேர்தல நெனச்சா எப்பா இப்பவே கண்ண கட்டுதே.

R.Gopi said...

வாங்க கிரி, நான் அவன் இல்லீங்கோ, அனானி

கேப்டன நான் வேற தனியா பஞ்சர் பண்ணனுமா? அவருக்கு இருக்கற வாய்க்கும், சவடாலுக்கும், எல்லார் கிட்டயும் தான் வாங்கி கட்டிகராறே?

அனானி - செய்தியை சரியாக படியுங்கள்.

"வடிவேலு கூறி வருவதாக நம்பத்தகாத வட்டார செய்திகள் கூறுகின்றன."

"விதவிதமான ஆயுதங்களை உபயோகப்படுத்தி, வடிவேலுவை தாக்கவில்லை என்றும் பரபரப்பற்ற டகால்டி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன."

நம்ம ஊர்ல, தேர்தல் என்பது மோதல் இல்லாமல் இருக்காது என்பது கழகங்களால் வெகுநாட்களுக்கு முன்பே மாற்றப்பட்டுவிட்டது.

அனைவரின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.